Showing posts with label passion. Show all posts
Showing posts with label passion. Show all posts

Tuesday, November 2, 2010

அப்ப... காதலிக்க ஆரம்பிக்கலாமா?

காதலை தொலைத்தால் என்ன கிடைக்கும்?

கண்களை தொலைத்தால்
காதல் கிடைக்கும்
காதலை தொலைத்தால்
மோட்சம் கிடைக்கும்

இப்படி எழுதினா
உங்ககிட்ட
அடியும் கிடைக்கும்

பயப்படாதீங்க... கவிதை07ல் நான் கவிதை எழுதமாட்டேன்... இப்பொழுதெல்லாம் கவிதை வாசித்தால் நான் ஏதோ புதன் கிரகத்தில் வசிப்பதான மயக்கம் ஏற்படுகிறது... எனக்கு இந்த புவியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றது.

காதலுக்கு வரலாம்...

காதல் , காதல், காதல்...

எப்போதாவது என் நண்பரோடு விவாதம் நடத்துவதுண்டு. ஒரு சமயத்தில்
"எல்லா காதலுக்கும் அடிப்படை; சுயநலமும், ஆக்கிரமிப்பும் தான்" என்பது குறித்து நீண்ட விவாதம். அதில் கிடைக்கப்பெற்ற சில கருத்துக்கள்...

காதல் என்பது ...

1, அன்பு ஆவேசம் கொண்ட நிலைகள் வெளிப்பாடு காதல்.
2, மனம் சார்ந்த தேவையும், உடல் சார்ந்த தேவையும்.
3, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பொண்ணு.
4, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பையன்.
5, மிக முழுவதுமான முற்றிவிட்ட ஆர்வக்கோளாறு. (இருபாலருக்கும்)
6, எல்லாரும் செய்யும் போது, நமக்கென்ன? (இருபாலருக்கும்)
7, திட்டமில்லாத எதிர்கால, நிசப்தமான நம்பிக்கையின் வெளிப்பாடு. (!?)
8, வெறுமனே பொழுதைக்களிக்கும் மனோநிலை.
9, ஆர்ப்பாட்டமான மறைமுக பால் எழுச்சி.
10, சமுதாய அங்கீகாரத்தேவை

இப்படி கருத்துக்களை எடுத்துக்கொண்டிருக்கையில் இருவருக்குமே ஒன்று தோன்றியது. காய்சலும், தலைவலியும், காதலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

ஆனால் மிக முக்கியமான ஒன்று...
"வாழ்ந்தவன், வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான், அதிலும் காதலிக்காதவன்" என்பதுதான்.

ஆக, நாங்களும் தயார் காதலிக்க. காத்திருக்கிறோம்.

நீங்களும் கை தூக்குவது எனக்கும் தெரிகிறது.

இந்த தலைப்பில் எழுதும் போதும் ஒருவர் சொன்னார், "ஹோட்டலில் எப்படி   தோசை   சுடுறாங்கன்னு தெரிஞ்சா என்னைக்குமே, எங்கயுமே தோசை சாப்பிடமாட்டீங்க, தம்பி" என்றார்.

ருசி இருக்கும் போது...

அப்ப... காதலிக்க ஆரம்பிக்கலாமா?