Tuesday, February 9, 2010

அஜீத் சாருக்காகவே ஒரு தூள் கதை



ஒரு வயசான பயாலஜி  ப்ரொஃபெசர் (இந்த ரோலை  அசல் பண்றார். அசலுக்கு இன்னொரு ரோலும் இருக்கு அதைப்பத்தி அப்புறம் சொல்றேன்) .இவர் ப்ரோட்டீன்களை பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்யற  இன்டலக்சுவல். குறைஞ்ச விலைல ப்ரோட்டீன் தயாரிக்கனுங்கறது அவரோட லட்சியம். இவர் மனைவி வில்லேஜ் பார்ட்டி . ( இந்த ரோலை யாருக்கு குடுத்தா நல்லாருக்கும்னு அசலோட ரசிகர்களே சொல்லலாம்) 

ப்ரொஃபெசர் வயசுல இருக்கிறப்ப படு கிட்டன். அப்பா , அம்மா காலி. மாமன் வீட்ல வளர்ரார். மாமன் மகளையே கட்டிக்கிறார். அவள் சரியான கட்டுப்பெட்டி. இவரோட ஸ்ரீகிருஷ்ண லீலைகளை எல்லாம் பார்த்து  பேஸ்தடிச்சிருக்கிற சமயம் கண்ணாலம் கட்டிர்ராங்க. அதனால இவுகளுக்கு ப்ரொஃபசர் மேல பயங்கர சந்தேகம். பொம்பளை கண்டக்டர் இருக்கிர வுல்வா பஸ்ல கூட ஏற விடமாட்டாய்ங்க.

முதல் ஷாட் . சன் ரைஸ். அடி வானம் சிவக்குது . யூனிவர்சிட்டி போர்டை ஜூம் பண்றோம் . அப்படியே கேமரா உள்ள போகுது . படில இருந்து ப்ரொஃபெசர் இறங்கறார். ராத்திரியெல்லாம் லேப்ல ஆராய்ச்சி பண்ணிட்டு வர்ர களைப்பு , வழுக்கை தலை வாய்ல பைப், பவர் க்ளாஸ்.  தலை குனிஞ்சுக்கிட்டு வர்ர தலை சூரிய உதயத்தை நிமிர்ந்து பார்க்கிறார். பைப்பை ஆழ உறிஞ்சு வானத்தை நோக்கி புகை விடறார். காம்பவுண்ட்ல இருக்கிற  தன்னோட காரை நோக்கி போய் அதை ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு காம்பவுண்ட்ல இருந்து வெளிய வர்ரார்.

இப்போ க்ரானைட் பதிச்ச காம்பவுண்டுக்குள்ள ஒரு  வீடு . ஒரு லேட்டஸ் ஹீரோயின் காதோரம் நரைச்ச முடியோட துளசி மாடத்தை சுத்தறாங்க.  சுத்தி முடிச்சு ஆகாயத்தை நோக்கி பார்க்கிறாங்க. யூனிவர்சிட்டி காம்பவுண்ட்ல தலை விட்ட புகை நீலமா வந்து அந்தம்மாவ சூழுது.

ஷாட் கட் பண்றோம். இப்போ கார்ல வீட்டுக்கு வர்ர அசல் அதே கெட்டப்ல இருந்தாலும் இப்போ ரொம்ப ஷார்ப்பா, யூத்தா, க்யூட்டா இருக்காரு . லேசா விசில். அப்போ வழில

அந்த ரோடு பெங்களூர் பணசங்கரி ரோட்டாயிருந்தா நல்லது . ரெண்டுபக்கமும் பச்சை பசேல் மரங்கள்(குல்மோஹரா இருந்தா ஸ்ரேஷ்டம்) புல்வெளி. டபுள் ரோட் . டிவைடர்லயும் மரங்கள். அசல் வர்ர வழில ஒரு லேட்டஸ்ட் மேக் ஜீப் நிக்குது. பேனட்ல ஒரு ஸ்வீட்டியஸ்ட் புதுவரவு. மைனஸ்  பேண்ட் தொள தொளசட்டை, பூப்போட்ட பெரிய தொப்பி, தொப்பி மேல ஒரு கோழி இறகு. அசல் வர்ர காரை நிற்க சொல்லி கைக்காட்டறா. தலையும் காரை நிறுத்தி ஸ்டைலா இறங்குது. ஜாடைலயே "என்னா"ன்னு கேட்குது. அவள் ஜீப் நின்னுபோச்சுங்கறா. தலை பேனட்டை கழட்டி எதையோ கலக்குது . இப்போ ஸ்டார்ட் பண்ணுங்குது. ஜீப் ஸ்டார்ட் ஆயிருது .

பேனட் ஸ்வீட்டி அசலோட கன்னத்துல பச்சக்குனு முத்தம் . ஷாட் கட் பண்ணா ஓப்பனிங்க் சாங்க்.

இந்த அளவுக்கு ட்ரீட் மெண்ட் கொடுத்து எழுதினா அஜீத் சாரோட ஃபேன்ஸ் தவிர யாரும் படிக்கமாட்டாங்க. ஸோ கதை சுருக்கத்தை சொல்லிர்ரன்.  இந்தியாவுலயே மோனோப்பலியா ப்ராண்டட் சிக்கன் விக்கிற கார்ப்போரேட் கம்பெனியோட முதலாளிதான் வில்லன். அவருக்கு  அஜீத்தோட ஆராய்ச்சிய பத்தி லேசு பாசா தெரியும். அஜீத் சார் மேல ஒரு கண் வச்சிருக்கான். நம்மாளுக்கு அதைபத்தி எல்லாம் தெரியாது.. தேமேனு யூனிவர்சிட்டில  வகுப்பு எடுத்தமா லேப்ல மல்லாடினோமானு இருக்கிறார்.

மனைவிக்கு தல மேல சந்தேகம் ,நீலப்புகை, பேனட் ஸ்வீட்டியோட டூயட் இதெல்லாம் படிச்சப்பவே உங்கள்ள பலபேர் இதெல்லாம் தலயோட சம்சாரம் காண்ற கனவுன்னு ஸ்பார்க் ஆகியிருக்கும்.

இந்த லிங்கை சூப்பரா உபயோகிக்கலாம். உம். அம்மா ஊருக்கு புறப்படறாங்க. வுல்வா பஸ் நகருது. அம்மா கண்ணை மூடிக்கிறாங்க. ஷாட் கட் .

வீட்டுல ப்ரொஃபசர் சார் நைட் கவுன்ல தூங்கிக்கிட்டிருக்காரு. காலிங்க் பெல் ஒலிக்குது தயிர் காரி, கீரைக்காரி, நான் ஸ்டிக் தவ்வா விக்கிறவ கூடல்லாம் பாட்டு ஒன்னு போட்டுக்கலாம்.

இந்த சினேரியால இன்னொரு அஜீத்த அறிமுகம் பண்றோம். இவர் சாப்பாட்டை வீணாக்காதிங்கன்னு பிரசாரம்  பண்றவர்.கல்யாண மண்டபம், கல்யாண மண்டபமா விசிட்டடிச்சு வீணா போக போற உணவை சேகரிச்சு சேரி மக்களுக்கு பகிர்ந்து தர்ரவர். வீணாயிட்ட உணவை சேகரிச்சு பயோ கேஸ் தயாரிக்கிறவர்.  அதுல இருந்து மின்சாரம் தயாரிக்கிறவர்.எல்லாத்துக்கும் மேல வள்ளலார் சீடர்னு வைப்போம்.

இவர் மக்களுக்கு மட்டன், சிக்கன்  சாப்பிடாதிங்கனு பண்ற நூதன  பிரச்சாரம்  வில்லனோட  வியாபாரத்தை பாதிக்குது. வில்லன் தூக்கி வந்து வார்ன் பண்றான். லேசா உடம்பு புடிச்சி விட்றாங்க. ஆன அடியெல்லாம் வாங்கிக்கிட்டு ,தலை " உன் வியாபாரத்தை பாதிக்குதுனு என் பிரச்சாரத்தை நிறுத்த சொல்றே.. நீ வியாபாரத்தை நிறுத்திரு பிரச்சாரத்துக்கே தேவையில்லே நீயே உன் வியாபாரத்துக்கு குட்பை சொல்ற மாதிரி பண்றேனு சேலஞ்ச் பண்ணிட்டு வந்துர்ரார்.

இவருக்கு ஜோடி ஜூ. விகடன் மாதிரி ஒரு பத்திரிக்கையோட ஏஜெண்ட் ப்ளஸ் சுமாரான ஸ்வீட் ஸ்டால் கம் புக்ஸ்டாலோட ஓனரோட பொண்ணு.  அந்தகாலத்து ராதிகா மாதிரி ஒரு உருப்படிய போட்டுக்கனும். கடைல உட்கார்ந்து வியாபாரத்தையும் கவனிக்குதுனு வைங்க.  தலை மேல நடந்த தாக்குதல் மீடியால ஹைலைட் ஆகுது. ஜூவிதனமான பத்திரிக்கைல அஜீத் சாரோட  பேட்டியும்  வெளிவருது. அப்போ ராதிகா தனமான ஹீரோயின் இன்ஸ்பைர் ஆகி அஜீத்தை துரத்துது. அவரோட பேட்டி வந்த பத்திரிக்கைய மக்களுக்கு இலவசமா வினியோகம் பண்ணுது.

அடுத்த  வாரம் வில்லன் எல்லா பத்திரிக்கைலயும் சிக்கன் சாப்பிடலன்னா நீ மன்சனாவே இருக்க முடியாதுன்னு  விளம்பரம்  தரான். சின்ன தலையோட லவ் எல்லா பத்திரிக்கையையும் போட்டு கொளுத்துது.

வில்லன் ஆளுங்க வந்து கடைய துவம்சம் பண்றாங்க. அஜீத் சார் வந்து அடிச்சு தூள் கிளப்பறார். "என்னப்பா நீ வள்ளலார் பார்ட்டி அன்னைக்கு துவை துவைன்னு துவைச்சோம் திருப்பி அடிக்கலே ..இப்ப மட்டும் இப்படி பின்னி எடுத்துட்டே"ங்கறாங்க. அதுக்கு தலை நேத்துதான் தர்ம சாஸ்திரத்துல படிச்சேன் "தன்னை கொல்ல வர்ர பசுவை கூட கொல்லலாமாம். நீ பன்னி தானே"ங்கறார்.


பெரிய தலை பெண்டாட்டியோட லொள்ளை மீறி லேப்லயே குடியிருந்து சீப் அண்ட் பெஸ்டா செயற்கை ப்ரோட்டீன்  கண்டுபிடிக்கிறார். அதனோட ஃபார்முலாவ கேட்டு வில்லன் கும்பல் அவரோட சம்சாரத்தை கடத்த பார்க்கறாங்க. அப்போ அகஸ்மாத்தா சின்ன தலை வந்து காப்பாத்தறார்.

அந்தம்மா ஏற்கெனவே  சந்தேக பிசாசு. இன்னம் சின்ன வயசு கெட்டப்ல தலைய பார்த்துட்டு கன்ஃபார்மே பண்ணிக்குது. லொள்ளு அதிகரிக்குது. 

ஒரு சந்தர்ப்பத்துல சின்ன அஜீத் தன் காதலியோட இருக்கிறப்ப என்ட்ரி  கொடுத்து லொள்ளு பண்றாப்லயும் வச்சிக்கலாம். இன்னொரு சந்தர்ப்பத்துல சின்ன அஜீத்தோட காதலிய வில்லன் கோஷ்டி கலாய்க்கிறப்ப ப்ரொஃபசர் தன் வாக்கிங் ஸ்டிக்ல இருக்கிற விதவிதமான ஃபெசிலிட்டீஸை பயன் படுத்து ஃபைட் பண்ற மாதிரி ( பார்ட்டிக்கு ஞா மறதி வேற இருக்கு அதையும் உபயோகிச்சி நூதனமா காமெடி டச்சோட ஒரு ஃபைட் வைக்கலாம். கைல ஒரு லேப் டாப் அதுல தன் ஆராய்ச்சிய தொடர்ந்துக்கிட்டே (வாக்கிங் ஸ்டிக்கே ஸ்டூலாயிரும், எட்ஸெட் ரா எட்ஸெட் ரா ஆயிரும்னு வைங்க) அது மேல ஏறி நின்னு கூட பேலன்ஸ் பண்ணிக்கிட்டே  சீரியசா சிந்திச்சுக்கிட்டே ஃபைட் பண்றார்.


க்ளைமேக்ஸ்ல வில்லன் கோஷ்டி ப்ரோட்டீன் ஃபார்முலா கடத்த அதை பெரியவரும்,சின்னவரும் எப்படி மீட்டுர்ராங்க. பெரிய தலையோட மனைவிக்கு சந்தேகம் எப்படி க்ளியர் ஆகுதுங்கற பாயிண்ட் மேல பில்டப் பண்ணிக்கிரனும்.

எப்படி இருக்கு கதை?

ப்ளஸ் பாயிண்ட்ஸ்:
1.எது மாதிரியும் இல்லாத புது மாதிரி கதை
2.வள்ளலாரை ஹைலைட் பண்ணிதான் எடுக்கிறோம். ஆனால் எவனோ ஒரு பன்னாடை வள்ளலாரை இன்சல்ட் பண்ணிட்டாய்ங்கனு கேஸ போடும்.படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்
3.முட்டை கோழி வளர்ப்போர் சங்கம் சர்வ நிச்சயமா ஒரு ரிட்டை போடும்.  சனம் போதுமான  எக்ஸர்சைஸ் இல்லாம மட்டனும்,சிக்கனுமா தின்னு ஹார்ட் அட்டாக்ல சாவுற இந்த கால கட்டத்துல ஒரு அபாய சங்கு ஊதின புண்ணியமும் கிடைக்கும்.
4.நாளைக்கு தலை அரசியல் கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நிக்கவேண்டி வந்தா கு.ப பாஜக  வாகிலும் சப்போர்ட் பண்ணும்
5.மாஸ் ,க்ளாஸ் ரெண்டும் மிக்ஸ் ஆகும் (யூனிவர்சிட்டி ப்ரொஃபசர் ஒரு பக்கம் , பஸ்ஸ்டாண்ட்ல  கடை  வச்சிருக்கிற பெண்ணை காதலிக்கிற சின்ன அஜீத் இன்னொரு பக்கம்.

10 comments:

  1. பைத்தியம் பிடித்து,ஒரு நாள் சட்டையை கிழித்துக்கொண்டு,தெருத்தெருவா அலைய போற.....முட்டா பயலே...உருப்படியாய்ஒரு வேலைக்கு போய் பொண்டாட்டி புள்ளைகளுக்கு நல்ல சோறும், நல்ல வாழ்க்கையும் கொடு, அதுக்கு துப்பில்லைவந்துட்டான்இந்தியாவை, திருத்தறேன், மயிர புடுங்கிறேன்னுகிட்டு ...புறம்போக்கு

    ReplyDelete
  2. ஹலோ உண்மை !
    உண்மைனு பேரை வச்சிக்கிட்டு பேரை கூட தைரியமா சொல்லமுடியாத பொய்யான பேரை வச்சிருக்கிற நீ மன்சனாயா எதாவது மிருகத்தோட பேரை சொல்லி திட்ட கூட பயமா இருக்கு . அதுக எங்கனா தூக்கு போட்டு செத்து மேனகா காந்தி கோச்சுக்கிட்டு .

    என் கெப்பாசிட்டி என்னனு தெரியுமா உனக்கு? உன்னை போய் மதிச்சு உனக்கு சரியா நான் இறங்கி பேசினேனு வை (தாளி ! இறங்கினா அதல பாதாளத்துக்கு இறங்கிருவன். தாங்கமாட்டிக) என்னை பார் ! என் பேர்,அட்ரஸ்,ஃபோன் நெம்பர் எல்லாத்தயும் கொடுத்து பேசறேன். நான் ஆம்பளை ! முக்காடு விலக்கிட்டு வா
    எனி சென்டர் ! எனி சவுக் ! நான் ரெடி .. நீ ரெடியா

    ReplyDelete
  3. உண்மை எப்பவும் சுடும்..வலிக்கும்......உனக்கு தான் வேலை இல்லை....தண்டத்துக்கு தின்னுட்டு ஊரை சுத்திகிட்டு இருக்க.....எனக்குமா அப்படி......எனக்கு வேலை இருக்கு...

