Wednesday, April 23, 2008
பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை உடலுறவில்
பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை உடலுறவில்
வீரியம், வீரியத்திலான எக்ஸ்,ஒய் அணுக்களின் மூலம் ஆண் நிர்ணயிக்கிறான் என்பது உயிரியல். பல்வேறு அம்சங்கள் இதை நிர்ணயிக்கின்றன என்பது என் வாதம். ஒரு வீட்டில் குடியேறி ஒன்றரை வருடங்கள் ஆன பின்பு அவ்வீட்டின் வாஸ்து ,மேற்படி தம்பதிகளின் உடலையும்,மனதையும் பாதிக்கின்றன. அவ்வீட்டில் ஈசான்ய திசை பள்ளமாகவும்,திறந்த வெளியாகவும், ஈரமானதாகவும் இருந்தால் ஆண் குழந்தை நிச்சயம். அதே போன்று ,ஒரு வீட்டின் நைருதி திசை முதல் வாரிசை காட்டுமிடம். இது உயர்ந்தும்,கதவு ஜன்னல் ஏதுமின்றியும் இருந்தால் தான் தலை வாரிசு ஏற்படும். இது ஒரு கோணம்.
இதே போன்று கிரகங்களில் ஆண்,பெண்,அலி நிர்ணயம் உள்ளது. மேலும் ராசிகளிலும் பால் வேறுபாடு உண்டு. ஆண் ராசிகளில்,ஆண் கிரகங்கள் வலிமையுடன் தங்கிய ஜாதகத்தில் பிறந்தவர்க்கு ஆண் குழந்தை நிச்சயம். அந்த கிரகங்கள் அந்த ஜாதகத்துக்கு யோக காரகர்களாகவோ, மித்திரர்களாகவோ இருக்க வேண்டும்.
மேலும் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் புத்திரகாரகரான குரு,புத்திரஸ்தானாதிபதி, வலிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த குரு ஐந்தில் இருப்பதோ,ஐந்தை பார்ப்பதோ கூடாது.
அசல் விஷயம் :
உடலுறவுக்கு உகந்த நாள் பெண் குளித்து (மாதவிலக்கான 5 நாட்கள் கழித்து)சுத்தமான பிறகு சந்திரோதயத்துக்கு பின்,ஆரூட லக்கினத்துக்கு ஐந்தில் ஆண் கிரகம் (குருவை தவிர) இருக்க உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் இது நிச்சயம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment