Showing posts with label rathan tata. Show all posts
Showing posts with label rathan tata. Show all posts

Monday, November 15, 2010

15 கோடி லஞ்சம் தர மறுத்த டாட்டா உத்தமரா?

விமான சர்வீஸ் ஆரம்பிக்க முயன்ற போது ஒரு மந்திரி 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும், தாம் தர மறுத்ததால் தான் நாளிதுவரை விமான சர்வீஸ் ஆரம்பிக்கவில்லை என்றும் ரத்தன் டாட்டா  கூறியுள்ளார். உடனே சோடாபுட்டி கண்ணாடிகள் ( அறிவு ஜீவிகள்) ஆகா டாட்டா உத்தமர் என்றும், செட் அப்பே கரப்ட் ஆயிருச்சு என்றும் பீசிக்கொள்ள ஆரம்பித்து விட்டிருப்பார்கள்.

வி.ச ஆரம்பிக்க லஞ்சம் கேட்டவுக மத்த யாவாரத்துக்கும் நிச்சயம் கேட்டிருப்பாய்ங்க. இவர் தர மறுத்திருந்தா தாளி ஒரு தீப்பெட்டி கம்பெனி கூட ஆரம்பிச்சிருக்க முடியாது. ஆனால் இவர் சொல்ற காலகட்டத்துல எத்தீனி யாவாரம் ஆரம்பிச்சாய்ங்கனு நெனச்சி பாருங்க.

இந்தியாவுல தாளி லஞ்சம் கொடுக்காம தள்ளுவண்டில இட்லி கூட விக்க முடியாது. இது எந்த கேணையனுக்கும் தெரியும்.  ரோட்ல டூ வீலர்ல  போறச்ச கீப் லெஃப்ட், நோ என்ட்ரி அது இதுனு போட்டு ஐரன்  போர்டுங்க தெரியும். அல்லது டிவைடர் கட்டாத ரோட்ல நீட்டத்துக்கு போர்டுகளை வச்சி பிரிச்சிருப்பாய்ங்க. பார்த்திருப்பிங்க. போர்டுகள்ள கீழ் பாகத்துல ஏஏஏ அபார்ஷன் க்ளினிக், களவாணி அண்ட் கோனு கம்பெனிங்க பேரு இருக்கும்.

இந்த போர்டுகளோட ஏற்பாடு  எப்படி நடக்குது தெரீமா? யாவாரிங்களை ஸ்டேஷனுக்கு கூப்டுவாய்ங்க. நீ இத்தீனி போர்டு நீ இத்தீனி போர்டுனு சொல்லிருவாய்ங்க.அம்புட்டுதேங்.

வாத்யாரே நானு சித்தூர் வேலூர் பஸ்ல வேலை செய்தேன். அங்கனதான் பார்த்தேன் மாசா மாசம் கவர்ல போட்டு ஒன் டவுன் டூ டவுன் ட்ராஃபிக் ஆர்டிஓ, செக் போஸ்டுனு அனுப்பிட்டிருப்பாய்ங்க. இல்லாட்டி தொழில் நடக்காது.

நகைத்திருடன் பிடிபட்டான் 50ஒ கிராம் பறிமுதல்னு சேதி வரும். மேட்டர் என்னடான்னா அவன் திருடியே கூட இருக்கமாட்டான். ஒரு வேளை திருடியிருந்தாலும் எங்கனயோ வித்திருப்பான். தின்னு,குடிச்சு தீர்த்திருப்பான். அவனை ஒரு ஜீப்ல போட்டுக்கிட்டு எஸ்.ஐ வருவாரு. ஒவ்வொரு நகை கடையா ஏறி இறங்குவாரு.

திருடன் இங்கனதான் வித்தேம்பான். ஒடனே திருடன் சொன்ன கிராம்ஸ் ஆஃப் கோல்ட் ரிகவரி பண்ணிக்கிட்டு அடுத்த கடை ஏறுவாரு. இதான் நாட்டு நிலைம.

ஜுவெல்லரி காரன் திருட்டு நகைய வாங்கவே இல்லைன்னாலும் ரிக்கவரி கொடுத்துதான் ஆகனும். அதுவும் கேஸில்லாம மெயின்டெய்ன் பண்றதுக்கு மாமூல் வேற, ஜீப்புக்கு டீசல் செலவு வேற.

இந்த அழகுல டாட்டா தானேதோ உத்தமர் மாதிரியும் ஒரே ஒரு மந்திரிதான் 15 கோடி கேட்ட மாதிரியும் அதை தர விருப்பமில்லாமதான் விமான சர்வீஸ் ஆரம்பிக்காதது மாதிரியும் பீத்தியிருக்காரு.

தாளி நம்ம வீட்டுல கக்கூஸ் கட்டணும்னா கூட நகராட்சிக்கு லஞ்சம் தரவேண்டிய நிலை.  இவரு பீலா விடறாரு.

உண்மையிலயே டாட்டா உத்தமரா இருந்தா தங்களோட எந்தெந்த தொழில் ஆரம்பிக்க எத்தீனி எத்தீனி கோடி கொடுத்தோம்னு லிஸ்டை ரிலீஸ் பண்ணனும்.

இதெல்லாம் பிக்காலி பேச்சு. உப்பு வித்து, தீப்பெட்டி வித்து ஏழைதொழிலாளிங்க வயித்துல அடிச்சு அவிகளை பிச்சையெடுக்க வச்சு,திருடங்களாக்கி, அவன் வீட்டு பெண்களை தேவடியாளாக்கி நாறடிச்ச பெரியவுக இவிக.

அரசியல் வாதியோட லைன் க்ளியரா இருக்கும். தாளி பேர் வரனும். கெட்ட பேர் வரதாருந்தா சூட் கேஸ் வரனும்.

இவிக யாவாரத்துக்கு அனுமதி கொடுத்தா எப்படியும் கொள்ளைதான் அடிப்பாய்ங்க. பேரு ரிப்பேராயிரும்.அப்பாறம் ஓட்டு "வாங்கறது"எப்படியாம். அதனாலதான் 15 கோடி.

நல்ல அரசியல் வாதிங்க.. நல்ல தொழிலதிபருங்க. விளங்கிரும்யா..