Friday, September 28, 2007
2008 ல் பிரளயம்?
பிரம்மங்காருவை தமிழ் நாட்டிற்கு பிரம்மங்காருதென்னிந்திய நாஸ்ட்ரோடாமஸ் என்று ஒரே வரியில் அறிமுகம் செய்து இந்த வலைப்பூவை சமர்ப்பிக்கிறேன்.பிரம்மங்காரு என்றால் ஆந்திரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. இவர் கி.பி.1900 முதல் கி.பி 2008 வரை உலகத்தில் நடக்கக் கூடிய சம்பவங்களை கால ஞானம் என்ற பெயரில் எழுதி வைத்துள்ளார். இன்றைக்கு 489 வருடங்களுக்கு முன்பு பிறந்த பிரம்மங்காரு எழுதிய எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் யதார்த்ததிலும் நடந்து வருகின்றன.அந்த காலத்திலேயே பெண்ணடிமை,ஜாதி மத பேதங்கள்,பிராமணர்களின் சாதி செறுக்கு,போன்றவற்றிற்கு எதிராய் போராடியவர். ஒரு முகமதியனை சீடனாக ஏற்று " பிரம்மத்துக்கு மிஞ்சிய குருவில்லை சித்தய்யாவை (முகமதிய சீடர்) மிஞ்சிய சீடனில்லை என்ற சொலவடைக்கே காரணமானர்.கலஞானத்தின் சாரம் :கி.பி.1900-முதல் 2008 க்குள் உலகத்தின் 7-இல் 6 பாகம் அழிந்து, ஒரு பாகம் மட்டுமே மிஞ்சும். அவர் தன் கணிப்புகளை தமிழ்/தெலுங்கு வருடங்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் 2008-இல் வரக்கூடிய உகாதிக்குள் இது நிகழலாம் என்று தோன்றுகிறது.என் கருத்து:வெறும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே இது பொன்ற கணிப்புகளை கூற முடியும். ஜோதிடத்தில் வெறும் 1 சதVஇதம் கூட அறியாத நனே கடக சனியால் சுனாமி ஏற்படும் என்று கணித்து துன்டு பிரசுரம் வெளியிட்டேன். (சுனாமி என்ற வார்த்தை எனக்கு அப்போது தெரியாததால் கடர்கரையில் வாழும் மக்கள் வரலாறு காணாத பாதிப்புக் குள்ளாவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்)ஈதிப்படியிருக்க மாபெரும் யோகியான பிரம்மங்காரு எதிரகால சம்பவங்களை மனிதர்களின் பெயர்கள் உட்பட எழுதிவைத்ததில் ஆச்சரியமே கிடையாது.2007,செப்டம்பர் 5 முதல் செவ்வ்வய் மிதுனத்தில் ஸ்தம்பிக்கிறார். சிம்ம சனி தன் 10 ஆம் பார்வையாக செவ்வயை பார்க்கிறார். இந்த நிலை 2008 ஏப்ரல் வரை தொடர்கிறது. கடக சனி கடற்கரையில் பாதிப்பை கொடுத்தார் என்றால், சிம்ம சனி தலைவர்களுக்கு, மலை பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை தரலம். மிதுனம் என்பது ஆண்,பெண் உறவை உடலுறவை காட்டுமிடம் இதனால் செக்ஸ் குற்றங்கள் அதிகரிக்கலம். மரணங்கள் தம்பதிகளுக்கே அதிகம் நேரலம்.(அதற்குள்ளாகவாவது என் ஆப்பரேஷன் இந்தியா அமலானால் விபச்சாரத்துக்கு சட்டப் பாதுகாப்பு கொடுத்து விடலாம்.)பாலவின் ரசிகர்களுக்குபாலவின் ரசிகர்களுக்கு இது ஒரு ஆயுதமாகிவிடப் போகிறது. ஆகா சித்தூர் முருகேசன் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு பக்கம் புட்டபர்த்தி சாயி பாபா,சன்கராச்சரிகளை கின்டலடித்த படி மறுபக்கம் தான் ஒரு சாமியாரை வெளிச்சம் போடுகிறார் என்றும் தம் குழுவில் கூறிக்கொள்ளலாம். வாழ்க..வளர்க. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை தூக்கி எறிந்து விட்டு, சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆளுங்கட்சி டெக்னிக் இது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. பிரம்மங்காரு பற்றி நான் கேள்விப் பட்ட விஷயங்களை வைத்தோ, படித்த விஷயங்களை வைத்தொ நான் இந்த வலைப் பூவை எழுதவில்லை என்பது வரைக்கும் சொல்லி கச்சேரி மற்றொறு சந்தர்ப்பத்தில் தொடரும் என்று சொல்லி இதனை முடிக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment