Showing posts with label Tips for success. Show all posts
Showing posts with label Tips for success. Show all posts

Saturday, August 14, 2010

வெற்றி மீது வெற்றி

அண்ணே வணக்கம்ணே

இந்த வெற்றி மீது வெற்றி பதிவோடயே யார் அந்த தேவி ங்கற நேத்தைய பதிவை விரிவுபடுத்தி போட்டிருக்கேன். திரட்டி, இன்ட்லி மூலமா ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இங்கே அழுத்தி இன்னொரு தாட்டி ஸ்க்ரால் பண்ணிருங்க


ஐ.சில இருக்கிறச்ச (இன்டென்சிவ் கேர் இல்லிங்கண்ணா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்)வாத்தியாரோட கொள்கை பாடல்களை கேட்டா ஒரு சக்தியே பிறக்கும் தான் இல்லேங்கலை. ஆனால் என் சாய்ஸ் மட்டும் தோல்விதான்.



வெற்றி வந்த பிறவுதான் உண்மையான யுத்தம் ஆரம்பிக்குது.அதை ஏற்று எதிர்கொள்ளவோ மறுக்கவோ நமக்கு சுதந்திரம் இருக்காது. யுவார் கமிட்டட் அண்ட் கெம்ப்ல்ட் டு ஸ்ட்ரகிள். லைஃப் ஈஸ் டு லிவ். நாட் டு ஸ்ட்ரகிள். வாழ்க்கைல யுத்தமிருக்கலாம். வாழ்க்கையே யுத்தமாயிட்டா ? எனி ஹவ் வெற்றிக்கு பின்னாடி யுத்தம் ஆரம்பமானதும் கூடவே தோல்விபயம் துவங்குது. ஜெயிச்சே ஆகனும்ங்கற கட்டாயம் ஏற்பட்டுருது. எங்கே கட்டாயத்தன்மை இருக்கோ அங்கன காதல், கில்மா கூட நரகமாயிருது. சகஜமா இருக்கக்கூடிய திறமைகள் கூட ஜெயிச்சுட்ட எம்.எல்.ஏ தொகுதி பக்கம் தலைகாட்டாத கணக்கா இந்த பக்கம் தலைவச்சு படுக்கமாட்டேங்கும்.



ஆனால் தோல்விக்கு பிறவு யுத்தமா? இல்லையாங்கறதை நாம டிசைட் பண்ணிக்கற பொசிஷனுக்கு வந்துர்ரம். இந்த வகைல பார்த்தா தோல்வியே பெட்டர் சாய்ஸ். ஆனாலும் வெற்றி மேல மனிதனுக்கு ஏனிந்த கவர்ச்சி?



இருட்டு மரணத்தின் அறிகுறி - வெற்றி வெளிச்சத்தை தருது. உங்களை வெளிச்சம் போடுது. இருட்டு தனிமையை தருது -தனிமை மரணத்தின் அறிகுறி - வெற்றி பணங்காசை தருது - ஏழ்மை மரணத்தின் அறிகுறி. ஆக வெற்றிங்கறது வாழ்வு .தோல்விங்கறது சாவு. அதனாலதான் எல்லா பார்ட்டியும் வெற்றியே நோக்கமா கூட்டு வைக்குது. இருந்தாலும் தோத்துப்போக ஒரு ஆள் தேவையாச்சே/ எவனோ ஒருத்தன் தோத்துத்தானே ஆகனும்.



இந்த 43 வயசுக்கு வெற்றி தோல்விகளோட அர்த்தங்கள் தாத்பர்யங்களே மாறிருச்சு.

( ஆடிய ஆட்டம் என்ன? - பி.ஜி.எம்ல பாட்டு கேட்குதுங்கோ ).உங்க மனச பொருத்தவரை வெற்றிங்கறது கிரீடமா இருந்தா பரவாயில்லே. அதான் தலைன்னு நீங்க அலைஞ்சு பறை சாத்தினா தலைக்கு கிரீடம் வருதோ இல்லியோ தலை நிமிர்ந்து நடக்க முடியாது.



வெற்றி வெற்றினு இந்த மனசு அலைபாயுதே தாளி இந்த வெற்றியெல்லாம் புதுசா என்னத்த தந்துரப்போவுது?



உடலுறவின் போது கோடிக்கணக்கான உயிரணுக்கள் பீய்சியடிக்கப்படுது. இருக்கிறது ஒரே முட்டைக்கரு.அதை துளைச்சா உயிரா மாறலாம், இல்லைன்னா கழிவறைலயோ, குளியலறையிலயோ கழிக்கப்படுவோம். ஜீவமரண போராட்டம்னா அதுதான்.



அந்த உயிரணுவோட சைசுக்கு அது கடக்கவேண்டிய தூரம் ரெம்ப சாஸ்தி. அந்த ஜீவமரண போராட்டத்துலயே ஜெயிச்சு வந்தவுக நாம. இந்த ஜகன் நாடகத்துல நாம இல்லேன்னா இந்த நாடகம் ரசிக்காது,ருசிக்காதுன்னு அந்த இயற்கையே அந்த ஜகன் மாதாவே நம்மை ரெகக்னைஸ் பண்ணியாச்சு.



அப்பாறம் இந்த உலகத்துல நடக்கிற உதவாக்கரை போட்டிகள்ள நாம ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? ஒரு தாட்டி 1987ல ஃப்ரெண்ட்ஸ் ஏதோ கொட்டேஷனை வச்சு படிச்சிட்டிருந்தய்ங்க.// லைஃப் ஈஸ் எ பஜில் சால்வ் இட் // , //லைஃப் ஈஸ் எ வார் ஃபேஸ் இட் // இந்த ரேஞ்சுல போகுது கொட்டேஷனு.



படக்குனு நான் சொன்னேன். லைஃப் ஈஸ் எ ஜோக் எஞ்சாய் இட். நெஜமாலுமே நம்ம வாழ்க்கைய மிஞ்சின ஜோக் வேற கிடையாது.கலைஞர் தாத்தா சி.எம் ஆனா அம்மா வீட்டுக்கு அதிகாரிகள் படை போகும். அம்மா சி.எம் ஆனா தாத்தா வீட்டுக்கு அதிகாரிகள் போவாய்ங்க.



மானிலத்துல ஆள்ற கட்சி மத்தில கூட்டணியில இருந்தா இங்க உள்ள கவர்னரு ஆட்டுக்கு தாடி மாதிரி பதவிசா இருப்பாரு. மேட்டர் வேற மாதிரி போனா பின்லாடன் தாடி மாதிரி ஆயிருவாரு. ஹ்யூமன் லைஃப்ல உள்ள மாதிரி ஐரனி வேற ஏதும் கிடையாது.



இயற்கையே இவனை அங்கீகரிச்சாச்சு. ஆனால் இவன் வாழ் நாள் எல்லாம் அங்கீகாரத்துக்காக அலைஞ்சிக்கிட்டே இருப்பான் . ஓருடல் ஓருயிரா இருந்தப்ப (அமீபா) ப்ளெசண்டா இருந்தான்.பல்லுயிரா பல்கி பெருகின பிற்பாடு இவனுக்குள்ள ஈகோ வந்துருச்சு. இயற்கைல இருந்து வேறுபடுத்தி பார்த்து சக உயிர்கள்கிட்டருந்தும்,இந்த இயற்கைலருந்தும் விலகிட்டான். அதனால லைஃப் லாங் சக உயிர்களை கம்யூனிக்கேட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். சக உயிர்களோட இணைய மெனக்கெடுவான்.



அப்படி இணைய தன் உடல் தான் தடைனு பிரமிச்சு பல்வேறு முகமூடிகள்ளே கொல்லுவான் ,கொல்லப்பட விரும்புவான். செக்ஸ்,பணம்,பதவி,அதிகாரம் இப்படி நெம்பர் ஆஃப் ஆல்ட்டர்னேட்டிவ்ஸ்.



ஃபேக்ட் என்னன்னா இவன் ஆல்ரெடி இணைஞ்சிருக்கான். இந்த இயற்கையோட, சகமனிதர்களோட சக உயிர்களோட இணைஞ்சிருக்கான்.ஆனா ஈகோ காரணமா இதை உணர முடியறதில்லை.



இவன் என்ன வேணா பண்ணிட்டு போவட்டும். எனக்கு அப்ஜெக்ஷனில்லே. ஏன் அதை பண்றான்னு புரிஞ்சிக்கிட்டு பண்ணலாம்லியா? உன்னோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் என்ன? சக உயிர்களோட இணையனும். ஆல்ரெடி இணைக்கப்பட்டிருக்கே நைனா. அதுக்கு ஏன் கொல்றது,கொல்லப்படறது.அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா கெட்ட காரியம் பண்றது, அதை சொசைட்டி தடை பண்ணிவச்சிருக்கிறதால பணம் பணம்னு அலையறது,பதவி பதவின்னு பதைக்கிறது. கிடைச்சா துள்ளி குதிக்கிறது.. கிடைக்கலைன்னா துவண்டு போறது



ஆஃப்டரால் நூறு ரூபா ஃப்ளாஸ்க்.அதுல கேப் கொடுக்காம இந்த நிமிஷம் வென்னீர் அடுத்த நிமிஷம் ஐஸ் வாட்டர் ஊத்தினா அது "பொள்" அதை விட கேவலமா இந்த மனித உடல்? ஒரு தாட்டி மூச்சா போனம்னா பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிவறைல ரூ 1/- குட்டிசுவத்து மேல அடிச்சு அதுவும் கிடையாது.



சிறு நீரகம் ஸ்ட்ரைக் பண்ணிருச்சுன்னா ஒரு தாட்டி டயாலிசிஸ் பண்ண ரூ 5 ஆயிரம் டாக்ஸஸ் எட்செட்ரா.ஜஸ்ட் உன்னோட ஈகோவ கழட்டி வச்சுட்டு பார்த்தா ஒழிஞ்சு போற பிரச்சினைக்கு கொலை,தற்கொலை,அஜால் குஜால், சுய இன்பம்,இழந்த சக்தி வைத்தியர்கள், நாலணா வேசிகள், கள்ளக்காதல்கள் ,வெட்டிக்கொலைகள், எயிட்ஸ்,கொனேரியா,சிஃபிலிஸ், போலீஸ் ரெய்டு, விதைகளே முழங்கால் வரை தொங்கி போற வயசு வரை படிப்பு, ஃபை டிஜிட்ல சமபளம் தரானேன்னு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை. பொய்,புனை,சுருட்டு,லஞ்சம் ஊழல், ஏசிபி ரெய்டு, பேட்டரி ஆஃப் ஆகிப்போய் பெண்டாட்டிக்கும் சேர்த்து ட்ரைவரை அப்பாயிண்ட் பண்றது, அடுத்த வேளை சோத்துக்கில்லாத சனத்துக்கு நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கி, கள்ள ஓட்டு வாங்கி , அடி தடி பண்ணி ,வெடிகுண்டு போட்டு பதவி.. தேவையா இதெல்லாம்?



வெற்றி எவனுக்கு வேணும்? எவனொருத்தன் மனசுல ஈகோ இருக்கோ எவனொருத்தன் தான் பிறக்கும்போதே, பிறக்கறதுக்கு முந்தியே இந்த இயற்கையால அங்கீகரிக்கப்படுள்ள விசயத்தை மறந்துட்டானோ எவன் தான் இந்த ஒட்டு மொத்த இயற்கையோட,சக உயிர்களோட பிணைக்கப்பட்டிருக்கிறதை உணரலையோ அவனுக்குத்தேன் வெற்றி வேணம்.



இதுவரை நம்ம வழி. இப்ப உங்க வழிக்கு வந்துர்ரன். வெற்றி தேவைனே வச்சிக்குவம். அதுக்கு என்ன வழி?



1.ஜெயிச்சுத்தான் ஆகனும்ங்கற கட்டாயம் இருக்க கூடாது

2.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்ககூடாது

3. நம்ம பக்கம் தப்பு இருக்ககூடாது. நாம தப்பு பண்ணலைங்கற எண்ணமே ஆயிரம் யானை பலத்தை தரும்



ஹி ஹி.. இந்த 3 பாயிண்டையும் (வழக்கம் போல) அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுக்கலாம்ணே உடுங்க ஜூட்

வெற்றி மீது வெற்றி

அண்ணே வணக்கம்ணே

இந்த வெற்றி மீது வெற்றி பதிவோடயே யார் அந்த தேவி ங்கற நேத்தைய பதிவை விரிவுபடுத்தி போட்டிருக்கேன். திரட்டி, இன்ட்லி மூலமா ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இங்கே அழுத்தி இன்னொரு தாட்டி ஸ்க்ரால் பண்ணிருங்க


ஐ.சில இருக்கிறச்ச (இன்டென்சிவ் கேர் இல்லிங்கண்ணா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்)வாத்தியாரோட கொள்கை பாடல்களை கேட்டா ஒரு சக்தியே பிறக்கும் தான் இல்லேங்கலை. ஆனால் என் சாய்ஸ் மட்டும் தோல்விதான்.



வெற்றி வந்த பிறவுதான் உண்மையான யுத்தம் ஆரம்பிக்குது.அதை ஏற்று எதிர்கொள்ளவோ மறுக்கவோ நமக்கு சுதந்திரம் இருக்காது. யுவார் கமிட்டட் அண்ட் கெம்ப்ல்ட் டு ஸ்ட்ரகிள். லைஃப் ஈஸ் டு லிவ். நாட் டு ஸ்ட்ரகிள். வாழ்க்கைல யுத்தமிருக்கலாம். வாழ்க்கையே யுத்தமாயிட்டா ? எனி ஹவ் வெற்றிக்கு பின்னாடி யுத்தம் ஆரம்பமானதும் கூடவே தோல்விபயம் துவங்குது. ஜெயிச்சே ஆகனும்ங்கற கட்டாயம் ஏற்பட்டுருது. எங்கே கட்டாயத்தன்மை இருக்கோ அங்கன காதல், கில்மா கூட நரகமாயிருது. சகஜமா இருக்கக்கூடிய திறமைகள் கூட ஜெயிச்சுட்ட எம்.எல்.ஏ தொகுதி பக்கம் தலைகாட்டாத கணக்கா இந்த பக்கம் தலைவச்சு படுக்கமாட்டேங்கும்.



ஆனால் தோல்விக்கு பிறவு யுத்தமா? இல்லையாங்கறதை நாம டிசைட் பண்ணிக்கற பொசிஷனுக்கு வந்துர்ரம். இந்த வகைல பார்த்தா தோல்வியே பெட்டர் சாய்ஸ். ஆனாலும் வெற்றி மேல மனிதனுக்கு ஏனிந்த கவர்ச்சி?



இருட்டு மரணத்தின் அறிகுறி - வெற்றி வெளிச்சத்தை தருது. உங்களை வெளிச்சம் போடுது. இருட்டு தனிமையை தருது -தனிமை மரணத்தின் அறிகுறி - வெற்றி பணங்காசை தருது - ஏழ்மை மரணத்தின் அறிகுறி. ஆக வெற்றிங்கறது வாழ்வு .தோல்விங்கறது சாவு. அதனாலதான் எல்லா பார்ட்டியும் வெற்றியே நோக்கமா கூட்டு வைக்குது. இருந்தாலும் தோத்துப்போக ஒரு ஆள் தேவையாச்சே/ எவனோ ஒருத்தன் தோத்துத்தானே ஆகனும்.



இந்த 43 வயசுக்கு வெற்றி தோல்விகளோட அர்த்தங்கள் தாத்பர்யங்களே மாறிருச்சு.

( ஆடிய ஆட்டம் என்ன? - பி.ஜி.எம்ல பாட்டு கேட்குதுங்கோ ).உங்க மனச பொருத்தவரை வெற்றிங்கறது கிரீடமா இருந்தா பரவாயில்லே. அதான் தலைன்னு நீங்க அலைஞ்சு பறை சாத்தினா தலைக்கு கிரீடம் வருதோ இல்லியோ தலை நிமிர்ந்து நடக்க முடியாது.



வெற்றி வெற்றினு இந்த மனசு அலைபாயுதே தாளி இந்த வெற்றியெல்லாம் புதுசா என்னத்த தந்துரப்போவுது?



உடலுறவின் போது கோடிக்கணக்கான உயிரணுக்கள் பீய்சியடிக்கப்படுது. இருக்கிறது ஒரே முட்டைக்கரு.அதை துளைச்சா உயிரா மாறலாம், இல்லைன்னா கழிவறைலயோ, குளியலறையிலயோ கழிக்கப்படுவோம். ஜீவமரண போராட்டம்னா அதுதான்.



அந்த உயிரணுவோட சைசுக்கு அது கடக்கவேண்டிய தூரம் ரெம்ப சாஸ்தி. அந்த ஜீவமரண போராட்டத்துலயே ஜெயிச்சு வந்தவுக நாம. இந்த ஜகன் நாடகத்துல நாம இல்லேன்னா இந்த நாடகம் ரசிக்காது,ருசிக்காதுன்னு அந்த இயற்கையே அந்த ஜகன் மாதாவே நம்மை ரெகக்னைஸ் பண்ணியாச்சு.



அப்பாறம் இந்த உலகத்துல நடக்கிற உதவாக்கரை போட்டிகள்ள நாம ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? ஒரு தாட்டி 1987ல ஃப்ரெண்ட்ஸ் ஏதோ கொட்டேஷனை வச்சு படிச்சிட்டிருந்தய்ங்க.// லைஃப் ஈஸ் எ பஜில் சால்வ் இட் // , //லைஃப் ஈஸ் எ வார் ஃபேஸ் இட் // இந்த ரேஞ்சுல போகுது கொட்டேஷனு.



படக்குனு நான் சொன்னேன். லைஃப் ஈஸ் எ ஜோக் எஞ்சாய் இட். நெஜமாலுமே நம்ம வாழ்க்கைய மிஞ்சின ஜோக் வேற கிடையாது.கலைஞர் தாத்தா சி.எம் ஆனா அம்மா வீட்டுக்கு அதிகாரிகள் படை போகும். அம்மா சி.எம் ஆனா தாத்தா வீட்டுக்கு அதிகாரிகள் போவாய்ங்க.



மானிலத்துல ஆள்ற கட்சி மத்தில கூட்டணியில இருந்தா இங்க உள்ள கவர்னரு ஆட்டுக்கு தாடி மாதிரி பதவிசா இருப்பாரு. மேட்டர் வேற மாதிரி போனா பின்லாடன் தாடி மாதிரி ஆயிருவாரு. ஹ்யூமன் லைஃப்ல உள்ள மாதிரி ஐரனி வேற ஏதும் கிடையாது.



இயற்கையே இவனை அங்கீகரிச்சாச்சு. ஆனால் இவன் வாழ் நாள் எல்லாம் அங்கீகாரத்துக்காக அலைஞ்சிக்கிட்டே இருப்பான் . ஓருடல் ஓருயிரா இருந்தப்ப (அமீபா) ப்ளெசண்டா இருந்தான்.பல்லுயிரா பல்கி பெருகின பிற்பாடு இவனுக்குள்ள ஈகோ வந்துருச்சு. இயற்கைல இருந்து வேறுபடுத்தி பார்த்து சக உயிர்கள்கிட்டருந்தும்,இந்த இயற்கைலருந்தும் விலகிட்டான். அதனால லைஃப் லாங் சக உயிர்களை கம்யூனிக்கேட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். சக உயிர்களோட இணைய மெனக்கெடுவான்.



அப்படி இணைய தன் உடல் தான் தடைனு பிரமிச்சு பல்வேறு முகமூடிகள்ளே கொல்லுவான் ,கொல்லப்பட விரும்புவான். செக்ஸ்,பணம்,பதவி,அதிகாரம் இப்படி நெம்பர் ஆஃப் ஆல்ட்டர்னேட்டிவ்ஸ்.



ஃபேக்ட் என்னன்னா இவன் ஆல்ரெடி இணைஞ்சிருக்கான். இந்த இயற்கையோட, சகமனிதர்களோட சக உயிர்களோட இணைஞ்சிருக்கான்.ஆனா ஈகோ காரணமா இதை உணர முடியறதில்லை.



இவன் என்ன வேணா பண்ணிட்டு போவட்டும். எனக்கு அப்ஜெக்ஷனில்லே. ஏன் அதை பண்றான்னு புரிஞ்சிக்கிட்டு பண்ணலாம்லியா? உன்னோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் என்ன? சக உயிர்களோட இணையனும். ஆல்ரெடி இணைக்கப்பட்டிருக்கே நைனா. அதுக்கு ஏன் கொல்றது,கொல்லப்படறது.அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா கெட்ட காரியம் பண்றது, அதை சொசைட்டி தடை பண்ணிவச்சிருக்கிறதால பணம் பணம்னு அலையறது,பதவி பதவின்னு பதைக்கிறது. கிடைச்சா துள்ளி குதிக்கிறது.. கிடைக்கலைன்னா துவண்டு போறது



ஆஃப்டரால் நூறு ரூபா ஃப்ளாஸ்க்.அதுல கேப் கொடுக்காம இந்த நிமிஷம் வென்னீர் அடுத்த நிமிஷம் ஐஸ் வாட்டர் ஊத்தினா அது "பொள்" அதை விட கேவலமா இந்த மனித உடல்? ஒரு தாட்டி மூச்சா போனம்னா பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிவறைல ரூ 1/- குட்டிசுவத்து மேல அடிச்சு அதுவும் கிடையாது.



சிறு நீரகம் ஸ்ட்ரைக் பண்ணிருச்சுன்னா ஒரு தாட்டி டயாலிசிஸ் பண்ண ரூ 5 ஆயிரம் டாக்ஸஸ் எட்செட்ரா.ஜஸ்ட் உன்னோட ஈகோவ கழட்டி வச்சுட்டு பார்த்தா ஒழிஞ்சு போற பிரச்சினைக்கு கொலை,தற்கொலை,அஜால் குஜால், சுய இன்பம்,இழந்த சக்தி வைத்தியர்கள், நாலணா வேசிகள், கள்ளக்காதல்கள் ,வெட்டிக்கொலைகள், எயிட்ஸ்,கொனேரியா,சிஃபிலிஸ், போலீஸ் ரெய்டு, விதைகளே முழங்கால் வரை தொங்கி போற வயசு வரை படிப்பு, ஃபை டிஜிட்ல சமபளம் தரானேன்னு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை. பொய்,புனை,சுருட்டு,லஞ்சம் ஊழல், ஏசிபி ரெய்டு, பேட்டரி ஆஃப் ஆகிப்போய் பெண்டாட்டிக்கும் சேர்த்து ட்ரைவரை அப்பாயிண்ட் பண்றது, அடுத்த வேளை சோத்துக்கில்லாத சனத்துக்கு நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கி, கள்ள ஓட்டு வாங்கி , அடி தடி பண்ணி ,வெடிகுண்டு போட்டு பதவி.. தேவையா இதெல்லாம்?



வெற்றி எவனுக்கு வேணும்? எவனொருத்தன் மனசுல ஈகோ இருக்கோ எவனொருத்தன் தான் பிறக்கும்போதே, பிறக்கறதுக்கு முந்தியே இந்த இயற்கையால அங்கீகரிக்கப்படுள்ள விசயத்தை மறந்துட்டானோ எவன் தான் இந்த ஒட்டு மொத்த இயற்கையோட,சக உயிர்களோட பிணைக்கப்பட்டிருக்கிறதை உணரலையோ அவனுக்குத்தேன் வெற்றி வேணம்.



இதுவரை நம்ம வழி. இப்ப உங்க வழிக்கு வந்துர்ரன். வெற்றி தேவைனே வச்சிக்குவம். அதுக்கு என்ன வழி?



1.ஜெயிச்சுத்தான் ஆகனும்ங்கற கட்டாயம் இருக்க கூடாது

2.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்ககூடாது

3. நம்ம பக்கம் தப்பு இருக்ககூடாது. நாம தப்பு பண்ணலைங்கற எண்ணமே ஆயிரம் யானை பலத்தை தரும்



ஹி ஹி.. இந்த 3 பாயிண்டையும் (வழக்கம் போல) அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுக்கலாம்ணே உடுங்க ஜூட்

Friday, April 16, 2010

மறுமொழி கேட்டு பிச்சை

அண்ணே வணக்கம்ணே,
வழக்கமா இன்னின்ன பதிவை போட்டிருக்கேன்னிட்டு சூ காட்டிட்டு போயிருவன் இன்னைக்கு கொஞ்சம் டச்சிங்கா பேசிரலாம்னு ஒரு எண்ணம்.

பை தி பை "சாம்பார் சரியில்லை என்று கட்டிய மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்" என்ற தலைப்பில் ஒரு நெடுங்கதைய போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க‌
நானும் நவம்பர் மாசத்துல இருந்து மாடாட்டம் தினசரி கு.ப ஒரு பதிவு. அதிக பட்சம் 4 பதிவுனு போட்டுக்கிட்டே இருக்கேன்.

ஒரு கட்டத்துல நம்ம பதிவுகள் தமிலிஷ் டாட்காமில் தொடர்ந்து பிரபலமாகறத பார்த்து சில பேர் அக்குறும்பா கூட  என்னென்னவோ எழுதியிருந்தாங்க.ஒரு தாய் குலம்னா ஒரு படி மேல போய் (சாரி.. கீழே இறங்கி) கூவம் அது இதுனு எழுதி மறுமொழி கேட்டு பிச்சை எடுக்கிறாய்ங்க. வேண்டப்பட்டவங்கள வச்சி ஓட்ட போட வச்சி பதிவை பிரபலமாக்கறாய்ங்கனு கூட எழுதியிருந்தாங்க. நானும் இதையெல்லாம் கண்டுகிட்டா  பூசணிக்காய் திருடன் யாருன்னா தோளை தடவிக்கிட்ட கதையாயிரும்னு இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை.

குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். உப்பை தின்னவந்தானே தண்ணிகுடிக்கனும்னு விட்டுட்டன்.

ஒரு கட்டம் வரை நம்ம பதிவுகளுக்கான  மறுமொழி எல்லாம் யூஷுவலாவே இருந்தது. டஜனை மிஞ்சின நாள் எல்லாம் உண்டு. சந்து முனைல சிந்து பாடற மாதிரி சில பார்ட்டிங்க மனச புண் படுத்தினாலும் உற்சாகமாகவே இருந்தது.

சமீப காலமா மறுமொழிங்கறதே சுத்தமா இல்லாம போயிருச்சு. இதுக்கு என்னதான் காரணம்னு  நான் சின்னதா ஒரு பட்டியல் போடறேன் இதுல எது நிஜம்னு சொல்லுங்கண்ணா.

மண்டைல மிச்சமிருக்கிற நாலு முடிய அப்படி இப்படி நிரவி ஏதோ ஃபோட்டோஸுக்கு ஃபோஸ் கொடுத்துக்கிட்டிருக்கேன். அது கூட மிஞ்சாம போயிரும்போல இருக்கு.

வருகைகளோட எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிச்சுக்கிட்டுதான் போகுது. ஆனால் மறுமொழி மட்டும் நை. விசித்திரமா இருக்கு.

1.நான் பதிவுல போடற விஷயமெல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுனு நினைக்கிறிங்க?
2. மவுனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கற மாதிரி நான் சொல்ற விஷயங்களை ஏத்துக்கறிங்க?
3.தத் இதையெல்லாம் விமர்சிச்சு மறு மொழி போட்டா நம்மைத்தான் சீப்பா நினைப்பாங்கனு பம்முறிங்க ?
4.நாம என்னதான் திட்டி திட்டி மறுமொழி போட்டாலும் பார்ட்டி தன் ஸ்டைல மாத்திக்கிறாப்ல இல்லை. எதுக்கு ச்சும்மா செவிடன் காதுல சங்கு மாதிரினு நினைக்கிறிங்க?
5.எப்படியும் 11 மாசத்துல லட்சத்து 35 ஆயிரம் ஹிட்ஸை தாண்டி போயிட்டிருக்கான். நாம வேற எதுக்கு இவனை பெரீ மன்சனாக்கறதுனு நினைக்கிறிங்க?
6.பாம்புனு நினைச்சு அடிக்கவும் முடியல. பழுதுனு நினைச்சு மிதிக்கவும் முடியல. எதுக்கு வம்புனு சைடு வாங்கறிங்க?
7. நாமதான் இவன் எழுத்துக்கள படிச்சு ம.மொ  போடறோம் இந்தாளு நம்முத படிக்க மாட்டேங்கறான். ம.மொ போடமாட்டேங்குறானு கடுப்பு?
8.இவன் எழுதற விஷயமெல்லாமே சந்தேகாஸ்பதமா இருக்கு. ஒரு கோணத்துல பார்த்தா நம்பறாப்ல இருக்கு.. இன்னொரு கோணத்துல பார்த்தா டுபுக்கு மாதிரி இருக்கு. எதுக்கு வம்புனு மவுனமா இருந்துர்ரிங்க.
9.இவனுக்குத்தான் வேற வேலை வெட்டி இல்லே பக்கம் பக்கமா அடிச்சு தள்றான். நமக்கு மட்டும்  வேலையில்லையானு வெறுப்பு
10.எப்படியும் ஒரு நாளில்லை ஒரு நாள் களி திங்க போறது கியாரண்டி. ம.மொ போட்டு நாமளும் ஏன் விசாரணை வளையத்துக்குள்ள போகனும்னு தயக்கம்?

இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணமாண்ணே.. ஒழுங்கா தினசரி முறை போட்டுக்கிட்டாவது நாலு ம.மொ யாவது போட்டுருங்க, இல்லனா இந்த மாதிரி இன்னும் 90 காரணங்களை போட்டு இம்சை பண்ணிருவன். 

மேற்படி தாய் குலமாகட்டும், சந்துல சாக்குல கள்ள ஓட்டு பார்ட்டி கணக்கா திட்டி எழுதின பார்ட்டிகளாகட்டும் இவிக எல்லாம்
என்னைப்பத்தி தெரிஞ்சிக்க  காத்திருக்கிராங்கனு சொல்லமாட்டேன். ஆனாலும் சமீபத்தில் கவிதை07 வலைப்பூவுக்கு பந்தாவாய்  நிர்வாண உண்மைகள் என்று பெயர் வைத்துக்கொண்டாலும்  சமீப காலமாய் ஒரு வித முன்.ஜா யுடன் டூ பீஸ் அணிந்த  உண்மைகளை எழுதப்போய்  என்னைப்பற்றி யாருக்கும் பெரிதாக ஏதும் தெரியாத நிலையில் கண்டவன் கண்ட படி வைவதும் தேய் பிறை சமயம் நானும் கடுப்பாகி சாக்கடை பாஷையை உபயோகிப்பதும்  சகஜமாகி போய் மறுமொழி மட்டறுத்தல் கூட  செய்ய வேண்டியதாயிற்று.

என்ன சொல்லப்பட்டது என்பதை போலவே யாரால் சொல்லப்பட்டது என்பதும் சில நேரங்களில் முக்கியமாகிவிடுகிறது. நான் செக்ஸ் குறித்தும்,பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் குறித்தும் எழுதிய சில கருத்துக்களுக்கான மறுமொழிகள் அத்தனை காட்டமாக வர என்னை பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாததும் ஒரு காரணமாகிவிட்டது.

எனவேதான்  என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது.  இந்த சுய அறிமுகப்படலத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.

"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "

 பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் அனுபவம் கூட..

இதுக்கு காரணம் என்னடான்னா.. சனம் துக்கத்துல இருக்கு. துக்கத்துல இருக்கிறவன் அடுத்தவனை துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.  சனம் பெருத்து போச்சு. ஸ்பெஷல் ஐடென்ட்டிட்டி கிடையாது. பங்க் வச்சிக்கிற இளைஞன்ல இருந்து பொடி டப்பாவ எடுத்து ஸ்டைலா நாலு தட்டு தட்டி மூக்குப்பொடி போடற கிழவாடில இருந்து எல்லாருமெ தங்களை இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.
முந்தானைய எடுத்து விசிறிக்கிற ஆன்ட்டி. ஃபுட் போர்ட்ல பிரயாணம் பண்ற டீன் ஏஜன் எல்லாருமே இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.

இது எக்சிபிஷனிசம்னு ஒரு மனவியாதி. இந்த படைப்புல ஒவ்வொரு உயிரும் ஸ்பெஷல் தான். முன் பத்தில சொன்ன கவன ஈர்ப்பு தீர்மானமெல்லாம் தேவையில்லே. ஒவ்வொரு மனிதனும் தான் இந்த படைப்புல சம் திங்க் ஸ்பெஷலுன்னு தெரிஞ்சிக்கிட்டா, அனுபவ பூர்வமா புரிஞ்சிக்கிட்டா இந்த ஐடென்டிட்டி பிராப்ளமெல்லாம் வரவே வராது.

நீங்க இந்த சமுதாயத்தால  அடையாளம் காணப்பெறனும்னா இந்த சமூகம் எதை எல்லாம் பார்த்து அரண்டு போயிருமோ அதையெல்லாம் டச் பண்ணனும். எதையெல்லாம் தலைமேல வச்சு கொண்டாடுதோ அதை எல்லாம் கொஸ்டியன் பண்ணனும். இந்த சமூகம் எதுக்கெல்லாம் அடிமையா இருக்கோ அதையெல்லாம் உஃப்னு ஊதி தள்ற தில் வேணும். சவால்களை சந்திக்கிற தம் வேணும். இப்படி நிறைய வேணும் இதெல்லாம் இருந்தா சமூகம் உங்களை அடையாளம் காணும்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். எழுத்துங்கறது என்ன? மவுனமான உரையாடல்.வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கு. வாயசைஞ்சா அதுவும் அசையாம அசைஞ்சா ( சூட்சுமமான வைபரேஷன்) அந்த அசைவு இன உறுப்பை அடையுது. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவாங்க.(எழுதுவாங்க) இல்லேன்னா தின்னு கழிவாங்க.

எழுத்துங்கறதே கையாலாகதவங்க வேலை. நாய் இது தன் ஏரியானு ஸ்தாபிக்கிறதுக்காக அங்கங்கே ஒன்னுக்கடிச்சிட்டு வரும். (வெளி ஏரியா நாய் வந்தா அதை மூந்து பார்த்துட்டு சாக்கிரதையா அந்த ஏரியாவ தாண்டும்) மனுஷன் என்ன பண்றான்.வீட்டை கட்டறான். வியாபாரம் பண்றான்.தொழில் பண்றான்.க்ளப்ல மெம்பரா சேர்ரான். தன் ஏரியாவ  எக்ஸ்டென்ட் பண்றான். அரசியல்வாதி என்ன பண்றான் பேனர் வைக்கிறான்.இதெல்லாம் நாய் ஒன்னுக்கடிச்ச கதைதான்.

நாம என்ன பண்றோம். ப்ளாக் எழுதறோம். படிங்க படிங்கனு ஷேர் பண்றோம், பிங்க் பண்றோம்.அதிக ஹிட்ஸ் கிடைச்சா அதிகம் சந்தோஷப்படறோம். இந்த ஷேரிங்,பிங்கிங் கூட  நாய்  ஒன்னுக்கடிச்ச கதைதான்.

உண்ணாவிரதம் இருந்துக்கிட்டு வாட்டர் தெரஃபி எடுத்துக்கிட்டு ஒன்னுக்கடிச்சா அதுல காட்டு ( நெடி) இருக்காது. ஊர்ல இருக்கிற நாய்க்கு வாசனை தெரியாது.

பதிவு பிரபலமாகலியேன்னா பிரபலமாக என்ன எழுதலாம் எப்படி எழுதலாம்னு ப்ளான் பண்ணனும். அதை விட்டுட்டு கள்ள ஓட்டு,மொள்ளமாரி வேலைன்னா எப்படி?

மறுமொழி கேட்டு பிச்சை

அண்ணே வணக்கம்ணே,
வழக்கமா இன்னின்ன பதிவை போட்டிருக்கேன்னிட்டு சூ காட்டிட்டு போயிருவன் இன்னைக்கு கொஞ்சம் டச்சிங்கா பேசிரலாம்னு ஒரு எண்ணம்.

பை தி பை "சாம்பார் சரியில்லை என்று கட்டிய மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்" என்ற தலைப்பில் ஒரு நெடுங்கதைய போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க‌
நானும் நவம்பர் மாசத்துல இருந்து மாடாட்டம் தினசரி கு.ப ஒரு பதிவு. அதிக பட்சம் 4 பதிவுனு போட்டுக்கிட்டே இருக்கேன்.

ஒரு கட்டத்துல நம்ம பதிவுகள் தமிலிஷ் டாட்காமில் தொடர்ந்து பிரபலமாகறத பார்த்து சில பேர் அக்குறும்பா கூட  என்னென்னவோ எழுதியிருந்தாங்க.ஒரு தாய் குலம்னா ஒரு படி மேல போய் (சாரி.. கீழே இறங்கி) கூவம் அது இதுனு எழுதி மறுமொழி கேட்டு பிச்சை எடுக்கிறாய்ங்க. வேண்டப்பட்டவங்கள வச்சி ஓட்ட போட வச்சி பதிவை பிரபலமாக்கறாய்ங்கனு கூட எழுதியிருந்தாங்க. நானும் இதையெல்லாம் கண்டுகிட்டா  பூசணிக்காய் திருடன் யாருன்னா தோளை தடவிக்கிட்ட கதையாயிரும்னு இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை.

குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். உப்பை தின்னவந்தானே தண்ணிகுடிக்கனும்னு விட்டுட்டன்.

ஒரு கட்டம் வரை நம்ம பதிவுகளுக்கான  மறுமொழி எல்லாம் யூஷுவலாவே இருந்தது. டஜனை மிஞ்சின நாள் எல்லாம் உண்டு. சந்து முனைல சிந்து பாடற மாதிரி சில பார்ட்டிங்க மனச புண் படுத்தினாலும் உற்சாகமாகவே இருந்தது.

சமீப காலமா மறுமொழிங்கறதே சுத்தமா இல்லாம போயிருச்சு. இதுக்கு என்னதான் காரணம்னு  நான் சின்னதா ஒரு பட்டியல் போடறேன் இதுல எது நிஜம்னு சொல்லுங்கண்ணா.

மண்டைல மிச்சமிருக்கிற நாலு முடிய அப்படி இப்படி நிரவி ஏதோ ஃபோட்டோஸுக்கு ஃபோஸ் கொடுத்துக்கிட்டிருக்கேன். அது கூட மிஞ்சாம போயிரும்போல இருக்கு.

வருகைகளோட எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிச்சுக்கிட்டுதான் போகுது. ஆனால் மறுமொழி மட்டும் நை. விசித்திரமா இருக்கு.

1.நான் பதிவுல போடற விஷயமெல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுனு நினைக்கிறிங்க?
2. மவுனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கற மாதிரி நான் சொல்ற விஷயங்களை ஏத்துக்கறிங்க?
3.தத் இதையெல்லாம் விமர்சிச்சு மறு மொழி போட்டா நம்மைத்தான் சீப்பா நினைப்பாங்கனு பம்முறிங்க ?
4.நாம என்னதான் திட்டி திட்டி மறுமொழி போட்டாலும் பார்ட்டி தன் ஸ்டைல மாத்திக்கிறாப்ல இல்லை. எதுக்கு ச்சும்மா செவிடன் காதுல சங்கு மாதிரினு நினைக்கிறிங்க?
5.எப்படியும் 11 மாசத்துல லட்சத்து 35 ஆயிரம் ஹிட்ஸை தாண்டி போயிட்டிருக்கான். நாம வேற எதுக்கு இவனை பெரீ மன்சனாக்கறதுனு நினைக்கிறிங்க?
6.பாம்புனு நினைச்சு அடிக்கவும் முடியல. பழுதுனு நினைச்சு மிதிக்கவும் முடியல. எதுக்கு வம்புனு சைடு வாங்கறிங்க?
7. நாமதான் இவன் எழுத்துக்கள படிச்சு ம.மொ  போடறோம் இந்தாளு நம்முத படிக்க மாட்டேங்கறான். ம.மொ போடமாட்டேங்குறானு கடுப்பு?
8.இவன் எழுதற விஷயமெல்லாமே சந்தேகாஸ்பதமா இருக்கு. ஒரு கோணத்துல பார்த்தா நம்பறாப்ல இருக்கு.. இன்னொரு கோணத்துல பார்த்தா டுபுக்கு மாதிரி இருக்கு. எதுக்கு வம்புனு மவுனமா இருந்துர்ரிங்க.
9.இவனுக்குத்தான் வேற வேலை வெட்டி இல்லே பக்கம் பக்கமா அடிச்சு தள்றான். நமக்கு மட்டும்  வேலையில்லையானு வெறுப்பு
10.எப்படியும் ஒரு நாளில்லை ஒரு நாள் களி திங்க போறது கியாரண்டி. ம.மொ போட்டு நாமளும் ஏன் விசாரணை வளையத்துக்குள்ள போகனும்னு தயக்கம்?

இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணமாண்ணே.. ஒழுங்கா தினசரி முறை போட்டுக்கிட்டாவது நாலு ம.மொ யாவது போட்டுருங்க, இல்லனா இந்த மாதிரி இன்னும் 90 காரணங்களை போட்டு இம்சை பண்ணிருவன். 

மேற்படி தாய் குலமாகட்டும், சந்துல சாக்குல கள்ள ஓட்டு பார்ட்டி கணக்கா திட்டி எழுதின பார்ட்டிகளாகட்டும் இவிக எல்லாம்
என்னைப்பத்தி தெரிஞ்சிக்க  காத்திருக்கிராங்கனு சொல்லமாட்டேன். ஆனாலும் சமீபத்தில் கவிதை07 வலைப்பூவுக்கு பந்தாவாய்  நிர்வாண உண்மைகள் என்று பெயர் வைத்துக்கொண்டாலும்  சமீப காலமாய் ஒரு வித முன்.ஜா யுடன் டூ பீஸ் அணிந்த  உண்மைகளை எழுதப்போய்  என்னைப்பற்றி யாருக்கும் பெரிதாக ஏதும் தெரியாத நிலையில் கண்டவன் கண்ட படி வைவதும் தேய் பிறை சமயம் நானும் கடுப்பாகி சாக்கடை பாஷையை உபயோகிப்பதும்  சகஜமாகி போய் மறுமொழி மட்டறுத்தல் கூட  செய்ய வேண்டியதாயிற்று.

என்ன சொல்லப்பட்டது என்பதை போலவே யாரால் சொல்லப்பட்டது என்பதும் சில நேரங்களில் முக்கியமாகிவிடுகிறது. நான் செக்ஸ் குறித்தும்,பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் குறித்தும் எழுதிய சில கருத்துக்களுக்கான மறுமொழிகள் அத்தனை காட்டமாக வர என்னை பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாததும் ஒரு காரணமாகிவிட்டது.

எனவேதான்  என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது.  இந்த சுய அறிமுகப்படலத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.

"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "

 பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் அனுபவம் கூட..

இதுக்கு காரணம் என்னடான்னா.. சனம் துக்கத்துல இருக்கு. துக்கத்துல இருக்கிறவன் அடுத்தவனை துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.  சனம் பெருத்து போச்சு. ஸ்பெஷல் ஐடென்ட்டிட்டி கிடையாது. பங்க் வச்சிக்கிற இளைஞன்ல இருந்து பொடி டப்பாவ எடுத்து ஸ்டைலா நாலு தட்டு தட்டி மூக்குப்பொடி போடற கிழவாடில இருந்து எல்லாருமெ தங்களை இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.
முந்தானைய எடுத்து விசிறிக்கிற ஆன்ட்டி. ஃபுட் போர்ட்ல பிரயாணம் பண்ற டீன் ஏஜன் எல்லாருமே இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.

இது எக்சிபிஷனிசம்னு ஒரு மனவியாதி. இந்த படைப்புல ஒவ்வொரு உயிரும் ஸ்பெஷல் தான். முன் பத்தில சொன்ன கவன ஈர்ப்பு தீர்மானமெல்லாம் தேவையில்லே. ஒவ்வொரு மனிதனும் தான் இந்த படைப்புல சம் திங்க் ஸ்பெஷலுன்னு தெரிஞ்சிக்கிட்டா, அனுபவ பூர்வமா புரிஞ்சிக்கிட்டா இந்த ஐடென்டிட்டி பிராப்ளமெல்லாம் வரவே வராது.

நீங்க இந்த சமுதாயத்தால  அடையாளம் காணப்பெறனும்னா இந்த சமூகம் எதை எல்லாம் பார்த்து அரண்டு போயிருமோ அதையெல்லாம் டச் பண்ணனும். எதையெல்லாம் தலைமேல வச்சு கொண்டாடுதோ அதை எல்லாம் கொஸ்டியன் பண்ணனும். இந்த சமூகம் எதுக்கெல்லாம் அடிமையா இருக்கோ அதையெல்லாம் உஃப்னு ஊதி தள்ற தில் வேணும். சவால்களை சந்திக்கிற தம் வேணும். இப்படி நிறைய வேணும் இதெல்லாம் இருந்தா சமூகம் உங்களை அடையாளம் காணும்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். எழுத்துங்கறது என்ன? மவுனமான உரையாடல்.வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கு. வாயசைஞ்சா அதுவும் அசையாம அசைஞ்சா ( சூட்சுமமான வைபரேஷன்) அந்த அசைவு இன உறுப்பை அடையுது. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவாங்க.(எழுதுவாங்க) இல்லேன்னா தின்னு கழிவாங்க.

எழுத்துங்கறதே கையாலாகதவங்க வேலை. நாய் இது தன் ஏரியானு ஸ்தாபிக்கிறதுக்காக அங்கங்கே ஒன்னுக்கடிச்சிட்டு வரும். (வெளி ஏரியா நாய் வந்தா அதை மூந்து பார்த்துட்டு சாக்கிரதையா அந்த ஏரியாவ தாண்டும்) மனுஷன் என்ன பண்றான்.வீட்டை கட்டறான். வியாபாரம் பண்றான்.தொழில் பண்றான்.க்ளப்ல மெம்பரா சேர்ரான். தன் ஏரியாவ  எக்ஸ்டென்ட் பண்றான். அரசியல்வாதி என்ன பண்றான் பேனர் வைக்கிறான்.இதெல்லாம் நாய் ஒன்னுக்கடிச்ச கதைதான்.

நாம என்ன பண்றோம். ப்ளாக் எழுதறோம். படிங்க படிங்கனு ஷேர் பண்றோம், பிங்க் பண்றோம்.அதிக ஹிட்ஸ் கிடைச்சா அதிகம் சந்தோஷப்படறோம். இந்த ஷேரிங்,பிங்கிங் கூட  நாய்  ஒன்னுக்கடிச்ச கதைதான்.

உண்ணாவிரதம் இருந்துக்கிட்டு வாட்டர் தெரஃபி எடுத்துக்கிட்டு ஒன்னுக்கடிச்சா அதுல காட்டு ( நெடி) இருக்காது. ஊர்ல இருக்கிற நாய்க்கு வாசனை தெரியாது.

பதிவு பிரபலமாகலியேன்னா பிரபலமாக என்ன எழுதலாம் எப்படி எழுதலாம்னு ப்ளான் பண்ணனும். அதை விட்டுட்டு கள்ள ஓட்டு,மொள்ளமாரி வேலைன்னா எப்படி?

Monday, December 14, 2009

கேட்க விரசமாக இருந்தாலும்

காதலில் வெற்றிக்கு அயனான டிப்ஸ்
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்ன‌ம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்

1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க‌

2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்

3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.

ஒரு ஜோக்:

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"

"வாங்க போய் பார்க்க‌லாம்"

முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"

அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"

டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"

இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமண‌த்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.

இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.



இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)



ஜோதிட டிப்ஸ்:





ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.



உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.



அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

கேட்க விரசமாக இருந்தாலும்

காதலில் வெற்றிக்கு அயனான டிப்ஸ்
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்ன‌ம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்

1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க‌

2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்

3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.

ஒரு ஜோக்:

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"

"வாங்க போய் பார்க்க‌லாம்"

முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"

அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"

டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"

இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமண‌த்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.

இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.



இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)



ஜோதிட டிப்ஸ்:





ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.



உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.



அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.