இன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்களாக மாறிவருகின்றனர். கல்வி தகுதியை பக்கம் வைத்தால் பத்திரிக்கையியல் தொடர்பான தகுதிகளும் சூனியமாக உள்ளன. போலீஸ் கேஸ் இல்லாத பத்திரிக்கையாளன் கிடையாது. குடிப்பழக்கம் இல்லாத பத்திரிக்கையாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஓ.சி. என்றால் காசி வரை பாயும் பத்திரிக்கையாளர்கள் யதேஷ்டம்.
சமீபத்தில் நான் அறிந்த விசயம் சொன்னால் மானக்கேடு. ஆம் பார்களில் பத்திரிக்கையாளர்களுக்கு 10 சதம் தள்ளுபடியாம். எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளன் 2 பெண்டாட்டிக்காரன். அந்த இருவரில் ஒருவளே மேற்படி பத்திரிக்கையாளனை ஜெயிலில் போட வைத்ததும் உண்டு. பத்திரிக்கை விளம்பர பணத்தை ஏப்பம் விட்டு விட வேண்டியது. கலெக்ஷனுக்கு வந்த விளம்பர மேலாளர் மீது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க வேண்டியது.(என் மனைவியை கற்பழிக்க முயன்றார் என்று. அடப்பாவிங்களா? இதில் பத்திரிக்கை எஜமானர்களுக்கும் பங்குண்டு. விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய பத்திரிக்கைகள் மட்டுமே சம்பளம் தருகின்றன. மற்றவை ஊரை ஏமாற்றி பிழைத்துக்கொள் என்று விட்டு விடுகின்றன. மேற்படி பத்திரிக்கையாளனின் மற்றொரு சாதனை சொந்த பெரியம்மா பெண் வரதட்சிணை கொடுமைக்கு ஆளான போது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க ,நடவடிக்கை எடுக்க செய்ய மட்டும் ரூ.4 லட்சம் வரை பணம் பறித்தது.
நானும் ஒரு பத்திரிக்கையாளன் தான் இருந்தாலும் யாரோ ஒருவர் வெளியிட்டுத்தானே ஆகவேண்டும் உண்மைகளை.அன்னாரின் லேட்டஸ்ட் சாதனை என்னவென்றால் பிரஸ் க்ளப் மாடிக்கு இரவு ராணி ஒருத்தியை அழைத்து சென்றது. ஏதோ லாலா போடப்போறானு பார்த்தா தள்ளிக்கிட்டு போறான் பா என்று சக பத்திரிக்கையாளர்களே லாடம் கட்டியிருக்கிறார்கள்.
நானும் ஒரு பத்திரிக்கையாளன் தான் இருந்தாலும் யாரோ ஒருவர் வெளியிட்டுத்தானே ஆகவேண்டும் உண்மைகளை.????
ReplyDeleteஅய்யா நானும் ஒரு பத்திரிகையாளன் தான். பிரபல நாளில் பணிபுரிந்த நான் பேனா வாங்கவே பயந்து கொண்டிருந்தேன். ஆனால் நண்பர்களுக்கு முக்கிய புள்ளிகள் வரும் போது இரவு நேர பார்ட்டிகள் கூட கொடுப்பார்கள். நான் எதையும் சாட்டை செய்யாதாலோ என்னவோ என்னை எடிட்டோரியலில் போட்டு மெகசின் பார்க்க சொல்லி பெண்டை நிமிர்த்தி விட்டார்கள். இதை தவிர சிறப்பு பார்வை என்று ஊர் ஊராய் அலைய விட்டார்கள். சிறப்பு பார்வை பார்த்த எனக்கு கணக்கு பார்த்துக் கூட காசு கொடுக்க மாட்டார்கள். ஓனருக்கு வீட்டு வேலை செய்யும் எடுபிடிகளுக்கு பஸ்பாஸ்... எங்களுக்கு பஸ் பேர் கூட கொடுக்க மாட்டார்கள்.
கவர் வாங்கி பிழைப்பு நடத்தும் நாய் பொழப்பை வேண்டவே வேண்டாம் என்று குட்பை சொல்லி விட்டு வெளியே வந்தவன் தான். இப்போது நியாயமான முறையில் தொழில் செய்து கல்லாவை நிரப்பி வருகிறேன். இப்போது நான் முதலாளி.
தர்மத்துக்கு பத்திரிக்கை நடத்திய காலம் போய் இப்போது பிளாக் மெயில் செய்தாவது சம்பாதிக்கலாம் என்று நாக்கை தொங்கப்போட்டு அலைகிறார்கள்.
இவர்கள் திருந்தப்போதில்லை. மலத்தை பார்த்து ஒதுங்கி செல்வதில்லையா? நானும் அப்படித்தான்... நீங்கள் எப்படி...?