Showing posts with label Jayalalitha. Show all posts
Showing posts with label Jayalalitha. Show all posts
Tuesday, August 17, 2010
மிஸ்டர் கலைஞர்! டேக் கேர் ! !
அண்ணா ஏ தாழ்ந்த தமிழகமேன்னு தலைப்பு வச்சாப்ல ஏ (கருணையில்லாத) கருணா நிதியே! ன்னுதான் தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். ஏ. கருணா நிதின்னு ஒரு பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இருக்காரேனு ஞா வந்தது. விட்டுட்டன். மிஸ்டர் கருணா நிதின்னு வைக்கலாம்னு பார்த்தேன். வேலூர் - சித்தூர் பயண நேரம் ரெம்ப குறைவா இருக்கவே விட்டுட்டன்.
நம்ம உத்தேசம் யாரையும் வெறுமனே கிழிக்கறதோ அவமானப்படுத்தறதோ இல்லிங்கண்ணா. நம்முது கைப்புள்ள கேரக்டர். "என்னங்க முருகேசன் ! வடிவேலுவை பி.எம் ஆக்க எதுன ஸ்கெட்ச் இருக்கானு கேட்டா அதுக்கும் மாஞ்சி மாஞ்சி ஐடியா கொடுக்கிற பார்ட்டி. தாத்தா மேல இன்னம் நமக்கு கவுரதை ,மரியாதையெல்லாம் மிச்சமிருக்குங்கோ.அதனாலதான் கலைஞர் தன்னோட வாழ்க்கை வரலாறை திருத்திக்க சஜஷன் தரேன்.
குரங்குக்கு கூடு கட்டிக்க சஜஷன் கொடுத்த குருவி கதையாயிர போவுதுன்னு உதறல் இருந்தாலும். தாத்தாவே தான் சொல்லி வச்சிருக்காரே. " கோழை வாழ்வதே இல்லை. வீரன் சாவதே இல்லை" அப்போ "மாவீரன்" (ரஜினி) கதி கூட அவ்ளதானா?
தாத்தா மேல இன்னமும் கொஞ்சூண்டு நம்பிக்கை ஒட்டிக்கிட்டிருக்க முக்கிய காரணங்கள் ரெண்டு ஒன்னு எமர்ஜென்சியை எதிர்த்தது. ரெண்டு எதிர்கட்சில இருந்தப்பயாச்சும் இலங்கை மேட்டர்ல ஆக்டிவா இன்டராக்ட் ஆனது.அதுக்காக ஆட்சியை இழந்தது. உபரியா மாறன் ப்ரதர்ஸ் உள்ளடி வேலையில இறங்கினப்ப
குருக்ஷேத்து அர்ஜுனன் மாதிரி பந்தம்,பாசம் எல்லாத்தயும் தூக்கி கூவத்துல போட்டுட்டு பதறடிச்சது.
காலேஜ்ல பசங்க கல்லூரி ஆரம்பமான நாள்ள இருந்து கடலை போடறது,ராக் பண்றது, பேட்ச் மெயின்டெயினென்ஸ் , பீடி,சிகரட்,பான்,பீடா, பப்,பார்ட்டினு காலத்தை கழிச்சுட்டாலும் காலேஜ் டே ,ஃபேர் வெல் ஃபங்க்ஷன் வந்துட்டா ஒரு மாதிரி ஒரு டீலாயிருவாய்ங்க. அதுலயும் ஃபைனல் இயர்னா கேட்கவே தேவையில்லை. காலேஜ் பக்கம் ஒதுங்காத பசங்க கூட அட்லீஸ்ட் பிட் பிரிப்பரேஷன்லயாவது இறங்கிருவாங்க
தாத்தா ஆட்சியோட இறுதிகட்டத்துல மட்டுமில்லை ஆயுளோட இறுதி கட்டத்துலயும் இருக்காரு. "சாகறப்ப சங்கரா சங்கராங்கறான்" ஒரு சொலவடை உண்டு. அதாவது வாழ் நாள் எல்லாம் பஞ்சமாபாதகங்கள் பண்ணிட்டிருந்தவன் கூட சாகற சமயத்துல கடவுளை நினைச்சு ஸ்வர்கத்துல கர்சீஃப் போட்டு வைக்க பார்க்கிறானு அர்த்தம்.
கீதைல கிஷ்டர் மரண தருவாயில் என்னை நினைத்தவன் என்னையே அடைகிறான்னு ஷார்ட் கட் ரூட்டெல்லாம் போட்டுவச்சிருக்காருன்னா. அதுமாதிரி கலைஞர் ஒரு நூறு தாட்டி டபுள் ப்ரமோஷன் அடிச்சு பெரியார், அண்ணா க்ரூப்ல சேர்ந்துர்ரதுக்கு ரூட் போடறேண்ணே.
திருக்குவளை சீர்த்திருத்த சிறுவர் சங்கம், நாடகம், முரசொலியை கையில எழுதி கைல கொண்டு வித்தது, காப்பரேஷன் எலக்சன்ல தி.மு. க வை செயிக்க வச்சு அண்ணா கையால கணையாழி வாங்கினது, அண்ணாவுக்கு இரங்கல் கவிதை "உன் இதயத்தை இரவலாக கொடுத்து செல் அண்ணா" - பி.ஜு பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்பு ட்ரை பண்ணப்ப போட்ட நியாயமான நிபந்தனைகள் - 13 வருஷம் கட்சியை கட்டிக்காத்தது - பூமாலைங்கற வீடியோ கேசட்லருந்து சன் டிவியை வளர்த்தெடுத்தது இப்படி எத்தனையோ பொன்னேடுகள் தாத்தா லைஃப்ல இருக்கு.
நீண்ட ஆயுள் படைச்ச ட்ரெண்ட் செட்டர்ஸ் எல்லாம் இப்படித்தான் அவுட் டேட்டடாயிருவாய்ங்களாம். நான் தாத்தாவுக்கு சொல்றதெல்லாம் ஒன்னேதான். சரித்திரம் படைச்ச நீங்க இப்படி உங்க புகழையெல்லாம் இழந்து தரித்திரனா போய் சேரனுமான்னுதான்.
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்னு அண்ணா,காமராஜர் சமாதில ஏத்திவச்சுட்டா போதாது பாஸு.ஏழை சனங்க வாழ்க்கையிலயும் ஒரு சிம்னி விளக்காவது ஏத்துவைங்க
பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். உங்க ஸ்டைல்ல சொன்னா நடந்தவை நடந்தவையா இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நீங்களும் எங்க ஊர் திட்டத்தையெல்லாம் சகட்டுமேனிக்கு காப்பியடிச்சிங்க. சந்திரபாபு கிட்டருந்து உழவர் சந்தை, நமக்கு நாமே, ஒய்.எஸ்.ஆர் கிட்டருந்து 108 சேவை, காப்பீடு திட்டம்.
ஊர் பிள்ளை கிணத்துல இறங்கி வந்த பிறவாவது அழம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு அப்ளை பண்ணியிருக்கலாம். ஈயடிச்சான் காப்பிதான் அடிக்கிறிங்க. நிர்வாகத்துல புலின்னு ஒரு பட்டம் வேற இருக்கு.
ராமதாசு காங்கிரஸு தலைமைல கூட்டணி வரணுங்கறாரு. யானை இளைச்சதும் எலி பும்ஸவனத்துக்கு ( ஃபர்ஸ்ட் நைட்) முகூர்த்தம் கேட்ட கதையா இருக்கு.
காங்கிரசுக்கு 100 சீட்டு வேணமாம். டெப்புட்டி சி.எம் வேணமாம். பார்த்திங்களா தாத்தா நீங்க என்னவோ வயசான காலத்துல எதுக்கு ரிஸ்குன்னு தமிழினத்தையே பலி கொடுத்திங்க. வடவர் ஆணவப்போக்கை பார்த்திங்களா?
கல்கில தலையங்கம் எழுதறாய்ங்க.ராமதாஸு சொன்னது கரீட்டாம்.அதிமுக,திமுக நிழல் படியாத கட்சிகள் ஒன்னு சேரனுமாம். ஆக ஆமா நான் பாப்பாத்திதானு அறைகூவினாலும் ஜெயலலிதா அம்மா கூட அவாளுக்கு எங்கனயோ சரிய்யா ஆப்பு வச்சாப்ல தான் இருக்கு.
ஆனா பாருங்க அடுத்த பாராலயே விஜயகாந்த விட்டுர கூடாதாம். என்ன ரகசியம்னா விஜயகாந்த் பா.ஜ.கவோட போராட்டத்தை கையிலெடுத்துட்டாரு.
கலைஞரய்யா உங்களுக்கென்னா பாராட்டு விழா தானே வேணம் ( வயசாயிட்டா கிழவாடிங்க சின்னப்புள்ளத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களாம்) நல திட்டம் ,இலவசம்லாம் நிறுத்திருங்கனு சொல்லமாட்டேன். தில்லில காங்கிரசுக்கு சப்போர்ட்டை வாபஸ் வாங்குங்கனு சொல்லமாட்டேன்.
அழகிரியை கட்சிக்கு தலைவராக்கி,ஸ்டாலினை சி.எம்மாக்கிட்டு - உங்க நிலைக்கு நடைபயணம் கூட தேவையில்லை. அதான் வீல் சேர் இருக்கே . இங்கன இருக்கிற மானமுள்ள தமிழனையெல்லாம் திரட்டிக்கிட்டு தில்லிக்கு புறப்படுங்க வீல் சேர் பயணம். உங்க பயணம் தில்லி எல்லைய தொடறதுக்குள்ள சோனியாம்மா இத்தாலி நோக்கி பறக்கலைன்னா அப்பாறம் வந்து என்னடா நாயேனு கேளுங்க.
அய்யா! அரசியல் சாணக்கியரே மந்தைல நுழைஞ்ச நரி மாதிரி காங்கிரஸ் தமிழ அரசியல்ல நுழைய பார்க்குது. சிங்கமும் 4 எருமைகளும் கதை தெரியும்ல. போயஸ் கார்டனுக்கு ஒரு கால் போடுங்க . காங்கிரஸ் களவாணிகளை சேர்த்துக்காதம்மா நமக்குள்ள ஆயிரம் இருக்கும். அதை அப்பாறம் பார்த்துப்போம்னு ஒரு பேச்சு சொல்லுங்க
எப்படியும் அடுத்த தேர்தல்ல திமுக காலி. இந்த கடைசிகட்டத்துலயாவது ஒய்.எஸ்.ஆர் தன் ரெண்டாவது ரெஜிம்ல செய்ய நினைச்ச அரசோட டெலிவரி மெக்கானிசத்தை சரி பண்ணிருங்க. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கொடுங்க, அதிகாரம் கொடுங்க. எங்க ஸ்டேட்ல முதியோர் உதவித்தொகைய நகராட்சி காரவுக வீடு தேடி கொடுத்துட்டு போறாய்ங்க. உங்க ஸ்டேட்ல அன்புடன் தமிழக முதல்வர்னு சீல் பொட்டு எம்.ஓ பண்ணிக்கிட்டிருந்திங்க. மாத்துங்கய்யா.
