Thursday, February 28, 2008

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான்.

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான். ஜோதிடம் குறித்து போகிற போக்கில் அவர் சொன்ன கருத்துகளை கண்டித்தவ‌ன் ,கிண்டலடித்தவன். ஆனாலும் அவரது பெரும்பாலான படைப்புகள் (கனவு தொழிற்சாலை,அன்று உன்னருகில்,வைரங்கள் முதலானவை) எனக்கு இன்றுவரை கூட இன்ஸ்பிரேஷனாக இருப்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இது சம்பிரதாயமான மரண அஞ்சலி அல்ல . என் உயிரிலிருந்து வரும் கருத்து. நாட்டு பொருளாதாரம்,அரசியல்,சினிமா குறித்த அவரது விமர்சனங்கள் கூட எனக்கு சம்மதமே. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் கூறியுள்ள 'சில' தீர்வுகள் எனக்கு சம்மதமில்லாமலிருக்கலாம்.


அதே நேரத்தில் சமூகம்,பொருளாதாரம்,அரசியல் குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட இல்லாத தத்து,பித்து பிராமண குழுவில் சுஜாதா மிகவும் வித்யாசமாக சிந்தித்தார். எழுதினார். தமிழ் நவீன படைப்பியலில் சுஜாதாவின் முத்திரை மறுக்க முடியாதது. இன்று வரை கூட நான் உட்பட ஆயிரக்கணக்கான இளைய படைப்பாளிகளின் எழுத்தில் அவரது பாதிப்பு இருப்பதை நினைத்து பார்க்கிறேன். பாரத பீஷ்மர் போல் தான் சார்ந்திருந்த குழுவின் கட்டாயங்களுக்கு,ஃபோபியாக்களுக்கு (உ.ம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு ) சுஜாதா அடி பணியாதிருந்திருந்தால் அவரது எழுத்து நிச்சயம் ஒரு ஒட்டு மொத்த புரட்சிக்கு அடிகோலி சரித்திரம் படைத்திருக்கும்.


பல்லாயிரம் சிற்றிதழ்களையும்,புதிய படைப்பாளிகளையும் மாஸ் மீடியாவுக்கு அறிமுகம் செய்த,புலமைக்காய்ச்சல் தீண்டாத அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக!

இனியாவது மத்திய ,மாநில,அரசுகள் சுஜாதா சமூக அக்கறையுடன் தெரிவித்த யோசனைகளையும்,திட்டங்களையும்(கலைச்சொல்லாக்கம்,தமிழ் எழுதுகருவிகள் முதலானவை) உபயோகித்துக்கொண்டால் நல்லது.

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான்.

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான். ஜோதிடம் குறித்து போகிற போக்கில் அவர் சொன்ன கருத்துகளை கண்டித்தவ‌ன் ,கிண்டலடித்தவன். ஆனாலும் அவரது பெரும்பாலான படைப்புகள் (கனவு தொழிற்சாலை,அன்று உன்னருகில்,வைரங்கள் முதலானவை) எனக்கு இன்றுவரை கூட இன்ஸ்பிரேஷனாக இருப்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இது சம்பிரதாயமான மரண அஞ்சலி அல்ல . என் உயிரிலிருந்து வரும் கருத்து. நாட்டு பொருளாதாரம்,அரசியல்,சினிமா குறித்த அவரது விமர்சனங்கள் கூட எனக்கு சம்மதமே. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் கூறியுள்ள 'சில' தீர்வுகள் எனக்கு சம்மதமில்லாமலிருக்கலாம்.


அதே நேரத்தில் சமூகம்,பொருளாதாரம்,அரசியல் குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட இல்லாத தத்து,பித்து பிராமண குழுவில் சுஜாதா மிகவும் வித்யாசமாக சிந்தித்தார். எழுதினார். தமிழ் நவீன படைப்பியலில் சுஜாதாவின் முத்திரை மறுக்க முடியாதது. இன்று வரை கூட நான் உட்பட ஆயிரக்கணக்கான இளைய படைப்பாளிகளின் எழுத்தில் அவரது பாதிப்பு இருப்பதை நினைத்து பார்க்கிறேன். பாரத பீஷ்மர் போல் தான் சார்ந்திருந்த குழுவின் கட்டாயங்களுக்கு,ஃபோபியாக்களுக்கு (உ.ம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு ) சுஜாதா அடி பணியாதிருந்திருந்தால் அவரது எழுத்து நிச்சயம் ஒரு ஒட்டு மொத்த புரட்சிக்கு அடிகோலி சரித்திரம் படைத்திருக்கும்.


பல்லாயிரம் சிற்றிதழ்களையும்,புதிய படைப்பாளிகளையும் மாஸ் மீடியாவுக்கு அறிமுகம் செய்த,புலமைக்காய்ச்சல் தீண்டாத அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக!

இனியாவது மத்திய ,மாநில,அரசுகள் சுஜாதா சமூக அக்கறையுடன் தெரிவித்த யோசனைகளையும்,திட்டங்களையும்(கலைச்சொல்லாக்கம்,தமிழ் எழுதுகருவிகள் முதலானவை) உபயோகித்துக்கொண்டால் நல்லது.

Wednesday, February 27, 2008

தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்

க‌ன்ச‌ல்ட‌ன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.


6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !


புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.


லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.


தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்


எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
7/85, பாணாலா தெரு,
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001
posted by chittoor.S.Murugeshan @ 7:09 AM

தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்

க‌ன்ச‌ல்ட‌ன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.


6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !


புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.


லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.


தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்


எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
7/85, பாணாலா தெரு,
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001
posted by chittoor.S.Murugeshan @ 7:09 AM

Tuesday, February 26, 2008

கடுப்பேற்றுவது என்றால்?

கடுப்பேற்றுவது என்றால்?

நான் தினத்தந்தி நிருபன் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும். ப்ரசிடென்ட் ஆஃப் இண்டியா என்று சொல்லும் ரேன்ஜில் பலமுறை பல பதிவுகளில் சொல்லியிருப்பேன். 27 ஆம் தேதி தர்ணா நடத்துவதாய் ஒரு சாதியினர் 24 ஆம் தேதி அறிவித்தனர்.(பிரஸ் மீட் வைத்து). அந்த சாதியில் ஒரு இளைஞர் தினத்தந்தியில் விளம்பரதாரர். என் க்ளாஸ் மேட், என் அண்ணனுக்கு ஃப்ரண்டு எல்லாம் ஓகே. பிரஸ் மீட் நடந்த அன்று அவர் எனக்கு போன் செய்து "பார்த்துக்க முருகா" என்றார், ரொம்ப ஜோவியலாய்.

நானும் சென்றேன். செய்தி எழுதினேன் . தந்தியில் வரவில்லை. மறுநாள் வரும் என்று சமாளித்தேன். மறுநாளும் வரவில்லை. ( அய்யா ஆதித்தனார் எழுதிய இதழாளர் கையேட்டில் ஒரு விதி இருக்கிறது. பேச்சு செய்தியாகாது. தர்ணா நடக்கட்டும் போடலாம் என்று கூட முடிவு செய்திருக்கலாம்.) நானும் 4 முறை ரிமைண்ட் செய்தேன். எடிட்டர் டெஸ்க்ல பலானவர் இருப்பார்,நான் சொன்னேன்னு சொல்லுங்க என்றார், சொன்னேன். எல்லாம் ஆச்சு.

இதெல்லாம் லொள்ளு சமாச்சாரம் என்று முதலிலேயே தெரியும். அதனால் செய்தியை ஃபேக்ஸ் செய்துவிட்டு ரசீது,மேட்டரை அந்த இளைஞரின் டேபிளுக்கே அனுப்பிவிட்டேன்.

இந்த நிலையில் அதே சாதியை சேர்ந்த ஒரு பிரமுகர், எனக்கு டயல் செய்துவிட்டு பக்கத்திலிருக்கும் நபரிடம் பேசுகிறார்." இந்த பத்திரிக்கைகார பயலுவளுக்கு ஒரு ஃபுல்,ஒரு பிரியாணி பொட்டலம் ஏற்பாடு பண்ணிரனும்பா , ....கிட்ட சொல்லிருங்க" (நான் சொன்ன விளம்பர தாரர்)

க‌டுப்பேற்றுவ‌து என்றால் இதுதான் போலும்.

ஃபுல்லும்,பிரியாணியும் எத்தனை பேருக்கு,எத்தனை முறை போட்டார்,போட்டு எழுத‌வைத்து இவ‌ர் என்ன‌த்தை கிழித்தார். இவ‌ர் க‌தை நீண்ட‌ க‌தை.

ஒரு ச‌ம‌ய‌ம் காசாவ‌து இருந்த‌து. இப்போ அந்த‌ ...ம் கிடையாது." நா காக்க‌" என்று வ‌ள்ளுவ‌ர் சொன்ன‌து இது மாதிரி பார்ட்டிக‌ளுக்காக‌த்தான் போலும்.

அப்புற‌ம் பாருங்க‌ ..ம‌றுப‌டி ட‌ய‌ல் ப‌ண்ணி ராஜா ..க‌ண்ணுனு பேசுது பார்ட்டி.

இந்த‌ பார்ட்டியோட‌ க‌தையை நிச்ச‌ய‌ம் அடுத்த‌ ப‌திவுல‌ எழுதியே தீர்ர‌ன். இது மாதிரி கேர‌க்ட‌ர் எல்லா ஊர்ல‌யும் ஒன்னு இருக்கு.

கடுப்பேற்றுவது என்றால்?

கடுப்பேற்றுவது என்றால்?

நான் தினத்தந்தி நிருபன் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும். ப்ரசிடென்ட் ஆஃப் இண்டியா என்று சொல்லும் ரேன்ஜில் பலமுறை பல பதிவுகளில் சொல்லியிருப்பேன். 27 ஆம் தேதி தர்ணா நடத்துவதாய் ஒரு சாதியினர் 24 ஆம் தேதி அறிவித்தனர்.(பிரஸ் மீட் வைத்து). அந்த சாதியில் ஒரு இளைஞர் தினத்தந்தியில் விளம்பரதாரர். என் க்ளாஸ் மேட், என் அண்ணனுக்கு ஃப்ரண்டு எல்லாம் ஓகே. பிரஸ் மீட் நடந்த அன்று அவர் எனக்கு போன் செய்து "பார்த்துக்க முருகா" என்றார், ரொம்ப ஜோவியலாய்.

நானும் சென்றேன். செய்தி எழுதினேன் . தந்தியில் வரவில்லை. மறுநாள் வரும் என்று சமாளித்தேன். மறுநாளும் வரவில்லை. ( அய்யா ஆதித்தனார் எழுதிய இதழாளர் கையேட்டில் ஒரு விதி இருக்கிறது. பேச்சு செய்தியாகாது. தர்ணா நடக்கட்டும் போடலாம் என்று கூட முடிவு செய்திருக்கலாம்.) நானும் 4 முறை ரிமைண்ட் செய்தேன். எடிட்டர் டெஸ்க்ல பலானவர் இருப்பார்,நான் சொன்னேன்னு சொல்லுங்க என்றார், சொன்னேன். எல்லாம் ஆச்சு.

இதெல்லாம் லொள்ளு சமாச்சாரம் என்று முதலிலேயே தெரியும். அதனால் செய்தியை ஃபேக்ஸ் செய்துவிட்டு ரசீது,மேட்டரை அந்த இளைஞரின் டேபிளுக்கே அனுப்பிவிட்டேன்.

இந்த நிலையில் அதே சாதியை சேர்ந்த ஒரு பிரமுகர், எனக்கு டயல் செய்துவிட்டு பக்கத்திலிருக்கும் நபரிடம் பேசுகிறார்." இந்த பத்திரிக்கைகார பயலுவளுக்கு ஒரு ஃபுல்,ஒரு பிரியாணி பொட்டலம் ஏற்பாடு பண்ணிரனும்பா , ....கிட்ட சொல்லிருங்க" (நான் சொன்ன விளம்பர தாரர்)

க‌டுப்பேற்றுவ‌து என்றால் இதுதான் போலும்.

ஃபுல்லும்,பிரியாணியும் எத்தனை பேருக்கு,எத்தனை முறை போட்டார்,போட்டு எழுத‌வைத்து இவ‌ர் என்ன‌த்தை கிழித்தார். இவ‌ர் க‌தை நீண்ட‌ க‌தை.

ஒரு ச‌ம‌ய‌ம் காசாவ‌து இருந்த‌து. இப்போ அந்த‌ ...ம் கிடையாது." நா காக்க‌" என்று வ‌ள்ளுவ‌ர் சொன்ன‌து இது மாதிரி பார்ட்டிக‌ளுக்காக‌த்தான் போலும்.

அப்புற‌ம் பாருங்க‌ ..ம‌றுப‌டி ட‌ய‌ல் ப‌ண்ணி ராஜா ..க‌ண்ணுனு பேசுது பார்ட்டி.

இந்த‌ பார்ட்டியோட‌ க‌தையை நிச்ச‌ய‌ம் அடுத்த‌ ப‌திவுல‌ எழுதியே தீர்ர‌ன். இது மாதிரி கேர‌க்ட‌ர் எல்லா ஊர்ல‌யும் ஒன்னு இருக்கு.

வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை

பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:

" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"


இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்த‌றான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.

எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.

அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்க‌ளா என்றும் மற்றொரு சம்சயம்.

நீங்கள் காணும் இந்த வித்யாசங்கள் கதையும் தர்ம கேசு தான்.