Friday, January 18, 2008
சிக்னலில் நின்ற போது பறவைகளின் சத்தம்
சிக்னலில் நின்ற போது பறவைகளின் சத்தம்
அட சே ! செல் ரிங் டோன்
சித்தூர் ஒன்றும் மகாநகரம் அல்ல் . 4 தெரு,4 காலனி அடங்கிய சிற்றூர். சும்மாவாச்சும் வீட்டு வரியை உசத்த நகராட்சி ஆக்கியிருக்கிறார்கள். சித்துரில் காக்காய்,குருவியை கூட பார்க்க முடியவில்லை. தந்தி நிருபனாக வேலை செய்யும் (பார்ர்கும் என்று எழுத கூடாது இது ஐயா ஆதித்தனாரின் அறிவுறுத்தல்) நான் கொம்பில் வண்ணம் பூசிய மாட்டை போட்டோ எடுக்க தேடி தேடி..களைத்தது பாடி(உள்பாடி யல்ல)
எங்கு செல்கிறோம் என்றே புரியவில்லை. நேற்று எனது 32 பக்க மினி ஜோதிட போதினி சிறு நூலின் பைண்டிங் வேலைக்காக ஜெய்ஹிந்த் ஸ்கூல் பையன் களை வரவழைத்தேன். சும்மா அப்படி எனக்கு வயதாகிவிடவில்லை என்று காட்டிக்கொள்ள *யப்பா பீடி,சிகரட் குடிக்கிறதா இருந்தா இங்கயே அடிங்க என்று சொன்னதுதான் தாமதம் ..என் வீடே மேலெழும்பிவிடுமத்தனை புகை மண்டலம். அந்த சிறுவர்களின் பேச்சு,பழக்கங்கள்,அனுபவங்கள்... வேண்டாங்க தேன் கூட்டில் என் பதிவு தடை செய்யப்பட்டு விடலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment