Saturday, June 27, 2009

முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால்

இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?

முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். அன்று,பாலை நிலத்தில் வெஜ் உணவுகள் கிடைப்பது துர்லபம் எனவே மாமிச உணவு அனுமதிக்கப்பட்டது. இன்று ?

மேலுமொரு உதாரணம்: முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்ய‌ப்பட்ட ஏற்பாடே.
பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.

ஆனால் இன்றுள்ள பொல்யூஷனுக்கு இந்து பெண்களும் புர்கா அணிவது பாதுகாப்போ என்னவோ?

தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.

மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்

நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?

இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.

இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !

5 comments:

  1. """"ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை."""""
    பதில்:
    எங்களுக்கு முன் மாதிரி எங்களுடைய தலைவர் "நபிகள் நாயகம்"தான்.அவர்தான் எங்களுக்கு இந்த வழிமுறையை கற்றுகொடுத்திருக்கிறார்.
    பிறப்புறுப்பில் சாதாரணமாகவே அழுக்குபடிந்துவிடும்.ஆண்களானலும் சரி பெண்களானாலும் சரி சிறுநீர் கழித்ததும் கடைசியாக சொட்டு சொட்டாக வடியும் அப்படி வடிந்தது தேங்கி நின்றால் கிருமிகள் வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது ஆகவேதான் எங்களுடைய தலைவர் இந்த வழிமுறையை பின்பற்ற சொல்லியிருக்கிறார்.
    குறிப்பு:இன்றைய‌ ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌ம் கேட்டால்கூட‌ இந்த‌ வ‌ழிமுறையைதான் கையாள சொல்கின்றார்க‌ள்.


    """""அன்று,பாலை நிலத்தில் வெஜ் உணவுகள் கிடைப்பது துர்லபம் எனவே மாமிச உணவு அனுமதிக்கப்பட்டது. இன்று ?"""""
    ப‌தில்:
    கால்ந‌‌டைக‌ள் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌தே ம‌னித‌ர்க‌ளுக்காக‌த்தான்.மாமிச‌ம் சாப்பிட்டால் உட‌ல் ந‌ல‌த்திற்கு தீங்கேதும் கிடையாதே?
    குறிப்பு:ம‌னித‌ர்க‌ள் எல்லாரும் அசைவ‌ம் சாப்பிடாம‌ல் சைவ‌ உணவை உட்கொண்டால் காய்க‌னிக‌ள்,கீறைக‌ள் எல்லாம் விலை ஏறிவிடுமே.ஏழைக‌ள் என்ன செய்வார்க‌ள்?கொஞ்ச‌ம் சிந்தித்து பாருங்க‌ள்.சைவ‌ உண‌வுக‌ளை ம‌ட்டும் சாப்பிடகூடிய‌வ‌ர்க‌ள் அது கிடைக்காத‌ நிலைக்கே த‌ள்ள‌ ப‌டுவார்க‌ள்.



    """""பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்""""""
    ப‌தில்:
    பெண்க‌ள் புர்கா அணிவ‌து அன்னிய ஆடவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்வ‌த‌ற்காக‌வே.முக‌ங்க‌ளை மூடிம‌றைக்க‌ இஸ்லாம் சொல்லித்தர‌வில்லை.விளங்காத‌ சில‌ர் இதை பின்ப‌ற்றிகொண்டிருக்கிறார்க‌ள்.
    குறிப்பு:
    புர்கா அணிய‌ இஸ்லாம் சொல்ல‌வில்லை க‌ண்ணிய‌மான ஆடையைத்தான் ப‌ரிந்துறைக்கின்ற‌து."நீங்க‌ள் அணியும் ஆடை ஆண்க‌ளை த‌வறான எண்ணத்தை விதைத்துவிட‌கூடா‌து" என்று ந‌பிக‌ள் நாய‌க‌ம் பெண்க‌ளுக்கு அறிவுறை கூறியிருக்கிறார்க‌ள்.
    """""" தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! """""""
    ப‌தில்:
    த‌ர்கா இஸ்லாத்திற்கு எதிரான‌து.அதை நீங்க‌ளே சுட்டி காட்டிவிட்டீர்க‌ள்.னான் சொல்வ‌த‌ற்கு ஒன்றுமில்லை.
    """"""""""""""""""""மாற்று ம‌த‌த்தின‌ருக்கு அன்பான‌ வேண்டுகோள் சில‌ முஸ்லிம் பெய‌ர்தாங்கிக‌ள் செய்வ‌தை இதுதான் இஸ்லாம் என்று க‌ண்மூடித்த‌னமாக ந‌ம்ப‌தீர்க‌ள்.உண்மையா என்று ஆராய்ந்து ப‌ருங்க‌ள்."""""""""(இங்கே குறிப்பிட்டவை முஸ்லிம் பெய‌ர் தாங்கிக‌ளுக்கும் பொருந்தும்).

    ReplyDelete
  2. அப்படியென்றால் முஸ்லிம் அல்லாதோர் எல்லாம் சிறுநீர் கழிக்கும் உறுப்பில் கிருமியோடுதான் அலைகிறார்களா.?
    உங்களை திருத்த இன்னும் எத்தனை பெரியார் வர வேண்டும்.

    ReplyDelete
  3. சுத்தம் செய்வதால் கிருமிகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.சுத்தம் என்றால் ஆரோக்கியம்தான்.ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் முக்கியம்.நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கேட்டு பாருங்கள் எது ஆரோக்கியம்?எது ஆரோக்கியமின்மை?.90 சதவிகித மருத்துவர்கள் நபிகள் நாயகம் காட்டி தந்த வழிதான் சிறந்தது என்று கூறுவார்கள்.

    ReplyDelete
  4. joe அவர்களே !
    நீங்கள் கிண்டலாக கேட்டிருந்தாலும் உண்மை நிலை இதுதான். இது குறித்து தனிப்பதிவே இட்டுள்ளேன். பாருங்கள். தங்கள் மறுமொழிக்கு நன்றி

    ReplyDelete
  5. இறையடியான் அவர்களே !
    கால் நடைகள் படைக்கப்பட்டது நமக்காக என்பது சரிய‌ல்ல. இஸ்லாம் தோன்றியபோது யுத்தமே வாழ்வாக இருந்தது. விவசாயம் பார்க்கவெல்லாம் சமயம் கிடையாது. எனவே எந்த வித குற்ற உணர்வுமின்றி மக்கள் வயிறார உண்ண வேண்டுமென்ற எண்ணத்தால் நபிகள் நாயகம் அப்படி கூறியிருக்கலாம். மேலும் அவர்சொல்லியிருக்கும் மற்றொரு விசயத்தை கவனியுங்கள்:
    20 கோழிகளை கொல்லுமிடத்தில் ஒரு ஆட்டை கொல்லுங்கள். 20 ஆடுகளை கொல்லுமிடத்தில் ஒரு மாட்டை கொல்லுங்கள். 20 மாடுகளை கொல்லுமிடத்தில் ஒரு ஒட்டகத்தை கொல்லுங்கள் "

    இதன் உள்ளர்த்தம் என்ன ஜீவ ஹிம்சையை தடுப்பது தானே

    ReplyDelete