Monday, August 17, 2009

செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு ?

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். தமிழ் சினிமாக்களில் கெட்ட காரியம் செய்து கொண்டிருந்த போது ஆண் பாம்பையோ, பெண் பாம்பையோ கொன்றுவிட்டதால் மேற்படி ஜோடியில் மிச்சமான பாம்பு ஸ்ரீபிர்யாவாகவோ இன்னொரு பேரிளம்பெண்ணாகவோ வந்து பழிவாங்கும். ஆனால் ஜோதிடவியலின்படி எந்த ஒரு குடும்பம் சர்ப்பங்கள் சஞ்சரிக்கும் பகுதியில் அவற்றை விரட்டி ,அங்குள்ள பாம்பு புற்றுகளை இடித்து குடிபோகிறார்களோ அவர்களின் வாரிசுகளுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும்.

இதில் ஒரு பெரிய தர்க்கம் இருக்கிறது. ஊரோடு ஒத்து வாழாது விலகிப்போக வேண்டிய அவசியம் அந்த குடும்பத்துக்கு ஏன் வந்தது ? ஒன்று அவர்கள் ஊருடன் மோதி தோற்று விலகியிருக்க வேண்டும். அல்லது அளவுக்கு மீறி ஊர்வாயை அடித்து விலகிச்சென்று பண்ணை வீடு டைப்பில் கட்டிக்கொண்டு போயிருக்க வேண்டும் அல்லவா ?இன்றைய மனோதத்துவ சாஸ்திரம் என்ன கூறுகிறது ? ப்ரோக்கன் ஃபேமிலியில் பிறக்கும் குழந்தைகள் மனச்சிக்கல்களுக்கு ஆளாகின்றன. மனச்சிக்கல் உடலையும் பாதிப்பது சகஜமே !

அக்காலத்தில் அ இன்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சர்ப்ப தோசம் இருப்பவர்கள் பாம்புக்கடிக்கு ஆளாகலாம். ஆனால் இதரர்கள் விசயத்தில் இந்த தோசம் பல வகைகளில் வேலை செய்கிறது.

தர்கரீதியில்,விஞ்ஞான கண்ணோட்டத்துடன் யோசிக்கும் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற வகையில் இன்று சர்ப்பதோஷம் குறித்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்.


ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன்.
அந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மைகளை கூறுகிறேன்.

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது:

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

பின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:

சர்ப்பம் யோகத்துக்கும் அறிகுறி:

ஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு கேது்க்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். ராகு கேதுக்கள் ஒருவருக்கொருவர் 7 ஆவது ராசியில் இருப்பார்கள். டிகிரியில் சொன்னால் 180 டிகிரி. எனவே இருவரும் நல்ல இடத்தில் அமைவது அரிதே ! அதனால் தான் உலக சுகங்களை(இதற்கு காரகன் ராகு) பெறுபவர்கள் யோகத்தில்(இதற்கு காரகன் கேது) நாட்டம் காட்டுவதில்லை. உலக சுகத்தில் ஈடுபாடு காட்டும்போது யோகம் ஈர்ப்பதில்லை. யோகத்தில் ஈடுபாடு ஏற்படும்போது உலக சுகம் ஈர்ப்பதில்லை. எனவேதான் உலக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் கூட போலி சன்னியாசிகளிடம் ஏமாந்து விடுகிறார்கள். உண்மையான சன்யாசிகள் கூட திடீர் என்று உலக சுகங்களை அனுபவிக்க துடிக்கின்றனர்.

வாழ் நாளில் ஆரம்பத்தில் ராகு திசை நடந்து (படிக்கும் காலத்தில் அல்ல) உலக சுகங்களையெல்லாம் அடைந்துவிட்டால், பிறகு வரும் கேது தசையில் ஞானம் பெறலாம்.

இது தலைகீழாக அமையும் போது ஆரம்பத்தில் சன்னியாசம் , பின் உலக சுகங்களில் ஈடுபாடு என்ற நிலை ஏற்பட்டு விடும். உ.ம் பித்துக்குளி முருகதாஸ்.

கேது நல்ல இடத்தில் இல்லாவிட்டால் இதர கிரகங்களின் உதவியால் விழிப்பு நிலைக்கேகிய‌ குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.

சர்ப்பம் செக்ஸுக்கு அறிகுறி:

சர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள். ஆனால் இவர்கள் நிலை இருபுறம் எரியூட்டப்பட்ட மெழுகு வர்த்தி போன்றது. சீக்கிரமே அதில் ஆர்வமிழந்து இழந்த சக்தி வைத்தியர்கள் பின்னால் திரிய வேண்டி வரும்.

பாம்புக்குரிய குணநலன்கள் :
பாம்புக்கு ம‌னித‌ர்க‌ள் மீது ப‌ய‌ம். ம‌னித‌ர்க‌ளுக்கு பாம்பு மீது ப‌ய‌ம். என‌வே பாம்பு ம‌றைந்து வாழ்கிற‌து. ம‌னித‌ன் க‌ண்ணில் ப‌ட்டால் அடிப்ப‌ட்டு சாகிற‌து. அல்ல‌து ம‌னித‌னை கொத்தி கொன்று விடுகிற‌து. வ‌ளைந்து வ‌ளைந்து செல்கிற‌து. இரையெடுத்த‌ பின் அசையாம‌ல் கிட‌க்கிற‌து. பாம்புக்கு சிறுநீர்,ம‌ல‌ம் க‌ழிக்க விந்துவை வெளியேற்ற தனித் த‌னி துவார‌ங்க‌ள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக‌ க்ளோய‌கா என்ற‌ துவார‌ம் தான் உண்டு.

ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலை:
ஜாத‌க‌த்தில் ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலையும் ஏற‌க்குறைய‌ இப்ப‌டித்தான். இவர்களும் குடும்பத்தினரிடம் கூட மனம் திறந்து பேசமாட்டார்கள். அவ்வப்போது அன் வாரண்டெட் மோஷன்ஸ் இருக்கும், வாமிட்டிங் சென்ஸேஷன் இருக்கும். சிறு நீரில் விந்து வெளியேறலாம். உண்ட பின் உட்கார கூட முடியாது. தமக்கு தீங்கு செய்தவர்கள் சதிகள் செய்து ஒழித்துக்கட்ட முயல்வார்கள். இந்த சதி எதிராளிக்கு தெரிந்து விட்டால் அடித்தே கொன்று விடுவான்.

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

உட‌ல‌மைப்பிலும் வித்யாச‌ம் இருக்கிற‌து. ஒன்று ஊளைச்ச‌தை,அல்ல‌து வ‌ய‌துக்கேற்ற‌ வ‌ள‌ர்ச்சி இன்மை காண‌ப்ப‌டுகிற‌து. சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.
(To be cont.)

25 comments:

  1. கலக்கல் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். :)

    ReplyDelete
  2. அண்ணே இன்றைய நகர மயமாக்கல் சூழலி பெரு நகரங்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் எல்லாம் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்படுகிறது அப்போ இடிக்கும் பாம்பு புத்துக்களால் சர்ப தோசம் அங்கே குடி போகிறவர்களுக்கு ஏற்படுமா ? கட்டிடம் கட்டிம் பெரிய நிறுவனங்களின் முதலாளிகளுக்கு ஏற்படுமா ?

    ReplyDelete
  3. நல்ல பதிவு!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. கோ.வி.கண்ணன் அவர்களுக்கு,
    தங்கள் கேள்வி ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாவம் செய்பவனை விட அதை செய்ய தூண்டுபவனே அதிக தண்டனை அனுபவிக்கிறான். மேற்படி பாவத்தின் பலனால் கிடைத்த தற்காலிக பலனை அனுபவிப்பவனும் அப்படியே. கட்டினவனை விட குடி போகும் குடும்பத்துக்கு அதிக அதிக அளவில் பாதிப்பு ஏற்படும்.

    நம் மூதாதையர்கள் எந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. சிறுக கட்டி பெருக வாழ் என்றுதான் சொன்னார்களே தவிர மம்மிக்கு ஒரு ரூம் ,டாடிக்கு ஒரு ரூம், குழந்தைக்கு ஒரு ரூம் என்று கூறவில்லை. ரூமுக்கு ஒரு டிவி வைத்துக்கொள்ளும்படியும் சொல்லவில்லை.

    அந்த நாளில் வால்வு ரேடியோவில் ந்யூஸ் கேட்கவென்றே டீக்கடைக்கோ,சலூனுக்கோ,பூங்காவிற்கோ,பீச்சுக்கோ சென்ற தலைமுறையையும் இந்த தலைமுறையையும் ஒப்பிட்டு பாருங்கள்.

    உங்களுக்கு ஒரு தொழில் ரகசியத்தை சொல்லவா .. 1989 ல் நான் ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தபோது நூற்றுக்கு பத்தோ பதினைந்தோதான் தோஷ ஜாதகம் வரும். 1999 ல் இது இரண்டு மடங்கானது. 2009 ல் சொல்லவே வேண்டாம். இதற்கு என்ன பொருள் மனிதன் இயற்கையிலிருந்து விலகி ஓடிக்கொண்டே இருக்கிறான்.

    இன்னும் என்னென்ன ஆகப்போகுதோ ?

    ReplyDelete
  5. ரகு நாதன் அவர்களே ! சபரி நாதன் அவர்களே ! ஓம் விஜய் அவர்களே ! (என்னங்க ஏதோ ஒன்றியம் வட்டம் பொதுக்கூட்டம் ஞா .வருகிறதா ?) தங்கள் பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றி.

    ReplyDelete
  6. சித்தூர் முருகேசன் அய்யா,

    சர்ப்ப தோஷம் உள்ளவர்களின் குணாதிசியங்களை பட்டியல் போட்டிருக்கீங்க.வாழ்த்துக்கள்.
    நீங்க சொல்றதை வச்சுப் பாத்தா,அதாவது வனமம்,ஆத்திரம்,குரோதம்,மற்றும் அளவுக்கு மீறிய செக்ஸ் ஈடுபாடு என்ற சமாசாரங்களை வைத்து பார்க்கும் போது நம்ம மஞ்ச துண்டு அய்யாவுக்கு சுமார் 10 to 15 சர்பங்களவது தோஷம் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறதே;சோதிட இலக்கணப்படி இது சாத்தியமா?

    தவிர, ஏகப்பட்ட சொத்தையையும்,மனுஷங்களையும் விழுங்கி ஏப்பம் விடும் திறமையை பார்க்கும் போது தோஷம் கொடுத்தது மலைப்பாம்பாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருது.குழப்பம் தீர
    கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.

    பாலா

    ReplyDelete
  7. பாலா நீங்க எழுதியதை பார்த்த பிறகு எனக்குக் கூட ஒன்று தோன்றுகிறது.

    பாம்புகள் மட்டும் தான் மஞ்ச துண்டுக்கு தோஷம் கொடுத்திருக்க வேண்டும்.தந்திரமாக ஏமர்ற்றும் கலையில் வல்லவரான அவருக்கு குறைந்தது 5 அல்லது ஆறு குள்ள நரிகளும் அல்லவா தோஷம் கொடுத்திருக்க வேண்டும்?

    மஞ்ச துண்டின் சாதகம் சித்தூர் எஸ் முருகேசன் போன்ற பலே சோசியர்களுக்கு சவால் விடும் வண்ணம் உள்ளது.

    வீரபாண்டியன்

    ReplyDelete
  8. கால சர்ப்ப தோஷத்தில் ஆரோகண அவரோகண தோஷ நிலைகளை சற்று விளக்கினால் அடியேன் தெளிவு பெறுவேன். வட்ட தலைவர் சிங்க குரலோன் சித்தூர் முருகேசன் வாழ்க வாழ்க

    ReplyDelete
  9. கட்டுரை மிகவும் சுவராஸ்யமாய் இருந்தது. நன்றி

    பாம்பை கொன்றால் தோஷம் வருமா ?

    மேலும் பெற்றோர்கள் செய்யும் தவறுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு தோஷம் வருவது கொஞ்சம் கூட நியாயமே இல்லை ....

    ReplyDelete
  10. நீங்கள் எழுதியிருக்கும் அதனை விஷயமும் எனக்கு ஒத்து வருகிறது. கனவில் பாம்பு வரும், அடங்காத காம இச்சை உண்டு, (இன்னும் திருமணம் இல்லை) பழி வாங்கும் எண்ணம் உண்டு. அதே நேரம் ஆன்மிக ஈடுபாடும் அதிகம். அனால் இப்போது காமமே முன்னால் நிற்கிறது. ராகு தசை என நினைக்கிறன். எனக்கு 1- ல் ராகு, 7- ல் கேது. கடக ராசி, கடக லக்னம்.

    ReplyDelete
  11. பாலா அவர்களே !

    //சர்ப்ப தோஷம் உள்ளவர்களின் குணாதிசியங்களை பட்டியல் போட்டிருக்கீங்க.வாழ்த்துக்கள்.//
    வாழ்த்துக்கு நன்றி.
    //நீங்க சொல்றதை வச்சுப் பாத்தா,அதாவது வனமம்,ஆத்திரம்,குரோதம்,மற்றும் அளவுக்கு மீறிய செக்ஸ் ஈடுபாடு என்ற சமாசாரங்களை வைத்து பார்க்கும் போது நம்ம மஞ்ச துண்டு அய்யாவுக்கு சுமார் 10 to 15 சர்பங்களவது தோஷம் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறதே;சோதிட இலக்கணப்படி இது சாத்தியமா?//

    இல்லிங்க ஜோதிடத்துல இருக்கிறதே ஒரே பாம்புதான் . அதுவும் ரெண்டு துண்டா இருக்கு. துண்டா இருக்கிறதாலயோ என்னவோ துண்டு (?) போட்டவங்களை(மஞ்சத்துண்டு போட்டவரை மட்டுமில்லை) ஏகமா பாதிக்குது.

    //தவிர, ஏகப்பட்ட சொத்தையையும்,மனுஷங்களையும் விழுங்கி ஏப்பம் விடும் திறமையை பார்க்கும் போது தோஷம் கொடுத்தது மலைப்பாம்பாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருது.குழப்பம் தீர
    கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.//

    உண்மையான பசி இருக்கிறவன் அளவோட சாப்பிடுவான். அது செரிக்கும். ரத்தத்துல சேரும். மனோவியாதி காரணமா சாப்பிடறவன் ? ராகு கரும்பாம்பு, கேது செம்பாம்பு இதாண்ணா எனக்கு தெரிஞ்சது.. மலைப்பாம்பு மலைல வசிக்கலாம்.. ஜோதிடத்துல இல்லிங்கணா !

    ReplyDelete
  12. வீரபாண்டியன் அவர்களே !
    (இந்த மறுமொழியை வடிவேலு பாணியில் படிக்கவும்)
    அய்யய்யோ.. என்னங்கய்யா இது நான் ஏதோ சோசியம் பத்தி சொன்னா இவிங்க பெரிய இடத்து பொல்லாப்பையெல்லாம் தலைல போட்றாப்ல இருக்கு. நம்ம கிட்ட இருக்கிறது ஏதோ கொஞ்ச நஞ்சம் நிக்கோடின் படிஞ்ச நெஞ்சம் ..இவிங்க மறுமொழி போடற போக்கை பார்த்தா அஞ்சா நெஞ்சத்துக்கு தகவல் கொடுத்து தகனம் பண்ண சொல்றாப்ல இருக்கு.. வேணான்டா சாமி.. திருப்பி அடிக்கிறது அப்புறம் ஓடச்சொன்னாலே வெறும் பொகயாயில்லே வரும்..

    ReplyDelete
  13. ஓம் விஜய் அவர்களே ! அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களுக்கிடையில் சிக்கியிருப்பதே காலசர்ப்ப தோஷம். ஆரோகணம் என்றால் ராகு கேதுக்கள் குறிப்பிட்ட ராசியின் மத்திம டிகிரி நோக்கி சஞ்சாரம் செய்வது. அவரோகணம் என்றால் மத்திம டிகிரியை தாண்டி விலகிப்போவது. (இவர்கள் பின்னோக்கி நகர்வார்கள் என்பதை மனதில் வைத்து டிகிரியை பார்க்கவும்)

    ReplyDelete
  14. யூர்கன் க்ருகியர் அவர்களே !
    பெற்றோர் செய்யும் செயலுக்கான பலனால் பிள்ளைக்குட்டிகள் வளர்கின்றன அல்லவா. அதனால் அந்த கருமத்தை (பெற்ற,வளர்த்த கடனை) தொலைக்க அவை தம் பெற்றோரின் பாவ பலனை அனுபவிக்கின்றன. அப்பா ஜீன் மூலமாக வரும் திறமைகள் தேவை, அவரது பாப பலன் தேவையில்லை என்று ஒதுக்கும் சக்தியை இயற்கை மனிதனுக்கு தரவில்லையே.

    பாம்பு என்பது உயிரியல் சக்கரத்தில் ஒரு ஆரம். அதை டிஸ்டர்ப் செய்வது ஜோதிட ரீதியாக மட்டுமல்ல எக்கலாஜிக்கல் ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை கொடுத்து தான் தீரும்

    ReplyDelete
  15. ஒருவன் அவர்களே !
    இயற்கைக்கும் , கடவுளுக்கும் நெருக்கமாக இருக்கும் ஒரே ராசி கடக ராசிதான். முகம் பார்க்கும் கண்ணாடி, நதி,கடல்,தண்ணீர்,சந்திரன் இவற்றிற்குள்ள அனைத்து குணங்களும் உங்களுக்கிருக்கும். இந்த ப்ளஸ் மைனஸை ஆராய்ந்து வாழ்வில் அப்ளை செய்தால் சர்ப்பதோஷமெல்லாம் ஜுஜுபி

    ReplyDelete
  16. பாம்புகளை கொன்றால் சர்ப்பதோஷம் வருவது போல்!
    கரப்பான்களை கொன்றால் கரப்பான்தோஷம் வர வாய்ப்பிருக்கா!?

    ஜலதோஷம் எதை கொல்வதால் ஏற்ப்படுகிறது!?

    ReplyDelete
  17. //ஜலதோஷம் எதை கொல்வதால் ஏற்ப்படுகிறது!?//

    சூப்பர்ப் வால்பையன் அவர்களே....

    ReplyDelete
  18. கரப்பான் களை கொன்றால் என்ன தோஷம் வரும்?
    முதலில் கரப்பானை பற்றி இன்று ஒரு தகவல் . வெள்ளை ரத்தம் கொண்டது. முதலில் செக்ஸில் ஈடுபட்டு , பிறகு நீர் எடுக்கும், அதையடுத்துதான் உணவெடுக்கும். பூகம்பம்,வெள்ளம்,புயல்,எரிமலை வெடிப்பு இன்னும் எத்தனை இயற்கை பேரழிவுகள் இடம் பெற்றாலும் தொடர்ந்து வாழக்கூடியது. பூகம்பம்,வெள்ளம் போன்றவற்றை முன் கூட்டியே அறிந்து இடத்தை காலி செய்யும் மதியூகம் படைத்தது. ( நம்மை போல் ஊரான் வீட்டில் குடக்கூலிக்கு இருந்த படி வீட்டுக்காரன் காலி செய்ய சொன்னால் கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்காது. கணவர்களை நடு நடுங்கச்செய்யும் மனைவிகளை மிரட்டும் சக்தி படைத்த ஒரே ஜீவ ராசி.
    கரப்பான் களை மட்டுமல்ல ஒரே ஒரு புல்லின் நுனியை கிள்ளிப்போட்டாலும் இந்த படைப்பை மூளி செய்த தோஷம் வரும். இந்த படைப்பில் மன்மோஹன் சிங்கிற்கு எத்தனை முக்கியத்துவமோ அதே முக்கியத்துவம் தான் எனக்கும், உங்களுக்கும் ஓகே
    வால் பையன் அவர்களே !
    (வால் கடைசில தானே வரும் ?

    ReplyDelete
  19. கிஃபாரிஸ் அவர்களே ! ஜலதோஷம் வர காரணம் சந்திரன் பலவீனப்படுவதுதான். எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு என்றனர் பெரியோர். அந்த மனதுக்கு காரகன் சந்திரன். சந்திரன் பலவீனப்பட்ட ஜாதகர்கள் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்வார்கள். ஹைப்பர் டென்ஷன் வரும். ஜலதோஷத்துக்கு டென்ஷன்கூட ஒரு காரணம் தெரியுமா? மேலும் சந்திரன் ஜலகாரகன் , ஜாதகத்தில் சந்திரன் கெட்டால் அந்த ஜாதகருக்கு நல்ல குடி நீர் கிடைக்காது. அதனாலும் ஜல தோஷம் ஏற்படும் மேலு தூசு நிறைந்த என்விரான்மென்டாலும் ஜல தோஷம் வரும். சனி பலமற்ற ஜாதகர்கள் தூசு, நாற்றம் , நிறைந்த பகுதியில் வசிக்கவோ, வேலை செய்யவோ வேண்டி வரும். இதனாலும் ஜல தோஷம் வரும்

    ReplyDelete
  20. //முதலில் செக்ஸில் ஈடுபட்டு , பிறகு நீர் எடுக்கும், அதையடுத்துதான் உணவெடுக்கும். //

    மற்ற உயிரினங்கள், முதலில் நீரை எடுத்து கொள்ளுமோ!

    கரப்பான் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லை, இருந்தால் அதுவும் சிவப்பாக தான் இருக்கும்!

    ReplyDelete
  21. //ஜலதோஷம் வர காரணம் சந்திரன் பலவீனப்படுவதுதான்.//


    அந்திரன் அப்படியே தான இருக்கு!
    அது என்னைக்கு பலவீனபட்டுச்சு?
    உங்களுடய ஆரய்ச்சி இப்போ எதுவரைக்கும் போயிருக்கு!
    நம்ம சூரிய குடும்பத்துக்கு அடுத்து இருக்குற சூரிய குடும்பத்து கோள்கள் நம்மை பாதிக்காதா!?

    நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கிங்க!?
    நீங்க நடிக்கிறிங்களா? இல்லை உண்மையிலேயெ ..............!?

    ReplyDelete
  22. // சந்திரன் பலவீனப்பட்ட ஜாதகர்கள் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்வார்கள். ஹைப்பர் டென்ஷன் வரும். ஜலதோஷத்துக்கு டென்ஷன்கூட ஒரு காரணம் தெரியுமா? மேலும் சந்திரன் ஜலகாரகன் , ஜாதகத்தில் சந்திரன் கெட்டால் அந்த ஜாதகருக்கு நல்ல குடி நீர் கிடைக்காது. அதனாலும் ஜல தோஷம் ஏற்படும் மேலு தூசு நிறைந்த என்விரான்மென்டாலும் ஜல தோஷம் வரும். சனி பலமற்ற ஜாதகர்கள் தூசு, நாற்றம் , நிறைந்த பகுதியில் வசிக்கவோ, வேலை செய்யவோ வேண்டி வரும். இதனாலும் ஜல தோஷம் வரும்
    //
    அப்போ வன்னி முகாமில் அடைபட்டிருக்கும் 3 இலட்சம் பேருக்கும் சனி பலமற்ற ஜாதகமோ?

    குஜராத்தில் பூகம்பம் அடித்த போது செத்துப்போன அத்தனை பேருக்கும் ஒரே ஜாதகாமா? என்னமோ போங்க

    ReplyDelete
  23. வால் பையன் அவர்களே !

    தங்கள் மறுமொழிக்கு நன்றி. நான் என் வாழ்க்கையை தொலைத்து ஏதோ ஓரிரண்டு விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவற்றை பகிரங்கமாய் பதிவிடுவது மக்கள் பால் பொங்கும் கருணையால் தான். இதை மனதில் வைத்து என் மறுமொழியை படியுங்கள்.


    //மற்ற உயிரினங்கள், முதலில் நீரை எடுத்து கொள்ளுமோ!//
    இதற்கு ஒரு கேள்வி தேவையில்லை. உங்கள் வழக்கம் என்ன ?

    //கரப்பான் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லை, இருந்தால் அதுவும் சிவப்பாக தான் இருக்கும்!//
    நல்ல தகவல்


    //அந்திரன் அப்படியே தான இருக்கு!
    அது என்னைக்கு பலவீனபட்டுச்சு?//

    நீங்கள் வார்த்தைகளுக்கான நேரிடை அர்த்தங்களை எடுத்துக்கொள்ள கூடாது. சந்திரன் பலவீனப்பட்டால் என்ற வார்த்தைக்கு சந்திர கிரணங்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை உறைவாய் உள்ள ஜாதகத்தில் பிறந்தால் என்று பொருளாகும்


    //உங்களுடய ஆரய்ச்சி இப்போ எதுவரைக்கும் போயிருக்கு!//

    எல்லாரும் ஒரே உயிராய் இருந்தோம் (அமீபா) பிரிஞ்சுட்டோம். இப்ப சேர துடிக்கிறோம் . அதுக்கு இந்த உடல்களை தடையா பாவிச்சு கொல்றோம்,கொல்லப்படறோம். முதல்ல ஸ்தூலமா/கொஞ்ச நாள் செக்ஸில் ப்ளாக் அவுட் மூலமா/இப்போ பணத்தின் மூலமா.

    உண்மை என்னன்னா நாம எல்லாம் வேறு வேறு உடல்களில் இருந்தாலும் நம் உயிர் ஒன்றே. அதை கண்ணுக்கு தெரியாத தங்கக்கயிறு ஒன்று பிணைத்துள்ளது. அதை காண வொட்டாது தடுப்பது அகந்தை.


    //நம்ம சூரிய குடும்பத்துக்கு அடுத்து இருக்குற சூரிய குடும்பத்து கோள்கள் நம்மை பாதிக்காதா!?//

    மனித காதுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு டெசிபலில் உள்ள சத்தம் தான் கேட்கும் . அதுக்கு அதிகமா இருந்தாலோ குறைவா இருந்தாலோ நம் காதுக்கு கேட்காது.அப்படி ஒரு அவதானிப்புடன் இந்த கிரகங்களைப்பற்றி ம‌ட்டும் அக்காலத்து ரிஷிகள் மகரிஷிகள் எழுதியிருக்கலாம். மேலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூற ஜோதிட வியலை வகுத்த அக்காலத்து ரிஷிகள் மகரிஷிகள் வரவேண்டும். நமக்கு வயசு பத்தாதுங்கணா !

    //நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கிங்க!?//
    பி.காம் ஃபெயிலுங்கணா.. 1987 லயே படிப்பை ஏறக்கட்டியாச்சுங்கணா

    //நீங்க நடிக்கிறிங்களா? இல்லை உண்மையிலேயெ //
    நடிக்கனும் இல்லே நடிக்க முடியும்னா அரசியலுக்கே போயிருந்திருப்பேங்க‌னா
    உண்மையிலேயே பைத்தியம் தானுங்கனா ...பாவம் நீங்க சொல்ல தயங்கின‌
    வார்த்தை இது தானுங்களா ?

    ReplyDelete
  24. குழலி அவர்களே !
    இனம் இனத்தோடு சேரும் என்று கேள்விப்பட்டதில்லையா ?அப்படியாக யார் யார் அவதிப்பட வேண்டியிருக்கிறதோ அவர்கள் இலங்கையில் தங்கி, முகாமில் சிக்கி சீரழிகின்றனர். எத்தனையோ இலங்கை தமிழர்கள் உலக நாடுகளில் தஞ்சமடைந்து நிம்மதியாக வாழவில்லையா ?

    தாயே !
    என் ஜோதிட ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்த ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா?
    உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ் இதற்கெல்லாம் சுக்கிரன் தான் காரகன். இந்த சுக்கிரன் அனைத்து ராசியினருக்கும் ஒரு வருடத்தில் ஏதோ 2 மாதங்கள் தவிர மற்ற காலங்களில் எல்லாம் அனுகூலமாகத்தான் இருக்கிறார். ஆனாலும் ஏன் அவர்கள் இப்படி தவிக்க வேண்டும் ? இங்குதான் மார்க்ஸ் வருகிறார்.

    ReplyDelete