Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Sunday, October 10, 2010

సరి కొత్త ఉషస్సు

Note: "శక్తి పూజ" - సైకో అనాలసిస్ శీర్షికన వ్రాసిన టపాను ఇక్కడ క్లిక్ చేసి చదవండి

ఒక తల్లి నలుగురు బిడ్డలను పోషిస్తుంది.
కాని ఆ నలుగురు కలిసి ఒక తల్లిని పోషించ లేక
ఓల్డేజ్ హోమ్ పాలు చేస్తారు
హే మహోదరి!
ఇంతమంది వ్యర్థ మానవులను కడుపారా కన్నా
కడుపులో ,కళ్ళల్లో పెట్టుకుని
దాచుకుంటున్న నిన్ను వీరిలో ఏ ఒక్కరన్నా
తమ గుండెలో దాచుకోలేక
నాలుగు గోడల మద్య భంధించడం విడ్డూరం

త్యాగేశుడు అని శివయ్యను కీర్తించే ఈ లోకంలో నిన్ను
త్యాగేశ్వరిగా ఎందుకు గుర్తించటం లేదు?
రా ..నీ విశ్వరూపంకన్నా విశాలమైన నా గుండెలో దాచుకుంటా..
ఆ నాలుగు గోడల మద్య ఉండి నువ్వు సాధించిందేమి
వాస్తు దోషాలు,గ్రహ దోషాలు అంటని నా గుండెలో స్థిర వాసం చెయ్యి

నా గుండెలో ఉప్పొంగే కవితామృతాన్ని కడుపారా త్రాగు
నా శతృవులు,ద్రోహాలు, నా పేదరికం నా గుండెలో ఉన్న రక్తాన్ని పూర్తిగా పీల్చి వేసినా హిమాలయంతో పోల్చ తగ్గ తెల్ల దనం ,చల్లదనం, నువ్వైనా ఊహించలేని కొత్తదనం, ఉట్టిపడే గట్టి గుండె ఇది.

నువ్వు సరదా పడే త్రిశూలం చేత బట్టి ,ప్రళయ కాల రుద్ర నాట్యం చేసినా అదరదు,బెదరదు.చెదరదు
నేను వ్రాసిన పిచ్చి గీతలకే మురిసి పోయి కాలాగ్నిలో సైతం
స్వర్ణంలా మెరిసేట్లు చేసావు
నా పేదరికానికి కోత విధించావు
వ్రాత మార్చావు
ఈ ప్రపంచమే వినాశానికేసి బుల్లెట్ లా దూసుకుపోతున్నా
నా గుండె ద్రోహాలతో బండ బారినా కొండ శిఖరాల ఇరుకునుండి ఉరకలేస్తూ పరుగు తోసే నదిలా దిగి వచ్చావు

నా కవిత ఈ భూతలం పై చెవిటి రాజ్యమే సాగుతున్నా
సమస్త ప్రజానీకం సృష్ఠి పరిసమాప్తికే సాయ శక్తులా కృషి చేస్తున్నా
ఋషిలా బ్రతకనిచ్చావు

బతుకు నా ద్యేయం కాదు.
జీవించడం నా లక్ష్యం కాదు
కొన ఊపిరితో కొట్టుమిట్టాడుతున్నా మానవత్వాన్ని జీవింపచెయడమే నా లక్ష్యం.
కక్ష్య దాటుతున్నానని, తక్షణం నీ తీర్పు అమలు చెయ్యాలని అనిపిస్తూందా రా!

ఈ జనులు ఏ ప్రమోషన్ కోసమో, ఇన్ క్రిమెంట్ కోసమే ఇబ్బంది పెడతారని భయపడకు. వీరి కళ్ళు అహంకారంతో మూసుకుపోయాయి.

నువ్వు సర్వాలంకార భూషితురాలై, సింహ వాహణమెక్కి, త్రిశూలం చేతపట్టి సిటి జంక్షన్లో కనబడినా పగటి వేషగత్తెని పక్కకు పోతారు.

నా కథ వేరు..
నువ్వే రూపాన వచ్చినా గుర్తు పడతా .. శిరస్సు వంచుతా
తరచూ రాక్షసులనే వధిస్తుంటే
ఏమున్నది మజా..వెరైటిగా నా తల నరుకు.
నా మస్తిష్కమంతటా  నిండి ఉన్న విశ్వప్రేమ రక్త రూపేణా నీకు పాదాభిషేకం చెయ్యనీ

ఆ చల్లదనంతో కలి పురుషిని కేకలతో గమ్యం మరచిన  వ్యర్థ మానవుల ,వ్యర్థ జీవితాలతో వేడెక్కిన నీ శిరస్సు చల్లబడనీ  ! ఆ చల్లదనంతో, నీ తల్లి గుండే కరగనీ !

సరి కొత్త ఉషస్సును ప్రసాదించు నా జాతికి
పట్టం కట్టు నీతికి

Wednesday, September 1, 2010

நல்ல தீர்ப்பு

புலி மேல் ஏறி புவனமெலாம்
ஆளும் அன்னை புவனேசி ( மதில் மேல்)
பூனை என்னை வெருட்டுதலோ. ?
பழிச்சொல் பலவும் உருட்டுதலோ?
உன் இடம் விட்டு  எதிர்புறம் வந்து
என் பகையொடு சேர்ந்து வெருட்டதலால்
உன் புறம் குதிப்பேன் என்றல்லோ
ஏழை என்னை வெருட்டுகின்றாய்.

நின் பாசம் அறிவேன் பராசக்தி !
நின் அருளின்றேல் நான் வெறும் சகதி
உன் அருளாலே உன் அருள் வேண்டி
என் மருள் யாவும் நான் தாண்டி
மதில்வரை வந்தேன் காணலியே

மாதா உந்தன் நகையொலி தான் அவ்வப்போது கேட்கிறது.
கொலுசொலி சற்று கசிகிறது. நம்பிக்கை மட்டும் நசிகிறது
திருமுகம் ஆயிரம் நான் வரைந்தும் - நின்
திருமுகம் காட்ட மறுக்கின்றாய்.

வந்த வழியென் சொந்தவழி
காற்றில் பஞ்சு போன வழி
நின்  நுதல் வீசும் ஒளியாலே
மதில் வரை வந்தேன் தாயே கேள்

அவ்வப்போது மயங்கிடினும்
நானோ என்று தயங்கிடினும்
முற்றும் உணந்தேன் உமையவளே
மூடன் நானோ இமயவளே

விரல் அது இங்கு எனதெனினும்
குரல் அது என்றும் உனதன்றோ?
என் நலம் நாடி நிர்மலம் எய்த
ஊர் மலம் யாவும் சொரிவித்தாய்
அறிவேன் அறிவேன் நானிங்கே

தருமம் ,மருமம் யாவும் தான்
தாயே எனக்கு புரிவித்தாய்
கருமம் ஒழிக்கும் வித்தையைத்தான்
விளக்கமாக தெரிவித்தாய்

என் நாவில் நின்று நடம் புரிந்தாய்
வாக்கினூடே பயணித்தாய்.

காவியம் செய்ய  நான் முனைந்து
பட்டபாடு நீயறிவாய்.
நின் அவைக்கே அதனை அனுப்பி வைத்தும்
அடை காத்தல் ஒன்றே செய்திட்டார்

உரையில் என்றால் மேய்ந்திடுவார் -
உரையில் உன்னத சிகரம் தொட முனைந்தால்
உரை நடை கூட உறைக்கா உலகில்
கவி மழை பெய்து பயன் என்ன?

உரை  நடை தானே என்றெண்ணி
என்னை பேச பதறிடுவார்
உன்னை பேச உதறிடுவார்

என் வாக்கில் நின்ற உனக்கே தான் வேலை தந்திட
நான் நினைந்து வரும் பொருள் உரைக்க முனைந்திட்டேன்.

பற்பல வழக்கில் முன்னுரைக்கே
பாரோர்  நல்ல தீர்ப்பு வழங்கிட்டார்
யாவும் உன்னருள் நானறிவேன்

இது ஒரு வழக்கில் மட்டும் தான்
சிக்கல் என்பது உருவாச்சு.

என் அகந்தை துடைக்க அம்மாவே
அதிரடி செய்ய இறங்கிவிட்டாய்.
என் நாவில் சற்றே உறங்கிவிட்டாய்.

காஞ்சனம் கையால் தொட்டபின்னே
கருமம் தொலைக்காதிருந்திட்டால்
பாவம் என்னை சூழாதோ?
பாவி உலகம் இகழாதோ?

காசும் பணமும் வந்திவனே நீர்த்தான் என்று நினைந்தாயோ?
புது நாடகம் ஒன்றை புனைந்தாயோ?

தாங்காதம்மா தாங்காது
இழி சொல்லை என் மனம் தாங்காது.

மக்கள் கூட்டம் எனை சூழ வரும் பொருள் என்பது
என் வியூகம்.
கூட்டம் பெருத்து எனை தொடர லட்சியம் சொல்வேன் சரியாகும்.

தொழில் என்றெண்ணி விலகினையோ - மனத்
தழல் தணிந்த  தென்றே தவிர்த்தனையோ

பாரத நாட்டில் பசியதுவே ஒழிந்தாலன்றி தணியாது
என் நெஞ்சம் வாழும் அத்தழலே

அருள்வாய் அம்மா அருள்வாயே
என் வாக்கில் வந்து அமர்வாயே.

ஓம் சக்தி.

நல்ல தீர்ப்பு

புலி மேல் ஏறி புவனமெலாம்
ஆளும் அன்னை புவனேசி ( மதில் மேல்)
பூனை என்னை வெருட்டுதலோ. ?
பழிச்சொல் பலவும் உருட்டுதலோ?
உன் இடம் விட்டு  எதிர்புறம் வந்து
என் பகையொடு சேர்ந்து வெருட்டதலால்
உன் புறம் குதிப்பேன் என்றல்லோ
ஏழை என்னை வெருட்டுகின்றாய்.

நின் பாசம் அறிவேன் பராசக்தி !
நின் அருளின்றேல் நான் வெறும் சகதி
உன் அருளாலே உன் அருள் வேண்டி
என் மருள் யாவும் நான் தாண்டி
மதில்வரை வந்தேன் காணலியே

மாதா உந்தன் நகையொலி தான் அவ்வப்போது கேட்கிறது.
கொலுசொலி சற்று கசிகிறது. நம்பிக்கை மட்டும் நசிகிறது
திருமுகம் ஆயிரம் நான் வரைந்தும் - நின்
திருமுகம் காட்ட மறுக்கின்றாய்.

வந்த வழியென் சொந்தவழி
காற்றில் பஞ்சு போன வழி
நின்  நுதல் வீசும் ஒளியாலே
மதில் வரை வந்தேன் தாயே கேள்

அவ்வப்போது மயங்கிடினும்
நானோ என்று தயங்கிடினும்
முற்றும் உணந்தேன் உமையவளே
மூடன் நானோ இமயவளே

விரல் அது இங்கு எனதெனினும்
குரல் அது என்றும் உனதன்றோ?
என் நலம் நாடி நிர்மலம் எய்த
ஊர் மலம் யாவும் சொரிவித்தாய்
அறிவேன் அறிவேன் நானிங்கே

தருமம் ,மருமம் யாவும் தான்
தாயே எனக்கு புரிவித்தாய்
கருமம் ஒழிக்கும் வித்தையைத்தான்
விளக்கமாக தெரிவித்தாய்

என் நாவில் நின்று நடம் புரிந்தாய்
வாக்கினூடே பயணித்தாய்.

காவியம் செய்ய  நான் முனைந்து
பட்டபாடு நீயறிவாய்.
நின் அவைக்கே அதனை அனுப்பி வைத்தும்
அடை காத்தல் ஒன்றே செய்திட்டார்

உரையில் என்றால் மேய்ந்திடுவார் -
உரையில் உன்னத சிகரம் தொட முனைந்தால்
உரை நடை கூட உறைக்கா உலகில்
கவி மழை பெய்து பயன் என்ன?

உரை  நடை தானே என்றெண்ணி
என்னை பேச பதறிடுவார்
உன்னை பேச உதறிடுவார்

என் வாக்கில் நின்ற உனக்கே தான் வேலை தந்திட
நான் நினைந்து வரும் பொருள் உரைக்க முனைந்திட்டேன்.

பற்பல வழக்கில் முன்னுரைக்கே
பாரோர்  நல்ல தீர்ப்பு வழங்கிட்டார்
யாவும் உன்னருள் நானறிவேன்

இது ஒரு வழக்கில் மட்டும் தான்
சிக்கல் என்பது உருவாச்சு.

என் அகந்தை துடைக்க அம்மாவே
அதிரடி செய்ய இறங்கிவிட்டாய்.
என் நாவில் சற்றே உறங்கிவிட்டாய்.

காஞ்சனம் கையால் தொட்டபின்னே
கருமம் தொலைக்காதிருந்திட்டால்
பாவம் என்னை சூழாதோ?
பாவி உலகம் இகழாதோ?

காசும் பணமும் வந்திவனே நீர்த்தான் என்று நினைந்தாயோ?
புது நாடகம் ஒன்றை புனைந்தாயோ?

தாங்காதம்மா தாங்காது
இழி சொல்லை என் மனம் தாங்காது.

மக்கள் கூட்டம் எனை சூழ வரும் பொருள் என்பது
என் வியூகம்.
கூட்டம் பெருத்து எனை தொடர லட்சியம் சொல்வேன் சரியாகும்.

தொழில் என்றெண்ணி விலகினையோ - மனத்
தழல் தணிந்த  தென்றே தவிர்த்தனையோ

பாரத நாட்டில் பசியதுவே ஒழிந்தாலன்றி தணியாது
என் நெஞ்சம் வாழும் அத்தழலே

அருள்வாய் அம்மா அருள்வாயே
என் வாக்கில் வந்து அமர்வாயே.

ஓம் சக்தி.

Monday, January 4, 2010

ఇక్కడి వారు నన్ను కామ పిశాచిగా ,

అమ్మా అమ్మోరు తల్లి !
నేను నిన్ను ,నువ్వు నన్ను ఒకింత వరకు  అర్థం చేసుకున్నాం.
ఒక అవగాహణకు వచ్చాం.
అదేమంటే నిన్నర్థం చేసుకోవడం నా తరం కాదని
నన్నర్థం చేసుకోవడం నీకు అనవసరం అని

ఈ చేదు నిజాన్ని నేను జీర్ణించుకోకలుగుతున్నాను
కాలం నా యవ్వనాన్ని జీర్ణించి వేసాక

ఇక్కడి వారు నన్ను కామ పిశాచిగా ,
సెక్స్ మేనియాక్ గా ఫీలై పోతున్నారు.
నేనేదో నా సంత్రుప్తి కొరకు, నా తీట కొరకు
భూతులు వ్రాస్తున్నానని తెగ బాధ పడి పోతున్నారు
ఇక్కడ
నీ పాదాలు పట్టాక ఈ లోకం తీరు మరీ గిట్టక పోయింది నాకు
నా గురించి నేను చెప్పు కోవడమ్ ఎప్పుడో మానేసాను

Tuesday, October 27, 2009

இளமையின் இன்னிசை

உயிர்திரிக்கு வைக்கப்பட்ட நெருப்பு உயிர் குழி நோக்கி விரைகிறது
பாதி வயசு போயாச்சு
மீதி வயசு பாஞ்சாலி அரை சேலையாச்சு
அறியாமையும், அந்திச்சுகம் குறித்த அறிவுடைமையும்
பாதி ஆயுளை பருகியிருக்க
மரணத்தின் மணியோசை கேட்காவிடிலும்
இளமையின் இன்னிசை தேய்ந்து வருகிறது
காலனின் கருப்பு வாகனம் எனை நோக்கி பாய்ந்து வராவிடினும்
அரசு இயந்திரமாக வேனும் எனை நோக்கி நகர்வதை உணரமுடிகிறது

அறியாமை அரசாண்ட காலத்தில் கேள்விகளே இல்லை
பின் கேள்விகளே வேள்விகளாக நிம்மதி நிவேதனமாகி அதுவே கிடைத்தது
அவிர்பாகமாய்
அந்தி சுகம் குறித்த அறிவுடைமை மன முடிச்சுக்களில் இருந்து காத்திருப்பினும்
மரண முடிச்சை அவிழ்க்க கற்பிக்கவில்லை.
ஒரே கதை பாத்திரங்களும் அஃதே
அவற்றை ஏற்போரே வேறு
முதுகிழவனின் புலம்பல் போலே இதில்
இல்லையொரு மாற்றம்

ஏடெடுத்து பாடனுமோ பஞ்சப்பாட்டுதனை
ஓடெடுத்து வந்த சிவன் சீவன் குளிர்ந்திடவே
பசி தீர்த்த பாவையே
நின் மகளாம் மலர் மகளின் அருளெனக்கு தேவையே
நான் கேட்டு மறுத்ததில்லை என்றேனும் நீயே
நீ தரும் வரை பொருத்ததில்லை நானே
ஏனிந்த விளையாட்டு
எனை வளைத்துவிட்ட வறுமை தனை வாலை நீ வாட்டு
சங்கமேந்தும் வைஷ்ணவி நின் சாங்கத்தியம் கிட்டி விட்டால்
முடவனும் வென்றிடுவான் கைப்பந்து ஆட்டத்தில்
பாற்கடலில் பர்த்தாவின் பதம் பற்றும் பாவை பார்வை
பட்டவுடன் வெல்வானே
நொண்டியும் ஓட்டத்தில்

கையிருந்தும் முடமானேன்
உயிர்ப்பிருந்தும் ஜடமானேன்
காசு பணம் இல்லாது ஏசு ஜனம் பெருத்தாச்சு
பொன் மகளே பொறுமை விடு
பொறுக்கும் வரை பொறுத்தாச்சு
என்னிடத்தில் உண்டன்றோ
உனக்கோர் ராச பாட்டை
நேர் வழியில் சேர்ந்திடலாம்
நேர்மையாளர் பணப்பையில்
குறுக்கு பாதை குறுகலாமே
வழியெங்கும் நரகலாமே
அம்மா நான் ஏதுமில்லை
எனக்கிரு காதுமில்லை

ஊருலகம் பேசட்டும்
கல்லெடுத்து வீசட்டும்

நீ உண்டு நின் அருள் உண்டு
அது நீங்கிய கணம் தானே மனம் நிறைய மருள் உண்டு
அம்மா நான் கொதிக்கின்றேன்
என் பாட்டை பண்ணிதிலே பாங்குறவே பதிக்கின்றேன்

முன்னம் ஒரு தினமே அன்னையுனை போற்றிட்டேன்
பாமலை சாற்றிட்டேன்
ஆண்டிரண்டு போன வழி எனக்கின்னும் புரியலை
அன்றெழுந்த கோட்டை தானே இன்று வ்அரை சரியலே
அகழி வற்றியாச்சு
முதலைகள் செத்தாச்சு
மதில் சுவரே பிளக்குதடி
கோட்டை கதவிரண்டும் சன்னமாய் உளுக்குதடி

அம்மா நின் விழி மலர்ந்தால்
என் பொழுதுபுலர்ந்திடுமே
என் வறுமை நிலை மாற்றிவிடு இக்கணமே
நின் பாச பார்வை மாறலாமோ ஓர் கணமே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ

இளமையின் இன்னிசை

உயிர்திரிக்கு வைக்கப்பட்ட நெருப்பு உயிர் குழி நோக்கி விரைகிறது
பாதி வயசு போயாச்சு
மீதி வயசு பாஞ்சாலி அரை சேலையாச்சு
அறியாமையும், அந்திச்சுகம் குறித்த அறிவுடைமையும்
பாதி ஆயுளை பருகியிருக்க
மரணத்தின் மணியோசை கேட்காவிடிலும்
இளமையின் இன்னிசை தேய்ந்து வருகிறது
காலனின் கருப்பு வாகனம் எனை நோக்கி பாய்ந்து வராவிடினும்
அரசு இயந்திரமாக வேனும் எனை நோக்கி நகர்வதை உணரமுடிகிறது

அறியாமை அரசாண்ட காலத்தில் கேள்விகளே இல்லை
பின் கேள்விகளே வேள்விகளாக நிம்மதி நிவேதனமாகி அதுவே கிடைத்தது
அவிர்பாகமாய்
அந்தி சுகம் குறித்த அறிவுடைமை மன முடிச்சுக்களில் இருந்து காத்திருப்பினும்
மரண முடிச்சை அவிழ்க்க கற்பிக்கவில்லை.
ஒரே கதை பாத்திரங்களும் அஃதே
அவற்றை ஏற்போரே வேறு
முதுகிழவனின் புலம்பல் போலே இதில்
இல்லையொரு மாற்றம்

ஏடெடுத்து பாடனுமோ பஞ்சப்பாட்டுதனை
ஓடெடுத்து வந்த சிவன் சீவன் குளிர்ந்திடவே
பசி தீர்த்த பாவையே
நின் மகளாம் மலர் மகளின் அருளெனக்கு தேவையே
நான் கேட்டு மறுத்ததில்லை என்றேனும் நீயே
நீ தரும் வரை பொருத்ததில்லை நானே
ஏனிந்த விளையாட்டு
எனை வளைத்துவிட்ட வறுமை தனை வாலை நீ வாட்டு
சங்கமேந்தும் வைஷ்ணவி நின் சாங்கத்தியம் கிட்டி விட்டால்
முடவனும் வென்றிடுவான் கைப்பந்து ஆட்டத்தில்
பாற்கடலில் பர்த்தாவின் பதம் பற்றும் பாவை பார்வை
பட்டவுடன் வெல்வானே
நொண்டியும் ஓட்டத்தில்

கையிருந்தும் முடமானேன்
உயிர்ப்பிருந்தும் ஜடமானேன்
காசு பணம் இல்லாது ஏசு ஜனம் பெருத்தாச்சு
பொன் மகளே பொறுமை விடு
பொறுக்கும் வரை பொறுத்தாச்சு
என்னிடத்தில் உண்டன்றோ
உனக்கோர் ராச பாட்டை
நேர் வழியில் சேர்ந்திடலாம்
நேர்மையாளர் பணப்பையில்
குறுக்கு பாதை குறுகலாமே
வழியெங்கும் நரகலாமே
அம்மா நான் ஏதுமில்லை
எனக்கிரு காதுமில்லை

ஊருலகம் பேசட்டும்
கல்லெடுத்து வீசட்டும்

நீ உண்டு நின் அருள் உண்டு
அது நீங்கிய கணம் தானே மனம் நிறைய மருள் உண்டு
அம்மா நான் கொதிக்கின்றேன்
என் பாட்டை பண்ணிதிலே பாங்குறவே பதிக்கின்றேன்

முன்னம் ஒரு தினமே அன்னையுனை போற்றிட்டேன்
பாமலை சாற்றிட்டேன்
ஆண்டிரண்டு போன வழி எனக்கின்னும் புரியலை
அன்றெழுந்த கோட்டை தானே இன்று வ்அரை சரியலே
அகழி வற்றியாச்சு
முதலைகள் செத்தாச்சு
மதில் சுவரே பிளக்குதடி
கோட்டை கதவிரண்டும் சன்னமாய் உளுக்குதடி

அம்மா நின் விழி மலர்ந்தால்
என் பொழுதுபுலர்ந்திடுமே
என் வறுமை நிலை மாற்றிவிடு இக்கணமே
நின் பாச பார்வை மாறலாமோ ஓர் கணமே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ

Monday, August 3, 2009

பாறையில் விதைத்து அறுத்தவள் நீ

கணபதி கால் தொழுது கோள் நிலை
எதுவாயினும் என் கவிதை விதையாகி
ஆன்மீக பயிர் செழிக்க மாதமெலாம் தையாகி
எந்நாளும் வழி பிறக்க வேண்டி துவக்குகிறேன்
என் தாய் தாள் பணியும் பண்ணிதனை
அவள் அருள் என்றும் உண்டு
எவர்க்கும் உண்டு
அதை உணர்ந்திடத்தான் வேண்டும் பக்தி
அருள் இல்லை என்பதுவும்
இருள் மருட்டப்பார்க்குதென்றும்
இயம்புவது மடமையே
அவள் தந்ததல்லாது வேறென்ன உண்டு புவியில்
அவள் தாராதது என்னவரும் மானுடர் தம் வாழ்வில்
* * *

நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது புவிமிசை இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசா
நிலை தனை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நெகிழ்ந்தேனே
புவனேசி உனையே பலவாறாய் போற்றி போற்றி புகழ்ந்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

(கண்)ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
நிசியிலும் தேவி உனை நினைந்தே என்னுள் காண எனை அகழ்ந்தேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்

என் வறுமையை எரிக்க கோரி நின்றேன்
வறுமையை விட்டு
எனை எரித்தாய் எனினும்
சீவன் எனை நீ
சிவனாக்க பார்க்கின்றாய் என இறுமாந்தேன்
அம்மா உனை நான் நாடியபின்
பேடியை போலே கிடந்தாலும்
சிவசக்தியாக்கி மகிழ்ந்தாய் என்று
நெஞ்சம் நெகிழ்ந்தேன் உனை புகழ்ந்தேன்

தாயே! நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசாத
நிலை தன்னை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலிலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நினைத்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

கண்ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
இதையே நினைத்து மகிழ்ந்திட்டேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்


தாயே நீயென் வாழ்வினிலே
நிகழ்த்திய அற்புதம் பல நூறு (அவற்றை)
வைப்பேன் பாட்டில் ஒருவாறு
மொழியென் கையில் பொம்மையென இருந்தது அது ஒரு பொற்காலம்
இன்று தமிழின் கையில் பொம்மையென நான் கிடப்பது நிசமிது கற்காலம்
என்றே என் அகம் (ஈகோ) துடித்தாலும்
இதுவே முறையென ஒரு குரலே
குறளை போலே ஒலிக்குதடி

இதுவும் அம்மை அவளருளே
*ஏழ்மை இருளை அகற்றிடவே
என் தமிழை தாயவள் பறித்திட்டாள்.
மொழியுடன் இருந்த என் உறவை
ஆயிரம் விழியால் (ள்) அகற்றிட்டாள்.
(விளக்கம்: ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு இரண்டாமிடம் தான் தன,வாக்கு ஸ்தானமாகும். இந்த பாவம் பலகீனப்பட்டிருந்தால் ஒன்று கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அடிவாங்கும் அல்லது பத்து பைசாவுக்கெல்லாம் லாட்டரி அடிக்க வேண்டி வரும்)

படைப்பின் மருமம் அனைத்தையுமே
மகவென் கையில் கொடுத்திட்டாள்
மகனே இனியுன் சமர்த்தென்று மாதா அவளே எனை விட்டாள்
வார்த்தைகள்( ஊர்வல)மாய் வந்து வேண்டும் வாய்ப்பென கேட்டது அக்காலம்
வார்த்தை தேடி என் பேனா தயங்கி தளர்தல் இக்காலம்
கற்பகம் அவளின் அற்புதங்கள்
கனவிலும் மறவேன் பொற்பதங்கள்

யாவும் தமிழில் வைத்திடவே தனயன் என் மனம் துடிக்கையிலே
என் தமிழில் வந்தது தடுமாற்றம்
இதுவும் அன்னை அனுமதியால் விதி தேவதை செய்த மடை மாற்றம்

அவள் காட்டுவித்த அதிசயத்தை
நானறிந்த ரகசியத்தை
நற்றமிழில் சொல்ல வந்தேன்
நாயகி இன்னருளை வெல்ல வந்தேன்
தமிழன் என்பானுக்கே தாய்த்தமிழே தகராறு
என்னாச்சு வரலாறு
சுருங்கக்கூறிடத்தான் சுருக்கென்று தைத்திட்டேன்
சுவை கவிதை இங்கிதனை
சுவைத்தே சூரியராய் சுட்டிருப்பீர்
சுருண்டே தூங்குவோரை
உடைத்தே கூறுகிறேன்
நாமாரும் பிறரல்லோம் மகா வெடிப்பொன்றால்
ஒன்றிலிருந்தே வந்திட்டோம்
மீண்டும் இணைந்திடவே பருவுடல் தடையென்று
கொலை செய்தோம்
தற்கொலை செய்தோம்
பிணமுண்டோம், மிருக நிணம் உண்டோம்.
அகந்தை ஒன்றேதான் நாம் கூட தடையென்று உள்ளூற உணர்ந்திட்டு
ஒருவர் அகந்தையை மற்றொருவர் பழிக்கின்றோம்
உடன் அழிக்கின்றோம்.
மனிதர் நாமென நினைக்கின்றோம். நம் ஆடைக்குள் ஒரு மிருகம் தான் இருப்பதை தொடர்ந்து மறுக்கின்றோம். பசி கண்டால், பாழ் நிசி கண்டால் மிருகம் நம்மில் உயிர்க்குதடா
நாகரீக சுவரெல்லாம் நாலு நொடியில் தாக்கி பெயர்க்குதடா
கலவியில் நாளும் நடப்பதென்ன
மனக்கண்ணால் ஒரு தரம் பாருமய்யா..
வீரியம் அதுவே நழுவும்வரை ஆண்மகன் பெண்ணை கொல்லுகின்றான்.
வீரியம் அதுவே நழுவிவிட்டால் அவனை கொன்ற உணர்வாலே பெண்மகள் மகிழ்வே எய்துகிறாள்
கலவியில் இப்பணி சரிவரவே
நடவா நிலையில் ஈங்கிவரே பகலில் பிறரை கொல்லுகின்றார்.

பாறையில் விதைத்து அறுத்தவள் நீ

கணபதி கால் தொழுது கோள் நிலை
எதுவாயினும் என் கவிதை விதையாகி
ஆன்மீக பயிர் செழிக்க மாதமெலாம் தையாகி
எந்நாளும் வழி பிறக்க வேண்டி துவக்குகிறேன்
என் தாய் தாள் பணியும் பண்ணிதனை
அவள் அருள் என்றும் உண்டு
எவர்க்கும் உண்டு
அதை உணர்ந்திடத்தான் வேண்டும் பக்தி
அருள் இல்லை என்பதுவும்
இருள் மருட்டப்பார்க்குதென்றும்
இயம்புவது மடமையே
அவள் தந்ததல்லாது வேறென்ன உண்டு புவியில்
அவள் தாராதது என்னவரும் மானுடர் தம் வாழ்வில்
* * *

நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது புவிமிசை இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசா
நிலை தனை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நெகிழ்ந்தேனே
புவனேசி உனையே பலவாறாய் போற்றி போற்றி புகழ்ந்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

(கண்)ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
நிசியிலும் தேவி உனை நினைந்தே என்னுள் காண எனை அகழ்ந்தேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்

என் வறுமையை எரிக்க கோரி நின்றேன்
வறுமையை விட்டு
எனை எரித்தாய் எனினும்
சீவன் எனை நீ
சிவனாக்க பார்க்கின்றாய் என இறுமாந்தேன்
அம்மா உனை நான் நாடியபின்
பேடியை போலே கிடந்தாலும்
சிவசக்தியாக்கி மகிழ்ந்தாய் என்று
நெஞ்சம் நெகிழ்ந்தேன் உனை புகழ்ந்தேன்

தாயே! நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசாத
நிலை தன்னை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலிலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நினைத்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

கண்ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
இதையே நினைத்து மகிழ்ந்திட்டேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்


தாயே நீயென் வாழ்வினிலே
நிகழ்த்திய அற்புதம் பல நூறு (அவற்றை)
வைப்பேன் பாட்டில் ஒருவாறு
மொழியென் கையில் பொம்மையென இருந்தது அது ஒரு பொற்காலம்
இன்று தமிழின் கையில் பொம்மையென நான் கிடப்பது நிசமிது கற்காலம்
என்றே என் அகம் (ஈகோ) துடித்தாலும்
இதுவே முறையென ஒரு குரலே
குறளை போலே ஒலிக்குதடி

இதுவும் அம்மை அவளருளே
*ஏழ்மை இருளை அகற்றிடவே
என் தமிழை தாயவள் பறித்திட்டாள்.
மொழியுடன் இருந்த என் உறவை
ஆயிரம் விழியால் (ள்) அகற்றிட்டாள்.
(விளக்கம்: ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு இரண்டாமிடம் தான் தன,வாக்கு ஸ்தானமாகும். இந்த பாவம் பலகீனப்பட்டிருந்தால் ஒன்று கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அடிவாங்கும் அல்லது பத்து பைசாவுக்கெல்லாம் லாட்டரி அடிக்க வேண்டி வரும்)

படைப்பின் மருமம் அனைத்தையுமே
மகவென் கையில் கொடுத்திட்டாள்
மகனே இனியுன் சமர்த்தென்று மாதா அவளே எனை விட்டாள்
வார்த்தைகள்( ஊர்வல)மாய் வந்து வேண்டும் வாய்ப்பென கேட்டது அக்காலம்
வார்த்தை தேடி என் பேனா தயங்கி தளர்தல் இக்காலம்
கற்பகம் அவளின் அற்புதங்கள்
கனவிலும் மறவேன் பொற்பதங்கள்

யாவும் தமிழில் வைத்திடவே தனயன் என் மனம் துடிக்கையிலே
என் தமிழில் வந்தது தடுமாற்றம்
இதுவும் அன்னை அனுமதியால் விதி தேவதை செய்த மடை மாற்றம்

அவள் காட்டுவித்த அதிசயத்தை
நானறிந்த ரகசியத்தை
நற்றமிழில் சொல்ல வந்தேன்
நாயகி இன்னருளை வெல்ல வந்தேன்
தமிழன் என்பானுக்கே தாய்த்தமிழே தகராறு
என்னாச்சு வரலாறு
சுருங்கக்கூறிடத்தான் சுருக்கென்று தைத்திட்டேன்
சுவை கவிதை இங்கிதனை
சுவைத்தே சூரியராய் சுட்டிருப்பீர்
சுருண்டே தூங்குவோரை
உடைத்தே கூறுகிறேன்
நாமாரும் பிறரல்லோம் மகா வெடிப்பொன்றால்
ஒன்றிலிருந்தே வந்திட்டோம்
மீண்டும் இணைந்திடவே பருவுடல் தடையென்று
கொலை செய்தோம்
தற்கொலை செய்தோம்
பிணமுண்டோம், மிருக நிணம் உண்டோம்.
அகந்தை ஒன்றேதான் நாம் கூட தடையென்று உள்ளூற உணர்ந்திட்டு
ஒருவர் அகந்தையை மற்றொருவர் பழிக்கின்றோம்
உடன் அழிக்கின்றோம்.
மனிதர் நாமென நினைக்கின்றோம். நம் ஆடைக்குள் ஒரு மிருகம் தான் இருப்பதை தொடர்ந்து மறுக்கின்றோம். பசி கண்டால், பாழ் நிசி கண்டால் மிருகம் நம்மில் உயிர்க்குதடா
நாகரீக சுவரெல்லாம் நாலு நொடியில் தாக்கி பெயர்க்குதடா
கலவியில் நாளும் நடப்பதென்ன
மனக்கண்ணால் ஒரு தரம் பாருமய்யா..
வீரியம் அதுவே நழுவும்வரை ஆண்மகன் பெண்ணை கொல்லுகின்றான்.
வீரியம் அதுவே நழுவிவிட்டால் அவனை கொன்ற உணர்வாலே பெண்மகள் மகிழ்வே எய்துகிறாள்
கலவியில் இப்பணி சரிவரவே
நடவா நிலையில் ஈங்கிவரே பகலில் பிறரை கொல்லுகின்றார்.

Sunday, July 19, 2009

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதனிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது
அவர்கள் பாலரை பட்டினி போட்டு செய்தனர் பாலாபிஷேகம்

ஆனால் நீயோ ..... பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அஞ்சல் செய்து
மிஞ்சியதை கொட்டுங்கள்
வாங்கிக்கொள்வது சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும் அச்செயலின் பின்னான பாவமுமே முக்கியமென்றாய்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேலுலகின் அதிர்வுகள் உன்னை தீண்டாதபோது
தீண்டத்தகாதவனாய் நெஞ்சில் இருள் மண்டி இருந்ததுண்டு

அதிர்வுகள் துவங்கியதும் பகிர்வுகள் துவங்குவது வழக்கம்தானே
உன் கவிதை வரிகளின் இடைவெளிகளில் ஒலிப்பது ஓங்கார முழக்கம்தானே

உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைக்கும் மண்டூகங்கள் மண் மூடிப்போகும்
கண் மூடி ஆன்மக்கயிறு வீசி !
காளி ஆசி தனை யாசி !
காசியில் குடிபுகுந்தாலும் கருமம் தொலையாத கசடர்க்கும்சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோபீஷ்டம்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

பாவம் இவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் இவர்கள் உன் ஆணைகளை கெஞ்சலாக பார்க்கின்றனர்
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்
மரை கழன்ற மந்தர் தம் செவியில் மறையுணர்ந்த உன் உரை புகுமோ ?
மாவரைக்கும் க்ரைண்டர்களாய்
துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழண்டு கிடக்கின்றார்
ஸ்வர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவியால் காது குடையும்
முடை நாற்றம் பிடித்த இந்த கிடையில் உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத சோ (சொட்டை) தலையர்கள்
அரை ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே இவர்களை பாதிக்கின்றன.
ஊதும் சங்கை ஊதிவை !
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.. பழிக்கும் மந்தர் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

உன்னுள் உறை பரமனுக்கு முகமன் கூறி முத்தமிழ் கடலில் முத்தெடு ..
தமிழன்னை தாள் சேர்த்து கூத்திடு
இதழ்களை பூவாக்கு வலை சேர்த்து வலைப்பூவாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் என்று வைரவரிகள் சொல்லி
தழலை கெல்லியெறிந்து பொருளுக்காய் வாழ்க்கையை தொலைத்து
வீண புத்திரர்களாகிப்போன வாணி புத்திரர்களை மறந்து விடாதே
நெஞ்சக்கழலை துறந்து விடாதே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேகத்துக்கப்பாலிருந்து கொட்டும் வார்த்தைகளை வாங்கிவை
நினைவில் தேங்க வை
பண்ணில் பாட்டில் மானுடம் ஓங்கவை
நீயா எழுதுகிறாய்
பார் முழுக்க பல்லாயிரம் சாதியார்
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
படி எடுக்கும் பணியாள் நீ

ஈங்கிவர் ஆசை தனியார்
பரமனை பணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து
காத்தவன் இழப்பான் இழப்பவன் பெறுவான்
இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனித மனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கை உண்டு
இளமையில் முதுமை
எதிலும் இயலாமை

கருச்சுமக்க ஆள் தேடும் இவரே
கருவாக்கவும் தேடுவரே !
சகதியொத்த சங்கதி பல உண்டு
சக்தி இழந்து இவரே சிவனார் போலாகி
மணவாழ்வை மயானமாக்கிட்டார்

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாக சில வாக்கியம் கூறிவிட்டு
உன் இறை தேடி உன்னுள் இறங்கி விடுவாய்

வாழும் மாந்தரைப்பார் !
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை
முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல்தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேனும் எழுது
சமாகாலர்களின் சமாதிகளின் மீதாவது உன் கவிதைகள்
எச்சரிக்கை விளக்குகளாக ஒளிரட்டும்
நாளைய சமுதாயமேனு செழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

ஆகப்போவதென்ன ஆண்பிள்ளை அழுது புதிதாய்
சாகப்போவதென்ன மனிதமே செத்தபின்பு !

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதனிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது
அவர்கள் பாலரை பட்டினி போட்டு செய்தனர் பாலாபிஷேகம்

ஆனால் நீயோ ..... பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அஞ்சல் செய்து
மிஞ்சியதை கொட்டுங்கள்
வாங்கிக்கொள்வது சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும் அச்செயலின் பின்னான பாவமுமே முக்கியமென்றாய்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேலுலகின் அதிர்வுகள் உன்னை தீண்டாதபோது
தீண்டத்தகாதவனாய் நெஞ்சில் இருள் மண்டி இருந்ததுண்டு

அதிர்வுகள் துவங்கியதும் பகிர்வுகள் துவங்குவது வழக்கம்தானே
உன் கவிதை வரிகளின் இடைவெளிகளில் ஒலிப்பது ஓங்கார முழக்கம்தானே

உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைக்கும் மண்டூகங்கள் மண் மூடிப்போகும்
கண் மூடி ஆன்மக்கயிறு வீசி !
காளி ஆசி தனை யாசி !
காசியில் குடிபுகுந்தாலும் கருமம் தொலையாத கசடர்க்கும்சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோபீஷ்டம்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

பாவம் இவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் இவர்கள் உன் ஆணைகளை கெஞ்சலாக பார்க்கின்றனர்
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்
மரை கழன்ற மந்தர் தம் செவியில் மறையுணர்ந்த உன் உரை புகுமோ ?
மாவரைக்கும் க்ரைண்டர்களாய்
துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழண்டு கிடக்கின்றார்
ஸ்வர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவியால் காது குடையும்
முடை நாற்றம் பிடித்த இந்த கிடையில் உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத சோ (சொட்டை) தலையர்கள்
அரை ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே இவர்களை பாதிக்கின்றன.
ஊதும் சங்கை ஊதிவை !
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.. பழிக்கும் மந்தர் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

உன்னுள் உறை பரமனுக்கு முகமன் கூறி முத்தமிழ் கடலில் முத்தெடு ..
தமிழன்னை தாள் சேர்த்து கூத்திடு
இதழ்களை பூவாக்கு வலை சேர்த்து வலைப்பூவாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் என்று வைரவரிகள் சொல்லி
தழலை கெல்லியெறிந்து பொருளுக்காய் வாழ்க்கையை தொலைத்து
வீண புத்திரர்களாகிப்போன வாணி புத்திரர்களை மறந்து விடாதே
நெஞ்சக்கழலை துறந்து விடாதே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேகத்துக்கப்பாலிருந்து கொட்டும் வார்த்தைகளை வாங்கிவை
நினைவில் தேங்க வை
பண்ணில் பாட்டில் மானுடம் ஓங்கவை
நீயா எழுதுகிறாய்
பார் முழுக்க பல்லாயிரம் சாதியார்
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
படி எடுக்கும் பணியாள் நீ

ஈங்கிவர் ஆசை தனியார்
பரமனை பணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து
காத்தவன் இழப்பான் இழப்பவன் பெறுவான்
இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனித மனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கை உண்டு
இளமையில் முதுமை
எதிலும் இயலாமை

கருச்சுமக்க ஆள் தேடும் இவரே
கருவாக்கவும் தேடுவரே !
சகதியொத்த சங்கதி பல உண்டு
சக்தி இழந்து இவரே சிவனார் போலாகி
மணவாழ்வை மயானமாக்கிட்டார்

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாக சில வாக்கியம் கூறிவிட்டு
உன் இறை தேடி உன்னுள் இறங்கி விடுவாய்

வாழும் மாந்தரைப்பார் !
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை
முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல்தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேனும் எழுது
சமாகாலர்களின் சமாதிகளின் மீதாவது உன் கவிதைகள்
எச்சரிக்கை விளக்குகளாக ஒளிரட்டும்
நாளைய சமுதாயமேனு செழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

ஆகப்போவதென்ன ஆண்பிள்ளை அழுது புதிதாய்
சாகப்போவதென்ன மனிதமே செத்தபின்பு !