Thursday, October 30, 2008

சுய இன்பம் ந‌ல்ல‌தா கெட்ட‌தா?

சுய இன்பம்,கைப்பழக்கம்,முஷ்டி மைதுனம் இதென்ன லாட்ஜு வைத்தியர் மாதிரி என்று குழம்பாதீர்கள். எத்தனையோ குப்பைகளை கிளறியாயிற்று. இந்த,வரும் தலைமுறைகளுக்கு உடனடியாக பலன் தரக்கூடிய இந்த விஷயத்தை விட்டுவைத்தால் எப்படி என்ற ஞானோதயம் ஏற்பட்டது. இத்தனை வார்த்தைகளால் குறிப்பிட்டும் புரியாத ருஷ்ய ஸ்ருங்கர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் 09397036815 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

சுய இன்பம் அனுபவிக்காத ஆண் இருக்கவே முடியாது. நானும் அதை அனுபவித்தவன் தான். இந்த விஷயத்தில் லாட்ஜு வைத்தியர்களும், மருத்துவர்களும் (டாக்டர்கள்) ரொம்பவே குழப்புகிறார்கள்.

இத்த‌னைக்கும் சுய இன்பம் ந‌ல்ல‌தா கெட்ட‌தா? ந‌திக‌ளுக்கு குறுக்கே க‌ட்ட‌ப்ப‌டும் அணைக‌ள் நிர‌ம்பி வ‌ழியும்போது அதிகாரிகளே த‌ண்ணீரை திற‌ந்து விடுவ‌தை செய்திக‌ளில் ப‌டித்திருக்கிறோம்.

அணை கட்டியது நீரை தேக்க, பின் ஏன் திறந்து விடுகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் வயது வந்த இளைஞன் சுய இன்பம் மூலம் அதிகப்படியாக உள்ள விந்துவை வெளியேற்றும்போது மட்டும் ஏன் அதை தடுக்கிறோம்.

வெள்ள‌ம்,ம‌ழை,கால‌ங்க‌ளில் அணையை திற‌ந்து விட்டால் ச‌ரி. அணைக்க‌த‌வுக‌ளை திற‌ந்தே வைத்தால் என்ன‌ ஆகும். அதை போன்ற‌து தான் சுய‌ இன்ப‌மும்.

2 comments:

  1. yeththa naalaiku oru murai kai palakkam seaiyalaam..

    ReplyDelete
  2. அது அவரவர் உடல் நலத்தை ,வலிமையை பொறுத்த விஷயம். வெயில் காலத்தில் ஆற்றோரம் குழி பறித்து அதிலிருந்து ஆற்று (ஊற்று) நீரை முகர்வார்கள். அப்போது மேலோட்டமாக ,தண்ணீர் கலங்கி விடாது எச்சரிக்கையுடன் சிறிய பாத்திரத்தில் எடுப்பார்கள். சுய இன்பமும் அப்படித்தான் அனுபவிக்கப்படவேண்டும். இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
    இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
    அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை

    உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)

    முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)

    ReplyDelete