Friday, June 19, 2009

நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி " நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஒரு சோதிட ஆய்வாளனாக இருந்தும் இந்த வரிகளைஎழுதுகிறேன் என்றால் இதில் உள்ள உண்மையை , ஜோதிட ரீதியான ஆதாரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.


ஆம். நவகிரகங்கள் என்பவை இறைவன் எனும் பிரதமரின் மந்திரி சபையிலான மந்திரிகள் தாம். நீங்கள் சுய நலத்துடனோ,பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடனோ செயல்படும்போதுதான் கிரகங்கள் உங்களை பாதிக்கும். உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.

நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி " நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஒரு சோதிட ஆய்வாளனாக இருந்தும் இந்த வரிகளைஎழுதுகிறேன் என்றால் இதில் உள்ள உண்மையை , ஜோதிட ரீதியான ஆதாரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.


ஆம். நவகிரகங்கள் என்பவை இறைவன் எனும் பிரதமரின் மந்திரி சபையிலான மந்திரிகள் தாம். நீங்கள் சுய நலத்துடனோ,பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடனோ செயல்படும்போதுதான் கிரகங்கள் உங்களை பாதிக்கும். உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.

Tuesday, June 16, 2009

நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம்

தேரு எங்க சுத்தினாலும் தேரடிக்குத்தான் வரனுங்கற மாதிரி மறுபடி தமிழ் வலைப்பூ மேல கான்சன்ட்ரேட் பண்றதா முடிவு பண்ணியிருக்கேன். தமிழ்மணத்தோட கருவிப்பட்டைய இணைக்காததால காட்டில் காய்ந்த நிலவாய் போயின என் எழுத்துக்கள். நிற்க கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் ஒரு பதிவை ஆரம்பித்தேன் ஸ்வாமி 7867 என்பது அதன் எயர். இந்த 7 மாத காலத்தில் 16000 பேர் பார்த்தாங்க. ஆந்திர முதல்வரே சந்திரபாபுவை நான் செய்த ரவுசுக்கு ரெஸ்பாண்ட் ஆகிட்டாரு.

இருந்தாலும் என்ன குடுமிகள் பற்றி தெரியாத்தனமா ஒரு பதிவுல மென்ஷன் ப‌ண்ணிட்டேன். தினம் தினம் சுமார் 200 பேர் பார்த்துக்கிட்டிருந்த என் வலைப்பூவை சதி செய்து துஷ்பிரசாரம் செய்து ஒரு தடவை தடை கூட பண்ணிட்டாங்க. விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தால் ஜனத்தொகை பெருக்கம்,செக்ஸ் குற்றங்கள்,வன்முறை இத்யாதியை தவிர்க்கலாம்னு எழுதியிருந்தேன் அதை சாக்கா வச்சு துஷ்பிரச்சாரம் செய்தானுங்க.

ஆளை விடுங்கடான்னிட்டு வெப்துனியால இந்தில ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுட்டன்.

என் சித்தாந்தம் ரொம்ப சிம்பிள். நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம் . இப்போ சிதறிட்டோம். மறுபடி இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடலை தடையா நினக்கிறோம். கொலை தற்கொலை எல்லாத்துக்கும் காரணம் இந்த இணைவதற்கான துடிப்புத்தான்.(மாமிசம் உண்பவர்கள் கதையும் இதுதான்)

ஆனால் இந்த இணைவுக்கு தடையா இருக்கிறது நம்ம உடலில்லே..அகம்பாவம். இதை மறந்துட்டு உடலினை கொண்டே இணையபார்க்கிறோம். உடல்களை உதிர்க்கத்துடிக்கிறோம். நாம எல்லாம் ஒண்ணு. (ஒரு தாய் பிள்ளைன்னு ஜல்லியைக்க முடியாதுன்னாலும் நம்ம எல்லாருக்குமிடையில் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு.

கொல்றோம். கொல்லப்படறோம். இதுக்கு துடிக்கிறோம். காரணம் இணைப்புக்கு தடையா நாம தவறா நினைக்கிற உடலை உதிர்ப்பதே.

ஆனால் அகத்தை (ஈகோ) உதிர்த்தால் போதும் எல்லோரும் இணையலாம். இப்போ ஜெயா கலைஞரை எடுத்துக்கங்க ரெண்டுபேருக்கும் என்ன வித்யாசம் ? ஒரு ரோமமுல்லே. ரெண்டு கழகத்தையும் சேர்த்து தொலைக்கலாமில்லையா.
ராஜ பக்ஷே வை பாருங்க சிங்கள, தமிழ் பிரிவினையை தமிழர்களை ஒழித்துக்கட்டி கருவறுத்துவிட பார்க்கிறார். எப்படியோ என்னால முடிஞ்சவரைக்கும் என் சித்தாந்தத்தை விளக்கிட்டேன்னு (குழப்பிட்டேன்னு) நினைக்கிறேன்.

நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம்

தேரு எங்க சுத்தினாலும் தேரடிக்குத்தான் வரனுங்கற மாதிரி மறுபடி தமிழ் வலைப்பூ மேல கான்சன்ட்ரேட் பண்றதா முடிவு பண்ணியிருக்கேன். தமிழ்மணத்தோட கருவிப்பட்டைய இணைக்காததால காட்டில் காய்ந்த நிலவாய் போயின என் எழுத்துக்கள். நிற்க கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் ஒரு பதிவை ஆரம்பித்தேன் ஸ்வாமி 7867 என்பது அதன் எயர். இந்த 7 மாத காலத்தில் 16000 பேர் பார்த்தாங்க. ஆந்திர முதல்வரே சந்திரபாபுவை நான் செய்த ரவுசுக்கு ரெஸ்பாண்ட் ஆகிட்டாரு.

இருந்தாலும் என்ன குடுமிகள் பற்றி தெரியாத்தனமா ஒரு பதிவுல மென்ஷன் ப‌ண்ணிட்டேன். தினம் தினம் சுமார் 200 பேர் பார்த்துக்கிட்டிருந்த என் வலைப்பூவை சதி செய்து துஷ்பிரசாரம் செய்து ஒரு தடவை தடை கூட பண்ணிட்டாங்க. விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தால் ஜனத்தொகை பெருக்கம்,செக்ஸ் குற்றங்கள்,வன்முறை இத்யாதியை தவிர்க்கலாம்னு எழுதியிருந்தேன் அதை சாக்கா வச்சு துஷ்பிரச்சாரம் செய்தானுங்க.

ஆளை விடுங்கடான்னிட்டு வெப்துனியால இந்தில ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுட்டன்.

என் சித்தாந்தம் ரொம்ப சிம்பிள். நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம் . இப்போ சிதறிட்டோம். மறுபடி இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடலை தடையா நினக்கிறோம். கொலை தற்கொலை எல்லாத்துக்கும் காரணம் இந்த இணைவதற்கான துடிப்புத்தான்.(மாமிசம் உண்பவர்கள் கதையும் இதுதான்)

ஆனால் இந்த இணைவுக்கு தடையா இருக்கிறது நம்ம உடலில்லே..அகம்பாவம். இதை மறந்துட்டு உடலினை கொண்டே இணையபார்க்கிறோம். உடல்களை உதிர்க்கத்துடிக்கிறோம். நாம எல்லாம் ஒண்ணு. (ஒரு தாய் பிள்ளைன்னு ஜல்லியைக்க முடியாதுன்னாலும் நம்ம எல்லாருக்குமிடையில் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு.

கொல்றோம். கொல்லப்படறோம். இதுக்கு துடிக்கிறோம். காரணம் இணைப்புக்கு தடையா நாம தவறா நினைக்கிற உடலை உதிர்ப்பதே.

ஆனால் அகத்தை (ஈகோ) உதிர்த்தால் போதும் எல்லோரும் இணையலாம். இப்போ ஜெயா கலைஞரை எடுத்துக்கங்க ரெண்டுபேருக்கும் என்ன வித்யாசம் ? ஒரு ரோமமுல்லே. ரெண்டு கழகத்தையும் சேர்த்து தொலைக்கலாமில்லையா.
ராஜ பக்ஷே வை பாருங்க சிங்கள, தமிழ் பிரிவினையை தமிழர்களை ஒழித்துக்கட்டி கருவறுத்துவிட பார்க்கிறார். எப்படியோ என்னால முடிஞ்சவரைக்கும் என் சித்தாந்தத்தை விளக்கிட்டேன்னு (குழப்பிட்டேன்னு) நினைக்கிறேன்.

Monday, June 15, 2009

ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு

டவுனுக்கு வந்த கிராமத்தானைப்போல் இவர்கள் ஆஸ்திரேலியாவில் ஓவர் ஆக்ஷன் செய்கிறார்களா என்று ஒரு சம்சயம். கிராமத்தான் அப்படித்தான் அவன் காலை 6 மணீக்கு புறப்பட்டால்தான் டவுனுக்கு பத்துமணிக்கு வரமுடியும். மீண்டும் எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு மாலை 5 மணீ பஸ்ஸை பிடித்தால்தான் ஊர் போய் சேரமுடியும்.(கடைசி பஸ்)

மேற்சொன்ன காரணங்களால் அவன் ஊர் வம்பில் ஈடுபடமாட்டான். எவனாவது துப்பினாலும் சரிண்ணே சரிண்ணே என்பான். தன் வேலையே முக்கியம் என்றிருப்பான். இதரர் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டான்.(அலையல்,பரபரப்புடனே இருப்பான்)

இது டவுனிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அருவறுப்பாக இருக்கும். அதே சமயத்தில் காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியம் தான் பெரிதென்று டவுன் காரன் கோட்டை விட்டிருக்க காரியம் தான் பெரிதென்று கிராமத்தான் க்ளிக் ஆகி விடுகிறான்.

ஒரு டெயிலரையே எடுத்துக்கொள்ளுங்கள். டவுனிலிருக்கும் டெயிலர் ஆன பில்டப்புகள் கொடுத்துக்கொண்டிருப்பான். ரோத்மன் சிகரட் எட்ஸெட்ரா. கிராம பின்னணீயில் வந்தவன் பீடி குடிப்பதும் பத்து ரூபாய் குறைவாய் சார்ஜ் பண்ணுவதுமாய் டவுன் பிழைப்பை கெடுத்துக்கொண்டிருப்பான். மேலும் இந்த ஃபீலிங் கூட இருக்காது அவனுக்கு.


ஆஸ்திரேலியா போன இந்தியர் கதையும் இதுதான் போலும் .ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு என்பதெல்லாம் ஓவராக படவில்லையா ! ஆஸ்திரேலியா என்ன பாரதம் போன்று மானம் கெட்டா இருக்கிறது?

ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு

டவுனுக்கு வந்த கிராமத்தானைப்போல் இவர்கள் ஆஸ்திரேலியாவில் ஓவர் ஆக்ஷன் செய்கிறார்களா என்று ஒரு சம்சயம். கிராமத்தான் அப்படித்தான் அவன் காலை 6 மணீக்கு புறப்பட்டால்தான் டவுனுக்கு பத்துமணிக்கு வரமுடியும். மீண்டும் எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு மாலை 5 மணீ பஸ்ஸை பிடித்தால்தான் ஊர் போய் சேரமுடியும்.(கடைசி பஸ்)

மேற்சொன்ன காரணங்களால் அவன் ஊர் வம்பில் ஈடுபடமாட்டான். எவனாவது துப்பினாலும் சரிண்ணே சரிண்ணே என்பான். தன் வேலையே முக்கியம் என்றிருப்பான். இதரர் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டான்.(அலையல்,பரபரப்புடனே இருப்பான்)

இது டவுனிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அருவறுப்பாக இருக்கும். அதே சமயத்தில் காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியம் தான் பெரிதென்று டவுன் காரன் கோட்டை விட்டிருக்க காரியம் தான் பெரிதென்று கிராமத்தான் க்ளிக் ஆகி விடுகிறான்.

ஒரு டெயிலரையே எடுத்துக்கொள்ளுங்கள். டவுனிலிருக்கும் டெயிலர் ஆன பில்டப்புகள் கொடுத்துக்கொண்டிருப்பான். ரோத்மன் சிகரட் எட்ஸெட்ரா. கிராம பின்னணீயில் வந்தவன் பீடி குடிப்பதும் பத்து ரூபாய் குறைவாய் சார்ஜ் பண்ணுவதுமாய் டவுன் பிழைப்பை கெடுத்துக்கொண்டிருப்பான். மேலும் இந்த ஃபீலிங் கூட இருக்காது அவனுக்கு.


ஆஸ்திரேலியா போன இந்தியர் கதையும் இதுதான் போலும் .ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு என்பதெல்லாம் ஓவராக படவில்லையா ! ஆஸ்திரேலியா என்ன பாரதம் போன்று மானம் கெட்டா இருக்கிறது?

Sunday, June 7, 2009

பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?

குடிமக்களை காத்திட ,சமத்துவத்தை காத்திட,மனித உரிமைகளை காத்திட எந்த நாடும் எந்த நாட்டை வேண்டுமானால் வற்புறுத்தும் உரிமை உள்ளது. உலகமயமாக்கல் காரணமாக உலகமே ஒரு பட்டிக்காடாக மாறும் என்று கூறினார்கள். நாடுகள் காடுகளாகவும் ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டிகளாகவும் இருப்பது சோகம்.
ராஜ பக்ஷேவை போர் குற்றவாளியாக தீர்மானிக்கும் அமெரிக்க பிரிட்டன் முயற்சிக்கு பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?