Saturday, January 12, 2008
பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார்.
கானிப்பாக்க வினாயகரை தெரியுமா? உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு கிணற்றில் சுயம்புவாக தோன்றி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவரை தெலுங்கில் பிரமாணால தேவுடு என்று கூறுகிறார்கள். அதாவது இவர் சன்னிதானத்தில் வந்து பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார். கானிப்பாக்கத்தில் வந்து பொய் சத்தியம் போடத் தயார் என்று சவால் விட்ட அரசியல் பிரபலங்கள் பலர் தம் பிராபல்யத்தை இழந்து தவிப்பது கண்கூடாக நடந்து வருகிறது.
நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்
கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:
சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருபவர் கேது.
ஜல காரகன் சந்திரன். கேதுவுக்கு அதி தேவதையான வினாயகர் , சந்திரன் காரகத்துவம் வகிக்கும் கிணற்றில் தோன்றி வளர்வதால் கேதுவால் ஏற்படும் தோஷங்களை மட்டுமல்லாது ,சந்திரனால் ஏற்படும் தோஷங்களையும் நிவர்த்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக சந்திர கேது சேர்க்கை யால் ஏற்படும் கிட்னி ஃபெயிலியர்,க்ஷயம்,பைத்தியம் போன்ற குறைபாடுகளும் நீங்கும். ராகு கேதுக்கள் சதா ஒருவருக்கொருவர் 180 டிகிரியிலேயே சஞ்சரிப்பவர்கள் என்பதால் வினாயகர் வழிபாடு ராகுவால் ஏற்படும் தோஷங்களையும் நீக்கும் என்று உறுதியாக கூறலாம். ஆக கானிப்பாக்கம் வினாயகரை வழிபடுவதால் ராகு,கேது,சந்திரன் ஆகியோர் காரகத்துவம் வகிக்கும் சமாச்சாரங்கள் யாவும் அனுகூலமாகும். மேலும் மேற்படி கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி.
இந்த மூன்று கிரகங்களை பற்றி மட்டுமல்லாது இதர 6 கிரகங்களை பற்றியும் முழுமையாக அறிய கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்யவும்:
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா, இந்த பிள்ளையார் கோவில் எங்குள்ளது. அடுத்த முறை இந்தியா வரும்போது பிள்ளையாரை தரிசிக்க முயற்சிக்கிறேன்
ReplyDeleteYou can reach chittoor with in one hour from Vellore (TN). From their u can visit kanipakkam with in 15 minutes/by bust or pvt vehicle.
ReplyDelete