வீடு போ போங்குது. காடு வா வாங்குது. இப்பயாச்சு மாறுங்க மாத்துங்க. உங்க வாழ்க்கை வரலாற்று பொன்னேடெல்லாம் செதிலடிச்சு போச்சு .கட்டக்கடைசியா ஒரே ஒரு வரியாச்சும் உங்க வாழ்க்கை வரலாறுல நல்லதா இடம் பெறட்டும்.
நீங்க இத்தனை தாட்டி சி.எம் ஆகி பரிபாலனம் பண்ணிங்களே இந்த அரசு இயந்திரத்தை கட்டி எழுப்பினது ப்ரிட்டீஷ் காரன். அந்த காலத்து லெட்டர் ப்ரஸ் மாதிரி, கக்கூஸு மாதிரி நாறுது. இதை தூக்கி போட்டு புது இயந்திரத்தை இன்ஸ்டால் பண்ணிட்டு போங்க.
பல காலத்துக்கு மிந்தி ஏதோ தீபாவளி மலர்ல மிட்டாய்னு ஒரு கதை படிச்சேன். அதுல ஒரு கேரக்டர் . திவால் பார்ட்டி. செலவை சுருக்க மட்ட சரக்கு, மட்ட சோறுன்னு விழுங்கி வைக்கும். உள்ளாற போனது வெளிய வந்துராம படக்குனு ஒரு மிட்டாயை வாயில திணிச்சுக்கும். அந்த பார்ட்டிக்கு ஒரு பட்லி.
மிட்டாய்ய் பார்ட்டியோட மனைவி தன்னை தேடிவந்து கதறிட்டு தற்கொலைக்கு ரயிலை தேடி ஓட அவளை விலக்கிட்டு தான் செத்து போகுது அந்த பட்லி. நாற வாழ்க்கைய வாழ்ந்த அவள் மிட்டாய் மாதிரி ஒரு வேலைய செய்துட்டான்னு கதாசிரியர் கதைய முடிக்கிறார்.
தாத்தா .. உதவாக்கரை தமிழ் படங்களுக்கு வசனம் எழுதினது போதும், வசன மழை பொழிஞ்சது போதும். ஒரு ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி சரித்திரத்துல இடம் பிடிக்க ஒரு கர்சீஃபை கொடுத்திருக்கேன். இதை உங்க தலைல போட்டுக்கிட்டு பாய்ங்களை ஏமாத்துவிங்களோ? இல்லை சனம் தலை மேல போட்டு ஒழிச்சு கட்டிருவிங்களோ ? உங்க சவுரியம்.
பி.கு:
வேலூர்லருந்து டாக்ஸி மட்டும் அனுப்பிராதிங்க தலைவா! (அம்மாவுக்கும் உங்களுக்கும் இருந்த வித்யாசமெல்லாம் குறைஞ்சுக்கிட்டே போகுது) இந்தியாவை பணக்கார நாடாக்க ( சன் க்ரூப் ரேஞ்சுக்குஇல்லைனாலும்) ஆப்பரேஷன் இந்தியா2000 ன்னிட்டு ஒரு ப்ளான் வச்சிருக்கேன். இதை பத்தி கழுகுங்கற வலைச்சரத்துல பதிவு போடனும். நம்ம கச்சேரிய அப்பாறம் வச்சிக்கலாம். நான் வடிவேலு மாதிரி. எங்க போகபோறேன்.
மிஸ்டர் கலைஞர்! டேக் கேர் ! !
அண்ணா ஏ தாழ்ந்த தமிழகமேன்னு தலைப்பு வச்சாப்ல ஏ (கருணையில்லாத) கருணா நிதியே! ன்னுதான் தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். ஏ. கருணா நிதின்னு ஒரு பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இருக்காரேனு ஞா வந்தது. விட்டுட்டன். மிஸ்டர் கருணா நிதின்னு வைக்கலாம்னு பார்த்தேன். வேலூர் - சித்தூர் பயண நேரம் ரெம்ப குறைவா இருக்கவே விட்டுட்டன்.
நம்ம உத்தேசம் யாரையும் வெறுமனே கிழிக்கறதோ அவமானப்படுத்தறதோ இல்லிங்கண்ணா. நம்முது கைப்புள்ள கேரக்டர். "என்னங்க முருகேசன் ! வடிவேலுவை பி.எம் ஆக்க எதுன ஸ்கெட்ச் இருக்கானு கேட்டா அதுக்கும் மாஞ்சி மாஞ்சி ஐடியா கொடுக்கிற பார்ட்டி. தாத்தா மேல இன்னம் நமக்கு கவுரதை ,மரியாதையெல்லாம் மிச்சமிருக்குங்கோ.அதனாலதான் கலைஞர் தன்னோட வாழ்க்கை வரலாறை திருத்திக்க சஜஷன் தரேன்.
குரங்குக்கு கூடு கட்டிக்க சஜஷன் கொடுத்த குருவி கதையாயிர போவுதுன்னு உதறல் இருந்தாலும். தாத்தாவே தான் சொல்லி வச்சிருக்காரே. " கோழை வாழ்வதே இல்லை. வீரன் சாவதே இல்லை" அப்போ "மாவீரன்" (ரஜினி) கதி கூட அவ்ளதானா?
தாத்தா மேல இன்னமும் கொஞ்சூண்டு நம்பிக்கை ஒட்டிக்கிட்டிருக்க முக்கிய காரணங்கள் ரெண்டு ஒன்னு எமர்ஜென்சியை எதிர்த்தது. ரெண்டு எதிர்கட்சில இருந்தப்பயாச்சும் இலங்கை மேட்டர்ல ஆக்டிவா இன்டராக்ட் ஆனது.அதுக்காக ஆட்சியை இழந்தது. உபரியா மாறன் ப்ரதர்ஸ் உள்ளடி வேலையில இறங்கினப்ப
குருக்ஷேத்து அர்ஜுனன் மாதிரி பந்தம்,பாசம் எல்லாத்தயும் தூக்கி கூவத்துல போட்டுட்டு பதறடிச்சது.
காலேஜ்ல பசங்க கல்லூரி ஆரம்பமான நாள்ள இருந்து கடலை போடறது,ராக் பண்றது, பேட்ச் மெயின்டெயினென்ஸ் , பீடி,சிகரட்,பான்,பீடா, பப்,பார்ட்டினு காலத்தை கழிச்சுட்டாலும் காலேஜ் டே ,ஃபேர் வெல் ஃபங்க்ஷன் வந்துட்டா ஒரு மாதிரி ஒரு டீலாயிருவாய்ங்க. அதுலயும் ஃபைனல் இயர்னா கேட்கவே தேவையில்லை. காலேஜ் பக்கம் ஒதுங்காத பசங்க கூட அட்லீஸ்ட் பிட் பிரிப்பரேஷன்லயாவது இறங்கிருவாங்க
தாத்தா ஆட்சியோட இறுதிகட்டத்துல மட்டுமில்லை ஆயுளோட இறுதி கட்டத்துலயும் இருக்காரு. "சாகறப்ப சங்கரா சங்கராங்கறான்" ஒரு சொலவடை உண்டு. அதாவது வாழ் நாள் எல்லாம் பஞ்சமாபாதகங்கள் பண்ணிட்டிருந்தவன் கூட சாகற சமயத்துல கடவுளை நினைச்சு ஸ்வர்கத்துல கர்சீஃப் போட்டு வைக்க பார்க்கிறானு அர்த்தம்.
கீதைல கிஷ்டர் மரண தருவாயில் என்னை நினைத்தவன் என்னையே அடைகிறான்னு ஷார்ட் கட் ரூட்டெல்லாம் போட்டுவச்சிருக்காருன்னா. அதுமாதிரி கலைஞர் ஒரு நூறு தாட்டி டபுள் ப்ரமோஷன் அடிச்சு பெரியார், அண்ணா க்ரூப்ல சேர்ந்துர்ரதுக்கு ரூட் போடறேண்ணே.
திருக்குவளை சீர்த்திருத்த சிறுவர் சங்கம், நாடகம், முரசொலியை கையில எழுதி கைல கொண்டு வித்தது, காப்பரேஷன் எலக்சன்ல தி.மு. க வை செயிக்க வச்சு அண்ணா கையால கணையாழி வாங்கினது, அண்ணாவுக்கு இரங்கல் கவிதை "உன் இதயத்தை இரவலாக கொடுத்து செல் அண்ணா" - பி.ஜு பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்பு ட்ரை பண்ணப்ப போட்ட நியாயமான நிபந்தனைகள் - 13 வருஷம் கட்சியை கட்டிக்காத்தது - பூமாலைங்கற வீடியோ கேசட்லருந்து சன் டிவியை வளர்த்தெடுத்தது இப்படி எத்தனையோ பொன்னேடுகள் தாத்தா லைஃப்ல இருக்கு.
நீண்ட ஆயுள் படைச்ச ட்ரெண்ட் செட்டர்ஸ் எல்லாம் இப்படித்தான் அவுட் டேட்டடாயிருவாய்ங்களாம். நான் தாத்தாவுக்கு சொல்றதெல்லாம் ஒன்னேதான். சரித்திரம் படைச்ச நீங்க இப்படி உங்க புகழையெல்லாம் இழந்து தரித்திரனா போய் சேரனுமான்னுதான்.
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்னு அண்ணா,காமராஜர் சமாதில ஏத்திவச்சுட்டா போதாது பாஸு.ஏழை சனங்க வாழ்க்கையிலயும் ஒரு சிம்னி விளக்காவது ஏத்துவைங்க
பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். உங்க ஸ்டைல்ல சொன்னா நடந்தவை நடந்தவையா இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நீங்களும் எங்க ஊர் திட்டத்தையெல்லாம் சகட்டுமேனிக்கு காப்பியடிச்சிங்க. சந்திரபாபு கிட்டருந்து உழவர் சந்தை, நமக்கு நாமே, ஒய்.எஸ்.ஆர் கிட்டருந்து 108 சேவை, காப்பீடு திட்டம்.
ஊர் பிள்ளை கிணத்துல இறங்கி வந்த பிறவாவது அழம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு அப்ளை பண்ணியிருக்கலாம். ஈயடிச்சான் காப்பிதான் அடிக்கிறிங்க. நிர்வாகத்துல புலின்னு ஒரு பட்டம் வேற இருக்கு.
ராமதாசு காங்கிரஸு தலைமைல கூட்டணி வரணுங்கறாரு. யானை இளைச்சதும் எலி பும்ஸவனத்துக்கு ( ஃபர்ஸ்ட் நைட்) முகூர்த்தம் கேட்ட கதையா இருக்கு.
காங்கிரசுக்கு 100 சீட்டு வேணமாம். டெப்புட்டி சி.எம் வேணமாம். பார்த்திங்களா தாத்தா நீங்க என்னவோ வயசான காலத்துல எதுக்கு ரிஸ்குன்னு தமிழினத்தையே பலி கொடுத்திங்க. வடவர் ஆணவப்போக்கை பார்த்திங்களா?
கல்கில தலையங்கம் எழுதறாய்ங்க.ராமதாஸு சொன்னது கரீட்டாம்.அதிமுக,திமுக நிழல் படியாத கட்சிகள் ஒன்னு சேரனுமாம். ஆக ஆமா நான் பாப்பாத்திதானு அறைகூவினாலும் ஜெயலலிதா அம்மா கூட அவாளுக்கு எங்கனயோ சரிய்யா ஆப்பு வச்சாப்ல தான் இருக்கு.
ஆனா பாருங்க அடுத்த பாராலயே விஜயகாந்த விட்டுர கூடாதாம். என்ன ரகசியம்னா விஜயகாந்த் பா.ஜ.கவோட போராட்டத்தை கையிலெடுத்துட்டாரு.
கலைஞரய்யா உங்களுக்கென்னா பாராட்டு விழா தானே வேணம் ( வயசாயிட்டா கிழவாடிங்க சின்னப்புள்ளத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களாம்) நல திட்டம் ,இலவசம்லாம் நிறுத்திருங்கனு சொல்லமாட்டேன். தில்லில காங்கிரசுக்கு சப்போர்ட்டை வாபஸ் வாங்குங்கனு சொல்லமாட்டேன்.
அழகிரியை கட்சிக்கு தலைவராக்கி,ஸ்டாலினை சி.எம்மாக்கிட்டு - உங்க நிலைக்கு நடைபயணம் கூட தேவையில்லை. அதான் வீல் சேர் இருக்கே . இங்கன இருக்கிற மானமுள்ள தமிழனையெல்லாம் திரட்டிக்கிட்டு தில்லிக்கு புறப்படுங்க வீல் சேர் பயணம். உங்க பயணம் தில்லி எல்லைய தொடறதுக்குள்ள சோனியாம்மா இத்தாலி நோக்கி பறக்கலைன்னா அப்பாறம் வந்து என்னடா நாயேனு கேளுங்க.
அய்யா! அரசியல் சாணக்கியரே மந்தைல நுழைஞ்ச நரி மாதிரி காங்கிரஸ் தமிழ அரசியல்ல நுழைய பார்க்குது. சிங்கமும் 4 எருமைகளும் கதை தெரியும்ல. போயஸ் கார்டனுக்கு ஒரு கால் போடுங்க . காங்கிரஸ் களவாணிகளை சேர்த்துக்காதம்மா நமக்குள்ள ஆயிரம் இருக்கும். அதை அப்பாறம் பார்த்துப்போம்னு ஒரு பேச்சு சொல்லுங்க
எப்படியும் அடுத்த தேர்தல்ல திமுக காலி. இந்த கடைசிகட்டத்துலயாவது ஒய்.எஸ்.ஆர் தன் ரெண்டாவது ரெஜிம்ல செய்ய நினைச்ச அரசோட டெலிவரி மெக்கானிசத்தை சரி பண்ணிருங்க. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கொடுங்க, அதிகாரம் கொடுங்க. எங்க ஸ்டேட்ல முதியோர் உதவித்தொகைய நகராட்சி காரவுக வீடு தேடி கொடுத்துட்டு போறாய்ங்க. உங்க ஸ்டேட்ல அன்புடன் தமிழக முதல்வர்னு சீல் பொட்டு எம்.ஓ பண்ணிக்கிட்டிருந்திங்க. மாத்துங்கய்யா.
வீடு போ போங்குது. காடு வா வாங்குது. இப்பயாச்சு மாறுங்க மாத்துங்க. உங்க வாழ்க்கை வரலாற்று பொன்னேடெல்லாம் செதிலடிச்சு போச்சு .கட்டக்கடைசியா ஒரே ஒரு வரியாச்சும் உங்க வாழ்க்கை வரலாறுல நல்லதா இடம் பெறட்டும்.
நீங்க இத்தனை தாட்டி சி.எம் ஆகி பரிபாலனம் பண்ணிங்களே இந்த அரசு இயந்திரத்தை கட்டி எழுப்பினது ப்ரிட்டீஷ் காரன். அந்த காலத்து லெட்டர் ப்ரஸ் மாதிரி, கக்கூஸு மாதிரி நாறுது. இதை தூக்கி போட்டு புது இயந்திரத்தை இன்ஸ்டால் பண்ணிட்டு போங்க.
பல காலத்துக்கு மிந்தி ஏதோ தீபாவளி மலர்ல மிட்டாய்னு ஒரு கதை படிச்சேன். அதுல ஒரு கேரக்டர் . திவால் பார்ட்டி. செலவை சுருக்க மட்ட சரக்கு, மட்ட சோறுன்னு விழுங்கி வைக்கும். உள்ளாற போனது வெளிய வந்துராம படக்குனு ஒரு மிட்டாயை வாயில திணிச்சுக்கும். அந்த பார்ட்டிக்கு ஒரு பட்லி.
மிட்டாய்ய் பார்ட்டியோட மனைவி தன்னை தேடிவந்து கதறிட்டு தற்கொலைக்கு ரயிலை தேடி ஓட அவளை விலக்கிட்டு தான் செத்து போகுது அந்த பட்லி. நாற வாழ்க்கைய வாழ்ந்த அவள் மிட்டாய் மாதிரி ஒரு வேலைய செய்துட்டான்னு கதாசிரியர் கதைய முடிக்கிறார்.
தாத்தா .. உதவாக்கரை தமிழ் படங்களுக்கு வசனம் எழுதினது போதும், வசன மழை பொழிஞ்சது போதும். ஒரு ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி சரித்திரத்துல இடம் பிடிக்க ஒரு கர்சீஃபை கொடுத்திருக்கேன். இதை உங்க தலைல போட்டுக்கிட்டு பாய்ங்களை ஏமாத்துவிங்களோ? இல்லை சனம் தலை மேல போட்டு ஒழிச்சு கட்டிருவிங்களோ ? உங்க சவுரியம்.
பி.கு:
வேலூர்லருந்து டாக்ஸி மட்டும் அனுப்பிராதிங்க தலைவா! (அம்மாவுக்கும் உங்களுக்கும் இருந்த வித்யாசமெல்லாம் குறைஞ்சுக்கிட்டே போகுது) இந்தியாவை பணக்கார நாடாக்க ( சன் க்ரூப் ரேஞ்சுக்குஇல்லைனாலும்) ஆப்பரேஷன் இந்தியா2000 ன்னிட்டு ஒரு ப்ளான் வச்சிருக்கேன். இதை பத்தி கழுகுங்கற வலைச்சரத்துல பதிவு போடனும். நம்ம கச்சேரிய அப்பாறம் வச்சிக்கலாம். நான் வடிவேலு மாதிரி. எங்க போகபோறேன்.
Tuesday, April 27, 2010
கலைஞர் திமுகவுக்கு 'ஜெ' வை தலைவியாக்கினால் என்ன?
மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே,
தீர்காயுள் படைச்ச சரித்திர புருஷர்களோட வாழ்க்கை எவ்ள கேவலமா முடியுங்கறதுக்கு உங்க வாழ்க்கை சரியான உதாரணம்.
என்னை பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் தீபாவளி நேரத்துல பசங்க கொளுத்தற பூத்தொட்டி மாதிரி. ஒரு பொறி அவன் மேல விழறவரைக்கும் வெறுமனே கோன் வடிவ களிமண்ணுருண்டையா கிடப்பான். ஒரு பொறி அவன் மேல விழுந்து சீறி கிளம்பினானு வைங்க எல்லாரும் மூக்குல விரல் வைப்பாங்க. அந்த அளவுக்கு வானவில்லு ஒன்னு அதுக்குள்ள ஒளிஞ்சிருந்து சீறி கிளம்பின மாதிரி இருக்கும். அதுல எரிமலையோட சீற்றமும் இருக்கும், கண்ணுக்கு விருந்தாகிற வண்ண ஊற்றும் இருக்கும். உள்ள இருக்கிற மசாலா தீர்ந்திருச்சுனு வைங்களேன். கொஞ்ச நாழி அதை பிரமிப்போட பார்ப்பாங்க. ஏன்னா அதுல காலி பெருங்காய டப்பால வாசனை மாதிரி அனல் கொஞ்சம் மிச்சமிருக்கும். இன்னும் கொஞ்ச நாழி ஆயிருச்சுனு வைங்களேன் கூட்டி குப்பைல சேர்த்துருவாங்க.
உங்க கதையும் ஏறக்குறைய(உங்க மனசு புண்பட்டுர கூடாதுன்னு இந்த வார்த்தைய வெத்தா உபயோகிச்சிருக்கேன்) இப்படித்தான் ஆயிருச்சு. அன்னைக்கு எமர்ஜென்சியை எதிர்த்து சிறை புகுந்திங்களே. ஒரு அரசாங்கத்தோட அடக்குமுறைக்கு ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை உங்களை ஒட்டு மொத்தமா பலி கொடுத்திங்களே அதோட உங்க உள்ளீடு .. காலி.
நீங்க கடக லக்னத்துக்கே உரிய பந்து ப்ரீதி,குடும்ப பாசம் காரணமா தவற விட்டுட்ட பொது நலத்தை, காமன் மேனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவை கேட்ச் பண்ணிக்கிட்ட எம்.ஜி.ஆர் 13 வருஷம் உங்களை இருந்தும் இல்லாமயே செய்துட்டாரு.
இடையில ஒரு கட்டத்துல பி.ஜு பட் நாயக் ரெண்டு கழகத்தையும் இணைக்க முயற்சி பண்ணார். அப்போ மட்டும் நீங்க உங்க மூளைய அதுல இருக்கிற அதி சாணக்கியத்தை புறந்தள்ளி ,பரந்த மனப்பான்மையோட , சரித்திர பொறுப்போட ஒரு முடிவெடுத்திருந்தா எம்.ஜி.ஆர் மறைவுக்கு அப்புறம் ஜா இல்லே ஜெ இல்லே .இப்படி மைனாரிட்டில காலந்தள்ள வேண்டிய அவசியமுமில்லே.
திமுகங்கற மானில கட்சியை, மானில சுயாட்சிக்காக குரல் கொடுத்த கட்சியை காங்கிரசோட தமிழக கிளை மாதிரி நடத்த வேண்டிய தலை எழுத்தும் இல்லை. நளினியை விடுதலை பண்ண மத்திய அரசோட ஒப்புதல் கேட்டு கேட்டு அதன் படி நடக்க சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லே.
சரி அது கூட ஓஞ்சு போவட்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு பெரிய மன்சனா சரித்திரத்துல நின்னுர்ரதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அன்னைக்கு மேய்ப்பனில்லாத ஆட்டு மந்தையா அதிமுக தவிச்சப்ப கொஞ்சம் பெரிய மனசோட ,பெரிய மன்ச தராவா நடந்துக்கிட்டிருந்தா இரண்டு கழகமும் இணைஞ்சிருக்கும். அந்த இணைப்பால கட்சிக்கும், அதன் வெற்றிக்கும் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத
பெரிய வீட்டுக்கும்,சின்ன வீட்டுக்கும் இடையில அல்லாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே மாதிரி பல்லாயிரக்கணக்கான அதிமுக தலைவர்களும்,தொண்டர்களும் மன்னார் குடு கும்பல் கிட்டே சிக்கி சீரழிய வேண்டி வந்திருக்காது.
தலைவா! உன் பொது வாழ்வோட வயசு கூட இல்லாத நானெல்லாம் உன்னை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறாப்ல வச்சிருக்கிறது என்ன தெரியுமா? அளவுக்கு மீறின குடும்ப பாசம். இப்போ மஞ்ச துண்டெல்லாம் போட்டு, சத்ய சாயிபாபாவையே வீட்டுக்கு இன்வைட் பண்ற அளவுக்கு, புதிய சட்டசபை வளாகத்துக்கு கிரக பிரவேச முகூர்த்தமெல்லாம் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட உங்களுக்கு ஒரு ஜோதிடனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்.
இப்போ உங்க லக்னமான ரிஷபத்துக்கு பஞ்சம சனி. ஆந்திராபக்க கிராமங்கள்ள ஒரு சொலவடை உண்டு. "பஞ்சம சனி வாட்னி மஞ்சம் பக்கன சேர்ச்சகுரா"
இதுக்கு என்னடா அர்த்தம்னா அஞ்சுல சனி கொண்டவனை(கயித்து) கட்டிலண்டை கூட சேர்க்காதே . அவனை நாலு போட வந்தவன் உன்னையும் ரெண்டு போட்டுருவான்.
இன்னொரு கோணத்துல பார்த்தா சனி உங்களுக்கு தர்ம கர்மாதிபதி. அதாவது செயல் திறத்தையும், அதே சமயம் புண்ணியத்தையும் ஒரு சேர வழங்க கூடியவர். இவர் பூர்வ புண்ணியத்தை காட்டற அஞ்சாவது இடத்துல நிக்கிறார். நீங்க மட்டும் ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் மாத்தி யோசிச்சா தூள் கிளப்பலாம்.(அது எப்படினு இந்த பதிவோட இறுதி பத்தில நானே சொல்றேன்)
குரு பத்துல இருக்காரு.(பதவி பறிபோகனும்- பொது விதி- ஆனா குரு உங்களுக்கு அஷ்டமாதிபதி .மரணத்தை காட்டற கிரகம் , அதனாலதானோ என்னவோ ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாக நீங்களும் ஒரு காரணமாயிட்டிங்க. பத்துல வந்த அஷ்டமாதிபதியான குரு உங்களை கசாப்பு கடைக்காரராக்கிட்டார் )
மே4 ஆம் தேதிக்கு பிறவு இவர் பதினொன்னுக்கு போறார். தன் சொந்தவீட்டுக்கு போறார். இது பொது விதிப்படி சூப்பரு........... ஆனா அஷ்டமாதிபதியான இவரு 11 க்கு போறது அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப கெட்டது தலைவா!
உங்க ராசியான கடக ராசிக்கு சனி 3 ல இருக்காரு. குரு எட்டுல இருக்காரு. சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு எட்டுல இருந்தது யோகம்தான்.ஆனால் இவர் இப்போ 9க்கு வரப்போறார். 9ங்கறது தூர தேசத்து தொடர்புகளை காட்டற இடம். அங்கே சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு போறதால சோனியா அம்மா கூட டெர்ம்ஸ் கெட்டுரும்.
(இப்போ அழகிரி பாராளுமன்றத்துக்கு போகாம டுப்கி அடிச்ச கதை தெலுங்கு சேனல்ஸ்ல கூட கூவம் மாதிரி நாறுது. இதுல சென்னைக்கும், மதுரைக்கும் அரசாங்க செலவுல விமானத்துல ஷட்டில் வேற அடிச்சிருக்காரு.அஞ்சா நெஞ்சன் உங்களுக்குதான் மகன். சோனியாவுக்கு கிடையாது. உங்க பப்பெல்லாம் வேகாது)
9ங்கறது தூர பிரயாணங்களை காட்டற இடம். மறுபடி எங்கனா தில்லி போய் பதவி வாங்க போயிரப்போறிங்க. சாக்கிரதை. மேலும் முக்கியமா உங்களுக்கு கேது தசை நடக்கிறதா கேள்வி.
கேதுங்கறவர் ஞான காரகன். "கண்ணா ! இந்த உலகத்துல பெண்டாட்டி, பிள்ளை, பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் பொய். கடவுள் தான் மெய்னு காட்டி ஞானத்தை தரக்கூடிய கிரகம் கேது.
ஏற்கெனவே சன் டிவி, தயா நிதிமாறன் விஷயத்துல பார்த்திங்க. இப்போ கலைஞரை தவிர வேற யாரையும் தலைவனா ஏற்க மாட்டேன். தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு அறிவிச்சு அழகிரியும் ஓரளவுக்கு ஞானத்தை தர முயற்சி பண்ணியிருக்காரு.
பாவம் .. ஒரு தரம் எமர்ஜென்சி,இன்னொரு தரம் ராஜீவ் கொலைனு ஆட்சிய இழந்தவரு. கடைசி காலத்துல அரசு மரியாதையோட போய் சேரனும்னு நினைக்கிறாரு. ஓஞ்சு போட்டும்னு விட முடியலை. ஏன்னா உங்க ஆட்சிய காப்பாத்திக்க நீங்க இலங்கை தமிழர்களை பலி கொடுத்துட்டதா சனம் பேசிக்கிறாங்க. இல்லை தலைவா.. எத்தனையோ தோல்விகளுக்கும் பின்னாடி, எம்.ஜி.ஆர்,வைகோ விஷயங்கள்ள செய்த இமாலய தவறுகளையும் மீறி உன்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்துக்கிட்டிருந்த சரித்திரத்தை பலி கொடுத்துட்டிங்க.
சரி தலைவா.. இதை கூட "உன்னை சொல்லி குற்றமில்லை ..என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி"னு சமாளிச்சுரலாம். ஆனால் முந்தா நேத்து நளினி விவகாரம், நேத்து பிரபாகரனோட தாய் விவகாரம்லாம் என்ன மாதிரி தமிழக அரசியலுக்கு, தமிழ் நாட்டுக்கு தூரமா வாழற என்னையே கடுப்பாக்கிருச்சே. உங்களுக்கு எங்கயும் லேசா கூட குத்திக்கலியா தலைவா..
சரி இது கூட ஓஞ்சு போவட்டும். புஸ்வானமாகி போன பட்டாசை கழுத்துவரை உரிச்சு உள்ளார இருக்கிற திரியை லேசா கிள்ளி பத்த வைப்போமே அது மாதிரி உன்னை பத்த வைக்க , உன் புகழை விழுங்க வந்திருக்கும் அவப்பெயரை விரட்ட சின்ன வேலை செய் தலைவா..
ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம், ஒரு ஊருக்காக ஒரு கிராமம். ஒரு நாட்டுக்காக ஒரு ஊரு நாசமா போனாலும் தப்பில்லேங்கறது .. தர்ம சாஸ்திரம்.
நீ ஒன்னும் உன் குடும்பத்தை ரோட்ல விட்டுரலை. குஞ்சு குளுவான்ல இருந்து அததுங்க மில்லியன்,ட்ரில்லியன்ல வள்ளாடுதுங்க. அவிக தகுதிக்கு அது போதும் . அவிகளால நீங்க மூட்டை கட்டிக்கிட்ட அவப்பெயர் போதும்.
மாத்தி யோசிங்க. காலுக்கு சக்கரம் கட்டிக்கிட்டு ஒடியாடின காலத்துல பிள்ளைங்க சொல் பேச்சு கேட்கலைன்னா பரவால்ல , வயசான காலத்துல, சக்கர நாற்காலிலயே வாழ்க்கைய கழிக்கிற இந்த காலத்துல
கூப்பிடு தூரத்துல இருக்கிற தில்லில உங்க மானம் என்னாகும்னு கூட யோசிக்காம, யாரை எதிர்த்து உங்க வாழ் நாளெல்லாம் போராடினிங்களோ அந்த இனத்துக்கு சொந்தமான (பார்ப்பன) பத்திரிக்கைக்கு எவனையும் தலைவனா ஏத்துக்க மாட்டேன், தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு பேட்டி கொடுக்கிற மகனைவிட,
பிரச்சினை இவ்ளோ தூரத்துக்கு நாறியும் " உங்க காலம் வேற .. எங்க காலம் வேற ஒருத்தருக்கு ரெண்டு பதவி எதுக்கு எனக்கு வேணாம் .. அவரே தலைவரா இருக்கட்டும்" னு சொல்ல முன் வராத மகனை விட
உங்க ஆருயிர் நண்பர், உங்க பிள்ளைப்பாசம் காரணமாய் நட்டாற்றில் கழட்டிவிடப்பட்டும் மக்கள் ஆதரவால் கரையேறி கடற்கரையில் மீளாத்துயிலில் இருக்கும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை அவருடன் எந்த உறவும் ( சட்டப்படி) இல்லாமலே இத்தனை காலம் கட்டிக்காத்த
ஜெயலலிதாவை திமுக தலைவியாக்கினால் என்ன?
கட்சி வென்றால் அவரே முதல்வர் என்று அறிவித்தால் என்ன?
குறளோவியம் தீட்டிய உங்களுக்கு தெரியாத குறளா ? ஏதோ ஒரு குறளை எடுத்துவிட்டால் அவனவன் ஆகே பீச்சே மூடிக்கொள்ள மாட்டானா?
வெறுமனே ஈகோ காரணங்களால் இரண்டு இயக்கங்களாக பிரிந்து தமது பிறப்பின் நோக்கத்துக்கே உலை வைத்தபடி கிடக்கும் அவ்வியக்கங்களின் இழி நிலை மாறுமல்லவா?
உமது இரண்டு ஜம்போஜெட் குடும்பங்களுக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள். என்ன சுகம் கண்டீர்கள். லட்சோப லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக ஒரு நாள் வாழ்ந்தால் என்ன?
தீர்காயுள் படைச்ச சரித்திர புருஷர்களோட வாழ்க்கை எவ்ள கேவலமா முடியுங்கறதுக்கு உங்க வாழ்க்கை சரியான உதாரணம்.
என்னை பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் தீபாவளி நேரத்துல பசங்க கொளுத்தற பூத்தொட்டி மாதிரி. ஒரு பொறி அவன் மேல விழறவரைக்கும் வெறுமனே கோன் வடிவ களிமண்ணுருண்டையா கிடப்பான். ஒரு பொறி அவன் மேல விழுந்து சீறி கிளம்பினானு வைங்க எல்லாரும் மூக்குல விரல் வைப்பாங்க. அந்த அளவுக்கு வானவில்லு ஒன்னு அதுக்குள்ள ஒளிஞ்சிருந்து சீறி கிளம்பின மாதிரி இருக்கும். அதுல எரிமலையோட சீற்றமும் இருக்கும், கண்ணுக்கு விருந்தாகிற வண்ண ஊற்றும் இருக்கும். உள்ள இருக்கிற மசாலா தீர்ந்திருச்சுனு வைங்களேன். கொஞ்ச நாழி அதை பிரமிப்போட பார்ப்பாங்க. ஏன்னா அதுல காலி பெருங்காய டப்பால வாசனை மாதிரி அனல் கொஞ்சம் மிச்சமிருக்கும். இன்னும் கொஞ்ச நாழி ஆயிருச்சுனு வைங்களேன் கூட்டி குப்பைல சேர்த்துருவாங்க.
உங்க கதையும் ஏறக்குறைய(உங்க மனசு புண்பட்டுர கூடாதுன்னு இந்த வார்த்தைய வெத்தா உபயோகிச்சிருக்கேன்) இப்படித்தான் ஆயிருச்சு. அன்னைக்கு எமர்ஜென்சியை எதிர்த்து சிறை புகுந்திங்களே. ஒரு அரசாங்கத்தோட அடக்குமுறைக்கு ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை உங்களை ஒட்டு மொத்தமா பலி கொடுத்திங்களே அதோட உங்க உள்ளீடு .. காலி.
நீங்க கடக லக்னத்துக்கே உரிய பந்து ப்ரீதி,குடும்ப பாசம் காரணமா தவற விட்டுட்ட பொது நலத்தை, காமன் மேனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவை கேட்ச் பண்ணிக்கிட்ட எம்.ஜி.ஆர் 13 வருஷம் உங்களை இருந்தும் இல்லாமயே செய்துட்டாரு.
இடையில ஒரு கட்டத்துல பி.ஜு பட் நாயக் ரெண்டு கழகத்தையும் இணைக்க முயற்சி பண்ணார். அப்போ மட்டும் நீங்க உங்க மூளைய அதுல இருக்கிற அதி சாணக்கியத்தை புறந்தள்ளி ,பரந்த மனப்பான்மையோட , சரித்திர பொறுப்போட ஒரு முடிவெடுத்திருந்தா எம்.ஜி.ஆர் மறைவுக்கு அப்புறம் ஜா இல்லே ஜெ இல்லே .இப்படி மைனாரிட்டில காலந்தள்ள வேண்டிய அவசியமுமில்லே.
திமுகங்கற மானில கட்சியை, மானில சுயாட்சிக்காக குரல் கொடுத்த கட்சியை காங்கிரசோட தமிழக கிளை மாதிரி நடத்த வேண்டிய தலை எழுத்தும் இல்லை. நளினியை விடுதலை பண்ண மத்திய அரசோட ஒப்புதல் கேட்டு கேட்டு அதன் படி நடக்க சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லே.
சரி அது கூட ஓஞ்சு போவட்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு பெரிய மன்சனா சரித்திரத்துல நின்னுர்ரதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அன்னைக்கு மேய்ப்பனில்லாத ஆட்டு மந்தையா அதிமுக தவிச்சப்ப கொஞ்சம் பெரிய மனசோட ,பெரிய மன்ச தராவா நடந்துக்கிட்டிருந்தா இரண்டு கழகமும் இணைஞ்சிருக்கும். அந்த இணைப்பால கட்சிக்கும், அதன் வெற்றிக்கும் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத
பெரிய வீட்டுக்கும்,சின்ன வீட்டுக்கும் இடையில அல்லாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே மாதிரி பல்லாயிரக்கணக்கான அதிமுக தலைவர்களும்,தொண்டர்களும் மன்னார் குடு கும்பல் கிட்டே சிக்கி சீரழிய வேண்டி வந்திருக்காது.
தலைவா! உன் பொது வாழ்வோட வயசு கூட இல்லாத நானெல்லாம் உன்னை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறாப்ல வச்சிருக்கிறது என்ன தெரியுமா? அளவுக்கு மீறின குடும்ப பாசம். இப்போ மஞ்ச துண்டெல்லாம் போட்டு, சத்ய சாயிபாபாவையே வீட்டுக்கு இன்வைட் பண்ற அளவுக்கு, புதிய சட்டசபை வளாகத்துக்கு கிரக பிரவேச முகூர்த்தமெல்லாம் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட உங்களுக்கு ஒரு ஜோதிடனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்.
இப்போ உங்க லக்னமான ரிஷபத்துக்கு பஞ்சம சனி. ஆந்திராபக்க கிராமங்கள்ள ஒரு சொலவடை உண்டு. "பஞ்சம சனி வாட்னி மஞ்சம் பக்கன சேர்ச்சகுரா"
இதுக்கு என்னடா அர்த்தம்னா அஞ்சுல சனி கொண்டவனை(கயித்து) கட்டிலண்டை கூட சேர்க்காதே . அவனை நாலு போட வந்தவன் உன்னையும் ரெண்டு போட்டுருவான்.
இன்னொரு கோணத்துல பார்த்தா சனி உங்களுக்கு தர்ம கர்மாதிபதி. அதாவது செயல் திறத்தையும், அதே சமயம் புண்ணியத்தையும் ஒரு சேர வழங்க கூடியவர். இவர் பூர்வ புண்ணியத்தை காட்டற அஞ்சாவது இடத்துல நிக்கிறார். நீங்க மட்டும் ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் மாத்தி யோசிச்சா தூள் கிளப்பலாம்.(அது எப்படினு இந்த பதிவோட இறுதி பத்தில நானே சொல்றேன்)
குரு பத்துல இருக்காரு.(பதவி பறிபோகனும்- பொது விதி- ஆனா குரு உங்களுக்கு அஷ்டமாதிபதி .மரணத்தை காட்டற கிரகம் , அதனாலதானோ என்னவோ ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாக நீங்களும் ஒரு காரணமாயிட்டிங்க. பத்துல வந்த அஷ்டமாதிபதியான குரு உங்களை கசாப்பு கடைக்காரராக்கிட்டார் )
மே4 ஆம் தேதிக்கு பிறவு இவர் பதினொன்னுக்கு போறார். தன் சொந்தவீட்டுக்கு போறார். இது பொது விதிப்படி சூப்பரு........... ஆனா அஷ்டமாதிபதியான இவரு 11 க்கு போறது அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப கெட்டது தலைவா!
உங்க ராசியான கடக ராசிக்கு சனி 3 ல இருக்காரு. குரு எட்டுல இருக்காரு. சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு எட்டுல இருந்தது யோகம்தான்.ஆனால் இவர் இப்போ 9க்கு வரப்போறார். 9ங்கறது தூர தேசத்து தொடர்புகளை காட்டற இடம். அங்கே சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு போறதால சோனியா அம்மா கூட டெர்ம்ஸ் கெட்டுரும்.
(இப்போ அழகிரி பாராளுமன்றத்துக்கு போகாம டுப்கி அடிச்ச கதை தெலுங்கு சேனல்ஸ்ல கூட கூவம் மாதிரி நாறுது. இதுல சென்னைக்கும், மதுரைக்கும் அரசாங்க செலவுல விமானத்துல ஷட்டில் வேற அடிச்சிருக்காரு.அஞ்சா நெஞ்சன் உங்களுக்குதான் மகன். சோனியாவுக்கு கிடையாது. உங்க பப்பெல்லாம் வேகாது)
9ங்கறது தூர பிரயாணங்களை காட்டற இடம். மறுபடி எங்கனா தில்லி போய் பதவி வாங்க போயிரப்போறிங்க. சாக்கிரதை. மேலும் முக்கியமா உங்களுக்கு கேது தசை நடக்கிறதா கேள்வி.
கேதுங்கறவர் ஞான காரகன். "கண்ணா ! இந்த உலகத்துல பெண்டாட்டி, பிள்ளை, பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் பொய். கடவுள் தான் மெய்னு காட்டி ஞானத்தை தரக்கூடிய கிரகம் கேது.
ஏற்கெனவே சன் டிவி, தயா நிதிமாறன் விஷயத்துல பார்த்திங்க. இப்போ கலைஞரை தவிர வேற யாரையும் தலைவனா ஏற்க மாட்டேன். தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு அறிவிச்சு அழகிரியும் ஓரளவுக்கு ஞானத்தை தர முயற்சி பண்ணியிருக்காரு.
பாவம் .. ஒரு தரம் எமர்ஜென்சி,இன்னொரு தரம் ராஜீவ் கொலைனு ஆட்சிய இழந்தவரு. கடைசி காலத்துல அரசு மரியாதையோட போய் சேரனும்னு நினைக்கிறாரு. ஓஞ்சு போட்டும்னு விட முடியலை. ஏன்னா உங்க ஆட்சிய காப்பாத்திக்க நீங்க இலங்கை தமிழர்களை பலி கொடுத்துட்டதா சனம் பேசிக்கிறாங்க. இல்லை தலைவா.. எத்தனையோ தோல்விகளுக்கும் பின்னாடி, எம்.ஜி.ஆர்,வைகோ விஷயங்கள்ள செய்த இமாலய தவறுகளையும் மீறி உன்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்துக்கிட்டிருந்த சரித்திரத்தை பலி கொடுத்துட்டிங்க.
சரி தலைவா.. இதை கூட "உன்னை சொல்லி குற்றமில்லை ..என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி"னு சமாளிச்சுரலாம். ஆனால் முந்தா நேத்து நளினி விவகாரம், நேத்து பிரபாகரனோட தாய் விவகாரம்லாம் என்ன மாதிரி தமிழக அரசியலுக்கு, தமிழ் நாட்டுக்கு தூரமா வாழற என்னையே கடுப்பாக்கிருச்சே. உங்களுக்கு எங்கயும் லேசா கூட குத்திக்கலியா தலைவா..
சரி இது கூட ஓஞ்சு போவட்டும். புஸ்வானமாகி போன பட்டாசை கழுத்துவரை உரிச்சு உள்ளார இருக்கிற திரியை லேசா கிள்ளி பத்த வைப்போமே அது மாதிரி உன்னை பத்த வைக்க , உன் புகழை விழுங்க வந்திருக்கும் அவப்பெயரை விரட்ட சின்ன வேலை செய் தலைவா..
ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம், ஒரு ஊருக்காக ஒரு கிராமம். ஒரு நாட்டுக்காக ஒரு ஊரு நாசமா போனாலும் தப்பில்லேங்கறது .. தர்ம சாஸ்திரம்.
நீ ஒன்னும் உன் குடும்பத்தை ரோட்ல விட்டுரலை. குஞ்சு குளுவான்ல இருந்து அததுங்க மில்லியன்,ட்ரில்லியன்ல வள்ளாடுதுங்க. அவிக தகுதிக்கு அது போதும் . அவிகளால நீங்க மூட்டை கட்டிக்கிட்ட அவப்பெயர் போதும்.
மாத்தி யோசிங்க. காலுக்கு சக்கரம் கட்டிக்கிட்டு ஒடியாடின காலத்துல பிள்ளைங்க சொல் பேச்சு கேட்கலைன்னா பரவால்ல , வயசான காலத்துல, சக்கர நாற்காலிலயே வாழ்க்கைய கழிக்கிற இந்த காலத்துல
கூப்பிடு தூரத்துல இருக்கிற தில்லில உங்க மானம் என்னாகும்னு கூட யோசிக்காம, யாரை எதிர்த்து உங்க வாழ் நாளெல்லாம் போராடினிங்களோ அந்த இனத்துக்கு சொந்தமான (பார்ப்பன) பத்திரிக்கைக்கு எவனையும் தலைவனா ஏத்துக்க மாட்டேன், தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு பேட்டி கொடுக்கிற மகனைவிட,
பிரச்சினை இவ்ளோ தூரத்துக்கு நாறியும் " உங்க காலம் வேற .. எங்க காலம் வேற ஒருத்தருக்கு ரெண்டு பதவி எதுக்கு எனக்கு வேணாம் .. அவரே தலைவரா இருக்கட்டும்" னு சொல்ல முன் வராத மகனை விட
உங்க ஆருயிர் நண்பர், உங்க பிள்ளைப்பாசம் காரணமாய் நட்டாற்றில் கழட்டிவிடப்பட்டும் மக்கள் ஆதரவால் கரையேறி கடற்கரையில் மீளாத்துயிலில் இருக்கும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை அவருடன் எந்த உறவும் ( சட்டப்படி) இல்லாமலே இத்தனை காலம் கட்டிக்காத்த
ஜெயலலிதாவை திமுக தலைவியாக்கினால் என்ன?
கட்சி வென்றால் அவரே முதல்வர் என்று அறிவித்தால் என்ன?
குறளோவியம் தீட்டிய உங்களுக்கு தெரியாத குறளா ? ஏதோ ஒரு குறளை எடுத்துவிட்டால் அவனவன் ஆகே பீச்சே மூடிக்கொள்ள மாட்டானா?
வெறுமனே ஈகோ காரணங்களால் இரண்டு இயக்கங்களாக பிரிந்து தமது பிறப்பின் நோக்கத்துக்கே உலை வைத்தபடி கிடக்கும் அவ்வியக்கங்களின் இழி நிலை மாறுமல்லவா?
உமது இரண்டு ஜம்போஜெட் குடும்பங்களுக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள். என்ன சுகம் கண்டீர்கள். லட்சோப லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக ஒரு நாள் வாழ்ந்தால் என்ன?
கலைஞர் திமுகவுக்கு 'ஜெ' வை தலைவியாக்கினால் என்ன?
மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே,
தீர்காயுள் படைச்ச சரித்திர புருஷர்களோட வாழ்க்கை எவ்ள கேவலமா முடியுங்கறதுக்கு உங்க வாழ்க்கை சரியான உதாரணம்.
என்னை பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் தீபாவளி நேரத்துல பசங்க கொளுத்தற பூத்தொட்டி மாதிரி. ஒரு பொறி அவன் மேல விழறவரைக்கும் வெறுமனே கோன் வடிவ களிமண்ணுருண்டையா கிடப்பான். ஒரு பொறி அவன் மேல விழுந்து சீறி கிளம்பினானு வைங்க எல்லாரும் மூக்குல விரல் வைப்பாங்க. அந்த அளவுக்கு வானவில்லு ஒன்னு அதுக்குள்ள ஒளிஞ்சிருந்து சீறி கிளம்பின மாதிரி இருக்கும். அதுல எரிமலையோட சீற்றமும் இருக்கும், கண்ணுக்கு விருந்தாகிற வண்ண ஊற்றும் இருக்கும். உள்ள இருக்கிற மசாலா தீர்ந்திருச்சுனு வைங்களேன். கொஞ்ச நாழி அதை பிரமிப்போட பார்ப்பாங்க. ஏன்னா அதுல காலி பெருங்காய டப்பால வாசனை மாதிரி அனல் கொஞ்சம் மிச்சமிருக்கும். இன்னும் கொஞ்ச நாழி ஆயிருச்சுனு வைங்களேன் கூட்டி குப்பைல சேர்த்துருவாங்க.
உங்க கதையும் ஏறக்குறைய(உங்க மனசு புண்பட்டுர கூடாதுன்னு இந்த வார்த்தைய வெத்தா உபயோகிச்சிருக்கேன்) இப்படித்தான் ஆயிருச்சு. அன்னைக்கு எமர்ஜென்சியை எதிர்த்து சிறை புகுந்திங்களே. ஒரு அரசாங்கத்தோட அடக்குமுறைக்கு ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை உங்களை ஒட்டு மொத்தமா பலி கொடுத்திங்களே அதோட உங்க உள்ளீடு .. காலி.
நீங்க கடக லக்னத்துக்கே உரிய பந்து ப்ரீதி,குடும்ப பாசம் காரணமா தவற விட்டுட்ட பொது நலத்தை, காமன் மேனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவை கேட்ச் பண்ணிக்கிட்ட எம்.ஜி.ஆர் 13 வருஷம் உங்களை இருந்தும் இல்லாமயே செய்துட்டாரு.
இடையில ஒரு கட்டத்துல பி.ஜு பட் நாயக் ரெண்டு கழகத்தையும் இணைக்க முயற்சி பண்ணார். அப்போ மட்டும் நீங்க உங்க மூளைய அதுல இருக்கிற அதி சாணக்கியத்தை புறந்தள்ளி ,பரந்த மனப்பான்மையோட , சரித்திர பொறுப்போட ஒரு முடிவெடுத்திருந்தா எம்.ஜி.ஆர் மறைவுக்கு அப்புறம் ஜா இல்லே ஜெ இல்லே .இப்படி மைனாரிட்டில காலந்தள்ள வேண்டிய அவசியமுமில்லே.
திமுகங்கற மானில கட்சியை, மானில சுயாட்சிக்காக குரல் கொடுத்த கட்சியை காங்கிரசோட தமிழக கிளை மாதிரி நடத்த வேண்டிய தலை எழுத்தும் இல்லை. நளினியை விடுதலை பண்ண மத்திய அரசோட ஒப்புதல் கேட்டு கேட்டு அதன் படி நடக்க சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லே.
சரி அது கூட ஓஞ்சு போவட்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு பெரிய மன்சனா சரித்திரத்துல நின்னுர்ரதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அன்னைக்கு மேய்ப்பனில்லாத ஆட்டு மந்தையா அதிமுக தவிச்சப்ப கொஞ்சம் பெரிய மனசோட ,பெரிய மன்ச தராவா நடந்துக்கிட்டிருந்தா இரண்டு கழகமும் இணைஞ்சிருக்கும். அந்த இணைப்பால கட்சிக்கும், அதன் வெற்றிக்கும் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத
பெரிய வீட்டுக்கும்,சின்ன வீட்டுக்கும் இடையில அல்லாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே மாதிரி பல்லாயிரக்கணக்கான அதிமுக தலைவர்களும்,தொண்டர்களும் மன்னார் குடு கும்பல் கிட்டே சிக்கி சீரழிய வேண்டி வந்திருக்காது.
தலைவா! உன் பொது வாழ்வோட வயசு கூட இல்லாத நானெல்லாம் உன்னை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறாப்ல வச்சிருக்கிறது என்ன தெரியுமா? அளவுக்கு மீறின குடும்ப பாசம். இப்போ மஞ்ச துண்டெல்லாம் போட்டு, சத்ய சாயிபாபாவையே வீட்டுக்கு இன்வைட் பண்ற அளவுக்கு, புதிய சட்டசபை வளாகத்துக்கு கிரக பிரவேச முகூர்த்தமெல்லாம் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட உங்களுக்கு ஒரு ஜோதிடனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்.
இப்போ உங்க லக்னமான ரிஷபத்துக்கு பஞ்சம சனி. ஆந்திராபக்க கிராமங்கள்ள ஒரு சொலவடை உண்டு. "பஞ்சம சனி வாட்னி மஞ்சம் பக்கன சேர்ச்சகுரா"
இதுக்கு என்னடா அர்த்தம்னா அஞ்சுல சனி கொண்டவனை(கயித்து) கட்டிலண்டை கூட சேர்க்காதே . அவனை நாலு போட வந்தவன் உன்னையும் ரெண்டு போட்டுருவான்.
இன்னொரு கோணத்துல பார்த்தா சனி உங்களுக்கு தர்ம கர்மாதிபதி. அதாவது செயல் திறத்தையும், அதே சமயம் புண்ணியத்தையும் ஒரு சேர வழங்க கூடியவர். இவர் பூர்வ புண்ணியத்தை காட்டற அஞ்சாவது இடத்துல நிக்கிறார். நீங்க மட்டும் ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் மாத்தி யோசிச்சா தூள் கிளப்பலாம்.(அது எப்படினு இந்த பதிவோட இறுதி பத்தில நானே சொல்றேன்)
குரு பத்துல இருக்காரு.(பதவி பறிபோகனும்- பொது விதி- ஆனா குரு உங்களுக்கு அஷ்டமாதிபதி .மரணத்தை காட்டற கிரகம் , அதனாலதானோ என்னவோ ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாக நீங்களும் ஒரு காரணமாயிட்டிங்க. பத்துல வந்த அஷ்டமாதிபதியான குரு உங்களை கசாப்பு கடைக்காரராக்கிட்டார் )
மே4 ஆம் தேதிக்கு பிறவு இவர் பதினொன்னுக்கு போறார். தன் சொந்தவீட்டுக்கு போறார். இது பொது விதிப்படி சூப்பரு........... ஆனா அஷ்டமாதிபதியான இவரு 11 க்கு போறது அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப கெட்டது தலைவா!
உங்க ராசியான கடக ராசிக்கு சனி 3 ல இருக்காரு. குரு எட்டுல இருக்காரு. சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு எட்டுல இருந்தது யோகம்தான்.ஆனால் இவர் இப்போ 9க்கு வரப்போறார். 9ங்கறது தூர தேசத்து தொடர்புகளை காட்டற இடம். அங்கே சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு போறதால சோனியா அம்மா கூட டெர்ம்ஸ் கெட்டுரும்.
(இப்போ அழகிரி பாராளுமன்றத்துக்கு போகாம டுப்கி அடிச்ச கதை தெலுங்கு சேனல்ஸ்ல கூட கூவம் மாதிரி நாறுது. இதுல சென்னைக்கும், மதுரைக்கும் அரசாங்க செலவுல விமானத்துல ஷட்டில் வேற அடிச்சிருக்காரு.அஞ்சா நெஞ்சன் உங்களுக்குதான் மகன். சோனியாவுக்கு கிடையாது. உங்க பப்பெல்லாம் வேகாது)
9ங்கறது தூர பிரயாணங்களை காட்டற இடம். மறுபடி எங்கனா தில்லி போய் பதவி வாங்க போயிரப்போறிங்க. சாக்கிரதை. மேலும் முக்கியமா உங்களுக்கு கேது தசை நடக்கிறதா கேள்வி.
கேதுங்கறவர் ஞான காரகன். "கண்ணா ! இந்த உலகத்துல பெண்டாட்டி, பிள்ளை, பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் பொய். கடவுள் தான் மெய்னு காட்டி ஞானத்தை தரக்கூடிய கிரகம் கேது.
ஏற்கெனவே சன் டிவி, தயா நிதிமாறன் விஷயத்துல பார்த்திங்க. இப்போ கலைஞரை தவிர வேற யாரையும் தலைவனா ஏற்க மாட்டேன். தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு அறிவிச்சு அழகிரியும் ஓரளவுக்கு ஞானத்தை தர முயற்சி பண்ணியிருக்காரு.
பாவம் .. ஒரு தரம் எமர்ஜென்சி,இன்னொரு தரம் ராஜீவ் கொலைனு ஆட்சிய இழந்தவரு. கடைசி காலத்துல அரசு மரியாதையோட போய் சேரனும்னு நினைக்கிறாரு. ஓஞ்சு போட்டும்னு விட முடியலை. ஏன்னா உங்க ஆட்சிய காப்பாத்திக்க நீங்க இலங்கை தமிழர்களை பலி கொடுத்துட்டதா சனம் பேசிக்கிறாங்க. இல்லை தலைவா.. எத்தனையோ தோல்விகளுக்கும் பின்னாடி, எம்.ஜி.ஆர்,வைகோ விஷயங்கள்ள செய்த இமாலய தவறுகளையும் மீறி உன்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்துக்கிட்டிருந்த சரித்திரத்தை பலி கொடுத்துட்டிங்க.
சரி தலைவா.. இதை கூட "உன்னை சொல்லி குற்றமில்லை ..என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி"னு சமாளிச்சுரலாம். ஆனால் முந்தா நேத்து நளினி விவகாரம், நேத்து பிரபாகரனோட தாய் விவகாரம்லாம் என்ன மாதிரி தமிழக அரசியலுக்கு, தமிழ் நாட்டுக்கு தூரமா வாழற என்னையே கடுப்பாக்கிருச்சே. உங்களுக்கு எங்கயும் லேசா கூட குத்திக்கலியா தலைவா..
சரி இது கூட ஓஞ்சு போவட்டும். புஸ்வானமாகி போன பட்டாசை கழுத்துவரை உரிச்சு உள்ளார இருக்கிற திரியை லேசா கிள்ளி பத்த வைப்போமே அது மாதிரி உன்னை பத்த வைக்க , உன் புகழை விழுங்க வந்திருக்கும் அவப்பெயரை விரட்ட சின்ன வேலை செய் தலைவா..
ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம், ஒரு ஊருக்காக ஒரு கிராமம். ஒரு நாட்டுக்காக ஒரு ஊரு நாசமா போனாலும் தப்பில்லேங்கறது .. தர்ம சாஸ்திரம்.
நீ ஒன்னும் உன் குடும்பத்தை ரோட்ல விட்டுரலை. குஞ்சு குளுவான்ல இருந்து அததுங்க மில்லியன்,ட்ரில்லியன்ல வள்ளாடுதுங்க. அவிக தகுதிக்கு அது போதும் . அவிகளால நீங்க மூட்டை கட்டிக்கிட்ட அவப்பெயர் போதும்.
மாத்தி யோசிங்க. காலுக்கு சக்கரம் கட்டிக்கிட்டு ஒடியாடின காலத்துல பிள்ளைங்க சொல் பேச்சு கேட்கலைன்னா பரவால்ல , வயசான காலத்துல, சக்கர நாற்காலிலயே வாழ்க்கைய கழிக்கிற இந்த காலத்துல
கூப்பிடு தூரத்துல இருக்கிற தில்லில உங்க மானம் என்னாகும்னு கூட யோசிக்காம, யாரை எதிர்த்து உங்க வாழ் நாளெல்லாம் போராடினிங்களோ அந்த இனத்துக்கு சொந்தமான (பார்ப்பன) பத்திரிக்கைக்கு எவனையும் தலைவனா ஏத்துக்க மாட்டேன், தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு பேட்டி கொடுக்கிற மகனைவிட,
பிரச்சினை இவ்ளோ தூரத்துக்கு நாறியும் " உங்க காலம் வேற .. எங்க காலம் வேற ஒருத்தருக்கு ரெண்டு பதவி எதுக்கு எனக்கு வேணாம் .. அவரே தலைவரா இருக்கட்டும்" னு சொல்ல முன் வராத மகனை விட
உங்க ஆருயிர் நண்பர், உங்க பிள்ளைப்பாசம் காரணமாய் நட்டாற்றில் கழட்டிவிடப்பட்டும் மக்கள் ஆதரவால் கரையேறி கடற்கரையில் மீளாத்துயிலில் இருக்கும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை அவருடன் எந்த உறவும் ( சட்டப்படி) இல்லாமலே இத்தனை காலம் கட்டிக்காத்த
ஜெயலலிதாவை திமுக தலைவியாக்கினால் என்ன?
கட்சி வென்றால் அவரே முதல்வர் என்று அறிவித்தால் என்ன?
குறளோவியம் தீட்டிய உங்களுக்கு தெரியாத குறளா ? ஏதோ ஒரு குறளை எடுத்துவிட்டால் அவனவன் ஆகே பீச்சே மூடிக்கொள்ள மாட்டானா?
வெறுமனே ஈகோ காரணங்களால் இரண்டு இயக்கங்களாக பிரிந்து தமது பிறப்பின் நோக்கத்துக்கே உலை வைத்தபடி கிடக்கும் அவ்வியக்கங்களின் இழி நிலை மாறுமல்லவா?
உமது இரண்டு ஜம்போஜெட் குடும்பங்களுக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள். என்ன சுகம் கண்டீர்கள். லட்சோப லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக ஒரு நாள் வாழ்ந்தால் என்ன?
தீர்காயுள் படைச்ச சரித்திர புருஷர்களோட வாழ்க்கை எவ்ள கேவலமா முடியுங்கறதுக்கு உங்க வாழ்க்கை சரியான உதாரணம்.
என்னை பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் தீபாவளி நேரத்துல பசங்க கொளுத்தற பூத்தொட்டி மாதிரி. ஒரு பொறி அவன் மேல விழறவரைக்கும் வெறுமனே கோன் வடிவ களிமண்ணுருண்டையா கிடப்பான். ஒரு பொறி அவன் மேல விழுந்து சீறி கிளம்பினானு வைங்க எல்லாரும் மூக்குல விரல் வைப்பாங்க. அந்த அளவுக்கு வானவில்லு ஒன்னு அதுக்குள்ள ஒளிஞ்சிருந்து சீறி கிளம்பின மாதிரி இருக்கும். அதுல எரிமலையோட சீற்றமும் இருக்கும், கண்ணுக்கு விருந்தாகிற வண்ண ஊற்றும் இருக்கும். உள்ள இருக்கிற மசாலா தீர்ந்திருச்சுனு வைங்களேன். கொஞ்ச நாழி அதை பிரமிப்போட பார்ப்பாங்க. ஏன்னா அதுல காலி பெருங்காய டப்பால வாசனை மாதிரி அனல் கொஞ்சம் மிச்சமிருக்கும். இன்னும் கொஞ்ச நாழி ஆயிருச்சுனு வைங்களேன் கூட்டி குப்பைல சேர்த்துருவாங்க.
உங்க கதையும் ஏறக்குறைய(உங்க மனசு புண்பட்டுர கூடாதுன்னு இந்த வார்த்தைய வெத்தா உபயோகிச்சிருக்கேன்) இப்படித்தான் ஆயிருச்சு. அன்னைக்கு எமர்ஜென்சியை எதிர்த்து சிறை புகுந்திங்களே. ஒரு அரசாங்கத்தோட அடக்குமுறைக்கு ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை உங்களை ஒட்டு மொத்தமா பலி கொடுத்திங்களே அதோட உங்க உள்ளீடு .. காலி.
நீங்க கடக லக்னத்துக்கே உரிய பந்து ப்ரீதி,குடும்ப பாசம் காரணமா தவற விட்டுட்ட பொது நலத்தை, காமன் மேனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவை கேட்ச் பண்ணிக்கிட்ட எம்.ஜி.ஆர் 13 வருஷம் உங்களை இருந்தும் இல்லாமயே செய்துட்டாரு.
இடையில ஒரு கட்டத்துல பி.ஜு பட் நாயக் ரெண்டு கழகத்தையும் இணைக்க முயற்சி பண்ணார். அப்போ மட்டும் நீங்க உங்க மூளைய அதுல இருக்கிற அதி சாணக்கியத்தை புறந்தள்ளி ,பரந்த மனப்பான்மையோட , சரித்திர பொறுப்போட ஒரு முடிவெடுத்திருந்தா எம்.ஜி.ஆர் மறைவுக்கு அப்புறம் ஜா இல்லே ஜெ இல்லே .இப்படி மைனாரிட்டில காலந்தள்ள வேண்டிய அவசியமுமில்லே.
திமுகங்கற மானில கட்சியை, மானில சுயாட்சிக்காக குரல் கொடுத்த கட்சியை காங்கிரசோட தமிழக கிளை மாதிரி நடத்த வேண்டிய தலை எழுத்தும் இல்லை. நளினியை விடுதலை பண்ண மத்திய அரசோட ஒப்புதல் கேட்டு கேட்டு அதன் படி நடக்க சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லே.
சரி அது கூட ஓஞ்சு போவட்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு பெரிய மன்சனா சரித்திரத்துல நின்னுர்ரதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அன்னைக்கு மேய்ப்பனில்லாத ஆட்டு மந்தையா அதிமுக தவிச்சப்ப கொஞ்சம் பெரிய மனசோட ,பெரிய மன்ச தராவா நடந்துக்கிட்டிருந்தா இரண்டு கழகமும் இணைஞ்சிருக்கும். அந்த இணைப்பால கட்சிக்கும், அதன் வெற்றிக்கும் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத
பெரிய வீட்டுக்கும்,சின்ன வீட்டுக்கும் இடையில அல்லாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே மாதிரி பல்லாயிரக்கணக்கான அதிமுக தலைவர்களும்,தொண்டர்களும் மன்னார் குடு கும்பல் கிட்டே சிக்கி சீரழிய வேண்டி வந்திருக்காது.
தலைவா! உன் பொது வாழ்வோட வயசு கூட இல்லாத நானெல்லாம் உன்னை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறாப்ல வச்சிருக்கிறது என்ன தெரியுமா? அளவுக்கு மீறின குடும்ப பாசம். இப்போ மஞ்ச துண்டெல்லாம் போட்டு, சத்ய சாயிபாபாவையே வீட்டுக்கு இன்வைட் பண்ற அளவுக்கு, புதிய சட்டசபை வளாகத்துக்கு கிரக பிரவேச முகூர்த்தமெல்லாம் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட உங்களுக்கு ஒரு ஜோதிடனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்.
இப்போ உங்க லக்னமான ரிஷபத்துக்கு பஞ்சம சனி. ஆந்திராபக்க கிராமங்கள்ள ஒரு சொலவடை உண்டு. "பஞ்சம சனி வாட்னி மஞ்சம் பக்கன சேர்ச்சகுரா"
இதுக்கு என்னடா அர்த்தம்னா அஞ்சுல சனி கொண்டவனை(கயித்து) கட்டிலண்டை கூட சேர்க்காதே . அவனை நாலு போட வந்தவன் உன்னையும் ரெண்டு போட்டுருவான்.
இன்னொரு கோணத்துல பார்த்தா சனி உங்களுக்கு தர்ம கர்மாதிபதி. அதாவது செயல் திறத்தையும், அதே சமயம் புண்ணியத்தையும் ஒரு சேர வழங்க கூடியவர். இவர் பூர்வ புண்ணியத்தை காட்டற அஞ்சாவது இடத்துல நிக்கிறார். நீங்க மட்டும் ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் மாத்தி யோசிச்சா தூள் கிளப்பலாம்.(அது எப்படினு இந்த பதிவோட இறுதி பத்தில நானே சொல்றேன்)
குரு பத்துல இருக்காரு.(பதவி பறிபோகனும்- பொது விதி- ஆனா குரு உங்களுக்கு அஷ்டமாதிபதி .மரணத்தை காட்டற கிரகம் , அதனாலதானோ என்னவோ ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாக நீங்களும் ஒரு காரணமாயிட்டிங்க. பத்துல வந்த அஷ்டமாதிபதியான குரு உங்களை கசாப்பு கடைக்காரராக்கிட்டார் )
மே4 ஆம் தேதிக்கு பிறவு இவர் பதினொன்னுக்கு போறார். தன் சொந்தவீட்டுக்கு போறார். இது பொது விதிப்படி சூப்பரு........... ஆனா அஷ்டமாதிபதியான இவரு 11 க்கு போறது அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப கெட்டது தலைவா!
உங்க ராசியான கடக ராசிக்கு சனி 3 ல இருக்காரு. குரு எட்டுல இருக்காரு. சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு எட்டுல இருந்தது யோகம்தான்.ஆனால் இவர் இப்போ 9க்கு வரப்போறார். 9ங்கறது தூர தேசத்து தொடர்புகளை காட்டற இடம். அங்கே சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு போறதால சோனியா அம்மா கூட டெர்ம்ஸ் கெட்டுரும்.
(இப்போ அழகிரி பாராளுமன்றத்துக்கு போகாம டுப்கி அடிச்ச கதை தெலுங்கு சேனல்ஸ்ல கூட கூவம் மாதிரி நாறுது. இதுல சென்னைக்கும், மதுரைக்கும் அரசாங்க செலவுல விமானத்துல ஷட்டில் வேற அடிச்சிருக்காரு.அஞ்சா நெஞ்சன் உங்களுக்குதான் மகன். சோனியாவுக்கு கிடையாது. உங்க பப்பெல்லாம் வேகாது)
9ங்கறது தூர பிரயாணங்களை காட்டற இடம். மறுபடி எங்கனா தில்லி போய் பதவி வாங்க போயிரப்போறிங்க. சாக்கிரதை. மேலும் முக்கியமா உங்களுக்கு கேது தசை நடக்கிறதா கேள்வி.
கேதுங்கறவர் ஞான காரகன். "கண்ணா ! இந்த உலகத்துல பெண்டாட்டி, பிள்ளை, பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் பொய். கடவுள் தான் மெய்னு காட்டி ஞானத்தை தரக்கூடிய கிரகம் கேது.
ஏற்கெனவே சன் டிவி, தயா நிதிமாறன் விஷயத்துல பார்த்திங்க. இப்போ கலைஞரை தவிர வேற யாரையும் தலைவனா ஏற்க மாட்டேன். தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு அறிவிச்சு அழகிரியும் ஓரளவுக்கு ஞானத்தை தர முயற்சி பண்ணியிருக்காரு.
பாவம் .. ஒரு தரம் எமர்ஜென்சி,இன்னொரு தரம் ராஜீவ் கொலைனு ஆட்சிய இழந்தவரு. கடைசி காலத்துல அரசு மரியாதையோட போய் சேரனும்னு நினைக்கிறாரு. ஓஞ்சு போட்டும்னு விட முடியலை. ஏன்னா உங்க ஆட்சிய காப்பாத்திக்க நீங்க இலங்கை தமிழர்களை பலி கொடுத்துட்டதா சனம் பேசிக்கிறாங்க. இல்லை தலைவா.. எத்தனையோ தோல்விகளுக்கும் பின்னாடி, எம்.ஜி.ஆர்,வைகோ விஷயங்கள்ள செய்த இமாலய தவறுகளையும் மீறி உன்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்துக்கிட்டிருந்த சரித்திரத்தை பலி கொடுத்துட்டிங்க.
சரி தலைவா.. இதை கூட "உன்னை சொல்லி குற்றமில்லை ..என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி"னு சமாளிச்சுரலாம். ஆனால் முந்தா நேத்து நளினி விவகாரம், நேத்து பிரபாகரனோட தாய் விவகாரம்லாம் என்ன மாதிரி தமிழக அரசியலுக்கு, தமிழ் நாட்டுக்கு தூரமா வாழற என்னையே கடுப்பாக்கிருச்சே. உங்களுக்கு எங்கயும் லேசா கூட குத்திக்கலியா தலைவா..
சரி இது கூட ஓஞ்சு போவட்டும். புஸ்வானமாகி போன பட்டாசை கழுத்துவரை உரிச்சு உள்ளார இருக்கிற திரியை லேசா கிள்ளி பத்த வைப்போமே அது மாதிரி உன்னை பத்த வைக்க , உன் புகழை விழுங்க வந்திருக்கும் அவப்பெயரை விரட்ட சின்ன வேலை செய் தலைவா..
ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம், ஒரு ஊருக்காக ஒரு கிராமம். ஒரு நாட்டுக்காக ஒரு ஊரு நாசமா போனாலும் தப்பில்லேங்கறது .. தர்ம சாஸ்திரம்.
நீ ஒன்னும் உன் குடும்பத்தை ரோட்ல விட்டுரலை. குஞ்சு குளுவான்ல இருந்து அததுங்க மில்லியன்,ட்ரில்லியன்ல வள்ளாடுதுங்க. அவிக தகுதிக்கு அது போதும் . அவிகளால நீங்க மூட்டை கட்டிக்கிட்ட அவப்பெயர் போதும்.
மாத்தி யோசிங்க. காலுக்கு சக்கரம் கட்டிக்கிட்டு ஒடியாடின காலத்துல பிள்ளைங்க சொல் பேச்சு கேட்கலைன்னா பரவால்ல , வயசான காலத்துல, சக்கர நாற்காலிலயே வாழ்க்கைய கழிக்கிற இந்த காலத்துல
கூப்பிடு தூரத்துல இருக்கிற தில்லில உங்க மானம் என்னாகும்னு கூட யோசிக்காம, யாரை எதிர்த்து உங்க வாழ் நாளெல்லாம் போராடினிங்களோ அந்த இனத்துக்கு சொந்தமான (பார்ப்பன) பத்திரிக்கைக்கு எவனையும் தலைவனா ஏத்துக்க மாட்டேன், தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு பேட்டி கொடுக்கிற மகனைவிட,
பிரச்சினை இவ்ளோ தூரத்துக்கு நாறியும் " உங்க காலம் வேற .. எங்க காலம் வேற ஒருத்தருக்கு ரெண்டு பதவி எதுக்கு எனக்கு வேணாம் .. அவரே தலைவரா இருக்கட்டும்" னு சொல்ல முன் வராத மகனை விட
உங்க ஆருயிர் நண்பர், உங்க பிள்ளைப்பாசம் காரணமாய் நட்டாற்றில் கழட்டிவிடப்பட்டும் மக்கள் ஆதரவால் கரையேறி கடற்கரையில் மீளாத்துயிலில் இருக்கும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை அவருடன் எந்த உறவும் ( சட்டப்படி) இல்லாமலே இத்தனை காலம் கட்டிக்காத்த
ஜெயலலிதாவை திமுக தலைவியாக்கினால் என்ன?
கட்சி வென்றால் அவரே முதல்வர் என்று அறிவித்தால் என்ன?
குறளோவியம் தீட்டிய உங்களுக்கு தெரியாத குறளா ? ஏதோ ஒரு குறளை எடுத்துவிட்டால் அவனவன் ஆகே பீச்சே மூடிக்கொள்ள மாட்டானா?
வெறுமனே ஈகோ காரணங்களால் இரண்டு இயக்கங்களாக பிரிந்து தமது பிறப்பின் நோக்கத்துக்கே உலை வைத்தபடி கிடக்கும் அவ்வியக்கங்களின் இழி நிலை மாறுமல்லவா?
உமது இரண்டு ஜம்போஜெட் குடும்பங்களுக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள். என்ன சுகம் கண்டீர்கள். லட்சோப லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக ஒரு நாள் வாழ்ந்தால் என்ன?
Subscribe to:
Posts (Atom)
