Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Friday, July 9, 2010

தனுஷோட பாடி

ஹார்டி பாடி, வின்டி மைண்ட் ,ஹோலி சோல்...........அண்ணே அண்ணே படக்குனு பேஜை க்ளோஸ் பண்ணிராதிங்க கிளு கிளு மேட்டர்லாம் கீதுண்ணே

தமிழ் செம்மொழி மாநாடு நடந்து ஏப்பம் கூட தமிழ்ல தான் விடனும்னு சொல்லிக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல இப்படி ஒரு தலைப்பை வைக்க இன்னா தகிரியம், இன்னா இம்மத் கீனம். அதான் ராசா நம்ம தாக்கத். தமிழ்ல தலைப்ப வச்சுட்டு உதவாக்கரை மேட்டரை போடறதை விட மனித குலம் வாழ்வாங்கு வாழ நான் வைத்திருக்கும் அஜெண்டாவை சொல்ல ஆங்கிலத்துல தலைப்ப வைக்கிறது தப்பே கிடையாதுங்கண்ணா.

ஹார்டி பாடின்னா : வலிமையான உடல்
விண்டி மைண்ட்னா: காற்றை போல லேசான மனம்
ஹோலி சோல்னா : புனிதமான ஆத்மா

சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி -  உறுதி வாய்ந்த  உடலில்  உறுதியான மனம்.
1967ல பிறந்த  நான் 1987ல ரஜினிகாந்த் படங்களை பார்த்து ஸ்டைலுக்காக தம் அடிக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு 23 வருசம் ஆயிருச்சு. வேற எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. எதுனா பஞ்சாயத்துல திடீர்னு கைகலப்பு ஆவற மாதிரி ஆயிட்டா கத்த வேண்டி வரும்போது மூச்சு வாங்குதுங்கண்ணா.

(அதனால இப்ப என்ன பண்றோம்னா "அடிச்சுக்கறிங்களாப்பா.. அப்படியே ஆகட்டும். அதுவரை வெளிய இருக்கன். எல்லாம் முடிஞ்ச பொறவு தகவல் சொல்லுங்க"ன்னிட்டு வெளிய கிளம்பறாப்ல பாவ்லா காட்டறோம்)

இந்த தம்மு பயக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா போலீஸ் லாக்கப்லயோ ,செயில்லயோ ஒரு 15 நாள் இருக்கிற கப்பாசிட்டி இருந்திருக்கும். ஒரு வேளை கடவுள் கண்ணசந்திருந்தா ஆப்பரேசன் இந்தியா 2000 திட்டம் நடைமுறைக்கே வந்திட்டிருக்கலாம். என்ன பண்றது ஒரே ஒரு பீடி, சிகரட் பழக்கம் கையாலாகாத பாவியாக்கிருச்சு.

பழைய கதையையெல்லாம் விட்டுருவம், ஆ.இ.2000 ஐ கூட விட்டுரலாம் . சமீபத்துல டாஸ்மாக்கை நம்பாம சனத்தை இமிசை பண்ணாம மானில அரசு எப்படி பணம் புரட்டலாம்னு ஒரு ஐட்டம் போட்டேன். அதை மு.க வுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் கொரியர்ல அனுப்பினேன். ( ப்ரிண்ட் அவுட் :10ரூ, கவர் :1ரூ , கொரியர்: 15 ரூ ஆகமொத்தம் 26ரூ. ரெண்டு உருப்படிங்கறதால 26X2 52 ரூ வட்டம்) இந்த 52 ரூபாயை பாக்கெட்ல போட்டுக்கிட்டு அறிவாலயத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ போய் அலம்பல் பண்ணியிருந்தா தூக்கி உள்ளே போட்டிருப்பாய்ங்க. விஷயம் வெளிய வந்திருக்கும்.

இப்ப என்னாச்சு? மேற்படி மேட்டரை படிச்ச 300 அ 400 பேரோட முடிஞ்சுருச்சு. இவ்ளோ பெரிய மொக்கை போட்டு நான் சொல்லவர்ரது சின்ன பாயிண்ட் ரஜினி மாதிரி ஆளெல்லாம் நரிக்கொம்பு விக்கிற பார்ட்டி மாதிரி . நாம தான் ஏமாறாம இருக்கனும் .ஏமாந்துட்டா  அம்புட்டுதேங்.  பாருங்க ஒரே ஒரு புகைப்பழக்கம் எந்த அளவுக்கு ஒரு மனிதனை மட்டுமில்லாம ஒரு நாட்டையே ( ஹி ஹி ஆ.இ.2000 திட்டத்தோட நோக்கமே இந்தியாவ பணக்கார நாடாக்குறதுதானே தலை) எந்த அளவுக்கு பாதிச்சுருச்சு.

இதை விட்டு ஒழிக்கனும்னு முடிவு பண்ணிட்டா விட்டொழிக்க  ரெம்ப   நேரமாகாது. ஏன் ஒழிக்காம இருக்கோம்னா இன்னைக்கு இருக்கிற சொசைட்டில  மஸ்தா மேட்டர்லாம் பார்லதாங்கண்ணா முடிவாகுது.அந்த குடிகார நாய்ங்களுக்கு  கம்பெனி கொடுக்கவாச்சும் இந்த புகைப்பழக்கம் உதவுது.

அதுக்காக தண்ணி போடவும் இறங்கமாட்டோம். ராமதாஸ் அண்ட் கோ சொன்னப்ப  பாபாவுக்கு அப்பாறம் ரஜினி வாய்ல விரல் போட்டுக்கிட்ட மாதிரியும் பண்ணமாட்டோம்.

சரி சரி .. மேட்டருக்கு வரேங்கண்ணா. ஹார்டி பாடினு ஆரம்பிச்சோம். அது ஹார்டா இருக்கா இல்லியாங்கறது அடுத்த பிரச்சினை. ஒரு தனுஷ் பாடியயே எடுத்துக்கங்களேன். அவரு மட்டும் ஒரு டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு எனிமா எடுத்துக்கிட்டு  ஒரு 7 நாள் உண்ணாவிரதமிருந்து  ஒரு 48 நாளைக்கு காலை 6  முதல் மாலை 6 வரை  மட்டும் வேலை செய்து. இயற்கை உணவையே எடுத்துக்கறாரு, பாட்டில் பாட்டிலா மினரல் வாட்டர் சாப்பிடறாருனு வைங்க அவரோட பாடி சூரியகாந்தி பூ மாதிரி ஆயிரும்.

சூரிய காந்தி பூ எப்படி சூரியனை நோக்கியே பார்க்குதோ அப்படி தனுஷோட பாடி இயற்கைக்கு நெருக்கமா மாறிரும்.  ஓஷோ சொல்வாரு : மனிதன்  பூமியோட குழந்தை, பூமி சூரியனோட குழந்தை. நம்ம கேலக்சிக்கு சூரியன் தான் மையம்.

மேற்படி ப்ராசஸ்ல தனுஷோட  பாடி இயற்கைங்கற சி.பி.யுவுக்கு   மானிட்டர் மாதிரி ஆயிரும்.அப்பாறம் பவுர்ணமி,அமாவாசை எல்லாம் தெரிஞ்சுக்க ராணி முத்து காலெண்டர் அவசியமில்லை. தனுஷோட முகத்தை பார்த்தா போதும்.

ரூஷோ பத்தி கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். மனிதகுல பிரச்சினைகளுக்கான தீர்வு பத்தி கேட்டா அவர் கொடுத்த சஜஷன் சின்னது. தமிழ் சினிமால ஹீரோயினோட காஸ்ட்யூமை விட குட்டியூண்டு சஜஷன்.

"இயற்கைக்கு திரும்பி போ"

நாமெல்லாம் இயற்கைங்கற வட்டத்துல ஆரம்பப்புள்ளிலருந்து  பின் நோக்கி பயணத்தை துவக்கி அந்த புள்ளிலருந்து விலகி  முழுசா ஒரு ரவுண்டு வந்துட்டம். இன்னம் ரெண்டு மூணு டிகிரிதான் மிச்சம். என்ன பின்னாடியிருந்து இயற்கைய சந்திக்க போறோம். இயற்கை அன்னைதான் இல்லேங்கலை. அவளை முன் பக்கமா போய் சந்திச்சா பாச்சி குடுப்பா. இல்லாட்டி மடில இடம் கொடுப்பா. பின்னாடி போய் சந்திச்சா ? அவ என்ன மெக்சிக்கோ சலவைக்காரியா ? 7 ஆவதா ஒரு கழுதை வந்து போன பிறகு 7 ஆவதா வந்த ஆள்  இன்னொரு தடவை வாங்கறதுக்கு.

இயற்கை அன்னை ஒரு "குசு" விட்டாள்னா போதும் மவனுங்க மண்ணாகி மக்கியே போயிருவாய்ங்க. விஞ்ஞானம் வளர்ந்திருக்கு. இயற்கையின் போக்கு சைன்டிஃபிக்காவே ப்ரூவ் ஆகியிருக்கு.

ஓசோன் என்ன கலைஞர் வீட்டு திருமணம் மாதிரி நடந்த செம்மொழி மாநாட்டு  பந்தலா ? ஓட்டையாயிருச்சுனு தைச்சுக்க ..இல்லை அழுக்காயிருச்சுனு வெளுக்க?
இன்னா தகிரியம் தலைவரே.

ஓசோன்ல ஓட்டை விழுந்துருச்சுடா ..புகை விடாதிங்கன்னா கேக்கமாட்டேங்கிறாய்ங்க.  ஆஃப்டர் ஆல் ஒரு ஓட்டைக்காக இந்த ஒல்லிப்பீச்சானுங்க லட்ச ரூபால பைக் வாங்கி  சுத்தோ சுத்துனு சுத்திபுகையா கழியறானுவ. தண்ணி போட வண்டி. அரட்டை அடிக்க வண்டி, அகாலமா கக்கூசு வந்துட்டா வண்டி.இவிகளயெல்லாம் ஒரு ஸ்பெஷல் நரகத்துக்கு அனுப்பனும்ணே

டமில் ஹேப்பி டாட் காம் நரகத்துல புட்டிக்கு ஓட்டை இருக்குமாம். குட்டிக்கு இருக்காதாம்.

எனக்கு ஒரே ஒரு பாயிண்ட் புரியமாட்டேங்குதுங்கண்ணா. இந்த இயற்கை அடையாறு ஆலமரம்னா. நாம அதன் விதைல முளைச்ச  போன்சாய்க் ஆலமரம் . அம்புலிமாமா கதைகள்ள அத்தனாம் பெரிய ராட்சசன் உசுரு இத்தினியூண்டு வண்டுல இருக்கிற மாதிரி இத்தினியூண்டு மன்சங்க உசுரு இத்தனாம் பெரிய இயற்கைல இருக்கு.

ஆஃப்டர் ஆல் குந்திக்கினு கீற கிளைய வெட்டறோங்கற சென்ஸ் கூட இல்லாம போயிருச்சே. விஞ்ஞானத்தை மனித உணர்வுகளோட பயன் படுத்தினா ஓகே. உயிர்காக்கும் ஊசி மருந்தை ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சா பரவால்லை. பீரைன்னா வைக்கிறானுக. பத்து பைசா ஃப்ரூட் பல்ப் கூட இல்லாத ட்ரிங்கத்தானே வைக்கிறானுவ. ( பாட்டில் மேலயே போட்டிருக்கான் : கன்டெயின் நோ ஜூஸ் ஆர் பல்ப்னு) பெப்சில பல்ல போட்டு வச்சா ஒரு வாரத்துல காணாம போயிருதாம்.

மிச்சமான சாம்பாரை மாசத்துக்கு  நூறு நூத்தம்பதுக்கு வேலை செய்யற வேலைக்காரிக்குகொடுக்கமாட்டானுவோ அதை ஃப்ரிட்ஜ்ல வச்சி தின்னு ஆர்த்த்ரைட்டிஸ் வாங்குவானுவோ.

அந்த ஃப்ரிட்ஜலருந்து வெளியேர்ர மீத்தென் வாயு ஓசோன்ல ஓட்டை போடுதாம். இவிக எதிர்காலத்தை கொளுத்திப்போட்ட தலைவன் செத்தா டயரை  கொளுத்திவிடுவானுவோ.

கழிவு நீரை நதிக்கு திருப்புவானுவோ. அதென்ன வெறும் மூத்திரமா? இவிக என்ன மொரார்ஜி தேசாயா ? மறுபடி அதை குடிச்சு தீர்த்துர. சாரிங்கண்ணா ரெம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டன். நம்ம ஸ்லோகன்ல மொத ஸ்டெப் ஹார்டி பாடி. ஹார்டி பாடிக்கு ஒரே வழி இயற்கைக்கு திரும்பிப்போறதுதான். இயற்கைய அதன் சமன்பாட்டை குலைக்கிறதில்லைனு சொல்ல நினைச்சேன்.  அது எப்படியோ ரூட் மாறி இந்த அளவுக்கு போயிருச்சு. மீதிய உணர்ச்சி வசப்படாம நாளைக்கு எழுதறேன். ஜூட்டுங்கண்ணா

பி.கு:
நாம ஒரு  இயக்கத்தை கட்டி எழுப்பறோம்னு வைங்க அதுக்குனு  ஒரு லோகோ ஒருக்கனும் . லோகோவை சுத்தி ஒரு ஸ்லோகன் வரனம்ல அதான் இது. "ஹார்டி பாடி,விண்டி மைண்ட்,ஹோலி சோல்."

தனுஷோட பாடி

ஹார்டி பாடி, வின்டி மைண்ட் ,ஹோலி சோல்...........அண்ணே அண்ணே படக்குனு பேஜை க்ளோஸ் பண்ணிராதிங்க கிளு கிளு மேட்டர்லாம் கீதுண்ணே

தமிழ் செம்மொழி மாநாடு நடந்து ஏப்பம் கூட தமிழ்ல தான் விடனும்னு சொல்லிக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல இப்படி ஒரு தலைப்பை வைக்க இன்னா தகிரியம், இன்னா இம்மத் கீனம். அதான் ராசா நம்ம தாக்கத். தமிழ்ல தலைப்ப வச்சுட்டு உதவாக்கரை மேட்டரை போடறதை விட மனித குலம் வாழ்வாங்கு வாழ நான் வைத்திருக்கும் அஜெண்டாவை சொல்ல ஆங்கிலத்துல தலைப்ப வைக்கிறது தப்பே கிடையாதுங்கண்ணா.

ஹார்டி பாடின்னா : வலிமையான உடல்
விண்டி மைண்ட்னா: காற்றை போல லேசான மனம்
ஹோலி சோல்னா : புனிதமான ஆத்மா

சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி -  உறுதி வாய்ந்த  உடலில்  உறுதியான மனம்.
1967ல பிறந்த  நான் 1987ல ரஜினிகாந்த் படங்களை பார்த்து ஸ்டைலுக்காக தம் அடிக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு 23 வருசம் ஆயிருச்சு. வேற எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. எதுனா பஞ்சாயத்துல திடீர்னு கைகலப்பு ஆவற மாதிரி ஆயிட்டா கத்த வேண்டி வரும்போது மூச்சு வாங்குதுங்கண்ணா.

(அதனால இப்ப என்ன பண்றோம்னா "அடிச்சுக்கறிங்களாப்பா.. அப்படியே ஆகட்டும். அதுவரை வெளிய இருக்கன். எல்லாம் முடிஞ்ச பொறவு தகவல் சொல்லுங்க"ன்னிட்டு வெளிய கிளம்பறாப்ல பாவ்லா காட்டறோம்)

இந்த தம்மு பயக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா போலீஸ் லாக்கப்லயோ ,செயில்லயோ ஒரு 15 நாள் இருக்கிற கப்பாசிட்டி இருந்திருக்கும். ஒரு வேளை கடவுள் கண்ணசந்திருந்தா ஆப்பரேசன் இந்தியா 2000 திட்டம் நடைமுறைக்கே வந்திட்டிருக்கலாம். என்ன பண்றது ஒரே ஒரு பீடி, சிகரட் பழக்கம் கையாலாகாத பாவியாக்கிருச்சு.

பழைய கதையையெல்லாம் விட்டுருவம், ஆ.இ.2000 ஐ கூட விட்டுரலாம் . சமீபத்துல டாஸ்மாக்கை நம்பாம சனத்தை இமிசை பண்ணாம மானில அரசு எப்படி பணம் புரட்டலாம்னு ஒரு ஐட்டம் போட்டேன். அதை மு.க வுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் கொரியர்ல அனுப்பினேன். ( ப்ரிண்ட் அவுட் :10ரூ, கவர் :1ரூ , கொரியர்: 15 ரூ ஆகமொத்தம் 26ரூ. ரெண்டு உருப்படிங்கறதால 26X2 52 ரூ வட்டம்) இந்த 52 ரூபாயை பாக்கெட்ல போட்டுக்கிட்டு அறிவாலயத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ போய் அலம்பல் பண்ணியிருந்தா தூக்கி உள்ளே போட்டிருப்பாய்ங்க. விஷயம் வெளிய வந்திருக்கும்.

இப்ப என்னாச்சு? மேற்படி மேட்டரை படிச்ச 300 அ 400 பேரோட முடிஞ்சுருச்சு. இவ்ளோ பெரிய மொக்கை போட்டு நான் சொல்லவர்ரது சின்ன பாயிண்ட் ரஜினி மாதிரி ஆளெல்லாம் நரிக்கொம்பு விக்கிற பார்ட்டி மாதிரி . நாம தான் ஏமாறாம இருக்கனும் .ஏமாந்துட்டா  அம்புட்டுதேங்.  பாருங்க ஒரே ஒரு புகைப்பழக்கம் எந்த அளவுக்கு ஒரு மனிதனை மட்டுமில்லாம ஒரு நாட்டையே ( ஹி ஹி ஆ.இ.2000 திட்டத்தோட நோக்கமே இந்தியாவ பணக்கார நாடாக்குறதுதானே தலை) எந்த அளவுக்கு பாதிச்சுருச்சு.

இதை விட்டு ஒழிக்கனும்னு முடிவு பண்ணிட்டா விட்டொழிக்க  ரெம்ப   நேரமாகாது. ஏன் ஒழிக்காம இருக்கோம்னா இன்னைக்கு இருக்கிற சொசைட்டில  மஸ்தா மேட்டர்லாம் பார்லதாங்கண்ணா முடிவாகுது.அந்த குடிகார நாய்ங்களுக்கு  கம்பெனி கொடுக்கவாச்சும் இந்த புகைப்பழக்கம் உதவுது.

அதுக்காக தண்ணி போடவும் இறங்கமாட்டோம். ராமதாஸ் அண்ட் கோ சொன்னப்ப  பாபாவுக்கு அப்பாறம் ரஜினி வாய்ல விரல் போட்டுக்கிட்ட மாதிரியும் பண்ணமாட்டோம்.

சரி சரி .. மேட்டருக்கு வரேங்கண்ணா. ஹார்டி பாடினு ஆரம்பிச்சோம். அது ஹார்டா இருக்கா இல்லியாங்கறது அடுத்த பிரச்சினை. ஒரு தனுஷ் பாடியயே எடுத்துக்கங்களேன். அவரு மட்டும் ஒரு டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு எனிமா எடுத்துக்கிட்டு  ஒரு 7 நாள் உண்ணாவிரதமிருந்து  ஒரு 48 நாளைக்கு காலை 6  முதல் மாலை 6 வரை  மட்டும் வேலை செய்து. இயற்கை உணவையே எடுத்துக்கறாரு, பாட்டில் பாட்டிலா மினரல் வாட்டர் சாப்பிடறாருனு வைங்க அவரோட பாடி சூரியகாந்தி பூ மாதிரி ஆயிரும்.

சூரிய காந்தி பூ எப்படி சூரியனை நோக்கியே பார்க்குதோ அப்படி தனுஷோட பாடி இயற்கைக்கு நெருக்கமா மாறிரும்.  ஓஷோ சொல்வாரு : மனிதன்  பூமியோட குழந்தை, பூமி சூரியனோட குழந்தை. நம்ம கேலக்சிக்கு சூரியன் தான் மையம்.

மேற்படி ப்ராசஸ்ல தனுஷோட  பாடி இயற்கைங்கற சி.பி.யுவுக்கு   மானிட்டர் மாதிரி ஆயிரும்.அப்பாறம் பவுர்ணமி,அமாவாசை எல்லாம் தெரிஞ்சுக்க ராணி முத்து காலெண்டர் அவசியமில்லை. தனுஷோட முகத்தை பார்த்தா போதும்.

ரூஷோ பத்தி கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். மனிதகுல பிரச்சினைகளுக்கான தீர்வு பத்தி கேட்டா அவர் கொடுத்த சஜஷன் சின்னது. தமிழ் சினிமால ஹீரோயினோட காஸ்ட்யூமை விட குட்டியூண்டு சஜஷன்.

"இயற்கைக்கு திரும்பி போ"

நாமெல்லாம் இயற்கைங்கற வட்டத்துல ஆரம்பப்புள்ளிலருந்து  பின் நோக்கி பயணத்தை துவக்கி அந்த புள்ளிலருந்து விலகி  முழுசா ஒரு ரவுண்டு வந்துட்டம். இன்னம் ரெண்டு மூணு டிகிரிதான் மிச்சம். என்ன பின்னாடியிருந்து இயற்கைய சந்திக்க போறோம். இயற்கை அன்னைதான் இல்லேங்கலை. அவளை முன் பக்கமா போய் சந்திச்சா பாச்சி குடுப்பா. இல்லாட்டி மடில இடம் கொடுப்பா. பின்னாடி போய் சந்திச்சா ? அவ என்ன மெக்சிக்கோ சலவைக்காரியா ? 7 ஆவதா ஒரு கழுதை வந்து போன பிறகு 7 ஆவதா வந்த ஆள்  இன்னொரு தடவை வாங்கறதுக்கு.

இயற்கை அன்னை ஒரு "குசு" விட்டாள்னா போதும் மவனுங்க மண்ணாகி மக்கியே போயிருவாய்ங்க. விஞ்ஞானம் வளர்ந்திருக்கு. இயற்கையின் போக்கு சைன்டிஃபிக்காவே ப்ரூவ் ஆகியிருக்கு.

ஓசோன் என்ன கலைஞர் வீட்டு திருமணம் மாதிரி நடந்த செம்மொழி மாநாட்டு  பந்தலா ? ஓட்டையாயிருச்சுனு தைச்சுக்க ..இல்லை அழுக்காயிருச்சுனு வெளுக்க?
இன்னா தகிரியம் தலைவரே.

ஓசோன்ல ஓட்டை விழுந்துருச்சுடா ..புகை விடாதிங்கன்னா கேக்கமாட்டேங்கிறாய்ங்க.  ஆஃப்டர் ஆல் ஒரு ஓட்டைக்காக இந்த ஒல்லிப்பீச்சானுங்க லட்ச ரூபால பைக் வாங்கி  சுத்தோ சுத்துனு சுத்திபுகையா கழியறானுவ. தண்ணி போட வண்டி. அரட்டை அடிக்க வண்டி, அகாலமா கக்கூசு வந்துட்டா வண்டி.இவிகளயெல்லாம் ஒரு ஸ்பெஷல் நரகத்துக்கு அனுப்பனும்ணே

டமில் ஹேப்பி டாட் காம் நரகத்துல புட்டிக்கு ஓட்டை இருக்குமாம். குட்டிக்கு இருக்காதாம்.

எனக்கு ஒரே ஒரு பாயிண்ட் புரியமாட்டேங்குதுங்கண்ணா. இந்த இயற்கை அடையாறு ஆலமரம்னா. நாம அதன் விதைல முளைச்ச  போன்சாய்க் ஆலமரம் . அம்புலிமாமா கதைகள்ள அத்தனாம் பெரிய ராட்சசன் உசுரு இத்தினியூண்டு வண்டுல இருக்கிற மாதிரி இத்தினியூண்டு மன்சங்க உசுரு இத்தனாம் பெரிய இயற்கைல இருக்கு.

ஆஃப்டர் ஆல் குந்திக்கினு கீற கிளைய வெட்டறோங்கற சென்ஸ் கூட இல்லாம போயிருச்சே. விஞ்ஞானத்தை மனித உணர்வுகளோட பயன் படுத்தினா ஓகே. உயிர்காக்கும் ஊசி மருந்தை ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சா பரவால்லை. பீரைன்னா வைக்கிறானுக. பத்து பைசா ஃப்ரூட் பல்ப் கூட இல்லாத ட்ரிங்கத்தானே வைக்கிறானுவ. ( பாட்டில் மேலயே போட்டிருக்கான் : கன்டெயின் நோ ஜூஸ் ஆர் பல்ப்னு) பெப்சில பல்ல போட்டு வச்சா ஒரு வாரத்துல காணாம போயிருதாம்.

மிச்சமான சாம்பாரை மாசத்துக்கு  நூறு நூத்தம்பதுக்கு வேலை செய்யற வேலைக்காரிக்குகொடுக்கமாட்டானுவோ அதை ஃப்ரிட்ஜ்ல வச்சி தின்னு ஆர்த்த்ரைட்டிஸ் வாங்குவானுவோ.

அந்த ஃப்ரிட்ஜலருந்து வெளியேர்ர மீத்தென் வாயு ஓசோன்ல ஓட்டை போடுதாம். இவிக எதிர்காலத்தை கொளுத்திப்போட்ட தலைவன் செத்தா டயரை  கொளுத்திவிடுவானுவோ.

கழிவு நீரை நதிக்கு திருப்புவானுவோ. அதென்ன வெறும் மூத்திரமா? இவிக என்ன மொரார்ஜி தேசாயா ? மறுபடி அதை குடிச்சு தீர்த்துர. சாரிங்கண்ணா ரெம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டன். நம்ம ஸ்லோகன்ல மொத ஸ்டெப் ஹார்டி பாடி. ஹார்டி பாடிக்கு ஒரே வழி இயற்கைக்கு திரும்பிப்போறதுதான். இயற்கைய அதன் சமன்பாட்டை குலைக்கிறதில்லைனு சொல்ல நினைச்சேன்.  அது எப்படியோ ரூட் மாறி இந்த அளவுக்கு போயிருச்சு. மீதிய உணர்ச்சி வசப்படாம நாளைக்கு எழுதறேன். ஜூட்டுங்கண்ணா

பி.கு:
நாம ஒரு  இயக்கத்தை கட்டி எழுப்பறோம்னு வைங்க அதுக்குனு  ஒரு லோகோ ஒருக்கனும் . லோகோவை சுத்தி ஒரு ஸ்லோகன் வரனம்ல அதான் இது. "ஹார்டி பாடி,விண்டி மைண்ட்,ஹோலி சோல்."

Sunday, May 9, 2010

மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி

" ஹும் நேத்து எனக்கு  சிவராத்திரி" , "அய்யய்யோ! அப்ப இன்னைக்கு உனக்கு  வைகுந்த ஏகாதசினு சொல்லு"  ஏனோ தூங்காத இரவுகளை  இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.  நோயாளி கூட "நேத்து தாம்பா அதுவும் விடியற்காலம் தான் அப்படி கண் அசந்தது. ஆனா நல்ல தூக்கம்"  என்கிறார். அசந்தது கண்ணா மனசா?

மனிதர்கள் ஏன் தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். தூக்கம் என்பது முதல் இரண்டு மணி நேரம் தான் படுக்கையில் வீழ்த்தப்பார்க்கிறது. அதற்கு பின் "எப்படினா ஒழி" என்று விட்டு விடுகிறது. 

தூக்கத்திற்கு மனிதர்கள் இத்தனை முக்கியத்துவம் தருவது அது தரும் ஓய்வுக்காகவா ? புத்துணர்ச்சிக்காகவா? இல்லை விழிப்பிலிருந்து தப்பி கனவுலகில் சஞ்சரிக்கவா ?

மனிதர்களுக்கு யதார்த்தத்தின் மீது ஏன்  இத்தனை கசப்பு. அதை சிக்கலாக்கியது தம் விழிப்பே என்ற உள்ளுணர்வால் தான்  விழிப்பிலிருந்து விலகவே தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்களா?

ஒரு இரவு தூங்காவிட்டால் மறு நாள் பகல் 12 க்கெல்லாம் கண் முன்னே சிலந்தி கூடு கணக்காய்  கோடுகள் விழுகின்றன. கண்கள் எரிகின்றன. கண்கள் பஞ்சடைத்து, கன்னம் ஒட்டிப்போய் சில சமயம் உதறலே வந்துவிடுகிறது. மதியம்   கர்ட் ரைஸ் அடிச்சுட்டு குடு குப் என்று படுக்கச்சொல்கிறது. உயிர் கடிகாரம் டிஸ்டர்ப் ஆகி மறு நாள் இரவும் தூக்கம் வர மறுக்கிறது.

ஏறக்குறைய உடலுழைப்பே இல்லாத போதும் டாண் என்று தூக்கம் வருவது எப்படி புரியவில்லை. கொலுத்து வேலை செய்பவர்கள் காலை 5.30 அ 6 க்கெல்லாம்  சவுக்கில் வந்து கூடி விடுகிறார்கள். மாலை 6 வரை உடலால் உழைத்தும் ஊட்ட போய் சேரலாம் என்று நினைக்காது மீண்டும் அதே சவுக்கில் கூடுகிறார்கள்.ஏன் புரியவில்லை.

ஹ்யூமன் மைண்டை சைக்காலஜி நீள வராந்தாவில்  மூன்று அறைகள் கொண்ட வீடாக கூறுகிறது. மனித ப்ரக்ஞை முதல் அறையிலிருந்து தான் உலக விவகாரங்களை கவனிக்கிறது .

" என்ன மனைவிக்கு அபார்ஷனா? ஜி.ஹெச் போக  நூறு ரூபா வேணுமா நாய்க்கு ஷாம்பூ வாங்கன்னு ஒரே ஒரு நூத்துபத்து ரூபா வச்சிருக்கேம்பா.. ஏன் உன் அண்ணன் தரமாட்டானா?"

ப்ரக்ஞை தூக்கத்துக்கு  நழுவும்போது பிரசவ அறையில் மனைவி இருக்க நடைபோடும் கணவனை போல்  அது மூன்றாம் அறைக்கும், இரண்டாம் அறைக்கும் நடமாடுகிறது..

விழிப்பில் மனித உடலின் ஆயிரக்கணக்கான செல்கள் தேய்ந்தும் இறந்தும் விடுகின்றனவாம். தூக்கத்தில் தான் அவை ரிப்பேர் பார்க்கப்படுகின்றனவாம். புதிய செல்கள் பிறக்கின்றனவாம். குழந்தை கூட பிறந்த புதிதில் தூங்கிக்கொண்டே தான் இருக்கிறது.

மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி பேசிக்கொண்டிருந்தாலோ (கோடையில் மொட்டை மாடி ஸ்ரேஷ்டம். குறைந்த பட்சம்  மனதை பேசும் ஃபிக்ஷனோ நான் ஃபிக்ஷனோ இருந்தாலும் ஓகே. சரிய்யான முடிச்சு மாட்டி எழுத ஆரம்பிச்சுட்டாலும் ஓகே. 1986 ல் ஒரு நாள் இரவு 9 மணி முதல் விடியல் 6 வரை எழுதிக்கொண்டே இருந்தேன். இடையிடையே  ஒரு செம்பு தண்ணீர் ,ஒரு பீடி, ஒன் பாத்ரூம் .

ஒன்றை கவனித்திருக்கிறீர்களா இரவுகளில் 9 முதல் 12 வரை போனதே தெரியாது. அதற்கு மேல் 3 மணி வரை நேரம் சண்டித்தனம் செய்யும். அதை தாண்டி விட்டால் வலசம்மா கணக்காய் ஓடியே போய்விடுகிறது.

கடைசி பஸ்ஸை கோட்டை விட்டு பஸ்ஸ்டாண்டில் மாட்டுவதும் ( கணக்கற்ற முறை  சித்தூர் திருப்பதி சாலையில் நேண்ட்ர குண்டா கிராஸில் இப்படி சிக்கியிருக்கிறேன்  அப்போது பாகாலாவில் வாசம்) நெருக்கமற்ற உறவினர் வீடு / நண்பர்கள் அறையில் தூங்குவதாய் நடிப்பதுமே நரகம்.

ஒரு முறை கும்மிடி பூண்டியில் செக்யூரிட்டி சார்ஜெண்டாய் வேலை பார்த்த சமயம் 3 தினம் தொடர்ந்து 3 ட்யூட்டி பார்த்திருக்கிறேன். வெறுமனே விழித்திருப்பதே ரத்தத்தை கொதிக்க செய்துவிடுகிறது. மூளை ஹை ஸ்பீடில் வைக்கப்பட்டுவிட்ட லோக்கல் ஃபேன் மாதிரி முரண்டு பிடித்து சத்தம் போட ஆரம்பித்துவிடுகிறது.  சிந்தனை தறி கெட்டு ஓட ஆரம்பித்து ஓடும். வர்ஜியா வர்ஜியமின்றி சிந்தனைகள் ரேஸ் குதிரைகளாய் சிதறி ஓட  அதை கவனிப்பதே ஒரு தியானமாகிவிடுவதை உணர்ந்திருக்கிறேன்.  அதுவும் சில நிமிடங்கள் தான்.  தூங்க முயற்சிப்பதும், தூக்கம் பிடிக்காத நிலையில் தூங்குபவர்களை கண்டு/ நினைத்து  எரிச்சலுறுவதும் , சட் இதென்ன சேடிசம் என்று கட்டுப்படுத்திக்கொள்வதும் செய்ய வேலையும் இல்லாது இருந்தாலும் செய்யும் அவகாசமிராது  உண்மையிலேயே அது  ஒரு நரகம்.


இது மாதிரி சந்தர்ப்பங்களில் நுரையீரல் வேகமாக வேலை செய்யுமோ என்னமோ செயின் ஸ்மோக்கர் அல்லாத நானே கட்டு பீடியை தீர்த்திருக்கிறேன். இதில் கையில் காசு இருந்தால் சர்ச் ரோடில் சேட்டுகளும், செட்டியார்களும் கடை போடும் சமயம் தள்ளி விட்டு சென்ற அட்டைபெட்டிகளையும், கம்பெனி டிஸ்ப்ளேசையும் அடுக்கி வைத்துள்ள டாட்டா சால்ட் பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகளையும் பார்த்தபடி சென்று டீ சாப்பிட்டு பிரகாசம் சாலையில் சென்னை  செல்லும் முதல் பஸ்ஸுக்காக உள்ளூர் காரர்களும், என்னென்னவோ காரணங்களால்   லாரிகளை பிடிக்க காத்திருக்கும் வெளியூர்காரர்களையும் பார்த்தபடி வருகையில் தோன்றும் தாளி இங்கன காவாக்கரை மேல நிச்சிந்தையா தூங்கறான்.  நமக்கு ஏன் வரமாட்டேங்குது.

நாம ராத்தூக்கம் இல்லாம  நாறி நலிஞ்சு  காலை 9 அ 10 மணிக்கு  குயோன்னு பஜாருக்குள்ள போறச்ச அவனவன் நிம்மதியா தூங்கிட்டு ரொட்டீன் லைஃப்ல இருக்கிறதை பார்க்கும்போது இந்த ரொட்டீன் லைஃபுக்காகத்தான் சனம் பொசக்கெட்ட பொழப்பை பொழைக்க்தோன்னும் தோணும்.

 ஹீரோஷிமா நாகசாகி மீது அணு குண்டை வெடித்த அன்று இரவு நான் நன்றாக தூங்கினேன் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி சொன்னாராம்.ஏறுமுகத்துல இருக்கிறச்சயாவது இந்த மாதிரி ராவுகளை சமாளிச்சுரலாம். இறங்கு முகத்துலயோ  டெட் லாக்லயோ இருக்கிறச்ச தூக்கம் கெட்டுதுன்னா போச்.

நம்ம நாட்ல வேற கொஞ்சம் முக்கி யோசிச்சாலே போதும்பா மூள கீள கலங்கிரப்போவுதுங்கற சனம் சாஸ்தி. அதுலயும் நமக்குள்ள இருக்கிற முரண்பாடுகள், வாழ்க்கைல கண்ட ஏற்ற இறக்கத்துக்கெல்லாம் தர்கமும் கிடையாது. உச்ச வரம்பும் கிடையாதா.. படக்குனு பயம் பிறக்கும் . மூளை கலங்கிருமோன்னு.

மூளை கலங்கறது.. பைத்தியம் பிடிக்கிறதுங்கறாங்களே அப்படின்னா என்னனு யோசிக்க ஆரம்பிக்கும்.  ஒரு ராத்திரி ஒரே ஒரு ராத்திரி நம்ம ஒப்பனைகள், இரட்டை வேடங்களையெல்லாம் தசராவுக்கு  பெயிண்ட் அடிக்கப்போற சேட் கடை சாமான் மாதிரி வெளியவந்து விழுந்துருது. ஒரு வேளை இதுக்கு பயந்துதான் சனம்
தூங்கி போயிருதா?

தூங்கா நகரம், தூங்கா விளக்கு, தூங்காத விழிகள்னு படிக்கிறச்ச லிட்டரரியா தோணுதே தவிர தூங்காத இரவுல  மட்டும் இலக்கிய ரசனைக்கு மட்டுமில்லை இடியாப்ப ரசனைக்கு கூட இடம்  கிடையவே கிடையாது.

ஜஸ்ட் ஒரு இரவு தூங்காம போனாலே இந்த பாடு. நமக்குள்ளே ஏதோ ஒன்னு துக்ளக்  சோ மாதிரி  முட்டை கண்ணை போட்டுக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்குங்கறாங்களே .. பாவம் அது.

நல்ல தூக்கத்துக்காகவாவது கொஞ்சமேனும் ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டுதான் ஆகனும். இல்லாட்டி  மனசுங்கற குடைக்குள்ள  மழை மட்டும் பெய்யாது புயலும் அடிச்சுரும்.

மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி

" ஹும் நேத்து எனக்கு  சிவராத்திரி" , "அய்யய்யோ! அப்ப இன்னைக்கு உனக்கு  வைகுந்த ஏகாதசினு சொல்லு"  ஏனோ தூங்காத இரவுகளை  இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.  நோயாளி கூட "நேத்து தாம்பா அதுவும் விடியற்காலம் தான் அப்படி கண் அசந்தது. ஆனா நல்ல தூக்கம்"  என்கிறார். அசந்தது கண்ணா மனசா?

மனிதர்கள் ஏன் தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். தூக்கம் என்பது முதல் இரண்டு மணி நேரம் தான் படுக்கையில் வீழ்த்தப்பார்க்கிறது. அதற்கு பின் "எப்படினா ஒழி" என்று விட்டு விடுகிறது. 

தூக்கத்திற்கு மனிதர்கள் இத்தனை முக்கியத்துவம் தருவது அது தரும் ஓய்வுக்காகவா ? புத்துணர்ச்சிக்காகவா? இல்லை விழிப்பிலிருந்து தப்பி கனவுலகில் சஞ்சரிக்கவா ?

மனிதர்களுக்கு யதார்த்தத்தின் மீது ஏன்  இத்தனை கசப்பு. அதை சிக்கலாக்கியது தம் விழிப்பே என்ற உள்ளுணர்வால் தான்  விழிப்பிலிருந்து விலகவே தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்களா?

ஒரு இரவு தூங்காவிட்டால் மறு நாள் பகல் 12 க்கெல்லாம் கண் முன்னே சிலந்தி கூடு கணக்காய்  கோடுகள் விழுகின்றன. கண்கள் எரிகின்றன. கண்கள் பஞ்சடைத்து, கன்னம் ஒட்டிப்போய் சில சமயம் உதறலே வந்துவிடுகிறது. மதியம்   கர்ட் ரைஸ் அடிச்சுட்டு குடு குப் என்று படுக்கச்சொல்கிறது. உயிர் கடிகாரம் டிஸ்டர்ப் ஆகி மறு நாள் இரவும் தூக்கம் வர மறுக்கிறது.

ஏறக்குறைய உடலுழைப்பே இல்லாத போதும் டாண் என்று தூக்கம் வருவது எப்படி புரியவில்லை. கொலுத்து வேலை செய்பவர்கள் காலை 5.30 அ 6 க்கெல்லாம்  சவுக்கில் வந்து கூடி விடுகிறார்கள். மாலை 6 வரை உடலால் உழைத்தும் ஊட்ட போய் சேரலாம் என்று நினைக்காது மீண்டும் அதே சவுக்கில் கூடுகிறார்கள்.ஏன் புரியவில்லை.

ஹ்யூமன் மைண்டை சைக்காலஜி நீள வராந்தாவில்  மூன்று அறைகள் கொண்ட வீடாக கூறுகிறது. மனித ப்ரக்ஞை முதல் அறையிலிருந்து தான் உலக விவகாரங்களை கவனிக்கிறது .

" என்ன மனைவிக்கு அபார்ஷனா? ஜி.ஹெச் போக  நூறு ரூபா வேணுமா நாய்க்கு ஷாம்பூ வாங்கன்னு ஒரே ஒரு நூத்துபத்து ரூபா வச்சிருக்கேம்பா.. ஏன் உன் அண்ணன் தரமாட்டானா?"

ப்ரக்ஞை தூக்கத்துக்கு  நழுவும்போது பிரசவ அறையில் மனைவி இருக்க நடைபோடும் கணவனை போல்  அது மூன்றாம் அறைக்கும், இரண்டாம் அறைக்கும் நடமாடுகிறது..

விழிப்பில் மனித உடலின் ஆயிரக்கணக்கான செல்கள் தேய்ந்தும் இறந்தும் விடுகின்றனவாம். தூக்கத்தில் தான் அவை ரிப்பேர் பார்க்கப்படுகின்றனவாம். புதிய செல்கள் பிறக்கின்றனவாம். குழந்தை கூட பிறந்த புதிதில் தூங்கிக்கொண்டே தான் இருக்கிறது.

மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி பேசிக்கொண்டிருந்தாலோ (கோடையில் மொட்டை மாடி ஸ்ரேஷ்டம். குறைந்த பட்சம்  மனதை பேசும் ஃபிக்ஷனோ நான் ஃபிக்ஷனோ இருந்தாலும் ஓகே. சரிய்யான முடிச்சு மாட்டி எழுத ஆரம்பிச்சுட்டாலும் ஓகே. 1986 ல் ஒரு நாள் இரவு 9 மணி முதல் விடியல் 6 வரை எழுதிக்கொண்டே இருந்தேன். இடையிடையே  ஒரு செம்பு தண்ணீர் ,ஒரு பீடி, ஒன் பாத்ரூம் .

ஒன்றை கவனித்திருக்கிறீர்களா இரவுகளில் 9 முதல் 12 வரை போனதே தெரியாது. அதற்கு மேல் 3 மணி வரை நேரம் சண்டித்தனம் செய்யும். அதை தாண்டி விட்டால் வலசம்மா கணக்காய் ஓடியே போய்விடுகிறது.

கடைசி பஸ்ஸை கோட்டை விட்டு பஸ்ஸ்டாண்டில் மாட்டுவதும் ( கணக்கற்ற முறை  சித்தூர் திருப்பதி சாலையில் நேண்ட்ர குண்டா கிராஸில் இப்படி சிக்கியிருக்கிறேன்  அப்போது பாகாலாவில் வாசம்) நெருக்கமற்ற உறவினர் வீடு / நண்பர்கள் அறையில் தூங்குவதாய் நடிப்பதுமே நரகம்.

ஒரு முறை கும்மிடி பூண்டியில் செக்யூரிட்டி சார்ஜெண்டாய் வேலை பார்த்த சமயம் 3 தினம் தொடர்ந்து 3 ட்யூட்டி பார்த்திருக்கிறேன். வெறுமனே விழித்திருப்பதே ரத்தத்தை கொதிக்க செய்துவிடுகிறது. மூளை ஹை ஸ்பீடில் வைக்கப்பட்டுவிட்ட லோக்கல் ஃபேன் மாதிரி முரண்டு பிடித்து சத்தம் போட ஆரம்பித்துவிடுகிறது.  சிந்தனை தறி கெட்டு ஓட ஆரம்பித்து ஓடும். வர்ஜியா வர்ஜியமின்றி சிந்தனைகள் ரேஸ் குதிரைகளாய் சிதறி ஓட  அதை கவனிப்பதே ஒரு தியானமாகிவிடுவதை உணர்ந்திருக்கிறேன்.  அதுவும் சில நிமிடங்கள் தான்.  தூங்க முயற்சிப்பதும், தூக்கம் பிடிக்காத நிலையில் தூங்குபவர்களை கண்டு/ நினைத்து  எரிச்சலுறுவதும் , சட் இதென்ன சேடிசம் என்று கட்டுப்படுத்திக்கொள்வதும் செய்ய வேலையும் இல்லாது இருந்தாலும் செய்யும் அவகாசமிராது  உண்மையிலேயே அது  ஒரு நரகம்.


இது மாதிரி சந்தர்ப்பங்களில் நுரையீரல் வேகமாக வேலை செய்யுமோ என்னமோ செயின் ஸ்மோக்கர் அல்லாத நானே கட்டு பீடியை தீர்த்திருக்கிறேன். இதில் கையில் காசு இருந்தால் சர்ச் ரோடில் சேட்டுகளும், செட்டியார்களும் கடை போடும் சமயம் தள்ளி விட்டு சென்ற அட்டைபெட்டிகளையும், கம்பெனி டிஸ்ப்ளேசையும் அடுக்கி வைத்துள்ள டாட்டா சால்ட் பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகளையும் பார்த்தபடி சென்று டீ சாப்பிட்டு பிரகாசம் சாலையில் சென்னை  செல்லும் முதல் பஸ்ஸுக்காக உள்ளூர் காரர்களும், என்னென்னவோ காரணங்களால்   லாரிகளை பிடிக்க காத்திருக்கும் வெளியூர்காரர்களையும் பார்த்தபடி வருகையில் தோன்றும் தாளி இங்கன காவாக்கரை மேல நிச்சிந்தையா தூங்கறான்.  நமக்கு ஏன் வரமாட்டேங்குது.

நாம ராத்தூக்கம் இல்லாம  நாறி நலிஞ்சு  காலை 9 அ 10 மணிக்கு  குயோன்னு பஜாருக்குள்ள போறச்ச அவனவன் நிம்மதியா தூங்கிட்டு ரொட்டீன் லைஃப்ல இருக்கிறதை பார்க்கும்போது இந்த ரொட்டீன் லைஃபுக்காகத்தான் சனம் பொசக்கெட்ட பொழப்பை பொழைக்க்தோன்னும் தோணும்.

 ஹீரோஷிமா நாகசாகி மீது அணு குண்டை வெடித்த அன்று இரவு நான் நன்றாக தூங்கினேன் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி சொன்னாராம்.ஏறுமுகத்துல இருக்கிறச்சயாவது இந்த மாதிரி ராவுகளை சமாளிச்சுரலாம். இறங்கு முகத்துலயோ  டெட் லாக்லயோ இருக்கிறச்ச தூக்கம் கெட்டுதுன்னா போச்.

நம்ம நாட்ல வேற கொஞ்சம் முக்கி யோசிச்சாலே போதும்பா மூள கீள கலங்கிரப்போவுதுங்கற சனம் சாஸ்தி. அதுலயும் நமக்குள்ள இருக்கிற முரண்பாடுகள், வாழ்க்கைல கண்ட ஏற்ற இறக்கத்துக்கெல்லாம் தர்கமும் கிடையாது. உச்ச வரம்பும் கிடையாதா.. படக்குனு பயம் பிறக்கும் . மூளை கலங்கிருமோன்னு.

மூளை கலங்கறது.. பைத்தியம் பிடிக்கிறதுங்கறாங்களே அப்படின்னா என்னனு யோசிக்க ஆரம்பிக்கும்.  ஒரு ராத்திரி ஒரே ஒரு ராத்திரி நம்ம ஒப்பனைகள், இரட்டை வேடங்களையெல்லாம் தசராவுக்கு  பெயிண்ட் அடிக்கப்போற சேட் கடை சாமான் மாதிரி வெளியவந்து விழுந்துருது. ஒரு வேளை இதுக்கு பயந்துதான் சனம்
தூங்கி போயிருதா?

தூங்கா நகரம், தூங்கா விளக்கு, தூங்காத விழிகள்னு படிக்கிறச்ச லிட்டரரியா தோணுதே தவிர தூங்காத இரவுல  மட்டும் இலக்கிய ரசனைக்கு மட்டுமில்லை இடியாப்ப ரசனைக்கு கூட இடம்  கிடையவே கிடையாது.

ஜஸ்ட் ஒரு இரவு தூங்காம போனாலே இந்த பாடு. நமக்குள்ளே ஏதோ ஒன்னு துக்ளக்  சோ மாதிரி  முட்டை கண்ணை போட்டுக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்குங்கறாங்களே .. பாவம் அது.

நல்ல தூக்கத்துக்காகவாவது கொஞ்சமேனும் ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டுதான் ஆகனும். இல்லாட்டி  மனசுங்கற குடைக்குள்ள  மழை மட்டும் பெய்யாது புயலும் அடிச்சுரும்.

Wednesday, April 21, 2010

ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?

போலி மருந்துகள்,காலாவதியான மருந்துகள்னு நிறைய பேசறாங்க .. நிறைய எழுதறாங்க. ஆனால் ஒரிஜினல்னு சொல்லப்படற மருந்தே, காலாவதியாகாத மருந்தே மருந்தா விஷமா?னு எனக்கு சந்தேகம் இருக்கு.

அல்லோபதி ,ஹோமியோபதி,சித்தா , தமிழ் வைத்தியம், மலையாள வைத்தியம் எத்தனை எத்தனை வைத்தியம் இருக்கு தெரியுமா? இத்தனை வைத்தியம் இருந்தும் நோய்கள் கூடிட்டே போகுதே தவிர குறையற மாதிரியில்லே,

அல்லோபதி,ஹோமியோபதி,சித்தா, நேச்சுரோபதி இதையெல்லாம்  எல்லாம் நாம் கேள்வி கூட கேட்க முடியாது. ஏன்னா இதுக்கெல்லாம்  அரசால அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கு,படிப்புகள் இருக்கு, தரக்கட்டுப்பாடு இருக்கு.

இருந்தாலும் என்ன ? துணிஞ்சவனுக்கு துக்கமில்லே. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஜஸ்ட் லாஜிக்.  இயற்கைய ,அதன் போக்கை ஓரளவு உன்னிப்பா கவனிப்பேன். அனுபவம் எதிர்ப்பட்டப்ப அதை மறக்க மாட்டேன்.

நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனுஷனுக்கு ஒரு சொல். ஒரு  நோய் தடவை தான் வரனும். அது ஏன் தானா வரப்பொவுது நாமதான் தெரியாத்தனமா இன்வைட் ண்ணியிருக்கனும். இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு  நோயை வெத்தலை பாக்கு வச்சி கூப்டாம இருந்தாலே போதும்.  நோய் நாடி நோய் முதல் நாடினு சொல்வாங்க. என்னா நோய்னு மட்டும் பார்த்தா போதாது. அதுக்கு முதல் என்னா? அதாங்க காரணம் .. என்னானு பார்த்து அதை அவாய்ட் பண்ணாலே போதும்.

ஒரே நோய்  மறுபடி வந்தா என்ன அர்த்தம் போன தபா அது வந்தப்போ நாம அதுக்கு நல்ல தீனி போட்டோம்னு அர்த்தம் அவ்ளதான்.

 "வரும் முன் காத்தல்" தான் நம்ம பாலிசி.வந்துட்டா முடிஞ்ச வரை ஃபேஸ் பண்றது. முடியலியா .. எத்தனை சந்தேகம் இருந்தாலும் எல்லாத்தயும் தூக்கி தூர போட்டுட்டு டாக்டர் கிட்டே போய் சரண்டர் ஆஃப் இண்டியா.

ஆனால் கடவுள் புண்ணியத்துல பெரிசா ஏதும் பிரச்சினை வந்தது கிடையாது. வந்ததெல்லாம் சின்னவயசுல கொப்பளம், சிரங்கு, ஒரு தரம் அம்மை, ஒரு தரம் உப்பு அதிகமாகி மூச்சா வராம போனது, ஒரு தாட்டி டைஃபாயிட் தட்ஸால்.

மேலுக்கு என்னதான் கான்ஃபிடண்டா பேசினாலும் உள்ளாற கொஞ்சம் உதறல் பார்ட்டிதான். உதறல்னா பயம்னு இல்லே. தாளி இன்னைக்கு செத்தா பத்து நாள் காரியம். இதுக்கு முன்னாடியாவது "அய்யய்யோ .. நம்ம மூளைல மஸ்தா சப்ஜெக்ட் சேர்த்து வச்சிருக்கமே எல்லாம் வீணா போயிருமேனு ஒரு பயம் இருந்தது. கால ஓட்டத்துல அதெல்லாம் இன்னைக்கு நேத்திக்கு வந்தும் கிடையாது, நாளைக்கு நாளன்னைக்கு போயிரப்போறதும் கிடையாது. இந்த ஜன்மத்துல எப்படி எல்லாத்தயும் ஃபைல் ரெக்கவரி மாதிரி ரிக்கவர் பண்ணிக்கிட்டமோ அப்படியே அடுத்த ஜென்மத்துலயும் ரிகவரி ஆயிட்டு போவுது விடுனு ஒரு தைரியம். பை தி பை இன்டர் நெட் உபயத்துல என் எழுத்துக்கள் எல்லாம் சிரஞ்சீவத்வம் அடைஞ்சாச்சு. என்னைக்கோ ஒரு நாள் என் எழுத்தெல்லாம் வேதமாகும். ஒட்டு மொத்தமா மனித குலமே கொண்டாடுங்கற நம்பிக்கை உண்டு. என் உதறல் பயமல்ல. எனக்குள்ள ஒரு சூப்பர் ஈகோ உண்டு. எனக்கா நோயா ஹ.. நடக்க கூடியதா சொல்லுப்பாங்கற மாதிரி.

இந்த சில்லறை உபாதைகள் வரும்போது ரொம்பவே அலர்ட் ஆயிருவன். ஏன் எதுக்கு எப்படினு மண்டைய போட்டு ஊறுகாய் பாட்டில் மாதிரி  உலுக்கி கிழங்கை தோண்டி எடுக்கிறாப்ல விஷயத்தை எடுத்துருவன். அந்த நோய் எனக்கு வந்ததற்கான காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணி தடா போட்டுருவன். இது என் ஸ்டைல்.

இப்படித்தான் 1993 ல எனக்கு திடீர்னு ஆஸ்மா,ப்ராங்கடைஸ், வீசிங் எல்லாமே மாட்டிக்கிச்சு. காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணேன். அவாய்ட் பண்ணேன். இதோ 17 வருஷம் ஆகுது நோ வீசிங்.

ஆனால் எல்லாராலயும் இப்படி இருக்க முடியாதில்லயா?  நோய் வந்துதான் தீரும். மறுபடி மறுபடி வரும். என்ன செய்ய? டாக்டர் கிட்டே போய்தான் ஆகனும்.

உலகத்துல கச்சா முச்சானு எத்தனையோ நோய்கள் இருக்கு. இதுக்கெல்லாம் ஜெனட்டிக் காஸஸ், என்விரான்மென்ட்டல் காஸஸ், சைக்கலாஜிக்கல் காஸஸ், சோஷியல் காஸஸ், எக்கனாமிக்கல் காஸஸ்னு  நிறைய காஸஸ் இருக்கு.

ஆனால்  நோய்ங்கறது எப்பவுமே நமக்கு நண்பன் தான். காரணம்  என்ன தெரியுமா?
நோய்ங்கறது ஒரு அறிவிப்பு. ராஜா கைய வைக்கலே ஏதோ ராங்கா பூட்சுபாங்கற அறிவிப்பு.

அலாரம் மாதிரி. பேங்க்ல அலாரம் அடிச்சா பேங்க் மேனேஜர் உடனே போலீசுக்கும், ஃபயர் ஸ்டேஷனுக்கும் போன் பண்றாரா அலாரத்தை நிறுத்தறாரா?

போன் பண்றார். ஆனால் உடம்பு விஷயத்துல நாம என்ன பண்றோம் அலாரத்தை நிறுத்தறோம். இது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்?

உதாரணத்துக்கு திடீர்னு வயித்தால போவுதுனு வைங்க. இது ஒரு அலாரம். என்னமோ ராங்கா பூட்சி. அத என்னா ஏதுனு ஆராய்ச்சி பண்ணாம உடனே டாக்டர்கிட்டே ஓடறோம். வடிவேலு ஏதோ சினிமால தார் உருண்டைய சாப்ட மாதிரி டாக்டர் ஏதோ மாத்திரை கொடுக்கிறாரு. சாப்டு கார்க் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்து வாயே செத்து போச்சுனு சொல்லி ஊறுகாயை போட்டு பிசைஞ்சி சோத்தை ஒரு கட்டு கட்டறோம்.

வயித்தால போனா கொஞ்சம் டென்சனாவறது சகஜம் தான். ஹ்யூமன் பாடில 70% வாட்டர் கன்டென்ட் தான் . அது வேகமா குறைய ஆரம்பிச்சா கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுரும். நியாயம் தா. ஆனால் வயித்தால போவுதே அதுல என்ன ரத்த மாமிசமா போயிருச்சு. இல்லியே மஷ்டுதான் போவுது. என்ன கூடவே நீர்சத்தும், சில தாது உப்புகளும் போயிருது சுஸ்தாயிர்ரம். நிறைய சர்க்கரையும், கொஞ்சமா உப்பும்  வென்னீர்ல  கலந்து குடிச்சா எல்லாமே ஓரளவு பேலன்ஸ் ஆயிரும். அட இன்னும் சுஸ்தாயிருந்தா எலக்ட் ரால் பவுடர் கலந்து குடிங்க.

(தொடரும்)

வாசகர் கேள்வி:
அடுத்த ஜன்மத்துலயா?

ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?

போலி மருந்துகள்,காலாவதியான மருந்துகள்னு நிறைய பேசறாங்க .. நிறைய எழுதறாங்க. ஆனால் ஒரிஜினல்னு சொல்லப்படற மருந்தே, காலாவதியாகாத மருந்தே மருந்தா விஷமா?னு எனக்கு சந்தேகம் இருக்கு.

அல்லோபதி ,ஹோமியோபதி,சித்தா , தமிழ் வைத்தியம், மலையாள வைத்தியம் எத்தனை எத்தனை வைத்தியம் இருக்கு தெரியுமா? இத்தனை வைத்தியம் இருந்தும் நோய்கள் கூடிட்டே போகுதே தவிர குறையற மாதிரியில்லே,

அல்லோபதி,ஹோமியோபதி,சித்தா, நேச்சுரோபதி இதையெல்லாம்  எல்லாம் நாம் கேள்வி கூட கேட்க முடியாது. ஏன்னா இதுக்கெல்லாம்  அரசால அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கு,படிப்புகள் இருக்கு, தரக்கட்டுப்பாடு இருக்கு.

இருந்தாலும் என்ன ? துணிஞ்சவனுக்கு துக்கமில்லே. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஜஸ்ட் லாஜிக்.  இயற்கைய ,அதன் போக்கை ஓரளவு உன்னிப்பா கவனிப்பேன். அனுபவம் எதிர்ப்பட்டப்ப அதை மறக்க மாட்டேன்.

நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனுஷனுக்கு ஒரு சொல். ஒரு  நோய் தடவை தான் வரனும். அது ஏன் தானா வரப்பொவுது நாமதான் தெரியாத்தனமா இன்வைட் ண்ணியிருக்கனும். இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு  நோயை வெத்தலை பாக்கு வச்சி கூப்டாம இருந்தாலே போதும்.  நோய் நாடி நோய் முதல் நாடினு சொல்வாங்க. என்னா நோய்னு மட்டும் பார்த்தா போதாது. அதுக்கு முதல் என்னா? அதாங்க காரணம் .. என்னானு பார்த்து அதை அவாய்ட் பண்ணாலே போதும்.

ஒரே நோய்  மறுபடி வந்தா என்ன அர்த்தம் போன தபா அது வந்தப்போ நாம அதுக்கு நல்ல தீனி போட்டோம்னு அர்த்தம் அவ்ளதான்.

 "வரும் முன் காத்தல்" தான் நம்ம பாலிசி.வந்துட்டா முடிஞ்ச வரை ஃபேஸ் பண்றது. முடியலியா .. எத்தனை சந்தேகம் இருந்தாலும் எல்லாத்தயும் தூக்கி தூர போட்டுட்டு டாக்டர் கிட்டே போய் சரண்டர் ஆஃப் இண்டியா.

ஆனால் கடவுள் புண்ணியத்துல பெரிசா ஏதும் பிரச்சினை வந்தது கிடையாது. வந்ததெல்லாம் சின்னவயசுல கொப்பளம், சிரங்கு, ஒரு தரம் அம்மை, ஒரு தரம் உப்பு அதிகமாகி மூச்சா வராம போனது, ஒரு தாட்டி டைஃபாயிட் தட்ஸால்.

மேலுக்கு என்னதான் கான்ஃபிடண்டா பேசினாலும் உள்ளாற கொஞ்சம் உதறல் பார்ட்டிதான். உதறல்னா பயம்னு இல்லே. தாளி இன்னைக்கு செத்தா பத்து நாள் காரியம். இதுக்கு முன்னாடியாவது "அய்யய்யோ .. நம்ம மூளைல மஸ்தா சப்ஜெக்ட் சேர்த்து வச்சிருக்கமே எல்லாம் வீணா போயிருமேனு ஒரு பயம் இருந்தது. கால ஓட்டத்துல அதெல்லாம் இன்னைக்கு நேத்திக்கு வந்தும் கிடையாது, நாளைக்கு நாளன்னைக்கு போயிரப்போறதும் கிடையாது. இந்த ஜன்மத்துல எப்படி எல்லாத்தயும் ஃபைல் ரெக்கவரி மாதிரி ரிக்கவர் பண்ணிக்கிட்டமோ அப்படியே அடுத்த ஜென்மத்துலயும் ரிகவரி ஆயிட்டு போவுது விடுனு ஒரு தைரியம். பை தி பை இன்டர் நெட் உபயத்துல என் எழுத்துக்கள் எல்லாம் சிரஞ்சீவத்வம் அடைஞ்சாச்சு. என்னைக்கோ ஒரு நாள் என் எழுத்தெல்லாம் வேதமாகும். ஒட்டு மொத்தமா மனித குலமே கொண்டாடுங்கற நம்பிக்கை உண்டு. என் உதறல் பயமல்ல. எனக்குள்ள ஒரு சூப்பர் ஈகோ உண்டு. எனக்கா நோயா ஹ.. நடக்க கூடியதா சொல்லுப்பாங்கற மாதிரி.

இந்த சில்லறை உபாதைகள் வரும்போது ரொம்பவே அலர்ட் ஆயிருவன். ஏன் எதுக்கு எப்படினு மண்டைய போட்டு ஊறுகாய் பாட்டில் மாதிரி  உலுக்கி கிழங்கை தோண்டி எடுக்கிறாப்ல விஷயத்தை எடுத்துருவன். அந்த நோய் எனக்கு வந்ததற்கான காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணி தடா போட்டுருவன். இது என் ஸ்டைல்.

இப்படித்தான் 1993 ல எனக்கு திடீர்னு ஆஸ்மா,ப்ராங்கடைஸ், வீசிங் எல்லாமே மாட்டிக்கிச்சு. காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணேன். அவாய்ட் பண்ணேன். இதோ 17 வருஷம் ஆகுது நோ வீசிங்.

ஆனால் எல்லாராலயும் இப்படி இருக்க முடியாதில்லயா?  நோய் வந்துதான் தீரும். மறுபடி மறுபடி வரும். என்ன செய்ய? டாக்டர் கிட்டே போய்தான் ஆகனும்.

உலகத்துல கச்சா முச்சானு எத்தனையோ நோய்கள் இருக்கு. இதுக்கெல்லாம் ஜெனட்டிக் காஸஸ், என்விரான்மென்ட்டல் காஸஸ், சைக்கலாஜிக்கல் காஸஸ், சோஷியல் காஸஸ், எக்கனாமிக்கல் காஸஸ்னு  நிறைய காஸஸ் இருக்கு.

ஆனால்  நோய்ங்கறது எப்பவுமே நமக்கு நண்பன் தான். காரணம்  என்ன தெரியுமா?
நோய்ங்கறது ஒரு அறிவிப்பு. ராஜா கைய வைக்கலே ஏதோ ராங்கா பூட்சுபாங்கற அறிவிப்பு.

அலாரம் மாதிரி. பேங்க்ல அலாரம் அடிச்சா பேங்க் மேனேஜர் உடனே போலீசுக்கும், ஃபயர் ஸ்டேஷனுக்கும் போன் பண்றாரா அலாரத்தை நிறுத்தறாரா?

போன் பண்றார். ஆனால் உடம்பு விஷயத்துல நாம என்ன பண்றோம் அலாரத்தை நிறுத்தறோம். இது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்?

உதாரணத்துக்கு திடீர்னு வயித்தால போவுதுனு வைங்க. இது ஒரு அலாரம். என்னமோ ராங்கா பூட்சி. அத என்னா ஏதுனு ஆராய்ச்சி பண்ணாம உடனே டாக்டர்கிட்டே ஓடறோம். வடிவேலு ஏதோ சினிமால தார் உருண்டைய சாப்ட மாதிரி டாக்டர் ஏதோ மாத்திரை கொடுக்கிறாரு. சாப்டு கார்க் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்து வாயே செத்து போச்சுனு சொல்லி ஊறுகாயை போட்டு பிசைஞ்சி சோத்தை ஒரு கட்டு கட்டறோம்.

வயித்தால போனா கொஞ்சம் டென்சனாவறது சகஜம் தான். ஹ்யூமன் பாடில 70% வாட்டர் கன்டென்ட் தான் . அது வேகமா குறைய ஆரம்பிச்சா கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுரும். நியாயம் தா. ஆனால் வயித்தால போவுதே அதுல என்ன ரத்த மாமிசமா போயிருச்சு. இல்லியே மஷ்டுதான் போவுது. என்ன கூடவே நீர்சத்தும், சில தாது உப்புகளும் போயிருது சுஸ்தாயிர்ரம். நிறைய சர்க்கரையும், கொஞ்சமா உப்பும்  வென்னீர்ல  கலந்து குடிச்சா எல்லாமே ஓரளவு பேலன்ஸ் ஆயிரும். அட இன்னும் சுஸ்தாயிருந்தா எலக்ட் ரால் பவுடர் கலந்து குடிங்க.

(தொடரும்)

வாசகர் கேள்வி:
அடுத்த ஜன்மத்துலயா?