Wednesday, September 10, 2008
நடிகர் விஜய் வீட்டில் கொத்தடிமை : ஷோபா சந்திரசேகர் வாக்குமூலம்
நடிகர் விஜய் வீட்டில் ஒரு இளைஞர் கொத்தடிமையாக 10 வருடங்களாக வேலை செய்கிறார் என்று அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார். கல்கி வார இதழில் ஷோபா சந்திரசேகர் தன் மகனின் அதி வீர பராக்கிரமங்கள் குறித்து ஒரு தொடர் எழுதி வந்தார். அதன் கடைசி அத்தியாயத்தில் ஒரு இளைஞர் தம் வீட்டில் 10 வருடங்களாக வேலை செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். அப்போது விஜய் அந்த இளைஞருக்கு ரூ.1 லட்சம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளாரே தவிர ,சம்பளம் கொடுக்கப்பட்டது குறித்து சொல்லவில்லை. எனவே வேலையில் சேரும்போது அந்த இளைஞரின் வயது என்ன? (குழந்தை தொழிலாளியா?),அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதா? ஆம் எனில் எவ்வளவு என்பதை ஷோபா சந்திரசேகர் தெளிவு படுத்தவேண்டியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment