Saturday, October 31, 2009

எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி

ஆம். இந்திய எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி என்பதை மிக உறுதியாக சொல்லக்கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கடிதங்களுக்கும், இ மெயில்களுக்கும் பிரபலங்கள் பதில் தராமலிருப்பது சகஜமே (இந்தியாவில்). ஆனால் இந்திய எம்.பிக்களுக்கு நான் அனுப்பிய மெயில்களுக்கு மட்டும் " நோ சச் யூசர்" என்று பதில்வந்தது. இத்தனைக்கும் நான் மெயில் அனுப்பிய முகவரிகள் தனிப்பட்டவை அல்ல. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தரப்பட்டிருந்தவையே.

மனிதர்கள் போலி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்போது அவர்களின் மெயில் முகவரிகளும் டுபாக்கூர் என்பது செய்தி தானே. இத்தனைக்கும் நான் ஏன் அவர்களுக்கு மெயில வேண்டி வந்தது ?

நான் இந்திய திரு நாட்டை திருவோடு நாடு என்ற நிலையிலிருந்து திரு (லட்சுமி) வருள் பெற்ற நாடாக மாற்ற 1986 முதல் மண்டையை உடைத்துக்கொண்டு 1997 நவம்பரில் அதற்கு இறுதி வடிவம் கொடுத்தேன்.அதன் பெயர் ஆப்பரேஷன் இந்தியா 2000.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை எம்.பிக்களுக்கு வினியோகிக்கும்படி கோரி லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அவை என்ன கதியானது என்பதை எனது பழைய பதிவுகளில் தேடி படித்துக்கொள்ளவும்.

இப்பத்தான் எல்லாம் ஹைடெக் ஆயிருச்சே. மெயிலுக்கே தட்டினா போவுது என்று தான் மெயிலினேன். அப்பதான் " நோ சச் யூசர்"னு பதில் வந்தது. ஒருத்தர் ரெண்டு பேருக்கு அனுப்பினதுக்கு மட்டுமல்ல ஒரே ஒரு எம்.பி.யை தவிர அனைத்து எம்.பிக்களுக்கு அனுப்பின மெயிலுக்கும் இதுதான் பதில்

எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி

ஆம். இந்திய எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி என்பதை மிக உறுதியாக சொல்லக்கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கடிதங்களுக்கும், இ மெயில்களுக்கும் பிரபலங்கள் பதில் தராமலிருப்பது சகஜமே (இந்தியாவில்). ஆனால் இந்திய எம்.பிக்களுக்கு நான் அனுப்பிய மெயில்களுக்கு மட்டும் " நோ சச் யூசர்" என்று பதில்வந்தது. இத்தனைக்கும் நான் மெயில் அனுப்பிய முகவரிகள் தனிப்பட்டவை அல்ல. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தரப்பட்டிருந்தவையே.

மனிதர்கள் போலி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்போது அவர்களின் மெயில் முகவரிகளும் டுபாக்கூர் என்பது செய்தி தானே. இத்தனைக்கும் நான் ஏன் அவர்களுக்கு மெயில வேண்டி வந்தது ?

நான் இந்திய திரு நாட்டை திருவோடு நாடு என்ற நிலையிலிருந்து திரு (லட்சுமி) வருள் பெற்ற நாடாக மாற்ற 1986 முதல் மண்டையை உடைத்துக்கொண்டு 1997 நவம்பரில் அதற்கு இறுதி வடிவம் கொடுத்தேன்.அதன் பெயர் ஆப்பரேஷன் இந்தியா 2000.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை எம்.பிக்களுக்கு வினியோகிக்கும்படி கோரி லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அவை என்ன கதியானது என்பதை எனது பழைய பதிவுகளில் தேடி படித்துக்கொள்ளவும்.

இப்பத்தான் எல்லாம் ஹைடெக் ஆயிருச்சே. மெயிலுக்கே தட்டினா போவுது என்று தான் மெயிலினேன். அப்பதான் " நோ சச் யூசர்"னு பதில் வந்தது. ஒருத்தர் ரெண்டு பேருக்கு அனுப்பினதுக்கு மட்டுமல்ல ஒரே ஒரு எம்.பி.யை தவிர அனைத்து எம்.பிக்களுக்கு அனுப்பின மெயிலுக்கும் இதுதான் பதில்

தமிழுக்கு தடை விதிப்போம் : 2


தமிழுக்கு தடை விதிப்போம் : 2

1.தஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்று ஒரு அமைப்புள்ளது. இவர்கள் நாடெங்கிலும் மையங்கள் அமைத்து ( அவுட் சோர்ஸிங் மாதிரி) ஹிந்தி கற்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் வழங்குகிறார்கள். ( நான் கூட ப்ரவேஷிகா வரை தேறியுள்ளேன்) . இதே போன்று தமிழுக்காக தமிழக அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். (இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும்)

பயன்:
தமிழ் பரவும். இதர மொழியினர் பயில்வர். அப்போது அவர்கள் மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள், சிம்ப்ளிசிட்டி, டிஃபிக்கல்டி தெரிய வரும்.

அவர்கள் எழுத/பேச முன் வரும்போது தமிழ் புதுவடிவமெடுக்கும்.

அந்த மொழியில் உள்ள கலைச்செல்வங்கள் தமிழுக்கும், தமிழில் உள்ளவை அந்தந்த மொழிகளுக்கும் செல்லும்

இந்த அமைப்பு ஒரு 6 மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் அங்குள்ள தமிழ் மக்கள் அந்த மானிலத்தின் அரசியல்,இலக்கியம்,கலாச்சாரங்களை அறிந்து இரண்டற கலக்க முன்வரும் வகையில் மாதமிருமுறை பத்திரிக்கையும் நடத்தலாம். இதற்கு விஷயதானமும் மாணவர்களே கூட செய்ய வகை செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் "வாலும் தமிளர்கள் " தமிழ் கற்க வகை செய்யும் வகையில் சிறப்பு டிப்ளமோ படிப்புகளையும் வழங்கலாம்

மேற்சொன்ன அமைப்பில் தற்கால பத்திரிக்காசிரியர்கள்/ சீனியர் ஜர்னலிஸ்டுகள் மட்டும் இடம் பெற வேண்டும். தயவு செய்து ஆசிரியர்களை தவிர்க்கவும்
சில எச்சரிக்கைகள்:

குழம்பி (காபியாம்) ,அடி ரொட்டி (பரோட்டா) போன்ற விஷ பரீட்சைகளை தடை செய்யவும்

தூய தமிழ் என்று தம்பட்டம் அடித்தவாறு பேச்சுத்தமிழிலிருந்து விலகிவிடக்கூடாது.
அதே நேரம் பேச்சு தமிழ் எழுதுகிறேன் என்று ஆபாசத்துக்கோ ,கொச்சைக்கோ இறங்கி விடக்கூடாது (இதை ஆதித்தனார் கூட சொல்லியிருக்காருண்ணே)

நடை முறையில் இல்லாத ஐயன்மீர், அய்யகோ போன்ற பிரயோகங்களுக்கு தடை

ரஜினி,( வருமுடியுமானு கேட்டேல்ல தோ பார் வன்டேன்) விஜய காந்த் (தமில் நாட்ல வால்றவன்) போன்றவர்கள் டப்பிங் பேச தடை
கலைஞர் கவிதை ,கடிதம் எழுத தடை (அய்யய்யோ அந்த நடைய பார்த்தா எவனாச்சும் புதுசா தமிழ் படிக்க வருவானா)

அவசியமற்ற இடங்களில் எதுகை மோனை புகுத்த தடை

ஒரு வாக்கியத்தை பாரா அளவுக்கு எழுத தடை . ஆறு வார்த்தைக்கு மேல் ஒரு வாக்கியத்தில் இருக்க கூடாது.

தமிழில் சமையல், ஜோதிடம் (முக்கியமாய் ராசிபலன்), வாஸ்து, புராணம், வெளியிட தடை. (கு.ப. 5 வருடங்களுக்கு)

தன்னிலையிலான படைப்புகளில் தவிர வட்டார வழக்கு உபயோகிக்க தடை. படர்க்கையில் எழுதுகையில் மட்டும் கொட்டேஷனில் உபயோகிக்க அனுமதி.

எளிய தமிழில் செக்ஸ் எஜுகேஷன். அப்போதான் விகடன் மாதிரி "எழுச்சி" க்கு எழுதற வழக்கம் போகும்.

சிறுவர் இலக்கியம் செழிக்க வேண்டும். ஆனை,ஆட்டுக்குட்டி எல்லாம் ஓரங்கட்டி விட்டு பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதுவதை குறைத்து சிறுவர்கள் சிறுவர்களுக்கு எழுதும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

இதையெல்லாம் பட்டியலிட காரணம் தமிழன்னை பிச்சையெடுப்பாள் என்றுமல்ல. அவளை காப்பாற்றியே ஆகவேண்டும் என்றுமல்ல.

அவள் நித்ய கல்யாணி. ஆயிரமாயிரம் அன்னியர் படையெடுப்புகள், துபாஷிகளாக அவதரித்த பார்ப்பனர்களின் துரோகம் அனைத்தையும் மீறி பூத்து குலுங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்.

தாய் மொழியில் படித்து தாய் மொழியில் சிந்தித்து, தாய் மொழியில் எழுதமுடிந்தால் தான் கட்டக்கடைசி தமிழனின் மேதைமையும் இந்திய மறு கட்டமைப்புக்கு பயன்படும். தமிழன் உருப்படுவான். தமிழ் பேசும் விபச்சாரிகள் குறைவர்.

தமிழுக்கு தடை விதிப்போம் : 2


தமிழுக்கு தடை விதிப்போம் : 2

1.தஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்று ஒரு அமைப்புள்ளது. இவர்கள் நாடெங்கிலும் மையங்கள் அமைத்து ( அவுட் சோர்ஸிங் மாதிரி) ஹிந்தி கற்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் வழங்குகிறார்கள். ( நான் கூட ப்ரவேஷிகா வரை தேறியுள்ளேன்) . இதே போன்று தமிழுக்காக தமிழக அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். (இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும்)

பயன்:
தமிழ் பரவும். இதர மொழியினர் பயில்வர். அப்போது அவர்கள் மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள், சிம்ப்ளிசிட்டி, டிஃபிக்கல்டி தெரிய வரும்.

அவர்கள் எழுத/பேச முன் வரும்போது தமிழ் புதுவடிவமெடுக்கும்.

அந்த மொழியில் உள்ள கலைச்செல்வங்கள் தமிழுக்கும், தமிழில் உள்ளவை அந்தந்த மொழிகளுக்கும் செல்லும்

இந்த அமைப்பு ஒரு 6 மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் அங்குள்ள தமிழ் மக்கள் அந்த மானிலத்தின் அரசியல்,இலக்கியம்,கலாச்சாரங்களை அறிந்து இரண்டற கலக்க முன்வரும் வகையில் மாதமிருமுறை பத்திரிக்கையும் நடத்தலாம். இதற்கு விஷயதானமும் மாணவர்களே கூட செய்ய வகை செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் "வாலும் தமிளர்கள் " தமிழ் கற்க வகை செய்யும் வகையில் சிறப்பு டிப்ளமோ படிப்புகளையும் வழங்கலாம்

மேற்சொன்ன அமைப்பில் தற்கால பத்திரிக்காசிரியர்கள்/ சீனியர் ஜர்னலிஸ்டுகள் மட்டும் இடம் பெற வேண்டும். தயவு செய்து ஆசிரியர்களை தவிர்க்கவும்
சில எச்சரிக்கைகள்:

குழம்பி (காபியாம்) ,அடி ரொட்டி (பரோட்டா) போன்ற விஷ பரீட்சைகளை தடை செய்யவும்

தூய தமிழ் என்று தம்பட்டம் அடித்தவாறு பேச்சுத்தமிழிலிருந்து விலகிவிடக்கூடாது.
அதே நேரம் பேச்சு தமிழ் எழுதுகிறேன் என்று ஆபாசத்துக்கோ ,கொச்சைக்கோ இறங்கி விடக்கூடாது (இதை ஆதித்தனார் கூட சொல்லியிருக்காருண்ணே)

நடை முறையில் இல்லாத ஐயன்மீர், அய்யகோ போன்ற பிரயோகங்களுக்கு தடை

ரஜினி,( வருமுடியுமானு கேட்டேல்ல தோ பார் வன்டேன்) விஜய காந்த் (தமில் நாட்ல வால்றவன்) போன்றவர்கள் டப்பிங் பேச தடை
கலைஞர் கவிதை ,கடிதம் எழுத தடை (அய்யய்யோ அந்த நடைய பார்த்தா எவனாச்சும் புதுசா தமிழ் படிக்க வருவானா)

அவசியமற்ற இடங்களில் எதுகை மோனை புகுத்த தடை

ஒரு வாக்கியத்தை பாரா அளவுக்கு எழுத தடை . ஆறு வார்த்தைக்கு மேல் ஒரு வாக்கியத்தில் இருக்க கூடாது.

தமிழில் சமையல், ஜோதிடம் (முக்கியமாய் ராசிபலன்), வாஸ்து, புராணம், வெளியிட தடை. (கு.ப. 5 வருடங்களுக்கு)

தன்னிலையிலான படைப்புகளில் தவிர வட்டார வழக்கு உபயோகிக்க தடை. படர்க்கையில் எழுதுகையில் மட்டும் கொட்டேஷனில் உபயோகிக்க அனுமதி.

எளிய தமிழில் செக்ஸ் எஜுகேஷன். அப்போதான் விகடன் மாதிரி "எழுச்சி" க்கு எழுதற வழக்கம் போகும்.

சிறுவர் இலக்கியம் செழிக்க வேண்டும். ஆனை,ஆட்டுக்குட்டி எல்லாம் ஓரங்கட்டி விட்டு பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதுவதை குறைத்து சிறுவர்கள் சிறுவர்களுக்கு எழுதும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

இதையெல்லாம் பட்டியலிட காரணம் தமிழன்னை பிச்சையெடுப்பாள் என்றுமல்ல. அவளை காப்பாற்றியே ஆகவேண்டும் என்றுமல்ல.

அவள் நித்ய கல்யாணி. ஆயிரமாயிரம் அன்னியர் படையெடுப்புகள், துபாஷிகளாக அவதரித்த பார்ப்பனர்களின் துரோகம் அனைத்தையும் மீறி பூத்து குலுங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்.

தாய் மொழியில் படித்து தாய் மொழியில் சிந்தித்து, தாய் மொழியில் எழுதமுடிந்தால் தான் கட்டக்கடைசி தமிழனின் மேதைமையும் இந்திய மறு கட்டமைப்புக்கு பயன்படும். தமிழன் உருப்படுவான். தமிழ் பேசும் விபச்சாரிகள் குறைவர்.

Friday, October 30, 2009

தமிழுக்கு தடை விதிப்போம்

தமிழை கச்சா முச்சானு வளர்க்கனும்னா சின்ன வேலை செய்தா போதும். தமிழுக்கு தடைவிதிக்கனும். விபச்சாரம் தடை செய்யப்பட்டிருப்பதாலேயே எப்படி அது தழைக்கிறதோ அது போல் தமிழ் கற்க தமிழர்கள் தம் டீக்கடை பெஞ்சுகளையும் , தமிழ் பெண்கள் சீரியல்களையும் துறந்து தமிழ் கற்க முன் வருவார்கள் இப்படித்தான் இந்த பதிவை ஆரம்பிக்கனும். அப்பத்தான் என்னை திட்டவாவது கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு படிப்பாங்க..

1.முதலில் தமிழர்கள் தொழிலதிபர்களாக ,பணக்காரர்களாக வளர வேண்டும். தமது தொழில் தொடர்புகளை, வியாபார தொடர்புகளை தமிழிலேயே செய்ய வேண்டும். மேலும் த‌மிழிலிருந்து ஆங்கில‌த்திற்கு, ஆங்கில‌த்திலிருன்து த‌மிழுக்கு நொடிகளில் மொழி பெ‌ய‌ர்க்கும் சாஃப்ட் வேரை த‌யாரித்தாக‌ வேண்டும்.

2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அல‌ட்சிய‌த்தை காட்டிலும் எம‌ன் ஒரு மொழிக்கு வேறு ஏதுமில்லை என்று உறைக்கும்ப‌டி செய்ய‌ வேண்டும். எங்க‌ள் ஊரில் ம‌க்க‌ள் தெலுங்கு ப‌டிச்சா உட‌னே வேலை (?) என்ற‌ பிர‌மையில் த‌ங்க‌ள் வாரிசுக‌ளை தெலுங்கில் போட‌ ஆர‌ம்பித்தார்க‌ள். இப்போ நிறைய‌ ப‌ள்ளிக‌ளில் த‌மிழ் செக்ஷ‌னே மூட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது


3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர் சொற்களை அப்படியே உபயோகிக்க வேண்டும்.

4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.விதிக‌ள் எத்த‌னை எளிமையாக‌ இருந்தால் அத்த‌னை பேர் அதை பின்ப‌ற்ற‌ விரும்புவார்க‌ள்.


5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு ஏற்கெனவே சொன்னபடி உலகத்தரம் வாய்ந்த கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை ம‌ட்டுமே தொட‌ர்பு மொழியாக‌ உப‌யோகிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பொறுக்கி என்ற‌ பெய‌ர் த‌மிழ் பெய‌ர் என்ப‌த‌ற்காக‌ ஒரு திரைப்ப‌ட‌த்துக்கே வ‌ரி வில‌க்கு வ‌ழ‌ங்கும் போது த‌மிழை தொட‌ர்பு மொழியாக‌ கொண்ட‌ நிறுவ‌ன‌த்துக்கு த‌ருவ‌தில் த‌வ‌றே இல்லை.

6.ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்ப‌தில் வ‌ளையாது..என‌வே ம‌ழ‌லைய‌ர் வ‌குப்பிலிருந்தே த‌மிழ் க‌ட்டாய‌மாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். மொழி என்ப‌து வாழ்க்கைப் போராட்ட‌த்தில் ஒரு ஆயுத‌மாக‌,உண‌வைப் பெற்றுத்த‌ரும் தூண்டிலாக‌ செய‌லாற்றும் சூழ‌ல் அர‌சு நிர்வாக‌ம்,நிதி அமைப்புக‌ள், வியாபார‌ம், ச‌மூக‌ம்,அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும்.

7.த‌மிழில் நாளிதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்புக‌ள் அனைத்திலும் தேடி ப‌டிப்ப‌த‌ற்கான‌ டேட்டா பேஸ் ஒன்று ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.

8.த‌மிழில் உள்ள‌ ஞான‌ செல்வ‌த்தை உட‌ல் ந‌ல‌ம்,நிதி நிர்வாக‌ம்,நீதி நிர்வாக‌ம், இப்ப‌டி த‌லைப்பு வாரியாக‌ தேடி,ப‌டித்து ம‌கிழ‌வும் வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.

9.இத‌ற்காக‌ குளோப‌ல் டெண்ட‌ர் அழைத்து அர‌சு சாரா அமைப்பு ஒன்றை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் போதனை,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலைய‌ங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அத‌ன் பொறுப்பில் விடலாம். இத‌ற்கான‌ நிதியாதார‌த்தை ப‌ல‌ வ‌கைக‌ளில் ஏற்ப‌டுத்த‌லாம். (உ.ம் ) த‌னித் த‌மிழை காற்றில் விட்டு ச‌க‌ட்டு மேனிக்கு க‌ல‌ப்ப‌ட‌ம் செய்யும் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,அர‌சுத் துறைக‌ள்,த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள்,க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ன் மூல‌ம்

10.குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு அர‌சு விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இத‌ர‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளியிட‌ சுய‌த‌டை விதித்துக் கொண்டு முன்ன‌ர் கூறிய‌ அர‌சு சாரா நிர்வாக‌த்தின் கீழ் வெளிவ‌ரும் ப‌த்திரிக்கையில் ம‌ட்டும் வெளியிட்டாலே போதும். அந்த‌ ப‌த்திரிக்கையை சில‌ கால‌த்திற்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்,ரேஷ‌ன் க‌டைக‌ள் மூல‌ம் இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்க‌ வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு பிர‌ப‌ல‌த்தைக் கொண்டே அதை வெளியிட்டாலும் ந‌ல்ல‌தே..

11. உலகெங்கிலும் வாழும் எந்த‌ த‌மிழ‌னும் ட்யூட்ட‌ர் கிடைக்க‌வில்லை என்று த‌ன் வாரிசை வேறு மொழியில் ப‌யிற்றுவிக்க‌ கூடாது

தமிழுக்கு தடை விதிப்போம்

தமிழை கச்சா முச்சானு வளர்க்கனும்னா சின்ன வேலை செய்தா போதும். தமிழுக்கு தடைவிதிக்கனும். விபச்சாரம் தடை செய்யப்பட்டிருப்பதாலேயே எப்படி அது தழைக்கிறதோ அது போல் தமிழ் கற்க தமிழர்கள் தம் டீக்கடை பெஞ்சுகளையும் , தமிழ் பெண்கள் சீரியல்களையும் துறந்து தமிழ் கற்க முன் வருவார்கள் இப்படித்தான் இந்த பதிவை ஆரம்பிக்கனும். அப்பத்தான் என்னை திட்டவாவது கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு படிப்பாங்க..

1.முதலில் தமிழர்கள் தொழிலதிபர்களாக ,பணக்காரர்களாக வளர வேண்டும். தமது தொழில் தொடர்புகளை, வியாபார தொடர்புகளை தமிழிலேயே செய்ய வேண்டும். மேலும் த‌மிழிலிருந்து ஆங்கில‌த்திற்கு, ஆங்கில‌த்திலிருன்து த‌மிழுக்கு நொடிகளில் மொழி பெ‌ய‌ர்க்கும் சாஃப்ட் வேரை த‌யாரித்தாக‌ வேண்டும்.

2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அல‌ட்சிய‌த்தை காட்டிலும் எம‌ன் ஒரு மொழிக்கு வேறு ஏதுமில்லை என்று உறைக்கும்ப‌டி செய்ய‌ வேண்டும். எங்க‌ள் ஊரில் ம‌க்க‌ள் தெலுங்கு ப‌டிச்சா உட‌னே வேலை (?) என்ற‌ பிர‌மையில் த‌ங்க‌ள் வாரிசுக‌ளை தெலுங்கில் போட‌ ஆர‌ம்பித்தார்க‌ள். இப்போ நிறைய‌ ப‌ள்ளிக‌ளில் த‌மிழ் செக்ஷ‌னே மூட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது


3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர் சொற்களை அப்படியே உபயோகிக்க வேண்டும்.

4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.விதிக‌ள் எத்த‌னை எளிமையாக‌ இருந்தால் அத்த‌னை பேர் அதை பின்ப‌ற்ற‌ விரும்புவார்க‌ள்.


5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு ஏற்கெனவே சொன்னபடி உலகத்தரம் வாய்ந்த கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை ம‌ட்டுமே தொட‌ர்பு மொழியாக‌ உப‌யோகிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பொறுக்கி என்ற‌ பெய‌ர் த‌மிழ் பெய‌ர் என்ப‌த‌ற்காக‌ ஒரு திரைப்ப‌ட‌த்துக்கே வ‌ரி வில‌க்கு வ‌ழ‌ங்கும் போது த‌மிழை தொட‌ர்பு மொழியாக‌ கொண்ட‌ நிறுவ‌ன‌த்துக்கு த‌ருவ‌தில் த‌வ‌றே இல்லை.

6.ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்ப‌தில் வ‌ளையாது..என‌வே ம‌ழ‌லைய‌ர் வ‌குப்பிலிருந்தே த‌மிழ் க‌ட்டாய‌மாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். மொழி என்ப‌து வாழ்க்கைப் போராட்ட‌த்தில் ஒரு ஆயுத‌மாக‌,உண‌வைப் பெற்றுத்த‌ரும் தூண்டிலாக‌ செய‌லாற்றும் சூழ‌ல் அர‌சு நிர்வாக‌ம்,நிதி அமைப்புக‌ள், வியாபார‌ம், ச‌மூக‌ம்,அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும்.

7.த‌மிழில் நாளிதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்புக‌ள் அனைத்திலும் தேடி ப‌டிப்ப‌த‌ற்கான‌ டேட்டா பேஸ் ஒன்று ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.

8.த‌மிழில் உள்ள‌ ஞான‌ செல்வ‌த்தை உட‌ல் ந‌ல‌ம்,நிதி நிர்வாக‌ம்,நீதி நிர்வாக‌ம், இப்ப‌டி த‌லைப்பு வாரியாக‌ தேடி,ப‌டித்து ம‌கிழ‌வும் வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.

9.இத‌ற்காக‌ குளோப‌ல் டெண்ட‌ர் அழைத்து அர‌சு சாரா அமைப்பு ஒன்றை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் போதனை,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலைய‌ங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அத‌ன் பொறுப்பில் விடலாம். இத‌ற்கான‌ நிதியாதார‌த்தை ப‌ல‌ வ‌கைக‌ளில் ஏற்ப‌டுத்த‌லாம். (உ.ம் ) த‌னித் த‌மிழை காற்றில் விட்டு ச‌க‌ட்டு மேனிக்கு க‌ல‌ப்ப‌ட‌ம் செய்யும் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,அர‌சுத் துறைக‌ள்,த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள்,க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ன் மூல‌ம்

10.குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு அர‌சு விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இத‌ர‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளியிட‌ சுய‌த‌டை விதித்துக் கொண்டு முன்ன‌ர் கூறிய‌ அர‌சு சாரா நிர்வாக‌த்தின் கீழ் வெளிவ‌ரும் ப‌த்திரிக்கையில் ம‌ட்டும் வெளியிட்டாலே போதும். அந்த‌ ப‌த்திரிக்கையை சில‌ கால‌த்திற்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்,ரேஷ‌ன் க‌டைக‌ள் மூல‌ம் இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்க‌ வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு பிர‌ப‌ல‌த்தைக் கொண்டே அதை வெளியிட்டாலும் ந‌ல்ல‌தே..

11. உலகெங்கிலும் வாழும் எந்த‌ த‌மிழ‌னும் ட்யூட்ட‌ர் கிடைக்க‌வில்லை என்று த‌ன் வாரிசை வேறு மொழியில் ப‌யிற்றுவிக்க‌ கூடாது

Thursday, October 29, 2009

కొండా సురేఖా రాజినామా ఆదిష్ఠానానికి చెంపపెట్టు


అవును రాష్ఠ్ర మంత్రి కొండా సురేఖా తమ రాజినామాను ఏకంగా గవర్నరుకు సమర్పించారు.
వై.ఎస్. మరణానంతరం చోటు చేసుకున్న వివిధ పరిణామాలతో సురేఖ ఇదివరకే రోశయ్య అనాయకత్వంలో ఇమడలేనని చెప్పిన మాట వాస్తవమే. కాని జగన్ సోనియా భేటి అనంతరం కాస్త మనస్సు గట్టి చేసుకుని మరి ఉన్న సురేఖను మీడియా రెచ్చ కొట్టిందిమాట మార్చిన సురేఖా అని హెడ్డింగులు పెట్టి మరి వ్రాసారు. డా.వై.ఎస్. ఉన్నంత కాలం ఆయన మోచేతి నీరు త్రాగి బ్రతికిన వారు నేడు తమ స్వంత భలంతో నెగ్గామని బీర వచనాలు పలుకుతుంటే సురేఖవంటి సునిత మనస్కురాలు ఎంత బాధ పడి ఉందేదో మనమే ఊహించుకోవచ్చు.

స్త్రీ మూర్తిలోని త్యాగం, అమ్మతనమే మూర్తిభవించిన సురేఖ రాజకీయంగా వదులుకున్నది ఒక్క పదవే కావచ్చు. కాని తఠస్థులు సైతం ఆమె త్యాగానికి తలవంచక తప్పదు.

ఒక మనిషి బ్రతికి ఉండగానే తిన్నింటి వాసాలు లెక్క పెట్టే ఘనులున్న రోజుల్లో (ఉ. చంద్రబాబు) వై.ఎస్. మరణానంతరం కూడ ఆయన పట్ల గౌరవంతో ఇంతటి సాహసానికి దిగిన సురేఖలో నాటి ఝాన్సి లక్ష్మి కనిపిస్తుంది.

ఎవరితోను సంప్రదించకుండానే ఈ నిర్ణయం తీసుకున్నట్టు ఆమె చెప్పినప్పటికి దానిని చిన్న పిల్లలు సైతం నమ్మరు. పోని ఇంత కాలానికి జగన్ బాబులో ఈ తెగింపు రావడం హర్షణీయం.
రోశయ్యా ! నువ్వు దిగి పోయే ఘడియలు దగ్గర్లోనే.

వై.ఎస్.పేరు చెప్పి, వై.ఎస్. మానవీయ పథకాలతో ,సాక్షి టి.వి, దినపత్రికలు కూడ పెట్టిన మద్దత్తుతో కేవలం 1 శాతం ఓట్ల తేడాతో ఎం.ఎల్.ఏలై మంతౄలైన వారంతా రాజినామా చేస్తే వారి పేర్లు కూడ చరిత్రలో నిలిచి పోతాయి.

లేకుంటే చంద్రబాబు ఎలా అన్ పాపులర్ అయ్యారో, ఎలా విశ్వసనీయతను పోగొట్టుకునారో ఆ దుస్థితి వీరికి కూడ తప్పదు

ஆவிகள் இருப்பது உண்மையா? ,



ஆவிகள் இருப்பது உண்மையா? ,

இந்த பதிவில் ஆவிகள் இருப்பது உண்மையா? என்ற விஷயம் பற்றியும், செக்ஸ் லைஃப் மட்டும் சரியாக திட்டமிடப்படுமானால் தலையெழுத்துக்கே டேக்கா கொடுக்கலாம் என்பது பற்றியும் விவரித்துள்ளேன். ஆவிகள் உங்கள் லட்சியப்போராத்தில் துணை நிற்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ! உங்கள் லட்சியத்தில் உறுதியாக நிற்பது

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.


கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ....ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.


ராத்திரிகள் வந்து விட்டால்


நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் "ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது
அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் "எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு" என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே " ஆதலினால் காதல் செய்வீர் காதலினால் கலவி உண்டாம்
கவலைகள் போம்

ஆவிகள் இருப்பது உண்மையா? ,



ஆவிகள் இருப்பது உண்மையா? ,

இந்த பதிவில் ஆவிகள் இருப்பது உண்மையா? என்ற விஷயம் பற்றியும், செக்ஸ் லைஃப் மட்டும் சரியாக திட்டமிடப்படுமானால் தலையெழுத்துக்கே டேக்கா கொடுக்கலாம் என்பது பற்றியும் விவரித்துள்ளேன். ஆவிகள் உங்கள் லட்சியப்போராத்தில் துணை நிற்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ! உங்கள் லட்சியத்தில் உறுதியாக நிற்பது

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.


கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ....ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.


ராத்திரிகள் வந்து விட்டால்


நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் "ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது
அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் "எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு" என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே " ஆதலினால் காதல் செய்வீர் காதலினால் கலவி உண்டாம்
கவலைகள் போம்

Wednesday, October 28, 2009

எமன் Vs மேன்

சின்னவயதில் நான் படித்த மாயாஜாலக்கதைகளின் எச்சம் இன்னும் என் அடி மனதில் இருந்ததா? விட்டலாச்சார்யாவின் படங்கள் தான் ஆழமான முத்திரையை போட்டுவிட்டனவா தெரியாது. பூமியில் கால் பாவாத சமாச்சாரங்கள் என்றால் இப்போதும் ஒருவித கிளு கிளுப்பு இருக்கிறது.

நான் ஜோதிடத்தின் மர்மங்களை ப்ளாஸ்ட் செய்யவும், ஆன்மீகத்திலான குழப்பங்களை ,குளறுபடிகளை மீறி தெளிவை பெறவும், மூன்றே மாதங்களில் கணிணியை இயக்க கற்கவும், எனக்கு கு.ப.அறிமுகம் கூட இல்லாத வேலைகளையும் குன்ஸிலேயே செய்து முடிக்கவும் (சில நேரம் அவற்றில் எக்கு தப்பாய் மாட்டி முழித்ததும் கூட உண்டு) சில அமானுஷ சக்திகள் உதவியதாகவே நம்பும் ஆசாமி நான்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து சந்தித்த பால்ய நண்பன் ஒருவன் பாபா படம் கணக்காய் ஒரு மந்திரத்தை கொடுத்து இதை ஒரு லட்சம் முறை ஜபித்தால் ஆத்மா உடலிலிருந்து பிரியும். நீ நினைத்த இடத்துக்கு போகலாம் என்று கூறியதையும், நான் ஜெபிக்க ஆரம்பித்ததையும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாக கருததேவையில்லை என்றே கருதுகிறேன்.

மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்த 10 ஆவது நாளான நேற்று நள்ளிரவு மேற்படி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்த போது உண்மையிலேயே
கலவரம் வெடித்தே விட்டது. திடீர் என்று வலது மார்பில் ஊசி குத்துவது போன்ற வலி துவங்கியது. "என்னங்கடா இது ஹார்ட் லெஃப்ட் சைட்லதான இருக்கும். 1987 ல யிருந்து 22 வருசமா போட்ட தம் இப்படி வேலை செய்யுதா? ஒரு வேளை ரமண மகரிஷி சொன்னமாதிரி வலப்பக்கம் இருக்கிற ஆன்மீக இதயத்துலதான் கலாட்டா நடக்குதா? ஒரு வேளை வாயு கோளாறா இருக்குமோ? இல்லையே இன்னைக்கு ராத்திரி 8.30க்கெல்லாம் சாப்பிட்டுட்டு ஜிண்டாக் கூட போட்டாச்சே" இத்தனை யோசனைகள் ஒரே நொடியில் சீறிக்கிளம்பினாலும் ஒரு ட்ராக்கில் மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது.

ஊசிக்குத்தலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. "தாளி என்னதான் நடக்குது பார்ப்போம்" என்று மந்திர ஜபத்தை உக்கிரமாக்கினேன். கடந்த காலத்தில் என்னென்ன மந்திரங்கள் ஜெபித்தேன் அவை எப்படியெல்லாம் பலன் கொடுத்தன என்பதை ஒரு முறை ஒட்டிப்பார்த்தபடி மந்திரத்தை ஓட்டிக்கொண்டே இருந்தேன்.

வாயு கோளாறு இருப்பவர்கள் உடலில் வாய் நகர்வதை உணர முடிவது போல் ஊசிக்குத்து நகர்வதை உணர முடிந்தது. மெல்ல கழுத்து ,தொண்டை என்று நகர்ந்த ஊசிக்குத்து நடு நெற்றியில் சென்று முட்ட ஆரம்பித்தது. டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றிக்கொண்டு லேசாக பீச்சிப்பார்ப்பாரே அதை போல் நடு நெற்றி ஸ்தானத்து ஊசி எதையோ பீச்சியது.

அவ்வளவுதான்.ஆறுமணி நேரம் ஒன் பாத்ரூம் அடக்கி வச்சிருந்து விடும்போது உடம்பு சிலிர்க்குமே அதுமாதிரி சிலிர்த்துப்போச்சு. பீக் ஹவர்ல சிட்டி பஸ் நெரிசல்லருந்து விடுபட்டு நம்ம ஏரியா பஸ் ஸ்டாப்ல உதிர்வோமே அப்படி ஒரு ஃபீலிங். நான் சவாசனத்தில் படுத்திருந்த என்னை பார்க்க முடிந்தது. குளிர். தாங்க முடியாத குளிர் . இதெல்லாம் கனவானு ஒரு சம்சயம். குளிருக்கு இதமா ஒரு தம் போடலாம்னு பார்த்தா கை துழாவுதே தவிர காத்துதான் கிடக்குது.

மந்திரம் மட்டும் தொடருது. சில நிமிடங்கள் கழிச்சு புரிஞ்ச்சுக்கிட்டேன். மந்திரம் ஒர்க் அவுட் ஆயிருச்சு. பாடிலருந்து வெளிய வந்தாச்சு. இப்ப எங்கே போலாம். அந்த சமயம் பார்த்து முண்டகோபனிஷத் ஞா. வந்தது. எத்தனையோ தமிழ் படங்கள்ள பார்த்த எமனை ஒரு தடவை பேட்டி எடுத்து ப்ளாக்ல வச்சா எப்பயிருக்கும்? நினச்சதுதான் தாமதம் எமலோகம். பாவம் எமதர்மர் ரெஸ்ட்ல இருக்காரு. பக்கத்துல அவுங்க சம்சாரம் ஒரு ஓரமா ஒண்டியிருக்கு.

இதென்னடா லொள்ளுனு வெளிய வந்து குரல் கொடுத்தேன். எமதர்மர் பெரிய கோட்டாவியோட வந்து கதவை திறந்தார்.

"ஏய் யார் நீ இந்த நேரத்துல வந்திருக்கே..உன்னை யாரு கொண்டு வந்தது?"
"சே .. நான் என்ன எலும்பு துண்டா யாரோ கொண்டாந்து போட , நமக்கு பூலோகம், ச்சும்மா உங்களை ஒரு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன்"
எமன் தலைக்குள்ள ஸ்டாருங்க. " நம்பவே முடியலை எப்படி வந்தேப்பா"
இந்த கதையின் முதல் அத்யாயத்தை சொன்னேன்.

"தபாரு இப்படியெல்லாம் அகாலத்துல ,சாகறதுக்கு முந்தி இங்கே வரக்கூடாது. உன் வீட்ல வேற எலித்தொல்லை ஜாஸ்தி . முக்கியமான எதையாவது கடிச்சு வச்சுரபோவுது. "

"கடிச்சா கடிச்சுட்டு போவுது ஆந்திரால ஆரோக்கிய ஸ்ரீ ப்ளான் இருக்கு தெரியுமா? வேற ஒன்னு வச்சிக்குவன்"

"என்னடா இது தலைவலியா போச்சு..பேட்டில்லாம் முடியாது . மேலிடத்துல பர்மிஷன் வாங்கனும். ஆஃப்தி ரிக்கார்டா வேணும்னா பதில் சொல்றேன்"

"அஸ்கு புஸ்கு இவ்ளோ தூரம் வந்துட்டு ஆஃப் தி ரிக்கார்டு பதில் எல்லாம் வாங்கிகினு போமுடியாது தலை ! வேணம்னா டேக் யுவர் ஓன் டைம் . அதுவரைக்கும் ச்சும்மா டைம்பாஸ் பண்ணிக்கிறேன்"

இவன் என்னடா சேல்ஸ் ரெப் கணக்கா இருக்கானே என்றோ என்னவோ எமன் டெலிப்பத்தியில் மும்மூர்த்திகளுடன் பேசினார். பிறகு "சரிபா ..பெர்மிஷன் க்ரேண்ட்டட் கேள்விய கேளூ" என்றார்.

"ஆன் வாட் க்ரவுண்ட்ஸ் பர்மிஷன் க்ரேண்ட்டட். உன் ப்ளாக் சரியான லொடக்கானி ப்ளாகுனு மிஸ்டர் சிவா சொன்னார். ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் கூட பார்க்கறதில்லயாமே..அதுல வேற உன் ப்ளாக் 12 ஆவது ரேங்குல இருந்து ஜீரோ ரேங்குக்கு விழுந்துருச்சாமே"
"அட பாவிகளே.. பேட்டி குடுக்குறவன் நிறைய பேர் படிக்கனும்னு ஆசைப்படுவான். இதென்ன உட்டாலக்கடியா இருக்குது"
"இதெல்லாம் தேவரகசியம்பா நீ பத்தாங்கிளாஸ் கொஸ்டியன் பேப்பர் மாதிரி அவுட் பண்ணிட்டா கமிஷன் போட்ருவாங்கப்பா..தலைவலி"
"சார் !தமிழ் தெலுங்கு சினிமாலல்லாம் பார்த்தப்ப ஆள் நல்லா ஸ்டவுட்டா இருந்திங்க இப்ப என்ன வெயிட்லாஸ் ட் ரீட்மெண்ட்லைருக்கிங்களா.. அதெல்லாம் வேணா சார் ரிஸ்கு "
"அட போப்பா .. நீ வேற சும்மா லொள்ளு பண்ணிக்கிட்டு என்னை பார்த்தவன் எவன்? ஏதோ அவனவனுக்கு தோணின மாதிரி காட்டி உட்டுட்டான்"
"அ..ச்சும்மா வுடாத தலை எங்க வாத்தியாரு நான் செத்து பிழைச்சவண்டா நு பாட்டெல்லாம் பாடியிருக்காரு"
"என்ன நீ பாதிராத்திரி பேட்டினு வந்து ஒதகாத விஷயம்லாம் கேட்டுக்கிட்டிருக்கே"
"சரி சார் . சீரியஸ் "
"அப்போ சி.எம்.சிக்கு போயா"
"பார்த்தியா என்னை சீரியஸ்னுட்டு இப்ப நீங்களே ஜோக் கட் பண்றிங்க"
"ஆமா அது பர்த்டே கேக்கு கட் பண்றேன்/ எல்லாம் சகவாச தோஷம் தான். பன்னியீட சேர்ந்த கன்னும் கதை"
"ஏன் பூவோட சேர்ந்த நாரும் கதையா இருக்க கூடாதா"
"எப்பா நீ கேட்க வேண்டியத கேட்டுட்டு போ.."
"சரி போன ஜென்மத்துல என் கிட்ட பத்து ரூபா கை மாத்து வாங்கிகினிங்களே அதை குடுங்க"
"அய்யயோ என்ன விட் ருப்பா"
"அந்த பயம் இருக்கட்டும். அந்த நாள்ள நசிகேதனை சத்தாச்ச மாதிரியெல்லாம் வெண்டைக்கா பதில் தரக்கூடாது. பாயிண்ட் டு பாயிண்ட் பதில் வரனும் சரியா"
"சரிப்பா"
" இந்த படைப்பு எப்படி ஆரம்பமாச்சு"
"இதுக்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. படார்னு ஒரு வெடி. அந்த அதிர்வுல ஒரு பக்கம் விரிவடைஞ்சுட்டே போகுது. மறுபக்கம் சுருங்கிகிட்டே போகுது"
"இத மாதிரி பீலா விடறதாலதான் பெரியார் வாங்கு வாங்குனு வாங்கினாரு"

"யாரோ வைவாங்கனு உண்மைய மாத்தி சொல்லமுடியுமா என்ன? பெரியார் காலத்துல ஐயருங்க கடவுளை வச்சு மனுஷங்களை பிரிச்சாங்கப்பா ..பிரிச்சவங்களை படிக்க விடாம ,முன்னேற வுடாம தடுத்தாங்கப்பா. அவன் உயிரும் என் மயிரும் ஒன்னுன்னு பேசினாங்க. இதுக்கெல்லாம் மூலம் கடவுள்ன்ற கான்செப்டு தானே அதுவே பெரிய பொய் போடா பொங்கினு பெரியார் ஒரே அடியா அடிச்சார். கடவுளைபத்தி தெரியாதவன் , கடவுளோட தொடர்பில்லாதவன், அப்படி
நெத்தியடி அடிக்க முடியுமா என்ன ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மானவ சேவா மாதவ சேவா இதெல்லாம் தெரியாதா என்ன? "

"சரி ஓஞ்ச்சு போவட்டும். இந்த படைப்பு கான்ஸ்டன்டா இருக்குன்றிங்க"

"ஆமாம் பா"

"சரி இதுல பிறப்பும் இறப்பும் எப்படி நடக்குது/"

"கூச்சமா கீதுப்பா "
"யோவ் பெருசு இந்த லொள்ளுதானே வேணாங்கறது . நான் கேட்ட விதம்தப்போ என்னவோ மனுஷன் ஏன் பிறக்கறான்?"

"முக்தியடைய"

"முக்தின்னா என்ன தலை"

"மனுஷன் இந்த படைப்புல பிரிக்க முடியாத ஒரு பாகம். ஆனால் இவன் தான்
இந்த படைப்புல இருந்து வேறுபட்டவன்னு நினைக்கிறான். இந்த படைப்புக்கு தன்னை மையப்புள்ளியா நினைக்கிறான். தன்னை மையமா கொண்டு இந்த படைப்பை டிஃபைன் பண்ணரான். இது அவனை போராட்டத்துக்கு தள்ளுது. அந்த போராட்டத்துல வெற்றி கண்டா துள்ரான், தோற்றா துவண்டு போரான்"

"அடிச்சக்கைன்னானாம் ! அப்போ எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு வாழ்ந்தா அதுதான் முக்தியா.."

"இல்லடா கண்ணா தான் செத்தா கூட எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு இருக்கனும் அதுதான் முக்தி நிலை "

"மரணம்னா என்ன ?"

"இந்த உடம்புலருந்து நீ பிரியறே"

"உடம்புக்கும் உயிருக்கும் என்ன தொடர்பு ?"
"உன் உடம்பு கம்ப்யூட்டர் மாதிரின்னா உன் ஆத்மா ஹார்ட் டிஸ்க் மாதிரி."

"யப்பா லேட்டஸ்ட் உதாரணமெலாம் தரீங்க"

" மூணு மாசத்துக்கு முன்னாடி தாம்பா எமலோகம் கணிணி மயமாச்சு"

" அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க !"

"அது ஏன் மனுஷன் முக்தியடைஞ்சு தான் தீரனுமா?"

"சபாஷ்ரா கண்ணா .. இத்தினி யுகத்துல இப்படி ஒரு கேள்விய கேட்டதே இல்ல எனக்கு ஸ்ட் ரைக் ஆனதை சொல்றேன். இதுவும் மறுபடி மறுபடி நடக்கிற கதைதான். கடவுள்னு ஒரு பார்ட்டி இருக்காரே..அவரு சும்மா இல்லாம இந்த படைப்போட ஆரம்பத்துல ஆகாயத்துல இருந்து ஒரு மின்னல் வடிவமெடுத்து கடலுக்குள்ள பாய்ஞ்சாரு."

"என்ன சார் திடீர்னு அம்புலிமாமா ரேஞ்சுக்கு போயிட்டிங்க"

"சரி முதல்வரிய விட்டுரு அடுத்த வரிய பாரு முதல்ல ஒரு செல் அங்கஜீவி ஒன்னு உருவாச்சு. அது கொழுத்து ரெண்டா பிரிஞ்சது. ரெண்டு நாலாச்சு. ஒரு செல் இன்னொரு செல்லை பிரதியெடுக்கிறப்ப எர்ரார் வந்து புது ஜீவராசி ஏற்பட்டுச்சு. இப்படியே குரங்கு வரை வந்துது. குரங்குல இருந்து மனுஷன் வந்தான். "

"இதையெல்லாம் டார்வின் சொல்லியிருக்காரே"
"சொல்லட்டுமே.. நானும் ஒரு தரம் சொல்றேன்"
"சன் டீவில இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையானு பழைய படத்தை போட்டு அறுக்கிறாப்ல"

"இல்லே கண்ணா இது ரீ மேக்னு வச்சுக்கயேன்"

"ஒழியட்டும் சொல்லுங்க"

"இத்தினி புது ஜீவ ராசி வந்தாலும் தான் ஒரே உயிரா/ஒரே உடம்புலருந்த ஞா. மட்டும் செல் காப்பி காரணமா அப்படியே தொடர்ந்து வந்தது. தான் ஒரே உயிரா/ஒரே உடம்புல இருந்தப்ப "போட்டி கிடையாது, அபத்திரம் கிடையாது, கம்யூனிகேஷன் ப்ராப்ளம் கிடையாது, காலம் கிடையாது, தூரம் கிடையாது.. இதனால வர்ர டென்ஷன் கிடையாது வாழ் நாள் முழுக்க நிம்மதி நிம்மதி நிம்மதி இது தவிர வேறில்லைங்கற நினைவும் , மறுபடி அந்த நிலைய அடையனுங்கிற துடிப்பும் ஒவ்வொரு ஜீவ ராசிலயும் இருக்கு"

"எப்படி சொல்றிங்க"

"மனுஷன் ஏன் கொலை பண்றான் , ஏன் தற்கொலை பண்றான் , ஏன் தண்ணி போடறான் , குடலை எரிக்கிற மிளாகா பஜ்ஜி சாப்பிடறான் . ஏன் உன் ப்ளாகை கூட படிக்கிறான். சாகனுங்கற வெறி. எதுக்கிந்த வெறி . தன் உடலை உதிர்க்கனும். ஒரே உயிரா ஒரே உடலா மாறனுங்கற வெறி"

"தபார்ரா இது ஏதோ புதுசா இருக்கு "

"என்னை பேச விடு இல்லேன்னா ஃப்ளோ கட்டாயிரும். ஒரு தமாசு என்னா தெரியுமா மனுஷன் மட்டுமில்லே இந்த ஒட்டு மொத்த இயற்கையே ஓருடல் ஓருயிரா தான் இருக்கு. நம்ம எல்லாரையும் , இந்த படைப்பையும் உள்ளடக்கின kaalapurushan it self GOD

எமன் Vs மேன்

சின்னவயதில் நான் படித்த மாயாஜாலக்கதைகளின் எச்சம் இன்னும் என் அடி மனதில் இருந்ததா? விட்டலாச்சார்யாவின் படங்கள் தான் ஆழமான முத்திரையை போட்டுவிட்டனவா தெரியாது. பூமியில் கால் பாவாத சமாச்சாரங்கள் என்றால் இப்போதும் ஒருவித கிளு கிளுப்பு இருக்கிறது.

நான் ஜோதிடத்தின் மர்மங்களை ப்ளாஸ்ட் செய்யவும், ஆன்மீகத்திலான குழப்பங்களை ,குளறுபடிகளை மீறி தெளிவை பெறவும், மூன்றே மாதங்களில் கணிணியை இயக்க கற்கவும், எனக்கு கு.ப.அறிமுகம் கூட இல்லாத வேலைகளையும் குன்ஸிலேயே செய்து முடிக்கவும் (சில நேரம் அவற்றில் எக்கு தப்பாய் மாட்டி முழித்ததும் கூட உண்டு) சில அமானுஷ சக்திகள் உதவியதாகவே நம்பும் ஆசாமி நான்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து சந்தித்த பால்ய நண்பன் ஒருவன் பாபா படம் கணக்காய் ஒரு மந்திரத்தை கொடுத்து இதை ஒரு லட்சம் முறை ஜபித்தால் ஆத்மா உடலிலிருந்து பிரியும். நீ நினைத்த இடத்துக்கு போகலாம் என்று கூறியதையும், நான் ஜெபிக்க ஆரம்பித்ததையும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாக கருததேவையில்லை என்றே கருதுகிறேன்.

மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்த 10 ஆவது நாளான நேற்று நள்ளிரவு மேற்படி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்த போது உண்மையிலேயே
கலவரம் வெடித்தே விட்டது. திடீர் என்று வலது மார்பில் ஊசி குத்துவது போன்ற வலி துவங்கியது. "என்னங்கடா இது ஹார்ட் லெஃப்ட் சைட்லதான இருக்கும். 1987 ல யிருந்து 22 வருசமா போட்ட தம் இப்படி வேலை செய்யுதா? ஒரு வேளை ரமண மகரிஷி சொன்னமாதிரி வலப்பக்கம் இருக்கிற ஆன்மீக இதயத்துலதான் கலாட்டா நடக்குதா? ஒரு வேளை வாயு கோளாறா இருக்குமோ? இல்லையே இன்னைக்கு ராத்திரி 8.30க்கெல்லாம் சாப்பிட்டுட்டு ஜிண்டாக் கூட போட்டாச்சே" இத்தனை யோசனைகள் ஒரே நொடியில் சீறிக்கிளம்பினாலும் ஒரு ட்ராக்கில் மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது.

ஊசிக்குத்தலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. "தாளி என்னதான் நடக்குது பார்ப்போம்" என்று மந்திர ஜபத்தை உக்கிரமாக்கினேன். கடந்த காலத்தில் என்னென்ன மந்திரங்கள் ஜெபித்தேன் அவை எப்படியெல்லாம் பலன் கொடுத்தன என்பதை ஒரு முறை ஒட்டிப்பார்த்தபடி மந்திரத்தை ஓட்டிக்கொண்டே இருந்தேன்.

வாயு கோளாறு இருப்பவர்கள் உடலில் வாய் நகர்வதை உணர முடிவது போல் ஊசிக்குத்து நகர்வதை உணர முடிந்தது. மெல்ல கழுத்து ,தொண்டை என்று நகர்ந்த ஊசிக்குத்து நடு நெற்றியில் சென்று முட்ட ஆரம்பித்தது. டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றிக்கொண்டு லேசாக பீச்சிப்பார்ப்பாரே அதை போல் நடு நெற்றி ஸ்தானத்து ஊசி எதையோ பீச்சியது.

அவ்வளவுதான்.ஆறுமணி நேரம் ஒன் பாத்ரூம் அடக்கி வச்சிருந்து விடும்போது உடம்பு சிலிர்க்குமே அதுமாதிரி சிலிர்த்துப்போச்சு. பீக் ஹவர்ல சிட்டி பஸ் நெரிசல்லருந்து விடுபட்டு நம்ம ஏரியா பஸ் ஸ்டாப்ல உதிர்வோமே அப்படி ஒரு ஃபீலிங். நான் சவாசனத்தில் படுத்திருந்த என்னை பார்க்க முடிந்தது. குளிர். தாங்க முடியாத குளிர் . இதெல்லாம் கனவானு ஒரு சம்சயம். குளிருக்கு இதமா ஒரு தம் போடலாம்னு பார்த்தா கை துழாவுதே தவிர காத்துதான் கிடக்குது.

மந்திரம் மட்டும் தொடருது. சில நிமிடங்கள் கழிச்சு புரிஞ்ச்சுக்கிட்டேன். மந்திரம் ஒர்க் அவுட் ஆயிருச்சு. பாடிலருந்து வெளிய வந்தாச்சு. இப்ப எங்கே போலாம். அந்த சமயம் பார்த்து முண்டகோபனிஷத் ஞா. வந்தது. எத்தனையோ தமிழ் படங்கள்ள பார்த்த எமனை ஒரு தடவை பேட்டி எடுத்து ப்ளாக்ல வச்சா எப்பயிருக்கும்? நினச்சதுதான் தாமதம் எமலோகம். பாவம் எமதர்மர் ரெஸ்ட்ல இருக்காரு. பக்கத்துல அவுங்க சம்சாரம் ஒரு ஓரமா ஒண்டியிருக்கு.

இதென்னடா லொள்ளுனு வெளிய வந்து குரல் கொடுத்தேன். எமதர்மர் பெரிய கோட்டாவியோட வந்து கதவை திறந்தார்.

"ஏய் யார் நீ இந்த நேரத்துல வந்திருக்கே..உன்னை யாரு கொண்டு வந்தது?"
"சே .. நான் என்ன எலும்பு துண்டா யாரோ கொண்டாந்து போட , நமக்கு பூலோகம், ச்சும்மா உங்களை ஒரு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன்"
எமன் தலைக்குள்ள ஸ்டாருங்க. " நம்பவே முடியலை எப்படி வந்தேப்பா"
இந்த கதையின் முதல் அத்யாயத்தை சொன்னேன்.

"தபாரு இப்படியெல்லாம் அகாலத்துல ,சாகறதுக்கு முந்தி இங்கே வரக்கூடாது. உன் வீட்ல வேற எலித்தொல்லை ஜாஸ்தி . முக்கியமான எதையாவது கடிச்சு வச்சுரபோவுது. "

"கடிச்சா கடிச்சுட்டு போவுது ஆந்திரால ஆரோக்கிய ஸ்ரீ ப்ளான் இருக்கு தெரியுமா? வேற ஒன்னு வச்சிக்குவன்"

"என்னடா இது தலைவலியா போச்சு..பேட்டில்லாம் முடியாது . மேலிடத்துல பர்மிஷன் வாங்கனும். ஆஃப்தி ரிக்கார்டா வேணும்னா பதில் சொல்றேன்"

"அஸ்கு புஸ்கு இவ்ளோ தூரம் வந்துட்டு ஆஃப் தி ரிக்கார்டு பதில் எல்லாம் வாங்கிகினு போமுடியாது தலை ! வேணம்னா டேக் யுவர் ஓன் டைம் . அதுவரைக்கும் ச்சும்மா டைம்பாஸ் பண்ணிக்கிறேன்"

இவன் என்னடா சேல்ஸ் ரெப் கணக்கா இருக்கானே என்றோ என்னவோ எமன் டெலிப்பத்தியில் மும்மூர்த்திகளுடன் பேசினார். பிறகு "சரிபா ..பெர்மிஷன் க்ரேண்ட்டட் கேள்விய கேளூ" என்றார்.

"ஆன் வாட் க்ரவுண்ட்ஸ் பர்மிஷன் க்ரேண்ட்டட். உன் ப்ளாக் சரியான லொடக்கானி ப்ளாகுனு மிஸ்டர் சிவா சொன்னார். ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் கூட பார்க்கறதில்லயாமே..அதுல வேற உன் ப்ளாக் 12 ஆவது ரேங்குல இருந்து ஜீரோ ரேங்குக்கு விழுந்துருச்சாமே"
"அட பாவிகளே.. பேட்டி குடுக்குறவன் நிறைய பேர் படிக்கனும்னு ஆசைப்படுவான். இதென்ன உட்டாலக்கடியா இருக்குது"
"இதெல்லாம் தேவரகசியம்பா நீ பத்தாங்கிளாஸ் கொஸ்டியன் பேப்பர் மாதிரி அவுட் பண்ணிட்டா கமிஷன் போட்ருவாங்கப்பா..தலைவலி"
"சார் !தமிழ் தெலுங்கு சினிமாலல்லாம் பார்த்தப்ப ஆள் நல்லா ஸ்டவுட்டா இருந்திங்க இப்ப என்ன வெயிட்லாஸ் ட் ரீட்மெண்ட்லைருக்கிங்களா.. அதெல்லாம் வேணா சார் ரிஸ்கு "
"அட போப்பா .. நீ வேற சும்மா லொள்ளு பண்ணிக்கிட்டு என்னை பார்த்தவன் எவன்? ஏதோ அவனவனுக்கு தோணின மாதிரி காட்டி உட்டுட்டான்"
"அ..ச்சும்மா வுடாத தலை எங்க வாத்தியாரு நான் செத்து பிழைச்சவண்டா நு பாட்டெல்லாம் பாடியிருக்காரு"
"என்ன நீ பாதிராத்திரி பேட்டினு வந்து ஒதகாத விஷயம்லாம் கேட்டுக்கிட்டிருக்கே"
"சரி சார் . சீரியஸ் "
"அப்போ சி.எம்.சிக்கு போயா"
"பார்த்தியா என்னை சீரியஸ்னுட்டு இப்ப நீங்களே ஜோக் கட் பண்றிங்க"
"ஆமா அது பர்த்டே கேக்கு கட் பண்றேன்/ எல்லாம் சகவாச தோஷம் தான். பன்னியீட சேர்ந்த கன்னும் கதை"
"ஏன் பூவோட சேர்ந்த நாரும் கதையா இருக்க கூடாதா"
"எப்பா நீ கேட்க வேண்டியத கேட்டுட்டு போ.."
"சரி போன ஜென்மத்துல என் கிட்ட பத்து ரூபா கை மாத்து வாங்கிகினிங்களே அதை குடுங்க"
"அய்யயோ என்ன விட் ருப்பா"
"அந்த பயம் இருக்கட்டும். அந்த நாள்ள நசிகேதனை சத்தாச்ச மாதிரியெல்லாம் வெண்டைக்கா பதில் தரக்கூடாது. பாயிண்ட் டு பாயிண்ட் பதில் வரனும் சரியா"
"சரிப்பா"
" இந்த படைப்பு எப்படி ஆரம்பமாச்சு"
"இதுக்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. படார்னு ஒரு வெடி. அந்த அதிர்வுல ஒரு பக்கம் விரிவடைஞ்சுட்டே போகுது. மறுபக்கம் சுருங்கிகிட்டே போகுது"
"இத மாதிரி பீலா விடறதாலதான் பெரியார் வாங்கு வாங்குனு வாங்கினாரு"

"யாரோ வைவாங்கனு உண்மைய மாத்தி சொல்லமுடியுமா என்ன? பெரியார் காலத்துல ஐயருங்க கடவுளை வச்சு மனுஷங்களை பிரிச்சாங்கப்பா ..பிரிச்சவங்களை படிக்க விடாம ,முன்னேற வுடாம தடுத்தாங்கப்பா. அவன் உயிரும் என் மயிரும் ஒன்னுன்னு பேசினாங்க. இதுக்கெல்லாம் மூலம் கடவுள்ன்ற கான்செப்டு தானே அதுவே பெரிய பொய் போடா பொங்கினு பெரியார் ஒரே அடியா அடிச்சார். கடவுளைபத்தி தெரியாதவன் , கடவுளோட தொடர்பில்லாதவன், அப்படி
நெத்தியடி அடிக்க முடியுமா என்ன ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மானவ சேவா மாதவ சேவா இதெல்லாம் தெரியாதா என்ன? "

"சரி ஓஞ்ச்சு போவட்டும். இந்த படைப்பு கான்ஸ்டன்டா இருக்குன்றிங்க"

"ஆமாம் பா"

"சரி இதுல பிறப்பும் இறப்பும் எப்படி நடக்குது/"

"கூச்சமா கீதுப்பா "
"யோவ் பெருசு இந்த லொள்ளுதானே வேணாங்கறது . நான் கேட்ட விதம்தப்போ என்னவோ மனுஷன் ஏன் பிறக்கறான்?"

"முக்தியடைய"

"முக்தின்னா என்ன தலை"

"மனுஷன் இந்த படைப்புல பிரிக்க முடியாத ஒரு பாகம். ஆனால் இவன் தான்
இந்த படைப்புல இருந்து வேறுபட்டவன்னு நினைக்கிறான். இந்த படைப்புக்கு தன்னை மையப்புள்ளியா நினைக்கிறான். தன்னை மையமா கொண்டு இந்த படைப்பை டிஃபைன் பண்ணரான். இது அவனை போராட்டத்துக்கு தள்ளுது. அந்த போராட்டத்துல வெற்றி கண்டா துள்ரான், தோற்றா துவண்டு போரான்"

"அடிச்சக்கைன்னானாம் ! அப்போ எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு வாழ்ந்தா அதுதான் முக்தியா.."

"இல்லடா கண்ணா தான் செத்தா கூட எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு இருக்கனும் அதுதான் முக்தி நிலை "

"மரணம்னா என்ன ?"

"இந்த உடம்புலருந்து நீ பிரியறே"

"உடம்புக்கும் உயிருக்கும் என்ன தொடர்பு ?"
"உன் உடம்பு கம்ப்யூட்டர் மாதிரின்னா உன் ஆத்மா ஹார்ட் டிஸ்க் மாதிரி."

"யப்பா லேட்டஸ்ட் உதாரணமெலாம் தரீங்க"

" மூணு மாசத்துக்கு முன்னாடி தாம்பா எமலோகம் கணிணி மயமாச்சு"

" அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க !"

"அது ஏன் மனுஷன் முக்தியடைஞ்சு தான் தீரனுமா?"

"சபாஷ்ரா கண்ணா .. இத்தினி யுகத்துல இப்படி ஒரு கேள்விய கேட்டதே இல்ல எனக்கு ஸ்ட் ரைக் ஆனதை சொல்றேன். இதுவும் மறுபடி மறுபடி நடக்கிற கதைதான். கடவுள்னு ஒரு பார்ட்டி இருக்காரே..அவரு சும்மா இல்லாம இந்த படைப்போட ஆரம்பத்துல ஆகாயத்துல இருந்து ஒரு மின்னல் வடிவமெடுத்து கடலுக்குள்ள பாய்ஞ்சாரு."

"என்ன சார் திடீர்னு அம்புலிமாமா ரேஞ்சுக்கு போயிட்டிங்க"

"சரி முதல்வரிய விட்டுரு அடுத்த வரிய பாரு முதல்ல ஒரு செல் அங்கஜீவி ஒன்னு உருவாச்சு. அது கொழுத்து ரெண்டா பிரிஞ்சது. ரெண்டு நாலாச்சு. ஒரு செல் இன்னொரு செல்லை பிரதியெடுக்கிறப்ப எர்ரார் வந்து புது ஜீவராசி ஏற்பட்டுச்சு. இப்படியே குரங்கு வரை வந்துது. குரங்குல இருந்து மனுஷன் வந்தான். "

"இதையெல்லாம் டார்வின் சொல்லியிருக்காரே"
"சொல்லட்டுமே.. நானும் ஒரு தரம் சொல்றேன்"
"சன் டீவில இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையானு பழைய படத்தை போட்டு அறுக்கிறாப்ல"

"இல்லே கண்ணா இது ரீ மேக்னு வச்சுக்கயேன்"

"ஒழியட்டும் சொல்லுங்க"

"இத்தினி புது ஜீவ ராசி வந்தாலும் தான் ஒரே உயிரா/ஒரே உடம்புலருந்த ஞா. மட்டும் செல் காப்பி காரணமா அப்படியே தொடர்ந்து வந்தது. தான் ஒரே உயிரா/ஒரே உடம்புல இருந்தப்ப "போட்டி கிடையாது, அபத்திரம் கிடையாது, கம்யூனிகேஷன் ப்ராப்ளம் கிடையாது, காலம் கிடையாது, தூரம் கிடையாது.. இதனால வர்ர டென்ஷன் கிடையாது வாழ் நாள் முழுக்க நிம்மதி நிம்மதி நிம்மதி இது தவிர வேறில்லைங்கற நினைவும் , மறுபடி அந்த நிலைய அடையனுங்கிற துடிப்பும் ஒவ்வொரு ஜீவ ராசிலயும் இருக்கு"

"எப்படி சொல்றிங்க"

"மனுஷன் ஏன் கொலை பண்றான் , ஏன் தற்கொலை பண்றான் , ஏன் தண்ணி போடறான் , குடலை எரிக்கிற மிளாகா பஜ்ஜி சாப்பிடறான் . ஏன் உன் ப்ளாகை கூட படிக்கிறான். சாகனுங்கற வெறி. எதுக்கிந்த வெறி . தன் உடலை உதிர்க்கனும். ஒரே உயிரா ஒரே உடலா மாறனுங்கற வெறி"

"தபார்ரா இது ஏதோ புதுசா இருக்கு "

"என்னை பேச விடு இல்லேன்னா ஃப்ளோ கட்டாயிரும். ஒரு தமாசு என்னா தெரியுமா மனுஷன் மட்டுமில்லே இந்த ஒட்டு மொத்த இயற்கையே ஓருடல் ஓருயிரா தான் இருக்கு. நம்ம எல்லாரையும் , இந்த படைப்பையும் உள்ளடக்கின kaalapurushan it self GOD

Tuesday, October 27, 2009

இளமையின் இன்னிசை

உயிர்திரிக்கு வைக்கப்பட்ட நெருப்பு உயிர் குழி நோக்கி விரைகிறது
பாதி வயசு போயாச்சு
மீதி வயசு பாஞ்சாலி அரை சேலையாச்சு
அறியாமையும், அந்திச்சுகம் குறித்த அறிவுடைமையும்
பாதி ஆயுளை பருகியிருக்க
மரணத்தின் மணியோசை கேட்காவிடிலும்
இளமையின் இன்னிசை தேய்ந்து வருகிறது
காலனின் கருப்பு வாகனம் எனை நோக்கி பாய்ந்து வராவிடினும்
அரசு இயந்திரமாக வேனும் எனை நோக்கி நகர்வதை உணரமுடிகிறது

அறியாமை அரசாண்ட காலத்தில் கேள்விகளே இல்லை
பின் கேள்விகளே வேள்விகளாக நிம்மதி நிவேதனமாகி அதுவே கிடைத்தது
அவிர்பாகமாய்
அந்தி சுகம் குறித்த அறிவுடைமை மன முடிச்சுக்களில் இருந்து காத்திருப்பினும்
மரண முடிச்சை அவிழ்க்க கற்பிக்கவில்லை.
ஒரே கதை பாத்திரங்களும் அஃதே
அவற்றை ஏற்போரே வேறு
முதுகிழவனின் புலம்பல் போலே இதில்
இல்லையொரு மாற்றம்

ஏடெடுத்து பாடனுமோ பஞ்சப்பாட்டுதனை
ஓடெடுத்து வந்த சிவன் சீவன் குளிர்ந்திடவே
பசி தீர்த்த பாவையே
நின் மகளாம் மலர் மகளின் அருளெனக்கு தேவையே
நான் கேட்டு மறுத்ததில்லை என்றேனும் நீயே
நீ தரும் வரை பொருத்ததில்லை நானே
ஏனிந்த விளையாட்டு
எனை வளைத்துவிட்ட வறுமை தனை வாலை நீ வாட்டு
சங்கமேந்தும் வைஷ்ணவி நின் சாங்கத்தியம் கிட்டி விட்டால்
முடவனும் வென்றிடுவான் கைப்பந்து ஆட்டத்தில்
பாற்கடலில் பர்த்தாவின் பதம் பற்றும் பாவை பார்வை
பட்டவுடன் வெல்வானே
நொண்டியும் ஓட்டத்தில்

கையிருந்தும் முடமானேன்
உயிர்ப்பிருந்தும் ஜடமானேன்
காசு பணம் இல்லாது ஏசு ஜனம் பெருத்தாச்சு
பொன் மகளே பொறுமை விடு
பொறுக்கும் வரை பொறுத்தாச்சு
என்னிடத்தில் உண்டன்றோ
உனக்கோர் ராச பாட்டை
நேர் வழியில் சேர்ந்திடலாம்
நேர்மையாளர் பணப்பையில்
குறுக்கு பாதை குறுகலாமே
வழியெங்கும் நரகலாமே
அம்மா நான் ஏதுமில்லை
எனக்கிரு காதுமில்லை

ஊருலகம் பேசட்டும்
கல்லெடுத்து வீசட்டும்

நீ உண்டு நின் அருள் உண்டு
அது நீங்கிய கணம் தானே மனம் நிறைய மருள் உண்டு
அம்மா நான் கொதிக்கின்றேன்
என் பாட்டை பண்ணிதிலே பாங்குறவே பதிக்கின்றேன்

முன்னம் ஒரு தினமே அன்னையுனை போற்றிட்டேன்
பாமலை சாற்றிட்டேன்
ஆண்டிரண்டு போன வழி எனக்கின்னும் புரியலை
அன்றெழுந்த கோட்டை தானே இன்று வ்அரை சரியலே
அகழி வற்றியாச்சு
முதலைகள் செத்தாச்சு
மதில் சுவரே பிளக்குதடி
கோட்டை கதவிரண்டும் சன்னமாய் உளுக்குதடி

அம்மா நின் விழி மலர்ந்தால்
என் பொழுதுபுலர்ந்திடுமே
என் வறுமை நிலை மாற்றிவிடு இக்கணமே
நின் பாச பார்வை மாறலாமோ ஓர் கணமே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ

இளமையின் இன்னிசை

உயிர்திரிக்கு வைக்கப்பட்ட நெருப்பு உயிர் குழி நோக்கி விரைகிறது
பாதி வயசு போயாச்சு
மீதி வயசு பாஞ்சாலி அரை சேலையாச்சு
அறியாமையும், அந்திச்சுகம் குறித்த அறிவுடைமையும்
பாதி ஆயுளை பருகியிருக்க
மரணத்தின் மணியோசை கேட்காவிடிலும்
இளமையின் இன்னிசை தேய்ந்து வருகிறது
காலனின் கருப்பு வாகனம் எனை நோக்கி பாய்ந்து வராவிடினும்
அரசு இயந்திரமாக வேனும் எனை நோக்கி நகர்வதை உணரமுடிகிறது

அறியாமை அரசாண்ட காலத்தில் கேள்விகளே இல்லை
பின் கேள்விகளே வேள்விகளாக நிம்மதி நிவேதனமாகி அதுவே கிடைத்தது
அவிர்பாகமாய்
அந்தி சுகம் குறித்த அறிவுடைமை மன முடிச்சுக்களில் இருந்து காத்திருப்பினும்
மரண முடிச்சை அவிழ்க்க கற்பிக்கவில்லை.
ஒரே கதை பாத்திரங்களும் அஃதே
அவற்றை ஏற்போரே வேறு
முதுகிழவனின் புலம்பல் போலே இதில்
இல்லையொரு மாற்றம்

ஏடெடுத்து பாடனுமோ பஞ்சப்பாட்டுதனை
ஓடெடுத்து வந்த சிவன் சீவன் குளிர்ந்திடவே
பசி தீர்த்த பாவையே
நின் மகளாம் மலர் மகளின் அருளெனக்கு தேவையே
நான் கேட்டு மறுத்ததில்லை என்றேனும் நீயே
நீ தரும் வரை பொருத்ததில்லை நானே
ஏனிந்த விளையாட்டு
எனை வளைத்துவிட்ட வறுமை தனை வாலை நீ வாட்டு
சங்கமேந்தும் வைஷ்ணவி நின் சாங்கத்தியம் கிட்டி விட்டால்
முடவனும் வென்றிடுவான் கைப்பந்து ஆட்டத்தில்
பாற்கடலில் பர்த்தாவின் பதம் பற்றும் பாவை பார்வை
பட்டவுடன் வெல்வானே
நொண்டியும் ஓட்டத்தில்

கையிருந்தும் முடமானேன்
உயிர்ப்பிருந்தும் ஜடமானேன்
காசு பணம் இல்லாது ஏசு ஜனம் பெருத்தாச்சு
பொன் மகளே பொறுமை விடு
பொறுக்கும் வரை பொறுத்தாச்சு
என்னிடத்தில் உண்டன்றோ
உனக்கோர் ராச பாட்டை
நேர் வழியில் சேர்ந்திடலாம்
நேர்மையாளர் பணப்பையில்
குறுக்கு பாதை குறுகலாமே
வழியெங்கும் நரகலாமே
அம்மா நான் ஏதுமில்லை
எனக்கிரு காதுமில்லை

ஊருலகம் பேசட்டும்
கல்லெடுத்து வீசட்டும்

நீ உண்டு நின் அருள் உண்டு
அது நீங்கிய கணம் தானே மனம் நிறைய மருள் உண்டு
அம்மா நான் கொதிக்கின்றேன்
என் பாட்டை பண்ணிதிலே பாங்குறவே பதிக்கின்றேன்

முன்னம் ஒரு தினமே அன்னையுனை போற்றிட்டேன்
பாமலை சாற்றிட்டேன்
ஆண்டிரண்டு போன வழி எனக்கின்னும் புரியலை
அன்றெழுந்த கோட்டை தானே இன்று வ்அரை சரியலே
அகழி வற்றியாச்சு
முதலைகள் செத்தாச்சு
மதில் சுவரே பிளக்குதடி
கோட்டை கதவிரண்டும் சன்னமாய் உளுக்குதடி

அம்மா நின் விழி மலர்ந்தால்
என் பொழுதுபுலர்ந்திடுமே
என் வறுமை நிலை மாற்றிவிடு இக்கணமே
நின் பாச பார்வை மாறலாமோ ஓர் கணமே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ

சுய இன்பம் உடலுறவு வித்யாசம்

சுய இன்பம்:
தன் கையே தனக்குதவி என்பதான வாழ்வாகும். சிலர் கண்டதையும் கருவிகளாக்கிக்கொள்வதும் உண்டு . இவை இன உறுப்பு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தாகவும் முடிவதுண்டு. உம்: பெண்கள் டெஸ்ட் ட்யூபை கூட உபயோகிக்கிறார்களாம். ஆண்கள் சுவற்றில் ஓட்டை போட்டு கூட முயல்வதுண்டு. சுய இன்பம் மனிதர்களை ஒருவித கழிவிரக்கம், குற்ற மனப்பான்மை போன்றவற்றிற்கு ஆளாக்குகிறது.உலகில் மற்ற அனைவரும் எடுக்க கூட நாழியில்லாது அனுபவிப்பதாகவும் தாம் மட்டும் இப்படி அல்லாடுவதாகவும் தன்னிரக்கம் ஏற்படும். மேலும் சில உதவாக்கரை புத்தகங்கள் ,உபதேச மஞ்சரிகள் காரணமாய் விட்டொழித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும், விட முடியாத கையறு நிலையும் இரட்டை மனப்பான்மையை வளர்க்கும். தன் மீதே தனக்கு கோபம். அந்த கோபம் சமூகம்,பெற்றோர் , காதலர்கள் தம்பதிகள் மீதும் திசை திரும்புவதுண்டு. சுய இன்பம் காண்பவன் வளர்ப்பு சூழல், ஜீன் கள் வழி நடத்துவதை பொறுத்து சேடிஸ்டாகவோ, மசாக்கிஸ்டாகவோ மாறிவிடுகிறான்.
சேடிஸ்டாக மாறினால்:
1.பெண்ணை வெறும் துளையாக பார்க்கும் மனப்பான்மை ஏற்படும்
2.காதலை பிரிப்பான்
3.தம்பதிகளை பிரிப்பான் (தன் பெற்றோரையும் கூட)
மசாக்கிஸ்டானால்:
1.உடலுறவே வீண் என்ற முடிவுக்கு வருவான். திருமணமானவர்கள் எல்லாம் பாவிகள், பெண்கள் எல்லாம் அழுக்கானவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதே ஆரோக்கியம் , ஆபத்தற்றது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்வான்
2.பிறர் விஷயத்தில் மட்டும் காதலுக்கு தூது செல்வான். நண்பர்களுக்கு அல்லையன்ஸ் பார்ப்பான். திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்வான்

இரண்டு பிரிவினரும்:
பெண்ணை புரிந்து கொள்வதில் தோற்றுப்போகிறார்கள். பெண் ஒரு மனுஷி. அவளுக்கும் ஒரு மனம் உண்டு. விருப்பம் உண்டு. லட்சியங்கள் உண்டு. என்ற எண்ணம் வருவது கடினம்.

ஆண்டுக்கணக்காய் தொடரும் சுய இன்பங்களில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. இதில் உச்சம் பெற அடுத்தவரின் ஒத்துழைப்பென்ன, அடுத்த ஆசாமியே தேவையில்லைஅடுத்தவரின் உச்சக்கட்டத்துக்காக தன் . உச்சத்தை தள்ளிப்போடவோ, அவசியமில்லாது போகிறது.
இதனால் இவர்கள் சுய நலமிகளாகவும், சமூக உணர்வுகள் அற்றவர்களாகவும், இன்ட்ராவர்டுகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

மேலும் இவர்களில் நிறையபேர் டிப்பெண்டென்டுகளாகவோ அ மேன்சன் ஹவுஸ்களில் அறை பகிர்ந்து வசிப்பவர்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம். எனவே ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது. அவசரமாக முடிக்க வேண்டியிருக்கிறது. பலர் கழிவறைகளை கூட பயன் படுத்த வேண்டியிருக்கிறது. துரித கதியிலான உச்சத்துக்கு பழக்கப்பட்டுவிடலால் துரிதஸ்கலிதத்துக்கு இலக்காகி விடுகின்றனர். நாளை திருமணமானால் மனைவியை திருப்தி படுத்த முடியாது அவஸ்தை படுகிறார்கள். ( ஞா.படுத்திக்கங்க 7 /23 )

காம சுகம் என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் அனுபவிக்க வேண்டிய விஷயம். சுய இன்பத்தின் போது இதர உறுப்புகள் அதை எள்ளளவும் அனுபவிப்பதில்லை. காம உணர்வுகள் இன உறுப்பையே மையமாக கொண்டுவிடுகின்றன. நகரப்பேருந்துகளில் முட்ட கொடுப்பவனெல்லாம் இந்த ஜாதிதான்.

சுய இன்பம் கூடவே கூடாதா?
காமம் தலைக்கேறி கற்பழிப்புக்கோ,கள்ள உறவுக்கோ, தகாத உறாவுக்கோ வழி கோலும் வாய்ப்பிருக்கும்போது அணை உடையும் நிலையில் காவிரி நீரை திறந்து விடும் கர் நாடக அரசை போல் திறந்து விடலாம். உள்ளடக்கி வைக்கப்பட்ட காம எண்ணங்கள் சாகசங்களுக்கும் ,போதைக்கும், குற்றத்துக்கும்,வன்முறைக்கும், தூண்டும் போது ஒரு அவுட் லெட்டாக , எமர்ஜென்சி கேட்டாக உபயோகிக்கலாம். அல்லது அவரவர் உடல் நிலையை பொருத்து மாதம் ஓரிருமுறை எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி, நிதானமாக , ஆழமாக இதில் ஈடுபடும்போது உடலுறவு போலவே இதுவும் பயன் தரும்.

இவர்களில் அதிக சதவீதம் முழுதாய் ஒரு பெண் வந்து நான் உனக்கே என்றால் " நண்டு பிடிக்க போன ஐயர் மாதிரி " தடுமாறிவிடுவார்கள்

சுய இன்பம் உடலுறவு வித்யாசம்

சுய இன்பம்:
தன் கையே தனக்குதவி என்பதான வாழ்வாகும். சிலர் கண்டதையும் கருவிகளாக்கிக்கொள்வதும் உண்டு . இவை இன உறுப்பு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தாகவும் முடிவதுண்டு. உம்: பெண்கள் டெஸ்ட் ட்யூபை கூட உபயோகிக்கிறார்களாம். ஆண்கள் சுவற்றில் ஓட்டை போட்டு கூட முயல்வதுண்டு. சுய இன்பம் மனிதர்களை ஒருவித கழிவிரக்கம், குற்ற மனப்பான்மை போன்றவற்றிற்கு ஆளாக்குகிறது.உலகில் மற்ற அனைவரும் எடுக்க கூட நாழியில்லாது அனுபவிப்பதாகவும் தாம் மட்டும் இப்படி அல்லாடுவதாகவும் தன்னிரக்கம் ஏற்படும். மேலும் சில உதவாக்கரை புத்தகங்கள் ,உபதேச மஞ்சரிகள் காரணமாய் விட்டொழித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும், விட முடியாத கையறு நிலையும் இரட்டை மனப்பான்மையை வளர்க்கும். தன் மீதே தனக்கு கோபம். அந்த கோபம் சமூகம்,பெற்றோர் , காதலர்கள் தம்பதிகள் மீதும் திசை திரும்புவதுண்டு. சுய இன்பம் காண்பவன் வளர்ப்பு சூழல், ஜீன் கள் வழி நடத்துவதை பொறுத்து சேடிஸ்டாகவோ, மசாக்கிஸ்டாகவோ மாறிவிடுகிறான்.
சேடிஸ்டாக மாறினால்:
1.பெண்ணை வெறும் துளையாக பார்க்கும் மனப்பான்மை ஏற்படும்
2.காதலை பிரிப்பான்
3.தம்பதிகளை பிரிப்பான் (தன் பெற்றோரையும் கூட)
மசாக்கிஸ்டானால்:
1.உடலுறவே வீண் என்ற முடிவுக்கு வருவான். திருமணமானவர்கள் எல்லாம் பாவிகள், பெண்கள் எல்லாம் அழுக்கானவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதே ஆரோக்கியம் , ஆபத்தற்றது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்வான்
2.பிறர் விஷயத்தில் மட்டும் காதலுக்கு தூது செல்வான். நண்பர்களுக்கு அல்லையன்ஸ் பார்ப்பான். திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்வான்

இரண்டு பிரிவினரும்:
பெண்ணை புரிந்து கொள்வதில் தோற்றுப்போகிறார்கள். பெண் ஒரு மனுஷி. அவளுக்கும் ஒரு மனம் உண்டு. விருப்பம் உண்டு. லட்சியங்கள் உண்டு. என்ற எண்ணம் வருவது கடினம்.

ஆண்டுக்கணக்காய் தொடரும் சுய இன்பங்களில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. இதில் உச்சம் பெற அடுத்தவரின் ஒத்துழைப்பென்ன, அடுத்த ஆசாமியே தேவையில்லைஅடுத்தவரின் உச்சக்கட்டத்துக்காக தன் . உச்சத்தை தள்ளிப்போடவோ, அவசியமில்லாது போகிறது.
இதனால் இவர்கள் சுய நலமிகளாகவும், சமூக உணர்வுகள் அற்றவர்களாகவும், இன்ட்ராவர்டுகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

மேலும் இவர்களில் நிறையபேர் டிப்பெண்டென்டுகளாகவோ அ மேன்சன் ஹவுஸ்களில் அறை பகிர்ந்து வசிப்பவர்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம். எனவே ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது. அவசரமாக முடிக்க வேண்டியிருக்கிறது. பலர் கழிவறைகளை கூட பயன் படுத்த வேண்டியிருக்கிறது. துரித கதியிலான உச்சத்துக்கு பழக்கப்பட்டுவிடலால் துரிதஸ்கலிதத்துக்கு இலக்காகி விடுகின்றனர். நாளை திருமணமானால் மனைவியை திருப்தி படுத்த முடியாது அவஸ்தை படுகிறார்கள். ( ஞா.படுத்திக்கங்க 7 /23 )

காம சுகம் என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் அனுபவிக்க வேண்டிய விஷயம். சுய இன்பத்தின் போது இதர உறுப்புகள் அதை எள்ளளவும் அனுபவிப்பதில்லை. காம உணர்வுகள் இன உறுப்பையே மையமாக கொண்டுவிடுகின்றன. நகரப்பேருந்துகளில் முட்ட கொடுப்பவனெல்லாம் இந்த ஜாதிதான்.

சுய இன்பம் கூடவே கூடாதா?
காமம் தலைக்கேறி கற்பழிப்புக்கோ,கள்ள உறவுக்கோ, தகாத உறாவுக்கோ வழி கோலும் வாய்ப்பிருக்கும்போது அணை உடையும் நிலையில் காவிரி நீரை திறந்து விடும் கர் நாடக அரசை போல் திறந்து விடலாம். உள்ளடக்கி வைக்கப்பட்ட காம எண்ணங்கள் சாகசங்களுக்கும் ,போதைக்கும், குற்றத்துக்கும்,வன்முறைக்கும், தூண்டும் போது ஒரு அவுட் லெட்டாக , எமர்ஜென்சி கேட்டாக உபயோகிக்கலாம். அல்லது அவரவர் உடல் நிலையை பொருத்து மாதம் ஓரிருமுறை எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி, நிதானமாக , ஆழமாக இதில் ஈடுபடும்போது உடலுறவு போலவே இதுவும் பயன் தரும்.

இவர்களில் அதிக சதவீதம் முழுதாய் ஒரு பெண் வந்து நான் உனக்கே என்றால் " நண்டு பிடிக்க போன ஐயர் மாதிரி " தடுமாறிவிடுவார்கள்

Monday, October 26, 2009

ஆழமான உடலுறவு விதியை வெல்லும்

செக்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி,புரிதல் ,சூட்சுமம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையின் பாதையை /விதியை உடைத்து திருப்பலாம் , லோகாயதமாக மட்டுமல்லாது ஆத்யாத்மிகமாகவும் வாழ்வாங்கு வாழலாம் என்பதை இந்த பதிவில் விவரிக்க உள்ளேன். பொறுமையாக படித்தால் இன்றோடு உங்களை பிடித்த பீழை ஏழையாயிரும். உங்கள் தலையெழுத்தே மாறிப்போயிரும்.

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.


கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ....ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.

நாம் இதுவரை இந்த பிறவியிலான நம் வாழ்க்கையை நமது முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள் பாதிக்கின்றன என்பதை பார்த்தோம்.

உங்கள் ஒட்டு மொத்த வாழ்வையும் உங்கள் பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி பல விஷயங்கள் பாதிக்கின்றன. இந்த பட்டியலில் மிக முக்கியமான அம்சத்தை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. அதுதான் உங்கள் செக்ஸ் லைஃப். செக்ஸுக்கு அதிபதியான சுக்கிரன் ஆண்டின் பத்து மாதங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கிறார். மேலும் நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் "ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது
அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் "எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு" என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே " ஆதலினால் காதல் செய்வீர்"

ஆழமான உடலுறவு விதியை வெல்லும்

செக்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி,புரிதல் ,சூட்சுமம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையின் பாதையை /விதியை உடைத்து திருப்பலாம் , லோகாயதமாக மட்டுமல்லாது ஆத்யாத்மிகமாகவும் வாழ்வாங்கு வாழலாம் என்பதை இந்த பதிவில் விவரிக்க உள்ளேன். பொறுமையாக படித்தால் இன்றோடு உங்களை பிடித்த பீழை ஏழையாயிரும். உங்கள் தலையெழுத்தே மாறிப்போயிரும்.

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.


கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ....ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.

நாம் இதுவரை இந்த பிறவியிலான நம் வாழ்க்கையை நமது முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள் பாதிக்கின்றன என்பதை பார்த்தோம்.

உங்கள் ஒட்டு மொத்த வாழ்வையும் உங்கள் பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி பல விஷயங்கள் பாதிக்கின்றன. இந்த பட்டியலில் மிக முக்கியமான அம்சத்தை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. அதுதான் உங்கள் செக்ஸ் லைஃப். செக்ஸுக்கு அதிபதியான சுக்கிரன் ஆண்டின் பத்து மாதங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கிறார். மேலும் நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் "ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது
அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் "எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு" என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே " ஆதலினால் காதல் செய்வீர்"

பத்தினியெல்லாம் பரத்தையாக போறா !

நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
இதில் உங்களுக்கு சந்தேகமா ? கீழ் காணும் புள்ளிவிவரங்களை பாருங்கள் . நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
1. விவசாய உற்பத்தி குறைவது 1995-96 லேயே துவங்கிவிட்டது.
2. சுமார் 70 சதவீதம் பேர் சுகுரா சொன்னா 68 % பேர் விவசாயத்தை நம்பியிருக்காங்க (மத்த 30 சதம் பேரும் திங்கறதுக்காகவாவது விவசாயத்து மேலதானே ஆதாரப்படனும்? மேலும் 68% விவசாயத்துல லோல்பட்டு பொருளீட்டினா மத்த 32 சதவீதம் அவனை நேரிடையாவோ ,மறைமுகமாகவோ எக்ஸ்ப்ளாயிட் பண்ணித்தானே பிழைக்கிறோம்
3. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை பாருங்க:
எழுவது சதவீதம் மக்களை வாழ வைக்கும் விவசாயத்துறையின் நாடித்துடிப்பான நீர்ப்பாசனத்துக்கு 0.35 சதவீதம் . சுமார் 2 % பேரை மட்டும் வாழவைக்கிற தகவல் தொடர்பு துறைக்கு 13 % . உருப்படுவோமா ? என்னதான் லொல்லு பண்ணாலும் லல்லு சூப்பர் தத்துவம் ஒன்னு விட்டாரு. பால் குடுக்கிற மாட்டுக்கு புண்ணாக்கு போட்டேன். புண்ணாக்கு போட்ட மாடெல்லாம் பால் கறந்துச்சு. ஆனால் நாம என்ன பண்றோம் வெறுமனே சாணி போட்டு, கோமயம் பெய்யற மாடுகளுக்கு டன் டன்னா புண்ணாக்கு போடறோம்
4. நாட்டில் உள்ள 80 சதவீதம் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. ( பயிர் செலவை குறைக்கனும்னா மெக்கனைசேசன் பண்ணனும், சொட்டு நீர்பாசனம், செக் டேம் ,லொட்டு லொசுக்குனு ஆயிரம் பண்ணனும் அந்த நொள்ளை ஒரு ஹெக்டேருக்கு இதெல்லாம் பண்ணா கட்டுப்படியாகுமா? இதுக்குதான் நான் 1986 லருந்தே கூவிக்கிட்டு இருக்கேன். கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்யலாம். நாடு முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி கூட்டுறவு சங்கம் வைப்போம். விவசாயி தன் நிலத்தை நீண்ட குத்தகைக்கு தரான் (சங்கத்துக்கு) விருப்பம் இருந்தா அவனும் உழைக்கிறான். (குத்தகை தனி விளைச்சல்ல பங்கும் கிடைக்கும். வேணாம்னா குத்தகை வாங்கி திங்கலாம்) இதை ஒய்.எஸ்.ஆர் ட்ரை பண்ண பார்த்தார். மொத்தமா 3 கிராமம் கூட முன்வரலை (எதிர்கட்சிங்க லொள்ளு காரணமா)
5.இதுல அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் என்னன்னா இப்போ உள்ள விவசாயிகள்ள 40 % பேரு விட்டு தொலைச்சுரலாம்னு இருக்கேன்னு சொல்றாங்களாம் .
6. விட்டுட்டா என்னாகும்? 2006 லயே 50 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்தோம். இந்திரா காந்தி காலத்துல ரஷ்யாலேருந்து கோதுமை இறக்குமதி பண்ணப்போதான் பார்த்தினீயம் இந்தியாவுக்குள்ள வந்துருச்சாம். அதை எரிச்சா கூட விதைகள் பட் பட்டுனு வெடிச்சு தூர விழுந்து அங்கே முளைக்கும்னா பார்த்துக்கோங்க ( இது முக்கியமான களைங்கோ !) இது மட்டுமில்லே 2007 ஜூனுக்கு பற்றாக்குறை நிலை எவ்ளனு பாருங்க !
கோதுமை: 40 லட்சம் டன்
பருப்பு வகை: 10 லட்சம் டன்
எண்ணெய் வித்துக்கள்: 20 லட்சம் டன்
பற்றாக்குறைன்னா நமக்கென்ன போச்சுனு நினைச்சுராதிங்கன்னா ! சரக்குக்கு டிமாண்ட் ஜாஸ்தியாச்சுன்னா மார்கெட்ல ரேட்டு பிச்சுக்கும்.

7. இறங்கு முகம்:
ரஜினியோட மூன்றுமுகம் மாதிரி இறங்கு முகம்னு ஒரு படம் எடுத்தா இந்தியாவோட விவசாயத்துறைய ஹீரோவா போட்டுரலாம். 1995ல சராசரி தானிய உற்பத்தி 207 லட்சம் டன் 2007 ஆம் வருசம் பார்த்திங்கண்ணா 186 டன் வித்யாசம் என்ன ? கூட்டி கழிச்சு பாருங்க ! 21 லட்சம் டன் குறைஞ்சு போச்சு. இப்போ 2009 வருசத்துக்கு எத்தனை குறையும்னு கற்பனை பண்ணி பாருங்க தாளி ! சோத்துக்கில்லாம சாகப்போறது நிச்சயம்.

8.மற்ற துறைகளில் முதலீடு செய்தா அதுலருந்து கிடைக்கிற வருமானம் வருசத்துக்கு 4 சதவீதம் உயருது. விவசாயத்துல ? நல்லா உத்து படிங்க 0.28% தான். என்னா மயித்துக்கு விவசாயம் பண்ணுவான் விவசாயி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு அன்னைகென்னைக்கோ சொல்லிவச்சது இன்னைக்கும் நடக்குதுன்னா இதான் வளர்ச்சியா?
9 வருசத்துக்கு 20 ஆயிரம் விவசாயி தற்கொலை பண்ணிக்கிரான். ( ஆந்திரால ஒய்.எஸ்.ஆர் முதல்வரானதும் பழைய கரெண்ட் பில் பாக்கி மொத்தத்தையும் ரத்து பண்ணாரு. இலவச மின்சாரம் கொடுத்தார்)
10. பஞ்சாப்ல 7 வருசத்துக்கு முன்னாடி( அதாவது 2000 வருசத்துல) ஏக்கருக்கு 25 குவிண்டால் கோதுமை கிடச்சது. இப்போ (2007ல) 16 குவிண்டால் தான் கிடைக்குது. என்ன காரணம்? மாட்டுக்கு இஞ்செக்ஷன் போட்டு பாலை ஒட்டக்கறந்த மாதிரி கண்ட உரத்தை போட்டு பூமியோட சாரத்தை உறிஞ்சு எடுத்தாச்சு. பிரசவம் நடந்தாலே டீல் ஆயிரும். குறுகிய கால சாகுபடி எல்லாம் அபார்ஷன் மாதிரிதானே . நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க இயற்கை விவசாயம் பண்ண்வோம்
னு தலை தலையா அடிச்சிக்கிறாங்க கேட்டாதானே !
11.இதர சமாச்சாரங்களுக்காக (ரியல் எஸ்டேட், தொழிற்பூங்கா , இத்யாதி) வருசத்துக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் டைவர்ட் ஆகுது. தாளி சாரம் குறைஞ்சுக்கிட்டே வருது , இதுல நிலத்தோட அளவும் குறைஞ்சிட்டே போனா என்னாத்த வெளையறது, என்னாத்த திங்கறது.
12. தேசிய உற்பத்தின்னா என்னானு தெரியுமான்னா ? ஒரு வருசத்துல நாட்ல உற்பத்தியான சரக்குகள்மற்றும் அளீக்கப்பட்ட செர்வீஸசோட வேல்யூதான் தேசீய உற்பத்தி. 1975 ல விவசாயத்துறையோட பங்களிப்பு 35 % இப்போ 19 சதவீதம். லல்லு ரயில்வே மந்திரியாகறதுக்குமுந்தி ரயில்வேயோட லாபம் 2 சதம். ஆனா இப்போ ?
கெவர்மென்டு ரோட்ல பஸ் விடறவன் கோடி கோடியா குவிக்கலாம். ஆனால் சொந்த ட்ராக்ல ஓடற ரயில் சம்பாதிக்க கூடாதானு யோசிச்சாரு லல்லு. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயதுறைதான். மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். ஒரு கடலைக்கொட்டைய புதைச்சு வச்சா 40 கொட்டையாவது கிடைக்கும் . ஒருலட்ச ரூபா நானோ காரை புதைச்சு வச்சா என்ன கிடைக்கும் ? காயலான் கடைக்கு போட்டா பட்டாணி கிடைக்கும் அவ்ளதான்.
13.இன்னொரு வெட்ககேட்டை பாருங்க இருக்கிற நிலத்துல 60 சதவீதம் வானம் பார்த்த பூமி தானாம் (மத்ததெல்லாம் நமீதாவை பார்க்குதானு கேட்ராதிங்க) சுதந்திரம் வந்து 60 வருசத்துக்கப்பறம் இது நிலைமை
14.ஒட்டுமொத்தமா விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாருங்க ! முதல் ஐந்தாண்டு திட்டத்துல 23% பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துல ... மயக்கம் போட்ராதிங்க வெறும் 5 சதவீதம்.

இதெல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமல் படுத்தபடலேன்னா சோத்துக்கில்லாம சாகப்போறோம். பத்தினியெல்லாம் பரத்தையாக போறா ! அஞ்சுக்கும் பத்துக்கும் குத்தி கொன்னுக்கிட்டு சாகப்போறோம் .(இப்பவும் அதான் நிலைன்னா சாரி. நிலைமை இதை விட ரொம்ப மோசமாயிரும்)

இந்த நிலை வந்துவிடக்கூடாதென்று 1986 முதல் நதிகள் இணைப்புக்காக தனியொரு பாதையில் என் முயற்சிகளை தொடார்ந்து வருகிறேன். இது குறித்த விவரங்களை எனக்கும் மனசாட்சிக்கும் நடக்கும் உரையாடலாய் ( கொஞ்சம் நகைச்சுவையுடன் தருகின்றேன்)
அதற்கு முன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

இப்போது இது தொடர்பாக எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையிலான உரையாடலை பாருங்கள்

மனசாட்சி: ஏம்பா இப்படி ஆரம்பிச்சு நீ ஆதியோடந்தமா எழுத ஆரம்பிச்சா சனம் படிக்குங்கற
நான்: இல்லைதான் அதுக்காக சொல்லாம விட்டுர முடியுமா?
மனசாட்சி:இது எப்படியிருக்குன்னா சுஜாதாவே மேலுப்பா புரிஞ்சவ புரிஞ்சுக்க புரியாதவன் சொரிஞ்சுக்கிட்டு போன்னாரு. நீ சொல்றத பார்த்தா நான் சொல்லிருவன். அதுவும் மொக்கை போட்டு சொல்வேன். படிக்கிறவன் படிங்கறமாதிரி இருக்கு.
நான்:இப்ப என்ன செய்யனுங்கற?
மனசாட்சி: ச்சும்மா தமாசா சொல்ப்பா !
நான்: நாட்டோட எதிர்காலம் உனக்கு தமாசா இருக்கா ?
மனசாட்சி:தா பாரு அடல்ட் ஜோக்கெல்லாம் போட்டவன் நீ ஆப்பரேஷன் இந்தியா பத்தி மொக்கை போடாம சொல்லுன்னா கோச்சுக்கறியே
நான்:இப்ப என்ன கிச்சு கிச்சு காட்டிக்கிட்டே சொல்லனும் அவ்ளதான?
மனசாட்சி:தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
நான்: இந்த திட்டத்தோட ஆதி மூலம் என்ன தெரியுமா ?
மனசாட்சி:உள் மூலமா வெளி மூலமா கண்ணா ?
நான்:இதெல்லாம் ஓவர்.
மனசாட்சி: நாம என்ன க்ரிக்கெட்டா ஆடறோம்?
நான்:என்னை சொல்ல விடறியா?
மனசாட்சி:எங்கே உன்னை சொல்ல விட்டா வந்தவன் எல்லாம் தலை தெறிக்க ஓடிர்ர மாதிரியிருக்கே
நான்: உன்னோட இதே ரோதனையா போச்சு. வர வர நீ ந்யூஸ் சேனல்ஸ் பார்த்து கெட்டுப்போயிட்டே .எதிர்கட்சி மாதிரி தாலியறுக்கிறே..
மனசாட்சி:இன்னாபா ஃப்ளோ கட் ஆயிருச்சா?
நான்: உனக்குதான் கட் ஆகப்போவுது டங்குவார்
மனசாட்சி: இதானாப்பா இந்தியாவை பணக்கார நாடாக்கறதுல உனக்கிருக்கிற அக்கறை?
நான்: திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாரு தெரியுமா? என்.டி.ஆர். சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு அவரு ..
மனசாட்சி:இன்ஸ்பிரேஷன் கீட்டம். ஏதோ ஒரு சம்பவம் ட்ரிக்கர் மாதிரி வேலை செய்திருக்குமே?
நான்:ஆமாம்பா. நான் டிகிரி செகண்ட் இயர் படிக்கிறேன்.அப்ப ஒல்லியா ஒரு பையனும், கில்லியா ஒரு பெண்ணும் ஓடி வந்துட்டாங்க, பிரம்பு நாற்காலி பண்றவங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நம்ம சென்டர் இருந்த தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஒரு டெயிலர் கடைலதான் டெண்ட். செட்டுல ஒரு நாய் என்ன சொல்லுச்சு தெரியுமா ? "பட்டா ! இந்த ஒல்லிபீச்சான ரெண்டு காட்டு காட்டி (அடித்து) அவளை முடிச்சுரனும் மாமா" இத்தனைக்கும் அவன் நல்ல குடும்பத்து பையன் தான். இன்டலிஜெண்ட் தான்.
மனசாட்சி:அட காஞ்சானுங்களே ! அம்பதுக்கு நூறுக்கும் வரத்தான் நூறு டிக்கட் காத்திருக்கே.. இதெல்லாம் காண்டுதானே !
நான்: இல்லையா பின்னே அப்பத்தான் முடிவு பண்ணேன். தாளி இவனுகளை சும்மா விட்டா பிழைக்க விடமாட்டானுக . பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி கொடுத்துரனும்னு
மனசாட்சி:என்னா வேலைப்பா?
நான்:அந்த நிமிஷம் எனக்கே தெரியாது. அப்பறப்பறம்.. இந்தியாவுக்கும், விவசாயத்துக்கும் உள்ள பொருத்தம் இத்யாதியெலாம் உறைச்ச பிறகு, வடக்குல வெள்ளம், தெற்கில வறட்சி வந்து விவசாயத்தோட முதுகெலும்பை நொறுக்கற சங்கதியெல்லாம் கூட்டி கழிச்சு தான் வேலையற்ற யுவதி,யுவர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி நதிகளை இணைத்தல் என்ற . கான்செப்ட் உருவாச்சு
மனசாட்சி: நீ சொல்றதெல்லாம் வெறும் யோசனை மாதிரியிருக்கே தவிர திட்டங்கற மாதிரி தெரியலியே.
நான்: கண்ணா ! நான் சுருக்கமா சொன்னேன். இதுக்கான தியரிட்டிகல் சப்போர்ட்ட விவரிச்சா மொக்கை போடறேன்னிருவ. நம்ம சைட்லயே சீரியஸா இன்னொரு பதிவு போட்டிருக்கேன். தேடிப்பிடிச்சு படி..
மனசாட்சி:அது சரி அது சரி. மேலே போ!
நான்:வேணாம்பா ஒய்.எஸ்.ஆர் அப்படி மேலே போய்தான் ஒரேதாட்டியா போய் சேர்ந்துட்டாரு.
மனசாட்சி: சரி முந்துக்கு போ ! (முன்னாலே போ)
நான்:இப்படித்தான் சந்திரபாபு 9 வருசமா முந்துக்கு போவாலி ! முந்துக்கு போவாலி !ன்னு ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாரு. இன்னைக்கு நாறிட்டாரு

மனசாட்சி:என்ன நீ நான் ஏதோ உன்னை கலாய்க்கலாம்னு பார்த்தா நீ என்னை கலாய்க்கிறே !
நான்:நைனா என் வயசு 42 அதை திருப்பி போடு 24 ! தப்பாட்டம் ஆட இறங்கிட்டேனு வை .. நாஸ்திதான்
மனசாட்சி: அட வேணாம்பா ஆள விடு
நான்: விசயத்துக்கு வரேன்
மனசாட்சி: வா.. வா..
நான்:வேலை கொடுக்கனும். அதுக்கு சிறப்பு ராணுவம். இந்தியாவோட உயிர் நாடி ,70% பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற துறை ,உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை, பொல்யூஷனுக்கிடமில்லாத ஒரே துறை விவசாயத்துறை அதுக்கிருக்கிற பெரும் பிரச்சினை பாசன் நீர் பற்றாக்குறை. அதுக்காக அந்த சிறப்பு ராணுவத்துக்கு கொடுக்கிற வேலை நதிகளை இணைத்தல்
மனசாட்சி: ஏன்பா தெரியாம கேட்கிறேன். ஒய்.எஸ். ஏதோ கோவணம் சைஸுக்கு கால்வாய் வெட்டி கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கிறேன்னாரு. அதுக்கே நிலத்தை கையகப்படுத்தறதுல ஆயிரம் வில்லங்கம். இதுல எல்லா நதிகளையும் இணைக்கனும்னா?

நான்:சரியான கேள்வி. இதுக்குதான் கூட்டுறவுப்பண்ணை விவசாயம். விவசாயிகள் எல்லாரும் தங்கள் கிராமத்துல ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்து தங்களோட நிலத்தை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துருவாங்க. அதுல கால்வாய் வெட்ராங்களோ ,கோல்ட் ஸ்டோரேஜு கட்டறாங்களோ, பல்ப் இண்டஸ்ட்ரி வைக்கிறாங்களோ அதுக்கும் வருசா வருசம் வர்ர லீசு தொகைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. டாணு வந்துரும். சங்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாரும் டீமா பயிர் வேலை பார்ப்பாங்க.
மனசாட்சி:இன்னொரு சந்தேகம் !
நான்:கேட்டுத்தொலை
மனசாட்சி: நானே ஒரு 50 ஏக்கர் வச்சிருக்கேனு வை . அதை சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டேன். ஆனால் நான் எப்படி மம்முட்டி பிடிச்சு வேலை செய்வேன்?
நான்:செய்யாதே..வருசா வருசம் லீசு வாங்கி சாப்பிடு
மனசாட்சி:ஒரு வேளை கூட்டுறவு பண்ணை விவசாயம் ஊத்திக்கிட்டா?
நான்:அபிஷ்டு ! அபிஷ்டு! இதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன் படிச்சு பாரு. 80 சதம் விவசாயிக்கிட்டே ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. விவசாயம் சக்ஸஸ் ஃபுல் ஆகணும்னா பயிர் செலவை குறைக்கனும். அதுக்கு மெக்கனைசேஷன், தொழில் நுட்பம், வாட்டர் மேனேஜ்மென்ட், நில பரிசோதனை, தரமான விதைகள், இயற்கை விவசாயம், க்ராப் இன்ஷியூரன்ஸ் லொட்டு லொசுக்குனு ஆயிரம் இருக்கு. ஒட்டு மொத்தமா இன்வெஸ்ட் பண்ணா செலவை குறைக்கலாம். அதை ரஜினி மாதிரி சிங்கிளா வந்து சாதிக்க முடியாதில்லை. அதுக்குதான் கூட்டுறவு பண்ணை விவசாயம்
மனசாட்சி:தனியா மாட்டிக்கிட்டு சாகறதுக்கு பதில் சங்கமா மாட்டி சாவுங்கற.
நான்:முண்டம் ! தண்டம் ! நீ தனியாளா இருந்தா எல்லாத்துக்கும் நீ அலையனும். சங்கமா இருந்தா எல்லா நாயும் உங்களை தேடிவரும். உன் நிலத்தோட விஸ்தீரணம் குறைவா இருந்தா பாங்கிகாரன் கடன் குடுக்க ரோசிப்பான். அரசாங்கமும் உன்னை தேடி பிடிச்சு உதவ மெனக்கெடனும் சிகப்பு நாடாத்தனத்துல விதை வர்ரதுக்குள்ள விதைக்கிறா சீசனே போயிரும். நீ சங்கமா இருந்தா அதுலயும் ஒரு மண்டல அளவுல ஒருங்கிணைப்பு இருந்தா ஆஃபீஸர்ல இருந்து, பாங்கி,இன்ஷியூரன்ஸ் எல்லாமே உங்க ஆஃபீசண்டை வந்து தவம் கிடப்பான்
மனசாட்சி:அதுசரிப்பா.. தனியா செய்தாலும், கூட்டா செய்தாலும் வந்த விளைச்சலை சரியான விலைக்கு விக்கனுமே
நான்:அதுக்கும் அதே விதிதான். விளைச்சல் எல்லாத்தயும் ஒரே நாள்ள, அவசரமா,தனி தனியா விக்க நினைக்கறதால விலையும் குறைச்சல், அலைச்சலும் கூட. விவசாயிகள் சங்க நிர்வாகம்னா முண்டாசு கட்டின பெருசுங்க ( எலக்டட் டைரக்டர்ஸ்) மட்டும் இருக்காது. அதுக்கு தேவையான எல்லா நிபுணர்களையும் அரசு கொடுத்து உதவும். தேசிய அளவுல அடுத்த வருசம் என்னென்ன தானியம் தேவை? எவ்ள தேவை, அதிகப்படியா வந்ததை எத்தனை நாள் ஸ்டாக் பண்ணனும் ?அதுக்கு எவ்ள பெரிய கிடங்கு தேவை, கோல்டு ஸ்டோரேஜ் தேவையா? இல்லே கன்ஸூமர் ப்ராடக்டா மாத்தி விக்கனுமா? அதுக்கு என்ன ஃபேக்டரி தேவை? இப்படி சகலமும் இன்டர் நெட் மூலமா விரல் நுனில இருக்கும்பா.
மனசாட்சி: சரி கண்ணு.. நீ சொல்றதெல்லாம் ஒர்க் அவுட் ஆகி லாபம் வந்ததுன்னே வை ..அதை எப்படி பிரிச்சுக்கறதாம்.
நான்:லேண்ட் ,லேபர்,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன் கெட்ஸ் ரெண்ட்,லேபர்,இன்டரஸ்ட், அண்ட் பிராஃபிட்.
மனசாட்சி:என்னமோ இங்கிலீஷ்லபீலா விட்டுட்ட
நான்:இதை தமிழ்லசொல்லனும்னா ஒரு பத்தி எழுதனும்பா
மனசாட்சி: சரி அண்ணாச்சி ! விவசாயி கூட்டா பயிர் பண்றான், விளச்சலை ஸ்டாக் வச்சு மார்க்கெட் பண்றானே வை. கருப்புபண முதலைங்க சும்மா இருக்குமாம். மார்க்கெட் கண்ட்ரோலே அதுங்க கிட்டதானே இருக்கு?
நான்: அதுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு. மத்திய அரசு 3 மாசம் நோட்டீஸோட இப்ப இருக்கிற கரன்ஸி செல்லாது,பழச வச்சிருக்கிறவனெல்லாம் அதுக்கு கணக்கு காட்டி புது கரன்ஸிய வாங்கிக்கனு அனவுன்ஸ் பண்ணிரும். கணக்கில்லாத பணமெல்லாம் மார்க்கெட்லருந்து வெளியேறிடும்.
மனசாட்சி: அக்காங்க் அஸ்கு புஸ்கு. இன் கம்டேக்ஸ் காரன் பிடிச்சுட்டா வருமானத்துக்கு அதிகப்படியா பிடிச்ச சொத்தெல்லாம் என் அம்மா,மனைவி,மகள்கள் தொழில் செய்து சம்பாதிச்சதுனு தப்பிச்சுக்கறான். கணக்கு காட்டறது என்ன பெரிய பிரம்ம வித்தையா அதுக்குதானப்பா அய்ய மாரெல்லாம் ஆடிட்டிங் படிச்சுட்டு காத்திருக்காங்க
நான்:தோ பார் ! இப்ப இருக்கிற நிலைய வச்சே கணக்கு போட்டு பேசறே. சிறப்பு ராணுவத்துக்கப்பால வேலையில்லாத பசங்களே இருக்கமாட்டாங்கப்பா . ஒரு ஆடிட்டர்கிட்டே 60 பேர் அசிஸ்டண்டா இருப்பான். அத்தினி பேரு இருக்கிறதைரியத்லதான் ஆடிட்டர் கச்சா முச்சானு க்ளையண்ட்சை ஏத்துக்கிட்டு பொய் கணக்கு காட்டறான். அந்த 60 பேரும் சிறப்பு ராணுவத்துக்கு போயிட்டா ?
மனசாட்சி: அதிகாரிங்க எல்லாம் கருப்பு பணத்துக்கு அது வெள்ளைதானு பொய் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறாங்கனு வை. அப்ப இன்னா செய்வீங்க அப்ப இன்னா செய்வீங்க
நான்: என் திட்டத்தை சக்ஸஸ் ஃபுல்லா அமல் படுத்தறதுக்காக எகானமி பேக்கேஜுனு ஒரு சப் ப்ராஜக்டு இருக்கு நைனா. அதுல முதல் அம்சமே அரசு துறை அதிகாரிங்க எலலாரையும் ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா டெஸ்ட் பண்ணுவம். இண்டியா டுடேங்கற தலைப்புல பரீட்சை வைப்போம். அதுல தேறினாதான் உத்யோகம் நைனா. இல்லேன்னா லாஸ் ஆஃப் பேல லீவ் கொடுத்து 3 மாசம் கழிச்சு ரீ எக்சாமினேஷன் வைப்போம் அதுலயும் டமாலாயிட்டா கோல்டன் ஷேக் ஹேண்டுதான்.
மனசாட்சி: அதுசரி கருப்பு பணம் வச்சிருக்கிறவன் தெருவுல போறவன் கிட்டே தன் பணத்தை கொடுத்து அவனோட வருமானமா காட்டி மாத்திக்கிட்டு வரச்சொல்றான்
நான்: அது வேலை வெட்டியில்லாத சனம் இருக்கிறப்ப நடக்கும். நாம தான் வேலையில்லாதவனே இல்லேனு ஆக்கிர்ரமே. சப்போஸ் அப்படியே மாத்த வச்சாலும் மாத்தறவன் சும்மா மாத்தமாட்டானில்லயா கு.ப.30 சதவீதமாவது கமிஷன் கேட்பானே. அந்த 30 சதம் கருப்பு பணமாவது மார்க்கெட்லருந்து ஒழியுதில்லயா?
மனசாட்சி:எப்படியோப்பா நல்லாவே கவர் பண்றே
நான்: நீ என்ன ஃபிகரா கவர் பண்ண
மனசாட்சி: இதுவரை நீ சொன்னதெல்லாம் சரினே வச்சுக்குவம்.நீ சொல்ற திட்டத்தை அமல் படுத்த வேண்டியது யாரு?
நான்:மத்திய அரசு
மனசாட்சி: அதாவது எம்.பி.கள்
நான்:யெஸ் .ஆமாம்
மனசாட்சி:டீக் ஹைனு ஹிந்தில கூட சொல்லு மும்மொழி திட்டத்தை அமல் படுத்தினாப்ல ஆயிரும்,
நான்: நீ என்ன கேள்வி கேட்கப்போறேனு எனக்கு புரிஞ்சு போச்சு. கோடி கோடியா செலவு பண்ணி எம்.பி.ஆனவன்/ ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சு பதவிக்கு வந்த மந்திரி அவனை மந்திரி ஆக்கினவங்க அவங்களுக்கே ஆப்பு வச்சுக்குவாங்களானு தானே கேட்கிறேன்
மனசாட்சி:கிரிக்கெட்டு.
நான்:இப்படி ஒரு வில்லங்கமிருக்கிறதாலதான் நம்ம ஆப்பரேஷ்ன் இந்தியால முதல் அம்சமே நேரிடை ஜன நாயகம்னு வச்சிருக்கோம்.பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுப்பாங்க . அதனால் அவருக்கு ஃபுல் பவர்ஸ் இருக்கும். முக்கியமா பார்லிமென்ட்ல வீட்டோ பவர் இருக்கும். கருப்பு பண முதலைகள் எம்.பிக்களைவிலைக்கு வாங்கி திட்ட அமலுக்கு ப்ரேக் போட முயற்சி பண்ணாலும் பருப்பு வேகாது.
மனசாட்சி: நெரிடையா எலக்ட் ஆகிற பிரதமர் மட்டும் எப்படி நியாயமான ஆளா இருக்க முடியும்?
நான்:இப்போ பாராளுமன்ற தேர்தல்கள்ள ஆந்திரால காங்கிரஸ் சக்ஸெஸ் ஆச்சு. எப்படி? டாக்டர் ஒய்.எஸ்.ஆரோட எம்.ஜி.ஆர் வேலைகளால வெற்றி கிடைச்சுது. ஆனால் மத்திய அரசை வழி நடத்தறது யாரு சோனியா. மக்கள் சோனியாவுக்காகவோ , நேரு குடும்பத்துக்காகவோ ஓட்டு போடனும்னா 1994 போட்டிருக்கலாம், 1999 ல கூட போட்டிருக்கலாம் இல்லியா?
மனசாட்சி: நீ என்ன சொல்ல வர்ரே ஸ்ட்ரெயிட்டா சொல்ல்லுப்பா சுத்தி வளைக்காத.
நான்:செக்ஸுல கூட இப்படிதான் அன்பான பேச்சு, முத்தம்,ஃபோர் ப்ளே எதுவுமில்லாம ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு போயிர்ரதாலதான் பெண்ணுக்கு சரியா லூப்ரிக்கேட் ஆகாம, ஆணுக்கு ப்ரி மெச்யூர்ட் எஜாகுலேஷனாகி, பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்காம நாஸ்தி ஆகிப்போவுது
மனசாட்சி:அய்யயோ இன்னாபா இது மாத்ரு பூதம் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே. தாய் குலமெல்லாம் படிக்கிறாங்கப்பா.
நான்:ஏன் பாக்யராஜ் படத்துல முருங்கைகாய் சமாச்சாரம் வந்தா ரசிக்கலை? தப்பித்தவறி இந்த பதிவை க்ளிக் பண்ணிட்ட இளைஞர்கள் விலகிராம படிக்க
இதுவும் தேவைப்படுதுப்பா
மனசாட்சி: என்ன இழவோ விஷயத்துக்கு வா
நான்: நான் என்ன சொல்றேன்னா நாட்ல இருக்கிற பி.சி.,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி எல்லாம் சேர்த்து 72% இருக்காங்க. மும்முனை போட்டி ஏற்பட்டு இதுல பாதி பேர் ஒத்துமையா ஓட்டு போட்டா கூட இவிங்க சப்போர்ட் பண்ற ஆளு, இவிங்களோட வெல் விஷர் பிரதமராயிருவாரு. எம்.பிங்க தயவும் தேவையில்லை. அது தேவையில்லைங்கறதால டாட்டா,பிர்லா தயவும் தேவையில்லே, பதவிக்கும் கண்டம் வராது. ஒழுங்கா மக்களுக்கு செய்ய வேண்டியத செய்தா படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம்
மனசாட்சி:இதான் ஆப்பரேஷன் இந்தியாவா
நான்:யெஸ்ஸு..
மனசாட்சி:திட்டம் சரிப்பா . இதனோட அமலுக்காக என்ன கிழிச்சிருக்கே
நான்: அதெல்லாம் ஏற்கெனவே விரிவா இந்த வலைப்பூல சொல்லியாச்சுப்பா
தலைவன்னு எவனெவன் இருந்தானோ ,இன்னைக்கு இருக்கானோ எல்லாத்துக்கும் ஹோல்சேலா, ரீடெயிலா அனுப்பியாச்சுப்பா. லோக் சபா ஸ்பீக்கருக்கு 200 பிரதி அனுப்பினேன். தமிழ் நாடு,ஆந்திர ஹை கோர்ட் நீதிபதிகளுக்கு அனுப்பினேன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பினேன், எல்லா எம்.பிக்களுக்கும் மெயில் அனுப்பினேன். ( நோ சச் யூசர்னு ரிட்டர்ன் வந்துருச்சு எல்லாமே)
மனசாட்சி:மொத்ததுல டெஸ்பாச் க்ளர்க் மாதிரி வேலை செய்திருக்கே.
நான்: சந்திரபாபுவுக்கு 97 ல ருந்து 02 ஏப்ரல் 22 வரை அனுப்பினேன். பதில் இல்லேனு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன். அது டெலிவரி ஆச்சு. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். கண்டமேனிக்கு என்னை லந்து பண்ணாங்க. இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரகாரம் ஃபைட் பண்ணேன். ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனை அப்ரோச் பண்ணேன். யூ.என்.ஓக்கு கம்யூனிக்கேட் பண்ணேன்.
பத்து நாள் உண்ணாவிரதமிருந்தேன். தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துக்கிட்டிருந்தேன். ப்ரெஸ் மீட் வச்சிருக்கேன். ஒய்.எஸ்.சி.எம்.ஆன புதுசுல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை புறப்படறதா சொல்லி அலம்பல் பண்ணேன். ஒரு மயிரும் நடக்கலை
மனசாட்சி:இப்போ என்ன பண்றே?
நான்: செக்ஸ் ஜோக் எழுதிக்கிட்டிருக்கேன்
மனசாட்சி: ப்தூ.. இதுவும் ஒரு பிழைப்பா
நான்: சோடா புட்டிகண்ணாடிங்க அம்பதோ அறுபதோ படிச்சா போதுமுனு நினைக்கல கண்ணா சின்ன பசங்களை கூட நம்ம சைட் பக்கம் ஒதுங்க செய்ய தான் இன் டேக்டீஸ். இப்போ வார் ஸ்டார்ட்.
மனசாட்சி:என்னா வாரோ செருப்பு வாரா?
நான்:டங்குவார் அறுந்துரும்.
மனசாட்சி:அப்டின்னா என்னப்பா
நான்:எனக்கும் தெரியாதே
மனசாட்சி:ஆமா நீ தான் நவீன வாத்ஸாயனன் மாதிரி பில்ட் அப் தர ஆசாமியாச்சே இந்த திட்டம் அமலானா தீரக்கூடிய செக்ஸ் பிரச்சினைகள் என்னனு சொல்ல முடியுமா?
நான்:யூத்துக்கு காலாகாலத்துல வேலை கிடைக்காமதான் கல்யாணம் தள்ளிபோகுது. வேலை வெட்டி இல்லாத காரணத்தால சுய இன்பத்துக்கு பழக்கப்பட்டுர்ராங்க. இல்லேன்னா காமத்துக்கு காதல் வண்ணம் பூசி ஆசிட் அடிக்கிறாங்க கள்ள உறவு,ஈவ் டீசிங் பண்றாங்க, ரேப் பண்றாங்க. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் வன்முறையா வெடிக்குது. சூடோ நக்ஸல்ஸ், ஃபேக்ஷனிசம், உதவாக்கரை அரசியல், சினிமாகாரனுக்கு தோரணம் கட்டறதுனு வீணாப்போறாங்க காலாகாலத்துல வேலை கொடுத்துர்ரமில்லே. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செக்ஸை சட்டப்படி அனுபவிப்பாங்க எந்த வித காம்ப்ளெக்ஸுமில்லாம சக்ஸஸ்ஃபுல் செக்ஸ் லைஃபை லீட் பண்ணுவாங்க குழந்தையின்மை இத்யாதி பிரச்சினை வராது. தங்களுக்கு பிறக்கிற குழந்தைகளையும் நல்லா வளர்ப்பாங்க புதிய இந்தியா உருவாகும்.

மனசாட்சி:பழைய இந்தியாவை என்ன பண்றதாம். ஓல்ட் ஈஸ் கோல்ட் ம்யூசியத்துல வைக்கலாம்.

பத்தினியெல்லாம் பரத்தையாக போறா !

நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
இதில் உங்களுக்கு சந்தேகமா ? கீழ் காணும் புள்ளிவிவரங்களை பாருங்கள் . நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
1. விவசாய உற்பத்தி குறைவது 1995-96 லேயே துவங்கிவிட்டது.
2. சுமார் 70 சதவீதம் பேர் சுகுரா சொன்னா 68 % பேர் விவசாயத்தை நம்பியிருக்காங்க (மத்த 30 சதம் பேரும் திங்கறதுக்காகவாவது விவசாயத்து மேலதானே ஆதாரப்படனும்? மேலும் 68% விவசாயத்துல லோல்பட்டு பொருளீட்டினா மத்த 32 சதவீதம் அவனை நேரிடையாவோ ,மறைமுகமாகவோ எக்ஸ்ப்ளாயிட் பண்ணித்தானே பிழைக்கிறோம்
3. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை பாருங்க:
எழுவது சதவீதம் மக்களை வாழ வைக்கும் விவசாயத்துறையின் நாடித்துடிப்பான நீர்ப்பாசனத்துக்கு 0.35 சதவீதம் . சுமார் 2 % பேரை மட்டும் வாழவைக்கிற தகவல் தொடர்பு துறைக்கு 13 % . உருப்படுவோமா ? என்னதான் லொல்லு பண்ணாலும் லல்லு சூப்பர் தத்துவம் ஒன்னு விட்டாரு. பால் குடுக்கிற மாட்டுக்கு புண்ணாக்கு போட்டேன். புண்ணாக்கு போட்ட மாடெல்லாம் பால் கறந்துச்சு. ஆனால் நாம என்ன பண்றோம் வெறுமனே சாணி போட்டு, கோமயம் பெய்யற மாடுகளுக்கு டன் டன்னா புண்ணாக்கு போடறோம்
4. நாட்டில் உள்ள 80 சதவீதம் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. ( பயிர் செலவை குறைக்கனும்னா மெக்கனைசேசன் பண்ணனும், சொட்டு நீர்பாசனம், செக் டேம் ,லொட்டு லொசுக்குனு ஆயிரம் பண்ணனும் அந்த நொள்ளை ஒரு ஹெக்டேருக்கு இதெல்லாம் பண்ணா கட்டுப்படியாகுமா? இதுக்குதான் நான் 1986 லருந்தே கூவிக்கிட்டு இருக்கேன். கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்யலாம். நாடு முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி கூட்டுறவு சங்கம் வைப்போம். விவசாயி தன் நிலத்தை நீண்ட குத்தகைக்கு தரான் (சங்கத்துக்கு) விருப்பம் இருந்தா அவனும் உழைக்கிறான். (குத்தகை தனி விளைச்சல்ல பங்கும் கிடைக்கும். வேணாம்னா குத்தகை வாங்கி திங்கலாம்) இதை ஒய்.எஸ்.ஆர் ட்ரை பண்ண பார்த்தார். மொத்தமா 3 கிராமம் கூட முன்வரலை (எதிர்கட்சிங்க லொள்ளு காரணமா)
5.இதுல அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் என்னன்னா இப்போ உள்ள விவசாயிகள்ள 40 % பேரு விட்டு தொலைச்சுரலாம்னு இருக்கேன்னு சொல்றாங்களாம் .
6. விட்டுட்டா என்னாகும்? 2006 லயே 50 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்தோம். இந்திரா காந்தி காலத்துல ரஷ்யாலேருந்து கோதுமை இறக்குமதி பண்ணப்போதான் பார்த்தினீயம் இந்தியாவுக்குள்ள வந்துருச்சாம். அதை எரிச்சா கூட விதைகள் பட் பட்டுனு வெடிச்சு தூர விழுந்து அங்கே முளைக்கும்னா பார்த்துக்கோங்க ( இது முக்கியமான களைங்கோ !) இது மட்டுமில்லே 2007 ஜூனுக்கு பற்றாக்குறை நிலை எவ்ளனு பாருங்க !
கோதுமை: 40 லட்சம் டன்
பருப்பு வகை: 10 லட்சம் டன்
எண்ணெய் வித்துக்கள்: 20 லட்சம் டன்
பற்றாக்குறைன்னா நமக்கென்ன போச்சுனு நினைச்சுராதிங்கன்னா ! சரக்குக்கு டிமாண்ட் ஜாஸ்தியாச்சுன்னா மார்கெட்ல ரேட்டு பிச்சுக்கும்.

7. இறங்கு முகம்:
ரஜினியோட மூன்றுமுகம் மாதிரி இறங்கு முகம்னு ஒரு படம் எடுத்தா இந்தியாவோட விவசாயத்துறைய ஹீரோவா போட்டுரலாம். 1995ல சராசரி தானிய உற்பத்தி 207 லட்சம் டன் 2007 ஆம் வருசம் பார்த்திங்கண்ணா 186 டன் வித்யாசம் என்ன ? கூட்டி கழிச்சு பாருங்க ! 21 லட்சம் டன் குறைஞ்சு போச்சு. இப்போ 2009 வருசத்துக்கு எத்தனை குறையும்னு கற்பனை பண்ணி பாருங்க தாளி ! சோத்துக்கில்லாம சாகப்போறது நிச்சயம்.

8.மற்ற துறைகளில் முதலீடு செய்தா அதுலருந்து கிடைக்கிற வருமானம் வருசத்துக்கு 4 சதவீதம் உயருது. விவசாயத்துல ? நல்லா உத்து படிங்க 0.28% தான். என்னா மயித்துக்கு விவசாயம் பண்ணுவான் விவசாயி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு அன்னைகென்னைக்கோ சொல்லிவச்சது இன்னைக்கும் நடக்குதுன்னா இதான் வளர்ச்சியா?
9 வருசத்துக்கு 20 ஆயிரம் விவசாயி தற்கொலை பண்ணிக்கிரான். ( ஆந்திரால ஒய்.எஸ்.ஆர் முதல்வரானதும் பழைய கரெண்ட் பில் பாக்கி மொத்தத்தையும் ரத்து பண்ணாரு. இலவச மின்சாரம் கொடுத்தார்)
10. பஞ்சாப்ல 7 வருசத்துக்கு முன்னாடி( அதாவது 2000 வருசத்துல) ஏக்கருக்கு 25 குவிண்டால் கோதுமை கிடச்சது. இப்போ (2007ல) 16 குவிண்டால் தான் கிடைக்குது. என்ன காரணம்? மாட்டுக்கு இஞ்செக்ஷன் போட்டு பாலை ஒட்டக்கறந்த மாதிரி கண்ட உரத்தை போட்டு பூமியோட சாரத்தை உறிஞ்சு எடுத்தாச்சு. பிரசவம் நடந்தாலே டீல் ஆயிரும். குறுகிய கால சாகுபடி எல்லாம் அபார்ஷன் மாதிரிதானே . நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க இயற்கை விவசாயம் பண்ண்வோம்
னு தலை தலையா அடிச்சிக்கிறாங்க கேட்டாதானே !
11.இதர சமாச்சாரங்களுக்காக (ரியல் எஸ்டேட், தொழிற்பூங்கா , இத்யாதி) வருசத்துக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் டைவர்ட் ஆகுது. தாளி சாரம் குறைஞ்சுக்கிட்டே வருது , இதுல நிலத்தோட அளவும் குறைஞ்சிட்டே போனா என்னாத்த வெளையறது, என்னாத்த திங்கறது.
12. தேசிய உற்பத்தின்னா என்னானு தெரியுமான்னா ? ஒரு வருசத்துல நாட்ல உற்பத்தியான சரக்குகள்மற்றும் அளீக்கப்பட்ட செர்வீஸசோட வேல்யூதான் தேசீய உற்பத்தி. 1975 ல விவசாயத்துறையோட பங்களிப்பு 35 % இப்போ 19 சதவீதம். லல்லு ரயில்வே மந்திரியாகறதுக்குமுந்தி ரயில்வேயோட லாபம் 2 சதம். ஆனா இப்போ ?
கெவர்மென்டு ரோட்ல பஸ் விடறவன் கோடி கோடியா குவிக்கலாம். ஆனால் சொந்த ட்ராக்ல ஓடற ரயில் சம்பாதிக்க கூடாதானு யோசிச்சாரு லல்லு. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயதுறைதான். மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். ஒரு கடலைக்கொட்டைய புதைச்சு வச்சா 40 கொட்டையாவது கிடைக்கும் . ஒருலட்ச ரூபா நானோ காரை புதைச்சு வச்சா என்ன கிடைக்கும் ? காயலான் கடைக்கு போட்டா பட்டாணி கிடைக்கும் அவ்ளதான்.
13.இன்னொரு வெட்ககேட்டை பாருங்க இருக்கிற நிலத்துல 60 சதவீதம் வானம் பார்த்த பூமி தானாம் (மத்ததெல்லாம் நமீதாவை பார்க்குதானு கேட்ராதிங்க) சுதந்திரம் வந்து 60 வருசத்துக்கப்பறம் இது நிலைமை
14.ஒட்டுமொத்தமா விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாருங்க ! முதல் ஐந்தாண்டு திட்டத்துல 23% பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துல ... மயக்கம் போட்ராதிங்க வெறும் 5 சதவீதம்.

இதெல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமல் படுத்தபடலேன்னா சோத்துக்கில்லாம சாகப்போறோம். பத்தினியெல்லாம் பரத்தையாக போறா ! அஞ்சுக்கும் பத்துக்கும் குத்தி கொன்னுக்கிட்டு சாகப்போறோம் .(இப்பவும் அதான் நிலைன்னா சாரி. நிலைமை இதை விட ரொம்ப மோசமாயிரும்)

இந்த நிலை வந்துவிடக்கூடாதென்று 1986 முதல் நதிகள் இணைப்புக்காக தனியொரு பாதையில் என் முயற்சிகளை தொடார்ந்து வருகிறேன். இது குறித்த விவரங்களை எனக்கும் மனசாட்சிக்கும் நடக்கும் உரையாடலாய் ( கொஞ்சம் நகைச்சுவையுடன் தருகின்றேன்)
அதற்கு முன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

இப்போது இது தொடர்பாக எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையிலான உரையாடலை பாருங்கள்

மனசாட்சி: ஏம்பா இப்படி ஆரம்பிச்சு நீ ஆதியோடந்தமா எழுத ஆரம்பிச்சா சனம் படிக்குங்கற
நான்: இல்லைதான் அதுக்காக சொல்லாம விட்டுர முடியுமா?
மனசாட்சி:இது எப்படியிருக்குன்னா சுஜாதாவே மேலுப்பா புரிஞ்சவ புரிஞ்சுக்க புரியாதவன் சொரிஞ்சுக்கிட்டு போன்னாரு. நீ சொல்றத பார்த்தா நான் சொல்லிருவன். அதுவும் மொக்கை போட்டு சொல்வேன். படிக்கிறவன் படிங்கறமாதிரி இருக்கு.
நான்:இப்ப என்ன செய்யனுங்கற?
மனசாட்சி: ச்சும்மா தமாசா சொல்ப்பா !
நான்: நாட்டோட எதிர்காலம் உனக்கு தமாசா இருக்கா ?
மனசாட்சி:தா பாரு அடல்ட் ஜோக்கெல்லாம் போட்டவன் நீ ஆப்பரேஷன் இந்தியா பத்தி மொக்கை போடாம சொல்லுன்னா கோச்சுக்கறியே
நான்:இப்ப என்ன கிச்சு கிச்சு காட்டிக்கிட்டே சொல்லனும் அவ்ளதான?
மனசாட்சி:தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
நான்: இந்த திட்டத்தோட ஆதி மூலம் என்ன தெரியுமா ?
மனசாட்சி:உள் மூலமா வெளி மூலமா கண்ணா ?
நான்:இதெல்லாம் ஓவர்.
மனசாட்சி: நாம என்ன க்ரிக்கெட்டா ஆடறோம்?
நான்:என்னை சொல்ல விடறியா?
மனசாட்சி:எங்கே உன்னை சொல்ல விட்டா வந்தவன் எல்லாம் தலை தெறிக்க ஓடிர்ர மாதிரியிருக்கே
நான்: உன்னோட இதே ரோதனையா போச்சு. வர வர நீ ந்யூஸ் சேனல்ஸ் பார்த்து கெட்டுப்போயிட்டே .எதிர்கட்சி மாதிரி தாலியறுக்கிறே..
மனசாட்சி:இன்னாபா ஃப்ளோ கட் ஆயிருச்சா?
நான்: உனக்குதான் கட் ஆகப்போவுது டங்குவார்
மனசாட்சி: இதானாப்பா இந்தியாவை பணக்கார நாடாக்கறதுல உனக்கிருக்கிற அக்கறை?
நான்: திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாரு தெரியுமா? என்.டி.ஆர். சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு அவரு ..
மனசாட்சி:இன்ஸ்பிரேஷன் கீட்டம். ஏதோ ஒரு சம்பவம் ட்ரிக்கர் மாதிரி வேலை செய்திருக்குமே?
நான்:ஆமாம்பா. நான் டிகிரி செகண்ட் இயர் படிக்கிறேன்.அப்ப ஒல்லியா ஒரு பையனும், கில்லியா ஒரு பெண்ணும் ஓடி வந்துட்டாங்க, பிரம்பு நாற்காலி பண்றவங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நம்ம சென்டர் இருந்த தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஒரு டெயிலர் கடைலதான் டெண்ட். செட்டுல ஒரு நாய் என்ன சொல்லுச்சு தெரியுமா ? "பட்டா ! இந்த ஒல்லிபீச்சான ரெண்டு காட்டு காட்டி (அடித்து) அவளை முடிச்சுரனும் மாமா" இத்தனைக்கும் அவன் நல்ல குடும்பத்து பையன் தான். இன்டலிஜெண்ட் தான்.
மனசாட்சி:அட காஞ்சானுங்களே ! அம்பதுக்கு நூறுக்கும் வரத்தான் நூறு டிக்கட் காத்திருக்கே.. இதெல்லாம் காண்டுதானே !
நான்: இல்லையா பின்னே அப்பத்தான் முடிவு பண்ணேன். தாளி இவனுகளை சும்மா விட்டா பிழைக்க விடமாட்டானுக . பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி கொடுத்துரனும்னு
மனசாட்சி:என்னா வேலைப்பா?
நான்:அந்த நிமிஷம் எனக்கே தெரியாது. அப்பறப்பறம்.. இந்தியாவுக்கும், விவசாயத்துக்கும் உள்ள பொருத்தம் இத்யாதியெலாம் உறைச்ச பிறகு, வடக்குல வெள்ளம், தெற்கில வறட்சி வந்து விவசாயத்தோட முதுகெலும்பை நொறுக்கற சங்கதியெல்லாம் கூட்டி கழிச்சு தான் வேலையற்ற யுவதி,யுவர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி நதிகளை இணைத்தல் என்ற . கான்செப்ட் உருவாச்சு
மனசாட்சி: நீ சொல்றதெல்லாம் வெறும் யோசனை மாதிரியிருக்கே தவிர திட்டங்கற மாதிரி தெரியலியே.
நான்: கண்ணா ! நான் சுருக்கமா சொன்னேன். இதுக்கான தியரிட்டிகல் சப்போர்ட்ட விவரிச்சா மொக்கை போடறேன்னிருவ. நம்ம சைட்லயே சீரியஸா இன்னொரு பதிவு போட்டிருக்கேன். தேடிப்பிடிச்சு படி..
மனசாட்சி:அது சரி அது சரி. மேலே போ!
நான்:வேணாம்பா ஒய்.எஸ்.ஆர் அப்படி மேலே போய்தான் ஒரேதாட்டியா போய் சேர்ந்துட்டாரு.
மனசாட்சி: சரி முந்துக்கு போ ! (முன்னாலே போ)
நான்:இப்படித்தான் சந்திரபாபு 9 வருசமா முந்துக்கு போவாலி ! முந்துக்கு போவாலி !ன்னு ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாரு. இன்னைக்கு நாறிட்டாரு

மனசாட்சி:என்ன நீ நான் ஏதோ உன்னை கலாய்க்கலாம்னு பார்த்தா நீ என்னை கலாய்க்கிறே !
நான்:நைனா என் வயசு 42 அதை திருப்பி போடு 24 ! தப்பாட்டம் ஆட இறங்கிட்டேனு வை .. நாஸ்திதான்
மனசாட்சி: அட வேணாம்பா ஆள விடு
நான்: விசயத்துக்கு வரேன்
மனசாட்சி: வா.. வா..
நான்:வேலை கொடுக்கனும். அதுக்கு சிறப்பு ராணுவம். இந்தியாவோட உயிர் நாடி ,70% பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற துறை ,உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை, பொல்யூஷனுக்கிடமில்லாத ஒரே துறை விவசாயத்துறை அதுக்கிருக்கிற பெரும் பிரச்சினை பாசன் நீர் பற்றாக்குறை. அதுக்காக அந்த சிறப்பு ராணுவத்துக்கு கொடுக்கிற வேலை நதிகளை இணைத்தல்
மனசாட்சி: ஏன்பா தெரியாம கேட்கிறேன். ஒய்.எஸ். ஏதோ கோவணம் சைஸுக்கு கால்வாய் வெட்டி கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கிறேன்னாரு. அதுக்கே நிலத்தை கையகப்படுத்தறதுல ஆயிரம் வில்லங்கம். இதுல எல்லா நதிகளையும் இணைக்கனும்னா?

