கலைஞர் கலைஞர் தான் !கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பது போல் என்னதான் மஞ்சள் துண்டு போட்டாலும், என்.டி.ஆரே கண்டு கொள்ளாத புட்டபர்த்தி சாயிபாபாவுக்கு அதிதி பூஜை (அதாங்க ..விருந்தோம்புதல்)செய்தாலும் ராமாயணம் ஒரு கற்பனை காவியம், ராமன் ஒரு காவியத்தலைவன் என்ற தன் கருத்துக்கு இன்னும் கட்டுப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.
அனுமன் ராமனின் கணையாழியோடு, ஆகாய வழிப் பயணத்தில் உள்ளார். அப்போது அகஸ்தியர் அனுமனை தங்கி செல்லும்படி அழைக்கிறார். அனுமனோ ராம காரியம் என்று மறுக்கிறார். அகஸ்தியர் அனுமன் கையிலிருந்த கணையாழியை வாங்கி தம் கமண்டலத்தில் போட்டுவிட்டு "சாப்டு" போக சொல்ல, வேறு வழியில்லாத அனுமன் சாப்பிட்டு விட்டு கணையாழியை கேட்கிறார். கமண்டலத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி கூறுகிறார் அகஸ்தியர்.
அனுமன் கமண்டலத்தில் கைவிட பல்லாயிரம் கணையாழிகள். அனுமன் காரணம் கேட்க..இது தொடர்கதையப்பா..எத்தனை ராமர்கள், எத்தனை கணையாழிகள் என்று சொல்கிறார் அகஸ்தியர்.
இதில் இப்போது பிரஸ்தாபிக்கப்படும் ராமர் பாலம் எந்த ராமனால் எந்த யுகத்தில் கட்டப்பட்டதோ..யார் அறிவார் பராபரமே!
தெய்வம் என்றால் அது தெய்வம்/வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்பது கண்ணதாசன் வாக்கு. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் கதை தான் இதுவும். ராமன் வாழ்ந்தான் என்பது நிஜம் தான். இன்றும் ராமனின் சூட்சும வடிவம் வாழ்கிறது வழி காட்டுகிறது என்பதும் நிஜம்தான். அதற்காக கலைஞர் தாம் உணராததை, தன் புலன்களுக்கு தட்டுப் படாததை எப்படி ஏற்பார். அவர் தாம் உணர்ந்ததை உணர்ந்தபடி பேசுகிறார். அவர் கோணத்தில் அவர் சொல்வது நிஜம்.
நாஸ்திகரான கலைஞரே ..மக்கள் நலம் நாடி சேது கால்வாய் திட்ட அமலுக்கு முயற்சி செய்யும்போது ஆஸ்திகர்கள் மக்கள் நலம் மறந்து அதற்கு தடை போடுவதுதான் நாஸ்திகம். ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா/ மானவ சேவா மாதவ சேவா / இதையெல்லாம் மறந்து தலையெடுப்போம், நாக்கை அறுப்போம் என்று பேசும் அரை,குறைகள் தான் ராமனை அவமானப்படுத்துகிறார்கள்
Your comments is very nice, we all wish to finished the setu samuthram project.
ReplyDeletethank U 4 Ur compliments
ReplyDelete