Wednesday, August 19, 2009

"மணி சீக்ரெட்ஸ்" செமினார் பேச்சு


எனது வலைப்பூவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புது செய்தியாக இல்லாமல் இருக்கலாம். புதியவர்களுக்காக சில வரிகள் எழுதி பின் செமினாரிலான எனது பேச்சின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.

சித்தூர் வேலூர் சாலையில் உள்ள ஜில்லா பரிசத் மீட்டிங் ஹாலில் பாசிட்டிவ் திங்கர்ஸ் க்ளப் மற்றும் சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ் சார்பில் மணி சீக்ரெட்ஸ் (பணம் பற்றிய மர்மங்கள் ) என்ற தலைப்பில் கடந்த ஞா. கிழமை செமினார் நடந்தது. இதில் பிரபல மனோதத்துவ நிபுணர் சுதாகர் ரெட்டி அவர்களும் கலந்து கொண்டு பேசினார்

அவரையடுத்து மணீ சீக்ரெட்ஸ் பற்றி அடியேன் உரையாற்றினேன். அதன் சுருக்கம் வருமாறு:
இன்று பல கோடி உடல்களில் தனித்திருக்கும் உயிர்களுக்கெல்லாம் மூலம் முதலில் தோன்றிய அமீபாவின் உயிர் தான் மூலம். ஒரே உயிர் ஒரே உடல் என்று வாழ்ந்த போது
இன் செக்யூரிட்டி,போட்டி, லட்சியம்,ஒப்பீடு ஏதும் கிடையாது. ஒரு செல் அங்க ஜீவியான அமீபா கொழுத்து இரண்டாக பிரிந்தது. ஒரு செல் தன்னை தானே காப்பி செய்து கொண்டு மற்றொரு செல்லாக வடிவெடுத்தது. இந்த காப்பியிங்கில் நடந்த எரர் காரணமாக புதிய ஜீவ ராசிகள் வந்தன. குரங்கு வந்தது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்.

ஆனால் அன்று ஒரே உயிராக ,ஒரே உடலில் வாழ்ந்த நினைவுகள் இன் செக்யூரிட்டி,போட்டி, லட்சியம்,ஒப்பீடு ஏதுமற்ற ஞாபகங்கள் உயிர்களை தூண்டுகின்றன. ஒரே உயிராக மீண்டும் மாறிட தவிக்கச்செய்கின்றன. இந்த தவிப்பின் காரணமாகத்தான் மனிதனின் எந்த செயலுக்கு பின்னாடியும் கொல்லு அ கொல்லப்படும் இச்சை ஒன்றே இருக்கிறது. இதை மனோதத்துவ இயலும் அங்கீகரிக்கிறது

மனிதன் குகை,காட்டு வாழ்வில் கொல்வதையும்,கொல்லப்படுவதையும் எவ்வித முகமூடியும் இன்றி நேரிடையாக செய்ய முடிந்தது. சஞ்சார வாசம் முடிந்து ஸ்திரவாசம் துவங்கியபோது குழு,குழு தலைவன் விதிகள் ஏற்பட்ட காரணத்தால் அவனால் சுதந்திரமாக கொல்லவோ கொல்லப்படவோ முடியவில்லை. இதற்கு மாற்றாக செக்ஸை ஏற்றான். செக்ஸில் வீரியம் ஸ்கலிதமாகும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. இது சாகும் இச்சையை நிறைவேற்றியது. ஆனால் ஸ்திர வாழ்வின் காரணமாக சொத்து (பதப்படுத்தப்பட்ட விளை நிலம்)ஏற்பட்டது. அது தன் வாரிசுக்கே கிடைக்க வேண்டும் என்று ஆண் நினைத்தான். மேலும் செக்ஸில் பெண்ணின் பலம் அவனுக்கு தெரிந்து போனது.( ஒரே இரவில் பலமுறை உச்சம் அடையும் சக்தி, யோனியில் ஆணுறுப்பு நுழைக்கப்பட்ட பின் 7 முறை அசைக்கப்பட்டாலே இவன் நாக் அவுட் . அவளுக்கோ 23 முறை தேவைப்பட்டது. மேலும் இவன் குழந்தைக்கு யார் தந்தை என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்)

அவள் யோனியை பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்டி வைக்க ஆரம்பித்து விட்டான். அவளை அடிமையாக்கினான். அடிமையோடு அவனுக்கு எப்படி உண்மையான இணைப்பு ஏற்படும் அவளை ஆஷ் ட்ரேவாகவும், யூரினல்ஸாகவும், வெறும் துளையாகவும் பாவித்தான்..எனவே இவன் சாக /உடலை உதிர்க்க/ ஓருயிராய் மாற மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது.

அதற்குள்ளாக கூடுதல் விளைபொருட்களால் பண்டமாற்று, அதிலான சிக்கலை தவிர்க்க தங்க நாணயம் குறைந்த தொகைகளிலான லாவா தேவிக்கு வெள்ளி நாணயம் ,செம்பு நாணயம் இன்று ஊதினால் பறந்து விடும் வண்ண காகிதங்கள் எல்லாம் வந்தன. மனிதன் செக்ஸுக்கு மாற்றாக பணத்தை ஏற்றுக்கொண்டான். ஏன் என்றால் செக்ஸில் என்னென்ன சாத்தியமோ பணத்தாலும் அவையனைத்தும் சாத்தியமே . மேலும் செக்ஸும் கிடைக்கும்.

ஆக எவனும் பணத்தை பணமாக பார்க்காமல் .. தன் உயிரையும், பிறர் உயிரையும் பறித்து உடல்களை உதிர்த்து மீண்டும் மனித குலத்தை ஓருயிர் ஓருடலாக மாற்றும் என்று பாவிக்கிறான்.

ஆனால் உயிர்கள் பிரிந்தாலும், உடல்கள் வேறானாலும் கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு எல்லோரையும் இணைக்கிறது. இதை அகந்தை உணர மறுக்கிறது.

மேலும் மனிதன் பணத்தை கொண்டு மரணத்தின் நிழல்களோடு நிழல் யுத்தம் செய்கிறான். தனிமை,ஏழ்மை, இருட்டு, அறியாமை, நிராகரிப்பு ,முதுமை அனைத்தையும் மரணத்தோடு முடிச்சு போட்டு யோசிக்கிறான். பணத்தை கொண்டு அவற்றை வெல்ல நினைக்கிறான். இதனால் தான் ஒவ்வொரு வாழ்வும் தோல்வியில் முடிகிறது.

பணம் லட்சியம் நோக்கிய பயணத்துக்கு ஒரு எரிபொருள் மாத்திரமே. வாழ்வின் வெற்றிக்கு தேவையான ஒரு கருவி மாத்திரமே. ஆனால் மனிதனோ மேற்சொன்ன கற்பனைகளால், கற்பனை பயங்களால் அகந்தையால் வாழ் நாள் மொத்தத்தையும் வீணாக்கிக்கொள்கிறான்.
உலக உயிர்களிடையே உள்ள இணைப்பை தன் அகந்தை காரணமாய் உணர மறுக்கும் மனிதன் தன் உடல்களை உதிர்த்தேனும் மீண்டும் இணைய துடிப்பது வேடிக்கை. தான் போரிட வேண்டிய மரணத்துடன் மோதாது மரணத்தின் நிழல்களோடு யுத்தம் செய்து மரணப்படுகுழி நோக்கி விரைவது பை. தனம்.

எனவே பணத்தை பணமாக பாருங்கள் . உங்கள் உடல்,மனம்,புத்தி, மனைவி,குடும்பம், நண்பர்களை உங்கள் பொருளீட்டலுக்கு ஆதரவாக துணையாக மாற்றிக்கொள்ள முடிந்தால் சுராங்கனி கா ஸேக்கு தான். (பெரும் பணம் ஈட்டலாம்)

9 comments:

  1. ரொம்ப நல்ல இருக்குங்க! பெண்மையை மதி! அதற்கு தான் அன்னையை முதல் வைத்து எழுதினார் வள்ளுவர்.

    நாமும் வீட்டில் பார்ப்பது தான், கோபத்தில் அப்பவோ கணவரோ திட்ட, கொஞ்சம் பொறுமை அடைந்த பின், அம்மாவோ நானோ , அது இப்படி இல்லைங்க, இப்படி என்று நிலைமையை சீர் படுத்துவது போல...

    ( சரி அம்மா பகவான் பற்றி எழுதக்காணோம்? )

    ReplyDelete
  2. வனிதா அவர்களே !
    என் பேச்சின் சாரத்தை புரிந்துகொண்டு மறு மொழி இட்டமைக்கு நன்றி. ஆம் ஆண் பெண்ணிடையே ஏற்பட்டு விட்ட இடைவெளி தான் எல்லா குழப்பத்துக்கும் காரணம். பெண் என்பவள் ஆளவந்தான் கமல் மாதிரி இரட்டையாக இருக்கிறாள். ஒருத்தி சமுதாயத்தின் அடக்குமுறைகளின் விளைவாய் தோன்றிய இன்றைய பெண். மேம்போக்காய் பெண்ணை பார்ப்பவர்கள் இவளைத்தான் பார்க்கிறார்கள். மற்றொருத்தி அன்றைய கற்காலத்தில் ஆணுடன் சரிசமமாய் மரணத்துடன் போராடிய பெண். அவளுள் புதைந்து கிடக்கும் கற்காலத்து பெண்ணை தோண்டி எடுக்க ஒரே வழி ஆண் அவளை தனக்கு சமமாக பாவிப்பது ஒன்றே. அவள் ஆதிசக்தி. நம்பியவர்களை கைவிடுவதில்லை. அவள் இயற்கையின் பிரதி + நிதி. அவளுடன் அகந்தை விட்டு இரண்டற கலந்தவர்களை தன் மூலம் இயற்கையுடன் இணைக்கிறாள். பெண்ணுடனான உறவு பாதிக்கப்பட்டதால் மனித கூட்டம் பணம்,அதிகாரம்,புகழ் இத்யாதிக்கு அலைந்து பறைசாற்றி வாழ் நாளை வீணடித்துக்கொண்டிருக்கிறது.

    அம்மா பகவான் மீது உங்களுக்கு அப்படியென்ன கோபம் ? அவர் ஆந்திர மானிலம், சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையம் மண்டலத்தில் ஸ்கூல் நடத்திக்கொண்டிருந்தார். அக்கம்பக்கத்து விளை நிலங்களை ஆக்கிரமித்து அடி மாட்டு விலைக்கு வாங்கி குவித்ததாய் புகார்கள் உண்டு. சமீபத்தில் கூட ஏதோ விழா தொடர்பாக பெருங்கூட்டம் கூடியபோது அனேகம் பேர் நெரிசலில் செத்தனர். அந்த வழக்கும் அமுக்கப்பட்டுவிட்டது.

    அவரைப்பற்றி மட்டுமல்ல அவர் போன்ற யாரைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள தேவையானது தகவல்கள் அல்ல ஒரு புரிதல் மட்டுமே. இவர் போன்றவர்கள் செய்வதெல்லாம் சில சில்லறை வேலைகள் மட்டுமே ! அவை சில சமயம் கொலைகளில் முடிவதும் உண்டு. உம். சங்கராச்சாரியார்

    அவை பின் வருமாறு:
    1.பணம் பிடுங்குதல்
    2.கள்ளப்பணத்தை வெளுத்து தருவது/ஊழல் பேர்வழிகளுக்கு பினாமியாக செயல்படுவது
    3.பெரிய மனிதர்களின் சின்னத்தனமான இச்சைகளை நிறைவேற்றுவது
    4.பவர் புரோக்கரிங்
    5.ஹவாலா
    6. நில ஆக்கிரமிப்பு
    7. பெரிய மனிதர்களிடையே புரோக்கர்களாக செயல்படுவது
    அம்மா பகவானின் சீடர் ஒருவர் இருக்கிறார். (எங்க ஊர்லதான்) அவர் அம்மா பகவானை விட அறிவாளி. எலக்ட்ரானிக்ஸ் ஷோ ரூம் வைத்திருக்கும் இவர் அண்டை மானிலங்களில் இருந்து கள்ளத்தனமாக கொள்முதல் செய்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தவே ஒரு மாருதி வேனை வாங்கி அதில் அம்மா பகவானின் படத்தை பெரிதாக வரைய வைத்து பயன் படுத்தினார். பல நாள் திருடன் ஒரு நாள் என்பது போல் பிடிபட்டுவிட்டார்.

    ReplyDelete
  3. யூர்கன் க்ருகியர் அவர்களே ,
    பாராட்டுக்கு நன்றி. வேறு எந்தெந்த விஷயங்கள் பற்றி பதிவு போட்டால் நன்றாக இருக்கும் ? வில் யு ப்ளீஸ் கிவ் மி சம் ஐடியா ?

    ReplyDelete
  4. செக்சுவல் அஸ்த்ரலாஜி பின்னுகிறீர்கள். இந்தியாவின் முதல் செக்ஸ் ஜோதிடர் நீங்கள்தான். நாட்டிற்கு நிறைய அவேர்னஸ் தேவைப்படுகிறது . உங்கள் சேவைக்கு நன்றி . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. ஓம் விஜய் அவர்களே !
    ஓஷோவை கூட ஆரம்பித்தில் செக்ஸ் சாமியார் என்றுதான் குறிப்பிட்டார்கள் என்பதை நினைத்து தங்கள் பாராட்டை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  6. உண்மைதான் நண்பரே செக்ஸ்சை பற்றி பேச துணிவு வேண்டும். முதலில் அருவருப்பாய் இருக்கும். பின்பு தான் அது அருமருந்தாய் தெரியும் . அதுவும் ஒரு ஆன்மீக குறியீடே . எனவே தங்களுக்கு ஜோதிட ஓஷோ என பட்டமாளிக்கிறேன். வாழ்க வளர்க .

    ReplyDelete
  7. ஓம் விஜய் அவர்களே !
    தங்கள் பட்டத்தை இருகரம் கூப்பி ஏற்கிறேன்.(இது தங்கள் அன்பின் வெளிப்பாடு என்பதால்) ஆனால் ஒரு வேண்டுகோள் இந்த நாலணா அரசியல்வாதிகள் தர்மத்துக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை கண்ட இடத்திலும் போட்டு நாறடிப்பது போல் இதை யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
    முதலும் கடைசியுமாய்

    ஜோதிட ஓஷோ

    ReplyDelete
  8. பெரும் பணம் ஈட்ட இனிய யோசனைகள்
    மனிதர்கள் பணத்தை எதற்கு சம்பாதிக்கிறார்கள் ? மரணத்தின் நிழல்களுடன் போராட. மரணத்தின் நிழல்கள் யாவை ?
    வாரிசின்மை, ஆண்மை இழப்பு, தனிமை,இருட்டு,ஏழ்மை,அவமானம்,தூரம்,காலம் இவையெல்லாம் மரணத்தின் நிழல்கள்..
    மனிதன் ஒன்று மரணத்துடன் போராட வேண்டும் அ மரணத்தின் நிழல்களுடன் போராட வேண்டும். இந்த போராட்டத்தில் உதவும் எந்த தொழிலும் நன்றாகவே செழிக்கும். மனிதனிடம் இருக்கும் கடைசி பைசா வரை இந்த தொழில்களால் கறக்க முடியும்.
    மரணத்துடன் போராடும் தொழில்கள்:


    வாரிசின்மை மாட்டாஸ்பத்திரியில் பத்து ரூபாய்க்கு போடப்படும் சினை ஊசி மனிதர் விஷயத்தில் வரும்போது லட்சங்களையும் விழுங்குகிறது ? எத்தனை பெரிய படிப்பை படித்தவனும்/வளும் திருமணம், வாரிசு இத்யாதி விஷயங்களில் எத்தனை காட்டுமிராண்டி தனமான சிகிச்சைக்கும் பரிகாரத்துக்கும் சித்தமாகிவிடுகின்றனர்.

    இப்படியாக ஒவ்வொரு (மரணத்தின்) நிழலையும் நிதானமாக ஆராய்ந்து பார்த்து அந்த நிழலுடன் மனிதன் போராட உதவினீர்கள் என்றால் உங்கள் காட்டில் பணமழைதான்.

    ReplyDelete