நான்:சரியான கேள்வி. இதுக்குதான் கூட்டுறவுப்பண்ணை விவசாயம். விவசாயிகள் எல்லாரும் தங்கள் கிராமத்துல ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்து தங்களோட நிலத்தை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துருவாங்க. அதுல கால்வாய் வெட்ராங்களோ ,கோல்ட் ஸ்டோரேஜு கட்டறாங்களோ, பல்ப் இண்டஸ்ட்ரி வைக்கிறாங்களோ அதுக்கும் வருசா வருசம் வர்ர லீசு தொகைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. டாணு வந்துரும். சங்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாரும் டீமா பயிர் வேலை பார்ப்பாங்க.
மனசாட்சி:இன்னொரு சந்தேகம் !
நான்:கேட்டுத்தொலை
மனசாட்சி: நானே ஒரு 50 ஏக்கர் வச்சிருக்கேனு வை . அதை சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டேன். ஆனால் நான் எப்படி மம்முட்டி பிடிச்சு வேலை செய்வேன்?
நான்:செய்யாதே..வருசா வருசம் லீசு வாங்கி சாப்பிடு
மனசாட்சி:ஒரு வேளை கூட்டுறவு பண்ணை விவசாயம் ஊத்திக்கிட்டா?
நான்:அபிஷ்டு ! அபிஷ்டு! இதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன் படிச்சு பாரு. 80 சதம் விவசாயிக்கிட்டே ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. விவசாயம் சக்ஸஸ் ஃபுல் ஆகணும்னா பயிர் செலவை குறைக்கனும். அதுக்கு மெக்கனைசேஷன், தொழில் நுட்பம், வாட்டர் மேனேஜ்மென்ட், நில பரிசோதனை, தரமான விதைகள், இயற்கை விவசாயம், க்ராப் இன்ஷியூரன்ஸ் லொட்டு லொசுக்குனு ஆயிரம் இருக்கு. ஒட்டு மொத்தமா இன்வெஸ்ட் பண்ணா செலவை குறைக்கலாம். அதை ரஜினி மாதிரி சிங்கிளா வந்து சாதிக்க முடியாதில்லை. அதுக்குதான் கூட்டுறவு பண்ணை விவசாயம்
மனசாட்சி:தனியா மாட்டிக்கிட்டு சாகறதுக்கு பதில் சங்கமா மாட்டி சாவுங்கற.
நான்:முண்டம் ! தண்டம் ! நீ தனியாளா இருந்தா எல்லாத்துக்கும் நீ அலையனும். சங்கமா இருந்தா எல்லா நாயும் உங்களை தேடிவரும். உன் நிலத்தோட விஸ்தீரணம் குறைவா இருந்தா பாங்கிகாரன் கடன் குடுக்க ரோசிப்பான். அரசாங்கமும் உன்னை தேடி பிடிச்சு உதவ மெனக்கெடனும் சிகப்பு நாடாத்தனத்துல விதை வர்ரதுக்குள்ள விதைக்கிறா சீசனே போயிரும். நீ சங்கமா இருந்தா அதுலயும் ஒரு மண்டல அளவுல ஒருங்கிணைப்பு இருந்தா ஆஃபீஸர்ல இருந்து, பாங்கி,இன்ஷியூரன்ஸ் எல்லாமே உங்க ஆஃபீசண்டை வந்து தவம் கிடப்பான்
மனசாட்சி:அதுசரிப்பா.. தனியா செய்தாலும், கூட்டா செய்தாலும் வந்த விளைச்சலை சரியான விலைக்கு விக்கனுமே
நான்:அதுக்கும் அதே விதிதான். விளைச்சல் எல்லாத்தயும் ஒரே நாள்ள, அவசரமா,தனி தனியா விக்க நினைக்கறதால விலையும் குறைச்சல், அலைச்சலும் கூட. விவசாயிகள் சங்க நிர்வாகம்னா முண்டாசு கட்டின பெருசுங்க ( எலக்டட் டைரக்டர்ஸ்) மட்டும் இருக்காது. அதுக்கு தேவையான எல்லா நிபுணர்களையும் அரசு கொடுத்து உதவும். தேசிய அளவுல அடுத்த வருசம் என்னென்ன தானியம் தேவை? எவ்ள தேவை, அதிகப்படியா வந்ததை எத்தனை நாள் ஸ்டாக் பண்ணனும் ?அதுக்கு எவ்ள பெரிய கிடங்கு தேவை, கோல்டு ஸ்டோரேஜ் தேவையா? இல்லே கன்ஸூமர் ப்ராடக்டா மாத்தி விக்கனுமா? அதுக்கு என்ன ஃபேக்டரி தேவை? இப்படி சகலமும் இன்டர் நெட் மூலமா விரல் நுனில இருக்கும்பா.
மனசாட்சி: சரி கண்ணு.. நீ சொல்றதெல்லாம் ஒர்க் அவுட் ஆகி லாபம் வந்ததுன்னே வை ..அதை எப்படி பிரிச்சுக்கறதாம்.
நான்:லேண்ட் ,லேபர்,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன் கெட்ஸ் ரெண்ட்,லேபர்,இன்டரஸ்ட், அண்ட் பிராஃபிட்.
மனசாட்சி:என்னமோ இங்கிலீஷ்லபீலா விட்டுட்ட
நான்:இதை தமிழ்லசொல்லனும்னா ஒரு பத்தி எழுதனும்பா
மனசாட்சி: சரி அண்ணாச்சி ! விவசாயி கூட்டா பயிர் பண்றான், விளச்சலை ஸ்டாக் வச்சு மார்க்கெட் பண்றானே வை. கருப்புபண முதலைங்க சும்மா இருக்குமாம். மார்க்கெட் கண்ட்ரோலே அதுங்க கிட்டதானே இருக்கு?
நான்: அதுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு. மத்திய அரசு 3 மாசம் நோட்டீஸோட இப்ப இருக்கிற கரன்ஸி செல்லாது,பழச வச்சிருக்கிறவனெல்லாம் அதுக்கு கணக்கு காட்டி புது கரன்ஸிய வாங்கிக்கனு அனவுன்ஸ் பண்ணிரும். கணக்கில்லாத பணமெல்லாம் மார்க்கெட்லருந்து வெளியேறிடும்.
மனசாட்சி: அக்காங்க் அஸ்கு புஸ்கு. இன் கம்டேக்ஸ் காரன் பிடிச்சுட்டா வருமானத்துக்கு அதிகப்படியா பிடிச்ச சொத்தெல்லாம் என் அம்மா,மனைவி,மகள்கள் தொழில் செய்து சம்பாதிச்சதுனு தப்பிச்சுக்கறான். கணக்கு காட்டறது என்ன பெரிய பிரம்ம வித்தையா அதுக்குதானப்பா அய்ய மாரெல்லாம் ஆடிட்டிங் படிச்சுட்டு காத்திருக்காங்க
நான்:தோ பார் ! இப்ப இருக்கிற நிலைய வச்சே கணக்கு போட்டு பேசறே. சிறப்பு ராணுவத்துக்கப்பால வேலையில்லாத பசங்களே இருக்கமாட்டாங்கப்பா . ஒரு ஆடிட்டர்கிட்டே 60 பேர் அசிஸ்டண்டா இருப்பான். அத்தினி பேரு இருக்கிறதைரியத்லதான் ஆடிட்டர் கச்சா முச்சானு க்ளையண்ட்சை ஏத்துக்கிட்டு பொய் கணக்கு காட்டறான். அந்த 60 பேரும் சிறப்பு ராணுவத்துக்கு போயிட்டா ?
மனசாட்சி: அதிகாரிங்க எல்லாம் கருப்பு பணத்துக்கு அது வெள்ளைதானு பொய் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறாங்கனு வை. அப்ப இன்னா செய்வீங்க அப்ப இன்னா செய்வீங்க
நான்: என் திட்டத்தை சக்ஸஸ் ஃபுல்லா அமல் படுத்தறதுக்காக எகானமி பேக்கேஜுனு ஒரு சப் ப்ராஜக்டு இருக்கு நைனா. அதுல முதல் அம்சமே அரசு துறை அதிகாரிங்க எலலாரையும் ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா டெஸ்ட் பண்ணுவம். இண்டியா டுடேங்கற தலைப்புல பரீட்சை வைப்போம். அதுல தேறினாதான் உத்யோகம் நைனா. இல்லேன்னா லாஸ் ஆஃப் பேல லீவ் கொடுத்து 3 மாசம் கழிச்சு ரீ எக்சாமினேஷன் வைப்போம் அதுலயும் டமாலாயிட்டா கோல்டன் ஷேக் ஹேண்டுதான்.
மனசாட்சி: அதுசரி கருப்பு பணம் வச்சிருக்கிறவன் தெருவுல போறவன் கிட்டே தன் பணத்தை கொடுத்து அவனோட வருமானமா காட்டி மாத்திக்கிட்டு வரச்சொல்றான்
நான்: அது வேலை வெட்டியில்லாத சனம் இருக்கிறப்ப நடக்கும். நாம தான் வேலையில்லாதவனே இல்லேனு ஆக்கிர்ரமே. சப்போஸ் அப்படியே மாத்த வச்சாலும் மாத்தறவன் சும்மா மாத்தமாட்டானில்லயா கு.ப.30 சதவீதமாவது கமிஷன் கேட்பானே. அந்த 30 சதம் கருப்பு பணமாவது மார்க்கெட்லருந்து ஒழியுதில்லயா?
மனசாட்சி:எப்படியோப்பா நல்லாவே கவர் பண்றே
நான்: நீ என்ன ஃபிகரா கவர் பண்ண
மனசாட்சி: இதுவரை நீ சொன்னதெல்லாம் சரினே வச்சுக்குவம்.நீ சொல்ற திட்டத்தை அமல் படுத்த வேண்டியது யாரு?
நான்:மத்திய அரசு
மனசாட்சி: அதாவது எம்.பி.கள்
நான்:யெஸ் .ஆமாம்
மனசாட்சி:டீக் ஹைனு ஹிந்தில கூட சொல்லு மும்மொழி திட்டத்தை அமல் படுத்தினாப்ல ஆயிரும்,
நான்: நீ என்ன கேள்வி கேட்கப்போறேனு எனக்கு புரிஞ்சு போச்சு. கோடி கோடியா செலவு பண்ணி எம்.பி.ஆனவன்/ ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சு பதவிக்கு வந்த மந்திரி அவனை மந்திரி ஆக்கினவங்க அவங்களுக்கே ஆப்பு வச்சுக்குவாங்களானு தானே கேட்கிறேன்
மனசாட்சி:கிரிக்கெட்டு.
நான்:இப்படி ஒரு வில்லங்கமிருக்கிறதாலதான் நம்ம ஆப்பரேஷ்ன் இந்தியால முதல் அம்சமே நேரிடை ஜன நாயகம்னு வச்சிருக்கோம்.பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுப்பாங்க . அதனால் அவருக்கு ஃபுல் பவர்ஸ் இருக்கும். முக்கியமா பார்லிமென்ட்ல வீட்டோ பவர் இருக்கும். கருப்பு பண முதலைகள் எம்.பிக்களைவிலைக்கு வாங்கி திட்ட அமலுக்கு ப்ரேக் போட முயற்சி பண்ணாலும் பருப்பு வேகாது.
மனசாட்சி: நெரிடையா எலக்ட் ஆகிற பிரதமர் மட்டும் எப்படி நியாயமான ஆளா இருக்க முடியும்?
நான்:இப்போ பாராளுமன்ற தேர்தல்கள்ள ஆந்திரால காங்கிரஸ் சக்ஸெஸ் ஆச்சு. எப்படி? டாக்டர் ஒய்.எஸ்.ஆரோட எம்.ஜி.ஆர் வேலைகளால வெற்றி கிடைச்சுது. ஆனால் மத்திய அரசை வழி நடத்தறது யாரு சோனியா. மக்கள் சோனியாவுக்காகவோ , நேரு குடும்பத்துக்காகவோ ஓட்டு போடனும்னா 1994 போட்டிருக்கலாம், 1999 ல கூட போட்டிருக்கலாம் இல்லியா?
மனசாட்சி: நீ என்ன சொல்ல வர்ரே ஸ்ட்ரெயிட்டா சொல்ல்லுப்பா சுத்தி வளைக்காத.
நான்:செக்ஸுல கூட இப்படிதான் அன்பான பேச்சு, முத்தம்,ஃபோர் ப்ளே எதுவுமில்லாம ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு போயிர்ரதாலதான் பெண்ணுக்கு சரியா லூப்ரிக்கேட் ஆகாம, ஆணுக்கு ப்ரி மெச்யூர்ட் எஜாகுலேஷனாகி, பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்காம நாஸ்தி ஆகிப்போவுது
மனசாட்சி:அய்யயோ இன்னாபா இது மாத்ரு பூதம் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே. தாய் குலமெல்லாம் படிக்கிறாங்கப்பா.
நான்:ஏன் பாக்யராஜ் படத்துல முருங்கைகாய் சமாச்சாரம் வந்தா ரசிக்கலை? தப்பித்தவறி இந்த பதிவை க்ளிக் பண்ணிட்ட இளைஞர்கள் விலகிராம படிக்க
இதுவும் தேவைப்படுதுப்பா
மனசாட்சி: என்ன இழவோ விஷயத்துக்கு வா
நான்: நான் என்ன சொல்றேன்னா நாட்ல இருக்கிற பி.சி.,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி எல்லாம் சேர்த்து 72% இருக்காங்க. மும்முனை போட்டி ஏற்பட்டு இதுல பாதி பேர் ஒத்துமையா ஓட்டு போட்டா கூட இவிங்க சப்போர்ட் பண்ற ஆளு, இவிங்களோட வெல் விஷர் பிரதமராயிருவாரு. எம்.பிங்க தயவும் தேவையில்லை. அது தேவையில்லைங்கறதால டாட்டா,பிர்லா தயவும் தேவையில்லே, பதவிக்கும் கண்டம் வராது. ஒழுங்கா மக்களுக்கு செய்ய வேண்டியத செய்தா படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம்
மனசாட்சி:இதான் ஆப்பரேஷன் இந்தியாவா
நான்:யெஸ்ஸு..
மனசாட்சி:திட்டம் சரிப்பா . இதனோட அமலுக்காக என்ன கிழிச்சிருக்கே
நான்: அதெல்லாம் ஏற்கெனவே விரிவா இந்த வலைப்பூல சொல்லியாச்சுப்பா
தலைவன்னு எவனெவன் இருந்தானோ ,இன்னைக்கு இருக்கானோ எல்லாத்துக்கும் ஹோல்சேலா, ரீடெயிலா அனுப்பியாச்சுப்பா. லோக் சபா ஸ்பீக்கருக்கு 200 பிரதி அனுப்பினேன். தமிழ் நாடு,ஆந்திர ஹை கோர்ட் நீதிபதிகளுக்கு அனுப்பினேன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பினேன், எல்லா எம்.பிக்களுக்கும் மெயில் அனுப்பினேன். ( நோ சச் யூசர்னு ரிட்டர்ன் வந்துருச்சு எல்லாமே)
மனசாட்சி:மொத்ததுல டெஸ்பாச் க்ளர்க் மாதிரி வேலை செய்திருக்கே.
நான்: சந்திரபாபுவுக்கு 97 ல ருந்து 02 ஏப்ரல் 22 வரை அனுப்பினேன். பதில் இல்லேனு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன். அது டெலிவரி ஆச்சு. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். கண்டமேனிக்கு என்னை லந்து பண்ணாங்க. இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரகாரம் ஃபைட் பண்ணேன். ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனை அப்ரோச் பண்ணேன். யூ.என்.ஓக்கு கம்யூனிக்கேட் பண்ணேன்.
பத்து நாள் உண்ணாவிரதமிருந்தேன். தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துக்கிட்டிருந்தேன். ப்ரெஸ் மீட் வச்சிருக்கேன். ஒய்.எஸ்.சி.எம்.ஆன புதுசுல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை புறப்படறதா சொல்லி அலம்பல் பண்ணேன். ஒரு மயிரும் நடக்கலை
மனசாட்சி:இப்போ என்ன பண்றே?
நான்: செக்ஸ் ஜோக் எழுதிக்கிட்டிருக்கேன்
மனசாட்சி: ப்தூ.. இதுவும் ஒரு பிழைப்பா
நான்: சோடா புட்டிகண்ணாடிங்க அம்பதோ அறுபதோ படிச்சா போதுமுனு நினைக்கல கண்ணா சின்ன பசங்களை கூட நம்ம சைட் பக்கம் ஒதுங்க செய்ய தான் இன் டேக்டீஸ். இப்போ வார் ஸ்டார்ட்.
மனசாட்சி:என்னா வாரோ செருப்பு வாரா?
நான்:டங்குவார் அறுந்துரும்.
மனசாட்சி:அப்டின்னா என்னப்பா
நான்:எனக்கும் தெரியாதே
மனசாட்சி:ஆமா நீ தான் நவீன வாத்ஸாயனன் மாதிரி பில்ட் அப் தர ஆசாமியாச்சே இந்த திட்டம் அமலானா தீரக்கூடிய செக்ஸ் பிரச்சினைகள் என்னனு சொல்ல முடியுமா?
நான்:யூத்துக்கு காலாகாலத்துல வேலை கிடைக்காமதான் கல்யாணம் தள்ளிபோகுது. வேலை வெட்டி இல்லாத காரணத்தால சுய இன்பத்துக்கு பழக்கப்பட்டுர்ராங்க. இல்லேன்னா காமத்துக்கு காதல் வண்ணம் பூசி ஆசிட் அடிக்கிறாங்க கள்ள உறவு,ஈவ் டீசிங் பண்றாங்க, ரேப் பண்றாங்க. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் வன்முறையா வெடிக்குது. சூடோ நக்ஸல்ஸ், ஃபேக்ஷனிசம், உதவாக்கரை அரசியல், சினிமாகாரனுக்கு தோரணம் கட்டறதுனு வீணாப்போறாங்க காலாகாலத்துல வேலை கொடுத்துர்ரமில்லே. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செக்ஸை சட்டப்படி அனுபவிப்பாங்க எந்த வித காம்ப்ளெக்ஸுமில்லாம சக்ஸஸ்ஃபுல் செக்ஸ் லைஃபை லீட் பண்ணுவாங்க குழந்தையின்மை இத்யாதி பிரச்சினை வராது. தங்களுக்கு பிறக்கிற குழந்தைகளையும் நல்லா வளர்ப்பாங்க புதிய இந்தியா உருவாகும்.

மனசாட்சி:பழைய இந்தியாவை என்ன பண்றதாம். ஓல்ட் ஈஸ் கோல்ட் ம்யூசியத்துல வைக்கலாம்.