Pages

Thursday, November 20, 2008

ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.

இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.


எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

No comments:

Post a Comment