எந்த ராசிக்கும் குருபலமில்லே..வேண்டாம் திருமணம்(கு.ப.மே 19 வரை)
ஆமாங்க இந்த மகர குருவால யாருக்கும் புண்ணியம் கிடையாது. இங்கே நீசமடைவதோடு ஏற்கெனவே அங்குள்ள ராகுவுடனும் சேருகிறார். முக்கியமாய் தனுசு மீன ராசியினருக்கு ஆப்புதான். இங்கே பலன் சொல்லும்போது குருவை கணக்கில் வைக்காது ராகுவை மட்டுமே கணக்கிலெடுத்து பலன் சொல்ல வேண்டும். மகரம் எந்தெந்த ராசிக்கு 3,,6,10,11 ஆகவோ அல்லது 4,12 ஆகவோ அமைகிறதோ அவர்களுக்கு தான் நற்பலன். அதுவும் குருவால் அல்ல ராகுவால்.
மேலும் டிசம்பர் 6 அன்று மகரத்துக்கு வரும் குரு மே19 க்கெல்லாம் அதிசாரத்துல (எச்சரிக்கை:அதிரசம் அல்ல) கும்பத்துக்கு போறார். மே19க்கு மேலே வேண்டுமானால் கும்ப குரு ஏதோ ஓரளவு நன்மை செய்யலாமே தவிர பெரிதாய் எதிர்பார்ப்பதற்கில்லை. எந்தெந்த ராசிக்கு கும்பம் 2,5,7,9,11 ஆக அமைகிறதோ அந்த ராசிக்காரர்களுக்குத்தான் இந்த பலன்.
பின்பு ஆகஸ்ட் 16க்கெல்லாம் வக்ரமாகி மகரத்துக்கே வரார்.மறுபடி ராகுவோடு சேருகிறார்.இதுவும் புண்ணியமில்லாத கிரக பெயற்சிதான். கொஞ்சம் நஞ்சம் கூட பலன் எதிர்பார்க்க முடியாது. காரணம் வக்கிரம் தான். பொது விதிப்படி இது யாருக்கு ரொம்ப கெட்டதோ (உ.ம் மிதுனம்,இதற்கு இது 8 ஆமிடம்) அவர்களுக்கு யோக பலன் கூட ஏற்படலாம்.
பின்பு கும்பம் போகும் குரு பற்றி புதிதாய் ஏதும் கூற தேவையில்லை. எனவேதான் சொல்கிறேன். திருமணமா வேண்டாம். அதுவும் 6/12/2008 முதல் மே19 வரை வேண்டவே வேண்டாம். ஆகஸ்டு 16 முதல் நவம்பர் 17 வரையும் வேண்டவே வேண்டாம்.
அத்யாவசியம் என்றால்:
மே 19 முதல் ஆகஸ்ட் 16 க்குள் செய்துகொள்ளுங்கள்.
பி.கு: அப்பாடி பெருகும் ஜனத்தொகையை கட்டுப்படுத்த இப்படி ஒரு வழியா?
>> மகரம் எந்தெந்த ராசிக்கு 3,,6,10,11 ஆகவோ அல்லது 4,12 ஆகவோ அமைகிறதோ அவர்களுக்கு தான் நற்பலன். அதுவும் குருவால் அல்ல ராகுவால்>>
ReplyDeleteஇது எந்தக் காரணத்தால் எனச் சொல்ல முடியுமா?