Showing posts with label Enadu. Show all posts
Showing posts with label Enadu. Show all posts

Thursday, April 1, 2010

அடிக்காத உதைக்காத விரைய நசுக்கு

என்.டி.ஆர் வீழ்ச்சி பின்னால இருந்த மீடியா சூழ்ச்சி, லிக்கர் லாபி சூழ்ச்சியை விவரிச்சு இந்த பதிவு போட்டிருக்கேண்ணா ஒரு ஓட்டம் பார்த்திங்கண்ணா ஆகா இதுவல்லவா நிர்வாண உண்மைனு துள்ளி குதிப்பிக‌...

"அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?" - இது மனிதன் சினிமாவுக்கு வைரமுத்து எழுதின பாட்டு வரி. தமிழ் நாடு உங்க வீடு . எங்க ஆந்திரம் பக்கத்து வீடு. இங்கே பிரிவினை வாதம் தலையெடுத்தா உங்க வீட்லயும் சலசலப்பு கேட்கும். கேட்டுது கூட.
நீங்க என்னதான் ஆந்திரா கொல்ட்டினு நக்கலடிச்சாலும் , பல விஷயங்கள்ள எங்காளுங்க நல்ல அவேர்னெஸோட இருக்காங்க. ஆனால் ஒரு விஷயத்துல மட்டும் ஆந்திராகாரனா தலை குனிய வேண்டியிருக்கு. அதான் சந்திரபாபு எபிசோட்.
நல்ல காலம் இந்த முதுகில் குத்திய படலத்தோட இன்னர் டீட்டெயில்ஸ் உங்களுக்கு தெரியாது.தெரிஞ்சிருந்தா காறி துப்பியிருப்பிங்க்..
சந்திரபாபுவோட வாழ்க்கையே துரோகத்துல நனைஞ்ச வாழ்க்கை. ஸ்டூடெண்ட் லைஃப்லயே செல்ஃபிஷ் ஃபெலோ, கேல்குலேட்டடா பிஹேவ் பண்ற பார்ட்டி. மாணவர் சங்க தேர்தல்ல பார்ட்டிசிப்பேட் பண்ணி , இளைஞர் காங்கிரஸ்ல இறங்கினார். அந்த காலத்துலயே பாபுல இருந்த ஸ்பார்க்கை ஒரு எம்.எல்.ஏ ஸ்மெல் பண்ணிட்டாரு. தன் மகளை கட்டிக்க சொல்லி ப்ரப்போஸ் பண்ணாரு.
நம்மாளு சரி சரின்னிக்கிட்டே தன் அரசியல் வளர்ச்சிக்கு அந்த எம்.எல்.ஏவை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
இதையடுத்து இப்போ மந்திரியா இருக்கிற ஒரு அம்மாவ கட்டிக்க சொல்லி அரசியல் வாதி கம் தொழிலதிபரான அவிக அப்பா ஆஃபர் பண்ணாராம். உடனே எம்.எல்.ஏ மகளை திராட்ல விட்டுட்டு பாபு இந்தப்பக்கம் குதிச்சார்.
அவரையும் தன் அரசியல் வளர்ச்சிக்கு அவரை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
அடிச்சி பிடிச்சி ஒரு இஸ்பேட் மாளிகைதனமான காங்கிரஸ் மந்திரி சபைல மந்திரியா கூட ஆய்ட்டாரு. அப்போதான் ஊழ்வினை உறுத்து வந்தூட்ட சந்திரபாபுவுக்கு தன் மகள் புவனேஸ்வரிய ஆஃபர் பண்ணார். கல்யாணமும் நடந்தது.
காங்கிரஸ் கலாச்சாரப்படி சில மாதங்கள்ளயே பாபு முன்னாள் மந்திரியாவும் ஆயிட்டாரு. என்.டி.ஆர் தில்லி போய் இந்திரா காந்தி கிட்டயே பைரவி பண்ணியும் வேலைக்காகலே.
என்.டி.ஆர் நீ என்ன என் மாப்பிள்ளைக்கு மந்திரி பதவி தரமாட்டேங்கறது நானே முதல் மந்திரியாகி நானே மந்திரி பதவி தரேன்னிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சுட்டாரு.ஆனா சந்திரபாபு காங்கிரஸுலயே கன்டின்யூ பண்ணிட்டாரு.கும்பல்ல கோவிந்தா போட்டிருந்தால் கூட பரவாயில்லை. கட்சி ஆணையிட்டால் என்.டி.ஆரை எதிர்த்து போட்டியிடுவேன்னு காமெடி கீமிடி எல்லாம் பண்ணிட்டாரு. சொந்த தொகுதில தோத்து போயிட்டாரு. அதுக்கப்புறம்தான் தெ. தேகட்சிக்குள்ள வந்தாரு
அதுக்குள்ளார நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்போ பாபு தன் நரிவேலைகளையெல்லாம் என்.டி.ஆர் தரப்புல இருந்து செய்தார். ஆப்பரேஷன் சக்ஸஸ்.ஆனால் என்.டி.ஆர் மக்கள் மேல மட்டும் நம்பிக்கை வச்சிருந்த பார்ட்டி. பெரும்பான்மை பலத்தை நிரூபிச்ச கையோட சட்டசபைய கலைக்க ரெகமண்ட் பண்ணிட்டாரு.
மறுபடி எலக்சன். தூள் மெஜாரிட்டியோட வந்துட்டாரு. ஓவர் கான்ஃபிடன்ஸ்னால எல்லா தரப்பையும் விரோதம் பண்ணிக்கிட்டாரு. முக்கியமா அரசு ஊழியர்கள். அம்பத்தஞ்சு நாள் ஸ்ட்ரைக் பண்ணியும் மூட்டை அவுக்கலே.
அடுத்த எலக்சன்ல கவுந்துட்டாரு. அந்த 5 வருச காலத்துல சந்திரபாபு கட்சியை பலப்படுத்தறேன் பேர்வழி கட்சிக்காரங்க கிட்டே நல்லாவே நெருங்கிட்டாரு.
என்.டி.ஆரோட ஜைகாண்டிக் கேரக்டரை தயக்கத்தோட அணுகிகிட்டிருந்த கட்சிக்காரங்க பாபுவோட ஈஸியா மூவ் பண்ண முடிஞ்சது.
தேர்தல் நெருங்கி வர்ர சமயத்துல லட்சுமிபார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டார் என்.டி.ஆர். இருந்தாலும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க. என்.டி.ஆர் பூரண மதுவிலக்கு, இரண்டுரூபாய்க்குகிலோஅரிசினு வாக்குறுதி கொடுத்து தேர்தலுக்கு போனாரு.
அப்போ ஈ நாடு,உதயம்னு ரெண்டு பத்திரிக்கை முட்டி மோதிக்கிட்டிருந்த காலம் .இதுக்கு காரணம் இல்லாம இல்லே. உதயம் காங்கிரஸ் ஆதரவு பேப்பர். பப்ளிஷர் டி.சுப்பராமி ரெட்டி. இவரோட முக்கிய ஆதாய சோர்ஸ் வைன்ஸ். ராமோஜி ராவ் அதாங்க ஈ நாடு பப்ளிஷர் அடிக்காத உதைக்காத விரைய நசுக்குங்கற மாதிரி
மதுவுக்கு எதிரா ஒரு போராட்டத்தை துவக்கினாரு. எல்லாம் பேப்பர் வார்.
எங்கயோ பொம்பளைங்க போய் கள்ளுக்கடைய அடிச்சா ஹெட் லைன், எங்கயோ பெண்கள் போய் வைன்ஷாப் முன்ன தர்ணா பண்ணா தலையங்கம்னு தாளிச்சாரு.
என்.டி.ஆரும் மக்கள் கருத்து இதான் போலனு பூரண மதுவிலக்கு கொண்டுவர்ரதா வாக்குறுதி கொடுத்தார், அதுக்குள்ள உதயம் பேப்பர் நின்னு போச்சு. ராமோஜி ராவ் லட்சியம் நிறைவேறிபோச்சு.
இப்போ லாபியிங்க் ஸ்டார்ட் ஆயிருச்சு. லிக்கர் லாபி.உதயம் பேப்பர் நின்னுருச்சில்லியா இன்னும் மதுவிலக்கு இருந்தா என்ன போனா என்ன? மதுவிலக்கை ரத்து பண்ணவச்சா லிக்கர் லாபி மூட்டை வேற அவுக்கும்
மதிவிலக்கை ரத்து பண்ணச்சொல்லி என்.டி.ஆர் மேல ப்ரஷர் ஆரம்பமாயிருச்சு. அது பிடிச்ச முயலுக்கு மூனே காலுங்கற பார்ட்டி. பப்பு வேகல.
நான் சொன்னது நடக்கலன்னா அந்த அரசாங்கமே இருக்ககூடாதுங்கறது ராமோஜிராவ் சைக்காலஜி. அந்த நேரம் பார்த்து பாபு நிதி மந்திரியா தன் பிற்கால பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்ய ஏழையோட கோவணத்தை உருவ தன் கோவணத்தை வரிஞ்சி கட்டினாரு. இதுதொடர்பான ஜி.ஓ வெளிவந்தபிறகு கூட அதை என்.டி.ஆர் ரத்து பண்ண சந்தர்ப்பம் அனேகம்.
இன்னொரு பக்கம் லட்சுமி பார்வதி. மாமன் எந்திரிச்சா திண்ண என்னுதுனு இருந்த பாபுவுக்கு ல.பா பெரிய தடையாயிட்டாங்க.
ஸோ லிக்கர் லாபி, ராமோஜிராவோட மீடியா லாபி, பாபுவோட பதவி ஆசை எல்லாம் கூட்டு சேர்ந்து என்.டி.ஆருக்கு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.
பாபு சி.எம்.ஆனாரு.மாமன் போட்ட கோட்லயே ரோட்ட போட்டுக்கிட்டு அப்படி இப்படி சைட் வாங்கிக்கிட்டு போயிருந்தா பரவால்ல படையப்பா ரஜினி மாதிரி என் வழி தனி வழின்னு சிலும்பினாரு.
ஆனால் சந்திரபாபு மதுவிலக்கை கள்ளு,சாராயத்துக்கு மட்டும் அமல் படுத்தி கலர் சாராயத்தை வெள்ளமா ஓட விட்டாரு. அரிசி விலை ஏத்தியாச்சு. புதுசா எவனுக்கும் கார்டு தரமுடியாதுன்னுட்டாரு .(ஆனா 2003 ல இவர் நக்சலைட்டுகளோட க்ளைமோர் குண்டு வெடிப்புல மாட்ன உடனே தாளி அனுதாப ஓட்டை அள்ளிர வேண்டியதுதான்னு முன் கூட்டியே தேர்தலுக்கு போனாரு . சில நாள்ளயே பர்சனாலிட்டி தெரிஞ்சு போச்சு . நீ செத்திருந்தா தீபாவளி பண்ணியிருப்பாங்க. பொழச்சதுக்குதான் வருத்தமா இருக்காங்கனு ரிப்போர்ட் போச்சு. உடனே கேட்டவன் கேட்காதவன் எல்லாருக்கும் , எல்லாமும் அள்ளி விட்டாரு.ஆனாலும் சனம் ஓட்டை கிள்ளி கூட போடலங்கறது வேற விஷயம்)

விவசாயம்லாம் வேஸ்டு. விவசாயத்துக்கு எதிர்காலமில்லே. விவசாயிகளோட வாரிசுகள் எல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கனும்னிட்டாரு. விவசாயம் 70% மக்களை வாழவைக்குது. அந்த நேரத்துல இந்தியால கம்ப்யூட்டர் உபயோகிச்சவங்க 2% க்கும் கம்மி. அவுகளை தலை மேல வச்சி தாங்கினாரு. விவசாயத்துக்கு என்.டி.ஆர் ஹெச்.பிக்கு அம்பது ரூபானு கொடுத்த மின்சார கட்டணத்தை டபுளாக்கிட்டாரு. பாக்கி கட்டாதவங்களோட வீடு ஆடு,மாடு,சட்டி பானையெல்லாம் ஜப்தி பண்ணவச்சாரு. கிரிமினல் கேஸ் போட்டாரு.
பஸ் சார்ஜ் ஏத்தறது என்ன? மின் கட்டண உயர்வு என்ன?( அதுலயும் 100 சதவீதம்), வீட்டு வரி உயர்வென்ன? ( சில நகரங்கள்ள 300 சதவீதம் கூட) கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில கூட யூசர் சார்ஜ் என்ன.. கேட்டா இப்ப நான் அரசியல் வாதி இல்லே. சி.இ.ஓ. கம்பெனிக்கு (கவர்ன்மென்டுக்கு) எது லாபமோ அதை தான் செய்வேனு பேச ஆரம்பிச்சாரு. தனியார் மயமென்ன?( எங்க ஊரு ஷுகர் ஃபேக்டரியையே தாரை வார்க்க பார்த்தாரு தலை ! இப்போ அது லாபத்துல நடக்கலையா என்ன? ) பொருளாதார சீர்திருத்தம் என்ன ? தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அலப்பறை என்ன? நானும் தூங்கமாட்டேன். உங்களையும் தூங்க விடமாட்டேன்னு வசனம் என்ன?
அவர் ஒரு ட்ரான்ஸ்ல போயிட்டாரு. யதார்த்தத்துல இருந்து விலகிப்போயிட்டாரு.
பன்னா பன்னானு தன் பேச்சையே பேசிக்கிட்டு (அதுவும் ஒரு உணர்ச்சியோ,ஏற்ற இறக்கமோ இல்லாத இயந்திர குரல். கொச்சை வார்த்தைகள், ராங்க் ப்ரனவுன்ஸேஷன். கேட்க சகிக்காது. )
ஒரு பக்கம் பச்சதனம் பரிசுப்ரதான்னிட்டு ( பசுமைமயம், சுத்தம்) ம்ரம் நடவேண்டியது. மறுபக்கம் சாலை விரிவாக்கம்னுட்டு லட்சக்கணக்கான மரங்களை வெட்டி தள்றது. பரிசுப்ரதான்னிட்டு ஐ.ஏ.எஸுங்களை யெல்லாம் சுண்ணாம்பு அடிக்க வைக்க வேண்டியது. பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு ஒரு ஸ்கீம் கொண்டாந்தாரு. நல்லாருக்கு. உண்மையிலயே பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு நடந்திருந்தா மூணு மாசத்துலயோ ,ஆறு மாசத்துலயோ பெண்டிங்க் ஃபைல்ஸ் எல்லாம் ஒழிஞ்சுரனும்லியா.. ஊஹூம் . ஆட்சி காலம் பூரா நடந்து ஆஃபீசருங்களுக்கு பைல்ஸ் வந்ததுதான் மிச்சம்.
சனத்துக்கு ஆப்பு வச்சிட்டோம்னு அவருக்கே தோணிட்டாப்ல இருக்கு. தான் பண்ண குழப்படியையெல்லாம் மறைக்க போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு டி.வி ல வரேன் கேள்வி கேளுங்க, உழவர் சந்தை ,ஜன்ம பூமினு கதை பண்ணி இந்திரஜாலமெல்லாம் பண்ண ஆரம்பிச்சாரு. ஜன்ம பூமினு ஒரு ஸ்கீம்.
(தொடரும் .. வழக்கமான சம்பிரதாயபரமான தொடரும்னு .. நினைச்சிராதிங்க. நிஜமாவே தொடரும்

அடிக்காத உதைக்காத விரைய நசுக்கு

என்.டி.ஆர் வீழ்ச்சி பின்னால இருந்த மீடியா சூழ்ச்சி, லிக்கர் லாபி சூழ்ச்சியை விவரிச்சு இந்த பதிவு போட்டிருக்கேண்ணா ஒரு ஓட்டம் பார்த்திங்கண்ணா ஆகா இதுவல்லவா நிர்வாண உண்மைனு துள்ளி குதிப்பிக‌...

"அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?" - இது மனிதன் சினிமாவுக்கு வைரமுத்து எழுதின பாட்டு வரி. தமிழ் நாடு உங்க வீடு . எங்க ஆந்திரம் பக்கத்து வீடு. இங்கே பிரிவினை வாதம் தலையெடுத்தா உங்க வீட்லயும் சலசலப்பு கேட்கும். கேட்டுது கூட.
நீங்க என்னதான் ஆந்திரா கொல்ட்டினு நக்கலடிச்சாலும் , பல விஷயங்கள்ள எங்காளுங்க நல்ல அவேர்னெஸோட இருக்காங்க. ஆனால் ஒரு விஷயத்துல மட்டும் ஆந்திராகாரனா தலை குனிய வேண்டியிருக்கு. அதான் சந்திரபாபு எபிசோட்.
நல்ல காலம் இந்த முதுகில் குத்திய படலத்தோட இன்னர் டீட்டெயில்ஸ் உங்களுக்கு தெரியாது.தெரிஞ்சிருந்தா காறி துப்பியிருப்பிங்க்..
சந்திரபாபுவோட வாழ்க்கையே துரோகத்துல நனைஞ்ச வாழ்க்கை. ஸ்டூடெண்ட் லைஃப்லயே செல்ஃபிஷ் ஃபெலோ, கேல்குலேட்டடா பிஹேவ் பண்ற பார்ட்டி. மாணவர் சங்க தேர்தல்ல பார்ட்டிசிப்பேட் பண்ணி , இளைஞர் காங்கிரஸ்ல இறங்கினார். அந்த காலத்துலயே பாபுல இருந்த ஸ்பார்க்கை ஒரு எம்.எல்.ஏ ஸ்மெல் பண்ணிட்டாரு. தன் மகளை கட்டிக்க சொல்லி ப்ரப்போஸ் பண்ணாரு.
நம்மாளு சரி சரின்னிக்கிட்டே தன் அரசியல் வளர்ச்சிக்கு அந்த எம்.எல்.ஏவை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
இதையடுத்து இப்போ மந்திரியா இருக்கிற ஒரு அம்மாவ கட்டிக்க சொல்லி அரசியல் வாதி கம் தொழிலதிபரான அவிக அப்பா ஆஃபர் பண்ணாராம். உடனே எம்.எல்.ஏ மகளை திராட்ல விட்டுட்டு பாபு இந்தப்பக்கம் குதிச்சார்.
அவரையும் தன் அரசியல் வளர்ச்சிக்கு அவரை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
அடிச்சி பிடிச்சி ஒரு இஸ்பேட் மாளிகைதனமான காங்கிரஸ் மந்திரி சபைல மந்திரியா கூட ஆய்ட்டாரு. அப்போதான் ஊழ்வினை உறுத்து வந்தூட்ட சந்திரபாபுவுக்கு தன் மகள் புவனேஸ்வரிய ஆஃபர் பண்ணார். கல்யாணமும் நடந்தது.
காங்கிரஸ் கலாச்சாரப்படி சில மாதங்கள்ளயே பாபு முன்னாள் மந்திரியாவும் ஆயிட்டாரு. என்.டி.ஆர் தில்லி போய் இந்திரா காந்தி கிட்டயே பைரவி பண்ணியும் வேலைக்காகலே.
என்.டி.ஆர் நீ என்ன என் மாப்பிள்ளைக்கு மந்திரி பதவி தரமாட்டேங்கறது நானே முதல் மந்திரியாகி நானே மந்திரி பதவி தரேன்னிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சுட்டாரு.ஆனா சந்திரபாபு காங்கிரஸுலயே கன்டின்யூ பண்ணிட்டாரு.கும்பல்ல கோவிந்தா போட்டிருந்தால் கூட பரவாயில்லை. கட்சி ஆணையிட்டால் என்.டி.ஆரை எதிர்த்து போட்டியிடுவேன்னு காமெடி கீமிடி எல்லாம் பண்ணிட்டாரு. சொந்த தொகுதில தோத்து போயிட்டாரு. அதுக்கப்புறம்தான் தெ. தேகட்சிக்குள்ள வந்தாரு
அதுக்குள்ளார நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்போ பாபு தன் நரிவேலைகளையெல்லாம் என்.டி.ஆர் தரப்புல இருந்து செய்தார். ஆப்பரேஷன் சக்ஸஸ்.ஆனால் என்.டி.ஆர் மக்கள் மேல மட்டும் நம்பிக்கை வச்சிருந்த பார்ட்டி. பெரும்பான்மை பலத்தை நிரூபிச்ச கையோட சட்டசபைய கலைக்க ரெகமண்ட் பண்ணிட்டாரு.
மறுபடி எலக்சன். தூள் மெஜாரிட்டியோட வந்துட்டாரு. ஓவர் கான்ஃபிடன்ஸ்னால எல்லா தரப்பையும் விரோதம் பண்ணிக்கிட்டாரு. முக்கியமா அரசு ஊழியர்கள். அம்பத்தஞ்சு நாள் ஸ்ட்ரைக் பண்ணியும் மூட்டை அவுக்கலே.
அடுத்த எலக்சன்ல கவுந்துட்டாரு. அந்த 5 வருச காலத்துல சந்திரபாபு கட்சியை பலப்படுத்தறேன் பேர்வழி கட்சிக்காரங்க கிட்டே நல்லாவே நெருங்கிட்டாரு.
என்.டி.ஆரோட ஜைகாண்டிக் கேரக்டரை தயக்கத்தோட அணுகிகிட்டிருந்த கட்சிக்காரங்க பாபுவோட ஈஸியா மூவ் பண்ண முடிஞ்சது.
தேர்தல் நெருங்கி வர்ர சமயத்துல லட்சுமிபார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டார் என்.டி.ஆர். இருந்தாலும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க. என்.டி.ஆர் பூரண மதுவிலக்கு, இரண்டுரூபாய்க்குகிலோஅரிசினு வாக்குறுதி கொடுத்து தேர்தலுக்கு போனாரு.
அப்போ ஈ நாடு,உதயம்னு ரெண்டு பத்திரிக்கை முட்டி மோதிக்கிட்டிருந்த காலம் .இதுக்கு காரணம் இல்லாம இல்லே. உதயம் காங்கிரஸ் ஆதரவு பேப்பர். பப்ளிஷர் டி.சுப்பராமி ரெட்டி. இவரோட முக்கிய ஆதாய சோர்ஸ் வைன்ஸ். ராமோஜி ராவ் அதாங்க ஈ நாடு பப்ளிஷர் அடிக்காத உதைக்காத விரைய நசுக்குங்கற மாதிரி
மதுவுக்கு எதிரா ஒரு போராட்டத்தை துவக்கினாரு. எல்லாம் பேப்பர் வார்.
எங்கயோ பொம்பளைங்க போய் கள்ளுக்கடைய அடிச்சா ஹெட் லைன், எங்கயோ பெண்கள் போய் வைன்ஷாப் முன்ன தர்ணா பண்ணா தலையங்கம்னு தாளிச்சாரு.
என்.டி.ஆரும் மக்கள் கருத்து இதான் போலனு பூரண மதுவிலக்கு கொண்டுவர்ரதா வாக்குறுதி கொடுத்தார், அதுக்குள்ள உதயம் பேப்பர் நின்னு போச்சு. ராமோஜி ராவ் லட்சியம் நிறைவேறிபோச்சு.
இப்போ லாபியிங்க் ஸ்டார்ட் ஆயிருச்சு. லிக்கர் லாபி.உதயம் பேப்பர் நின்னுருச்சில்லியா இன்னும் மதுவிலக்கு இருந்தா என்ன போனா என்ன? மதுவிலக்கை ரத்து பண்ணவச்சா லிக்கர் லாபி மூட்டை வேற அவுக்கும்
மதிவிலக்கை ரத்து பண்ணச்சொல்லி என்.டி.ஆர் மேல ப்ரஷர் ஆரம்பமாயிருச்சு. அது பிடிச்ச முயலுக்கு மூனே காலுங்கற பார்ட்டி. பப்பு வேகல.
நான் சொன்னது நடக்கலன்னா அந்த அரசாங்கமே இருக்ககூடாதுங்கறது ராமோஜிராவ் சைக்காலஜி. அந்த நேரம் பார்த்து பாபு நிதி மந்திரியா தன் பிற்கால பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்ய ஏழையோட கோவணத்தை உருவ தன் கோவணத்தை வரிஞ்சி கட்டினாரு. இதுதொடர்பான ஜி.ஓ வெளிவந்தபிறகு கூட அதை என்.டி.ஆர் ரத்து பண்ண சந்தர்ப்பம் அனேகம்.
இன்னொரு பக்கம் லட்சுமி பார்வதி. மாமன் எந்திரிச்சா திண்ண என்னுதுனு இருந்த பாபுவுக்கு ல.பா பெரிய தடையாயிட்டாங்க.
ஸோ லிக்கர் லாபி, ராமோஜிராவோட மீடியா லாபி, பாபுவோட பதவி ஆசை எல்லாம் கூட்டு சேர்ந்து என்.டி.ஆருக்கு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.
பாபு சி.எம்.ஆனாரு.மாமன் போட்ட கோட்லயே ரோட்ட போட்டுக்கிட்டு அப்படி இப்படி சைட் வாங்கிக்கிட்டு போயிருந்தா பரவால்ல படையப்பா ரஜினி மாதிரி என் வழி தனி வழின்னு சிலும்பினாரு.
ஆனால் சந்திரபாபு மதுவிலக்கை கள்ளு,சாராயத்துக்கு மட்டும் அமல் படுத்தி கலர் சாராயத்தை வெள்ளமா ஓட விட்டாரு. அரிசி விலை ஏத்தியாச்சு. புதுசா எவனுக்கும் கார்டு தரமுடியாதுன்னுட்டாரு .(ஆனா 2003 ல இவர் நக்சலைட்டுகளோட க்ளைமோர் குண்டு வெடிப்புல மாட்ன உடனே தாளி அனுதாப ஓட்டை அள்ளிர வேண்டியதுதான்னு முன் கூட்டியே தேர்தலுக்கு போனாரு . சில நாள்ளயே பர்சனாலிட்டி தெரிஞ்சு போச்சு . நீ செத்திருந்தா தீபாவளி பண்ணியிருப்பாங்க. பொழச்சதுக்குதான் வருத்தமா இருக்காங்கனு ரிப்போர்ட் போச்சு. உடனே கேட்டவன் கேட்காதவன் எல்லாருக்கும் , எல்லாமும் அள்ளி விட்டாரு.ஆனாலும் சனம் ஓட்டை கிள்ளி கூட போடலங்கறது வேற விஷயம்)

விவசாயம்லாம் வேஸ்டு. விவசாயத்துக்கு எதிர்காலமில்லே. விவசாயிகளோட வாரிசுகள் எல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கனும்னிட்டாரு. விவசாயம் 70% மக்களை வாழவைக்குது. அந்த நேரத்துல இந்தியால கம்ப்யூட்டர் உபயோகிச்சவங்க 2% க்கும் கம்மி. அவுகளை தலை மேல வச்சி தாங்கினாரு. விவசாயத்துக்கு என்.டி.ஆர் ஹெச்.பிக்கு அம்பது ரூபானு கொடுத்த மின்சார கட்டணத்தை டபுளாக்கிட்டாரு. பாக்கி கட்டாதவங்களோட வீடு ஆடு,மாடு,சட்டி பானையெல்லாம் ஜப்தி பண்ணவச்சாரு. கிரிமினல் கேஸ் போட்டாரு.
பஸ் சார்ஜ் ஏத்தறது என்ன? மின் கட்டண உயர்வு என்ன?( அதுலயும் 100 சதவீதம்), வீட்டு வரி உயர்வென்ன? ( சில நகரங்கள்ள 300 சதவீதம் கூட) கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில கூட யூசர் சார்ஜ் என்ன.. கேட்டா இப்ப நான் அரசியல் வாதி இல்லே. சி.இ.ஓ. கம்பெனிக்கு (கவர்ன்மென்டுக்கு) எது லாபமோ அதை தான் செய்வேனு பேச ஆரம்பிச்சாரு. தனியார் மயமென்ன?( எங்க ஊரு ஷுகர் ஃபேக்டரியையே தாரை வார்க்க பார்த்தாரு தலை ! இப்போ அது லாபத்துல நடக்கலையா என்ன? ) பொருளாதார சீர்திருத்தம் என்ன ? தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அலப்பறை என்ன? நானும் தூங்கமாட்டேன். உங்களையும் தூங்க விடமாட்டேன்னு வசனம் என்ன?
அவர் ஒரு ட்ரான்ஸ்ல போயிட்டாரு. யதார்த்தத்துல இருந்து விலகிப்போயிட்டாரு.
பன்னா பன்னானு தன் பேச்சையே பேசிக்கிட்டு (அதுவும் ஒரு உணர்ச்சியோ,ஏற்ற இறக்கமோ இல்லாத இயந்திர குரல். கொச்சை வார்த்தைகள், ராங்க் ப்ரனவுன்ஸேஷன். கேட்க சகிக்காது. )
ஒரு பக்கம் பச்சதனம் பரிசுப்ரதான்னிட்டு ( பசுமைமயம், சுத்தம்) ம்ரம் நடவேண்டியது. மறுபக்கம் சாலை விரிவாக்கம்னுட்டு லட்சக்கணக்கான மரங்களை வெட்டி தள்றது. பரிசுப்ரதான்னிட்டு ஐ.ஏ.எஸுங்களை யெல்லாம் சுண்ணாம்பு அடிக்க வைக்க வேண்டியது. பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு ஒரு ஸ்கீம் கொண்டாந்தாரு. நல்லாருக்கு. உண்மையிலயே பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு நடந்திருந்தா மூணு மாசத்துலயோ ,ஆறு மாசத்துலயோ பெண்டிங்க் ஃபைல்ஸ் எல்லாம் ஒழிஞ்சுரனும்லியா.. ஊஹூம் . ஆட்சி காலம் பூரா நடந்து ஆஃபீசருங்களுக்கு பைல்ஸ் வந்ததுதான் மிச்சம்.
சனத்துக்கு ஆப்பு வச்சிட்டோம்னு அவருக்கே தோணிட்டாப்ல இருக்கு. தான் பண்ண குழப்படியையெல்லாம் மறைக்க போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு டி.வி ல வரேன் கேள்வி கேளுங்க, உழவர் சந்தை ,ஜன்ம பூமினு கதை பண்ணி இந்திரஜாலமெல்லாம் பண்ண ஆரம்பிச்சாரு. ஜன்ம பூமினு ஒரு ஸ்கீம்.
(தொடரும் .. வழக்கமான சம்பிரதாயபரமான தொடரும்னு .. நினைச்சிராதிங்க. நிஜமாவே தொடரும்

Saturday, January 9, 2010

ஒய்.எஸ்.ஆர் கொலை ? பின்னணியில் ஈ நாடு ?


ஒய்.எஸ்.ஆர் மரணம் கொலயா ? பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளதா ? என்று தெலுங்கு சேனல்கள் அலப்பறை செய்தது தெரிந்ததே. ஒரு ரஷ்ய வலைதளத்தின் செய்தியை ஆதாரமாக கொண்டு சேனல்கள் தீபாவளி கொண்டாடிவிட்ட நிலையில் ரோசய்யா தலைமையில் ஆன அரசு போலீஸ் நாய்களை அவிழுத்துவிட்டது. எமர்ஜென்ஸி காலம் போல் நள்ளிரவு சோதனைகள், கைதுகள் நடந்தேறிவருகின்றன.

என்னைப்பொருத்தவரை நான் ரஷ்யன் வலைதளத்தையோ, அதன் செய்தியை ஆதாரமாக கொண்டு ஸ்டோரிகள், விவாதங்களை பிரசுரித்த தெலுங்கு சேனல்களையோ ஆதரிக்கவில்லை. ஆனால் தெலுங்கானாவுக்கு ஆதரவாக மத்திய அரசு முதல் அறிக்கை வெளியிட்ட நாள் முதலாக மவுன விரதம் காத்துவந்த சந்திரபாபு மேற்படி டி.வி ஒளிபரப்புகளுக்கு பின் ஆங்காங்கே நடந்த தாக்குதல் சம்பவங்களை தாக்கி பேசிய வீராவேசமான, காராசாரமான பேச்சு புதிய சிந்தனைகளை கிளப்பியது.

ஏறக்குறைய எனக்கு வந்த அதே சந்தேகங்களை ஆந்திர காங். எம்.பி. உண்டவல்லி அருண்குமார் கிளப்பியுள்ளது என் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. என்னண்ணே "ஒன்னுமே புரியலையா? புரியறாப்ல சொல்ட்டா போச்சு"

முதல்ல அருண்குமார் பத்தி சில வரிகள்.
இன்னைக்கு அரசியல் இருக்கிற இருப்புல லாஜிக்கை எல்லாம் புறம் தள்ளி ( ஈ நாடு பத்திரிக்கைய விரோதம் பண்ணிக்கிட்ட என்.டி.ஆரே நாய் சாவு செய்த்தாரே) ஒரு தர்ம யுத்தத்தை அறிவுப்பூர்வமா நடத்தி அதுல வெற்றியும் பெற்றவர் அருண்குமார்.

ஆமாங்கண்ணா ராமோஜிராவ் வெறுமனே பேப்பர் மட்டும் நடத்தல 36 வியாபாரம் பண்ணார்.ஊறுகாய் வியாபாரம் உட்பட. அதுல சக்ஸஸ் ஆனது ஈ நாடுவும், ஈ டிவி சேனலும்தான். மத்தபடி எல்லாமே அடாசு.பயங்கர லாஸு. எப்டி சமாளிச்சாருனு கேட்கிறிங்களா ?

பரிமாறுகிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன? அப்போ சி.எம். நம்ம பாபுதான். நம்மாளு ஃபிலிம் சிட்டி கட்டறேனு இறங்குனாரு.பாபு பல நூறு ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தாரு. அப்டியும் தேறலை. ஹெவி இன்ன்வெஸ்ட்மெண்டு. லோ பட்ஜெட் காரனும் ரஜினி மாதிரி கோஷா பார்ட்டிகளும்தான் ஃபிலிம்சிட்டி பக்கம் ஒதுங்கினாங்க.

ராமோஜியோட 36 வியாபாரங்கள்ள மார்கதர்சினு ஒரு சிட்ஃபண்டும் ஃபைனான்ஸும் இருக்கு. தெ.தேசம் தலைவர்களோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கும் இருக்கு. அவிகளுக்கு கோடிக்கணக்கான கள்ளப்பணமும் இருக்கு . என்ன செய்யலாம்னு பார்த்தார் ராமோஜி. அந்த கள்ளப்பணத்தையெல்லாம் தன் ஃபைனான்ஸுல ஃபிக்ஸடாவும், சீட்டாவும் போட்டு சலவை செய்தார்.இதுல விதிகள் காற்றில் !
நம்ம அரசாங்கம் பத்தி தெரியுமில்லியா. தூங்கின மாதிரியே இருந்தாலும் திடீர்னு முழிச்சுக்கிட்டா ஆனை எழுந்தமாதிரி எழனுமே அதுக்காக சின்ன சின்ன ஃபிட்டிங்ஸ் வச்சி வச்சிருக்கும்.

அதுல ஒன்னு இந்த மாதிரி அனாமத்தா வர்ர ஃபிக்ஸட் எட்ஸெற்றாவ டி.டியாதான் வாங்கனும்னு ஒரு ரூல் வச்சிருக்கு போல. டி.டி.கொடுத்தவன் என்ன அரிசிக்கு காசில்லாதவனா. ச்சும்மா போட்டுவச்சவந்தானே. இதுல ச்சும்மா போட்டவன் எத்தினி பேரு, நிசமாலுமே டிப்பாஸிட் பண்ண நடுத்தரம் யாருனு தெரியாம மெச்சூர்ட் டிப்பாசிட்ஸ் சிலதுக்கு பேமென்ட் நடக்கலை.

விசயம் என்னடான்னா பாவம் ராமோஜி " மாவு விக்க போனா காத்தடிச்சுதா? இல்லே காத்தடிக்கும் காலம் மாவு விக்க போனாரா" தெரியாது . ப்ரஸ்ல விழும் பாருங்க துண்டு காகிதம் ஸ்க்ராபுங்க. அத கூட வங்கில அடமானம் வச்சு கடன் வாங்கியாச்சு .பப்பு வேகலை. இதுல இந்த அருண்குமார் வேற குட்டைய குழப்பு விட்டுட்டாரு. ஆட்சியா காங்கிரஸ் ஆட்சி. சி.எம்மா ஒய்.எஸ்.ஆர். டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சுருச்சு.

போட்டி பத்திரிக்கைகள் வந்ததுல ( முக்கியமா சாட்சி ரெண்டு ரூபா பேப்பர்) ஈ நாடு கடக்காலே ஆட ஆரம்பிச்சுருச்சு. ஒரு பக்கம் வருமானவரித்துறை ரெய்டு, மறுபக்கம் நிதி நிறுவனங்கள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை. முழி பிதுங்க ஆரம்பிச்சுருச்சு.

கதிகலங்கிபோன ராமோஜி தலை கீழா நின்னு ரசத்துல முகம் கழுவினாரு. ஒய்.எஸ் கடப்பாலருந்து வந்த பார்ட்டி. மாஃபியா பேக் கிரவுண்டு. இப்போ கடப்பா பக்கம்போனா பழைய ஆளுங்க ஒய்.எஸ் டம்மி பீஸுப்பா அவிங்கப்பாதான் கன் பார்ட்டிம்பாங்க. அதென்னா ஆச்சோ என்னமே தெரியாது .ஒய்.எஸ் கூட என்.டி.ஆர் ஃபேன் தான். என்.டி.ஆர் இன்ஸ்பிரேஷனோ ? என்.டி.ஆருக்கு ஏழைமக்களிடையே
கிடைச்ச பேராதரவு எதிர்கட்சில இருந்த ஒய்.எஸ்.ஆரை ப்ரவோக் பண்ணுச்சோ இல்லை கிறிஸ்தவம் தான் அவருக்குள்ள அன்பு,சேவை இத்யாதிய இஞ்செக்ட் பண்ணுச்சோ தெரியாது.

அவரோட நலதிட்டங்கள், ஜலயக்னம் எல்லாம் மக்களை அப்டியே நமீதா கணக்கா மயங்க வச்சுருச்சு. ஈ நாடு என்னதான் மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுதினாலும், கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தாலும் ஒய்.எஸ். ...ரை கூட பிடுங்க முடியலை.

அதுக்குள்ள 2009 தேர்தல்கள் நெருங்க ஆரம்பிச்சுருச்சு. இன்னொரு தடவை ஒய்.எஸ். சி.எம் ஆனால் மகனே உனக்கு இருக்குடி என்று ராமோஜியின் சிக்ஸ்த் சென்ஸ் சொல்லுச்சோ என்னமோ தெரியாது.பாவம் பாபு மகா கூட்டணி அமைக்க ரொம்பவே உழைச்சார் ராமோஜி. இதுக்கெல்லாம் சிகரம் வச்ச மாதிரி சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியத்துக்கும் மகா கூட்டணிக்கும் பஞ்சாயத்து கூட பண்ணார். ரெண்டரை வருசம் பாபு, அடுத்த ரெண்டரை வருசம் சிரஞ்சீவினு பேசி பார்த்தார். பப்பு வேகலை.

நிதி நிலைமை மோசமாகிட்டே போவுது. ஏறக்குறைய திவால் நிலைக்கு வந்தாச்சு. தேர்தல்ல மறுபடி காங்கிரஸ் ஜெயிச்சுருச்சு. இவருக்கு ஆப்புவச்ச அருண்குமாரை தோக்கடிக்க ராமோஜி தன்னோட ரத,கஜ,துரக பதாதிகள் அனைத்தையும் உபயோகிச்சும் அருண்குமாரும் ஜெயிச்சுட்டார்.

இந்த நிலைமைல திவாலாகிப்போன ஈ நாடு க்ரூப் ஆஃப் கம்பெனீஸை ரிலையன்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் அண்டர் டேக்கா அதென்ன இழவு பண்ண முன் வந்தது. ப்ராசஸும் ஆரம்பிச்சுருச்சு. இப்போ கூட்டி கழிச்சு பாருங்க.

1.ரிலையன்ஸுக்கு கியாஸ் விசயத்துல ஒய்.எஸ். மேல கோபம். ( முதல்ல ஆந்திரால இருக்கிற "பிச்சைக்கார நாய்களுக்கு" பைப் மூலமா கியாஸ் கொடுத்து முடிச்சுட்டு மிச்சமிருந்தா வெளிய வித்துக்கோன்னிட்டாரு ஒய்.எஸ். ரிலையன்ஸ் என்ன சேவை ஸ்தாபனமா ? கோடி கோடியா ஈட்டினாதானே ஆயிரம் கோடில வீடுகட்டிக்க முடியும். ரிலயன்ஸ் சகோதரர்களோட அம்மா கியாஸ் விசயத்துல தன் மகன் களிடையே ஏற்பட்ட தகராறை நான் தீர்த்துவைக்கிறேனு ஸ்டேட்மெண்ட் கொடுக்க "அத மத்திய அரசு பார்த்துக்கும். இதுல அம்மா பேச இதென்ன அவிங்க ஆத்துக்காரர் சம்பாதிச்ச சொத்தானு ஒய்.எஸ்.காட்டமா கேட்டார் (செய்தி தலைவா)

2.சந்திரபாபுவுக்கு அரசியல் எதிரி ஒய்.எஸ்.ஒழிஞ்சாதான் பாபு முதல்வர் பதவி பத்தி கனவாவது காணமுடியும்.

3.ஈ நாடுவோட கான்செப்ட் என்ன? போன தேர்தல்லயே ஜகன் எம்.பி. படக்குனு அவரை டெப்புட்டி சி.எம். ஆக்கிட்டா .சாட்சி பேப்பர் எங்கயோ போயிரும். ஈ நாடு பேப்பர் ஸ்டாலுக்கே போகாம பழைய பேப்பர் கடைக்கு போயிரும்

ரிலையன்ஸ் விபத்துக்கு ஏற்பாடு பண்ணும். தப்பித்தவறி விசயம் லீக்காயிட்டா மக்கள் புரட்சி வெடிச்சா எதிர்கட்சி தலைவாரா பாபுவும், பத்திரிக்கை முதலாளியா ராமோஜியும் கவசமா இருப்பாங்க. ஒரு வேளை இந்த ஏற்பாட்டின் படி தான் திவாலாகி போன ஈ நாடு க்ரூப்புக்கு ரிலையன்ஸ் பணம் கொடுத்துச்சோ என்னமோ ?

சி.பி.ஐ இந்த கோணத்துலயும் விசாரிக்கனும். இல்லன்னா எந்த அரசியல் வாதியும் கையேந்தி பவனுக்க் எதிரா கூட பேசமாட்டான். மக்கள் வாய்ல வயித்துல மண்ணுதான்.

தெலுங்கானா பிரச்சினை பத்தி எரியுது சந்திரபாபு தன் எம்.எல்.ஏக்களை ரெண்டு க்ருப்பாக்கி ப்ரோ தெலுங்கானா, ஆன்ட்டி தெலுங்கானானு பேசவிட்டுட்டு மவுன விரதம் இருக்காரு . எப்போ டிசம்பர் 9 ஆம்தேதில இருந்து.

ரிலையன்ஸுக்கு ஒன்னுன்ன உடனே சாமியாடறார்.அப்டின்னா என்ன அருத்தம்னேன். இந்த சந்தேகங்களை நான் மட்டும் எழுப்பலிங்கண்ணா.

இந்த அரசியல் சாக்கடையில் இருந்தும் தர்ம யுத்தத்தை அறிவு பூர்வமா நடத்துற ஒரே ஒரு எம்.பி. அருண்குமாரும் எழுப்பறார்.

உங்கள்ள யாருக்காவது ஈ நாடு ,ராமோஜிராவ் வரலாறை தெரிஞ்ச்சுக்கணும்னு ஆர்வமிருந்தா ஒருகமெண்ட் போடுங்க அடுத்த பதிவா இதையே பார்த்துப்பம்

பி.கு அ கொசுறு :
தாத்தா திவாரி லீலைகளை காட்டி அவருக்கு ஆப்பு வச்சு ஜகன் சி.எம்.ஆக இருந்த ப்ளஸ் பாயிண்டை மைனஸ் பண்ண ஆந்திர ஜோதியின் லேட்டஸ்ட் ஸ்டோரி இன்னா தெரியுமா ? பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் எம்.எல்.ஏவா நின்னு தோத்துப்போன ஒரு அ நாமதேயத்தின் லீலைகள். மீடியா எங்கதான் போகுது ஒன்னுமே புரியலியே .. யார்னா விஜாரிச்சு சொல்லுங்கப்பு

ஒய்.எஸ்.ஆர் கொலை ? பின்னணியில் ஈ நாடு ?


ஒய்.எஸ்.ஆர் மரணம் கொலயா ? பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளதா ? என்று தெலுங்கு சேனல்கள் அலப்பறை செய்தது தெரிந்ததே. ஒரு ரஷ்ய வலைதளத்தின் செய்தியை ஆதாரமாக கொண்டு சேனல்கள் தீபாவளி கொண்டாடிவிட்ட நிலையில் ரோசய்யா தலைமையில் ஆன அரசு போலீஸ் நாய்களை அவிழுத்துவிட்டது. எமர்ஜென்ஸி காலம் போல் நள்ளிரவு சோதனைகள், கைதுகள் நடந்தேறிவருகின்றன.

என்னைப்பொருத்தவரை நான் ரஷ்யன் வலைதளத்தையோ, அதன் செய்தியை ஆதாரமாக கொண்டு ஸ்டோரிகள், விவாதங்களை பிரசுரித்த தெலுங்கு சேனல்களையோ ஆதரிக்கவில்லை. ஆனால் தெலுங்கானாவுக்கு ஆதரவாக மத்திய அரசு முதல் அறிக்கை வெளியிட்ட நாள் முதலாக மவுன விரதம் காத்துவந்த சந்திரபாபு மேற்படி டி.வி ஒளிபரப்புகளுக்கு பின் ஆங்காங்கே நடந்த தாக்குதல் சம்பவங்களை தாக்கி பேசிய வீராவேசமான, காராசாரமான பேச்சு புதிய சிந்தனைகளை கிளப்பியது.

ஏறக்குறைய எனக்கு வந்த அதே சந்தேகங்களை ஆந்திர காங். எம்.பி. உண்டவல்லி அருண்குமார் கிளப்பியுள்ளது என் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. என்னண்ணே "ஒன்னுமே புரியலையா? புரியறாப்ல சொல்ட்டா போச்சு"

முதல்ல அருண்குமார் பத்தி சில வரிகள்.
இன்னைக்கு அரசியல் இருக்கிற இருப்புல லாஜிக்கை எல்லாம் புறம் தள்ளி ( ஈ நாடு பத்திரிக்கைய விரோதம் பண்ணிக்கிட்ட என்.டி.ஆரே நாய் சாவு செய்த்தாரே) ஒரு தர்ம யுத்தத்தை அறிவுப்பூர்வமா நடத்தி அதுல வெற்றியும் பெற்றவர் அருண்குமார்.

ஆமாங்கண்ணா ராமோஜிராவ் வெறுமனே பேப்பர் மட்டும் நடத்தல 36 வியாபாரம் பண்ணார்.ஊறுகாய் வியாபாரம் உட்பட. அதுல சக்ஸஸ் ஆனது ஈ நாடுவும், ஈ டிவி சேனலும்தான். மத்தபடி எல்லாமே அடாசு.பயங்கர லாஸு. எப்டி சமாளிச்சாருனு கேட்கிறிங்களா ?

பரிமாறுகிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன? அப்போ சி.எம். நம்ம பாபுதான். நம்மாளு ஃபிலிம் சிட்டி கட்டறேனு இறங்குனாரு.பாபு பல நூறு ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தாரு. அப்டியும் தேறலை. ஹெவி இன்ன்வெஸ்ட்மெண்டு. லோ பட்ஜெட் காரனும் ரஜினி மாதிரி கோஷா பார்ட்டிகளும்தான் ஃபிலிம்சிட்டி பக்கம் ஒதுங்கினாங்க.

ராமோஜியோட 36 வியாபாரங்கள்ள மார்கதர்சினு ஒரு சிட்ஃபண்டும் ஃபைனான்ஸும் இருக்கு. தெ.தேசம் தலைவர்களோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கும் இருக்கு. அவிகளுக்கு கோடிக்கணக்கான கள்ளப்பணமும் இருக்கு . என்ன செய்யலாம்னு பார்த்தார் ராமோஜி. அந்த கள்ளப்பணத்தையெல்லாம் தன் ஃபைனான்ஸுல ஃபிக்ஸடாவும், சீட்டாவும் போட்டு சலவை செய்தார்.இதுல விதிகள் காற்றில் !
நம்ம அரசாங்கம் பத்தி தெரியுமில்லியா. தூங்கின மாதிரியே இருந்தாலும் திடீர்னு முழிச்சுக்கிட்டா ஆனை எழுந்தமாதிரி எழனுமே அதுக்காக சின்ன சின்ன ஃபிட்டிங்ஸ் வச்சி வச்சிருக்கும்.

அதுல ஒன்னு இந்த மாதிரி அனாமத்தா வர்ர ஃபிக்ஸட் எட்ஸெற்றாவ டி.டியாதான் வாங்கனும்னு ஒரு ரூல் வச்சிருக்கு போல. டி.டி.கொடுத்தவன் என்ன அரிசிக்கு காசில்லாதவனா. ச்சும்மா போட்டுவச்சவந்தானே. இதுல ச்சும்மா போட்டவன் எத்தினி பேரு, நிசமாலுமே டிப்பாஸிட் பண்ண நடுத்தரம் யாருனு தெரியாம மெச்சூர்ட் டிப்பாசிட்ஸ் சிலதுக்கு பேமென்ட் நடக்கலை.

விசயம் என்னடான்னா பாவம் ராமோஜி " மாவு விக்க போனா காத்தடிச்சுதா? இல்லே காத்தடிக்கும் காலம் மாவு விக்க போனாரா" தெரியாது . ப்ரஸ்ல விழும் பாருங்க துண்டு காகிதம் ஸ்க்ராபுங்க. அத கூட வங்கில அடமானம் வச்சு கடன் வாங்கியாச்சு .பப்பு வேகலை. இதுல இந்த அருண்குமார் வேற குட்டைய குழப்பு விட்டுட்டாரு. ஆட்சியா காங்கிரஸ் ஆட்சி. சி.எம்மா ஒய்.எஸ்.ஆர். டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சுருச்சு.

போட்டி பத்திரிக்கைகள் வந்ததுல ( முக்கியமா சாட்சி ரெண்டு ரூபா பேப்பர்) ஈ நாடு கடக்காலே ஆட ஆரம்பிச்சுருச்சு. ஒரு பக்கம் வருமானவரித்துறை ரெய்டு, மறுபக்கம் நிதி நிறுவனங்கள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை. முழி பிதுங்க ஆரம்பிச்சுருச்சு.

கதிகலங்கிபோன ராமோஜி தலை கீழா நின்னு ரசத்துல முகம் கழுவினாரு. ஒய்.எஸ் கடப்பாலருந்து வந்த பார்ட்டி. மாஃபியா பேக் கிரவுண்டு. இப்போ கடப்பா பக்கம்போனா பழைய ஆளுங்க ஒய்.எஸ் டம்மி பீஸுப்பா அவிங்கப்பாதான் கன் பார்ட்டிம்பாங்க. அதென்னா ஆச்சோ என்னமே தெரியாது .ஒய்.எஸ் கூட என்.டி.ஆர் ஃபேன் தான். என்.டி.ஆர் இன்ஸ்பிரேஷனோ ? என்.டி.ஆருக்கு ஏழைமக்களிடையே
கிடைச்ச பேராதரவு எதிர்கட்சில இருந்த ஒய்.எஸ்.ஆரை ப்ரவோக் பண்ணுச்சோ இல்லை கிறிஸ்தவம் தான் அவருக்குள்ள அன்பு,சேவை இத்யாதிய இஞ்செக்ட் பண்ணுச்சோ தெரியாது.

அவரோட நலதிட்டங்கள், ஜலயக்னம் எல்லாம் மக்களை அப்டியே நமீதா கணக்கா மயங்க வச்சுருச்சு. ஈ நாடு என்னதான் மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுதினாலும், கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தாலும் ஒய்.எஸ். ...ரை கூட பிடுங்க முடியலை.

அதுக்குள்ள 2009 தேர்தல்கள் நெருங்க ஆரம்பிச்சுருச்சு. இன்னொரு தடவை ஒய்.எஸ். சி.எம் ஆனால் மகனே உனக்கு இருக்குடி என்று ராமோஜியின் சிக்ஸ்த் சென்ஸ் சொல்லுச்சோ என்னமோ தெரியாது.பாவம் பாபு மகா கூட்டணி அமைக்க ரொம்பவே உழைச்சார் ராமோஜி. இதுக்கெல்லாம் சிகரம் வச்ச மாதிரி சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியத்துக்கும் மகா கூட்டணிக்கும் பஞ்சாயத்து கூட பண்ணார். ரெண்டரை வருசம் பாபு, அடுத்த ரெண்டரை வருசம் சிரஞ்சீவினு பேசி பார்த்தார். பப்பு வேகலை.

நிதி நிலைமை மோசமாகிட்டே போவுது. ஏறக்குறைய திவால் நிலைக்கு வந்தாச்சு. தேர்தல்ல மறுபடி காங்கிரஸ் ஜெயிச்சுருச்சு. இவருக்கு ஆப்புவச்ச அருண்குமாரை தோக்கடிக்க ராமோஜி தன்னோட ரத,கஜ,துரக பதாதிகள் அனைத்தையும் உபயோகிச்சும் அருண்குமாரும் ஜெயிச்சுட்டார்.

இந்த நிலைமைல திவாலாகிப்போன ஈ நாடு க்ரூப் ஆஃப் கம்பெனீஸை ரிலையன்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் அண்டர் டேக்கா அதென்ன இழவு பண்ண முன் வந்தது. ப்ராசஸும் ஆரம்பிச்சுருச்சு. இப்போ கூட்டி கழிச்சு பாருங்க.

1.ரிலையன்ஸுக்கு கியாஸ் விசயத்துல ஒய்.எஸ். மேல கோபம். ( முதல்ல ஆந்திரால இருக்கிற "பிச்சைக்கார நாய்களுக்கு" பைப் மூலமா கியாஸ் கொடுத்து முடிச்சுட்டு மிச்சமிருந்தா வெளிய வித்துக்கோன்னிட்டாரு ஒய்.எஸ். ரிலையன்ஸ் என்ன சேவை ஸ்தாபனமா ? கோடி கோடியா ஈட்டினாதானே ஆயிரம் கோடில வீடுகட்டிக்க முடியும். ரிலயன்ஸ் சகோதரர்களோட அம்மா கியாஸ் விசயத்துல தன் மகன் களிடையே ஏற்பட்ட தகராறை நான் தீர்த்துவைக்கிறேனு ஸ்டேட்மெண்ட் கொடுக்க "அத மத்திய அரசு பார்த்துக்கும். இதுல அம்மா பேச இதென்ன அவிங்க ஆத்துக்காரர் சம்பாதிச்ச சொத்தானு ஒய்.எஸ்.காட்டமா கேட்டார் (செய்தி தலைவா)

2.சந்திரபாபுவுக்கு அரசியல் எதிரி ஒய்.எஸ்.ஒழிஞ்சாதான் பாபு முதல்வர் பதவி பத்தி கனவாவது காணமுடியும்.

3.ஈ நாடுவோட கான்செப்ட் என்ன? போன தேர்தல்லயே ஜகன் எம்.பி. படக்குனு அவரை டெப்புட்டி சி.எம். ஆக்கிட்டா .சாட்சி பேப்பர் எங்கயோ போயிரும். ஈ நாடு பேப்பர் ஸ்டாலுக்கே போகாம பழைய பேப்பர் கடைக்கு போயிரும்

ரிலையன்ஸ் விபத்துக்கு ஏற்பாடு பண்ணும். தப்பித்தவறி விசயம் லீக்காயிட்டா மக்கள் புரட்சி வெடிச்சா எதிர்கட்சி தலைவாரா பாபுவும், பத்திரிக்கை முதலாளியா ராமோஜியும் கவசமா இருப்பாங்க. ஒரு வேளை இந்த ஏற்பாட்டின் படி தான் திவாலாகி போன ஈ நாடு க்ரூப்புக்கு ரிலையன்ஸ் பணம் கொடுத்துச்சோ என்னமோ ?

சி.பி.ஐ இந்த கோணத்துலயும் விசாரிக்கனும். இல்லன்னா எந்த அரசியல் வாதியும் கையேந்தி பவனுக்க் எதிரா கூட பேசமாட்டான். மக்கள் வாய்ல வயித்துல மண்ணுதான்.

தெலுங்கானா பிரச்சினை பத்தி எரியுது சந்திரபாபு தன் எம்.எல்.ஏக்களை ரெண்டு க்ருப்பாக்கி ப்ரோ தெலுங்கானா, ஆன்ட்டி தெலுங்கானானு பேசவிட்டுட்டு மவுன விரதம் இருக்காரு . எப்போ டிசம்பர் 9 ஆம்தேதில இருந்து.

ரிலையன்ஸுக்கு ஒன்னுன்ன உடனே சாமியாடறார்.அப்டின்னா என்ன அருத்தம்னேன். இந்த சந்தேகங்களை நான் மட்டும் எழுப்பலிங்கண்ணா.

இந்த அரசியல் சாக்கடையில் இருந்தும் தர்ம யுத்தத்தை அறிவு பூர்வமா நடத்துற ஒரே ஒரு எம்.பி. அருண்குமாரும் எழுப்பறார்.

உங்கள்ள யாருக்காவது ஈ நாடு ,ராமோஜிராவ் வரலாறை தெரிஞ்ச்சுக்கணும்னு ஆர்வமிருந்தா ஒருகமெண்ட் போடுங்க அடுத்த பதிவா இதையே பார்த்துப்பம்

பி.கு அ கொசுறு :
தாத்தா திவாரி லீலைகளை காட்டி அவருக்கு ஆப்பு வச்சு ஜகன் சி.எம்.ஆக இருந்த ப்ளஸ் பாயிண்டை மைனஸ் பண்ண ஆந்திர ஜோதியின் லேட்டஸ்ட் ஸ்டோரி இன்னா தெரியுமா ? பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் எம்.எல்.ஏவா நின்னு தோத்துப்போன ஒரு அ நாமதேயத்தின் லீலைகள். மீடியா எங்கதான் போகுது ஒன்னுமே புரியலியே .. யார்னா விஜாரிச்சு சொல்லுங்கப்பு