    முதல்ல குடும்பத்த பாரு அப்புறம் நாட்டை பாரு.....

    வெட்டி பேச்சு பேசிகிட்டு...தண்ட சோறு சாப்பிட்டு கிட்டு எல்லோரையும் மட்டம் தட்டி பேசிகிட்டு....பெரிய மேதாவி கணக்கா உளறிகிட்டு..உலகத்திலேயே நீதான் அறிவாளி என்று கிறுக்கிகிட்டு.... ..... நீ ஏற்கனவே இந்தியாவுக்கு பாரம்....நீ போய் இந்தியாவை மாற்ற போறியா....நீ திருந்தினாலே இந்தியா முன்னேறியது போல தான்....

    ReplyDelete
  4. ஹலோ உண்மை,
    நீ இன்கம் டாக்ஸ் ஆஃபீசரா இருந்தா என் வருமானம் என்னனு தெரிஞ்சிருக்கும், வேணம்னா ஒன்னு பண்ணு நீ எந்த ஊருன்னு சொல்லு நம்ம ஃபோர்ட் நைட்லியோட எடிஷன் ஆரம்பிச்சுரலாம். நீ இப்படி இன்டர் நெட்ல உட்கார்ந்து காசை கரியாக்கிறத விட நாலு கடை ஏறி இறங்கு விளம்பரம் வாங்கு. வழக்கமா நம்ம கம்பெனில 30 சதம் தான் கமிஷன் ..உனக்கு வேணம்னா 10 சதம் போட்டு தரேன்.

    மார்க தர்சி சிட்ஸ் தெரியுமில்லே ஈ நாடு க்ரூப் கம்பெனி. அதுல ஏற்கெனவே ஒரு லட்ச ரூபா சீட்டை எடுத்து (அதுக்கு நாலு பேரு அஞ்சு இலக்க சம்பளக்காரவுக ஷ்யூரியிட்டி குடுக்கனும் ராஜா) டீஃபால்ட் இல்லாம கட்டி முடிச்சு இன்னொரு சீட்டும் போட்டு கட்டிக்கிட்டிருக்கிற "கன் பார்ட்டி" கண்ணா நானு.

    என் பேங்க் அக்கவுண்ட் ரேஞ்சு தெரியுமா உனக்கு..

    எனக்கொரு சந்தேகம் நீ என்ன விஜய் ரசிகனா ? (அஜீத் கதைய போட்டவுடனே ரேங்கறியே அதனால கேட்கிறேன்) இல்லே பஞ்ச கச்சமா?

    உன் கமெண்டை தூக்கி எறிய ரொம்ப நேரம் ஆகாது கண்ணா.. மரியாதைய காப்பாத்திக்க.. ஜீரோ க்ரைம் தெரியுமில்லே.ஆஸ் எ ரிப்போர்ட்டர் எங்க மாவட்ட எஸ்.பிய சந்திச்சு உங்க மாவட்ட எஸ்.பிக்கு சொல்ல வச்சுரவா ..

    ReplyDelete
  5. தம்பி உன்னோட வெத்து உதாரை பார்த்தா சிரிப்பு தான் வருது..... உனக்கு தான் வலை இல்லை...போலீசுக்குமா வேலைஇல்லை, அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு கண்ணா..

    உன்னை பத்தியும் உன் ஊரில் உன்னை என்ன பேசுறான், உன் தெருவில் என்ன பேசுறான்...ஏன் உன் வீட்டில் என்ன பேசுறான் எல்லாமே நான் நேரடியாக பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறேன்...நம்மகிட்ட காட்டாதே உன் மோடி மஸ்தான் வேலையை

    உன்னோட மேதாவி புத்திய நீயே தற்பெருமை பேசாமா கொஞ்சம் கண்ணை திறந்து பாரு.....

    எவனாவது ஒருத்தனாவது உனக்கு கமெண்ட் போடுரானா.....திட்டி போடுறவன தவிர்த்து.......உனக்கே வெட்கமா இல்லை

    நீ ஒரு சைக்கோ ....புத்தி சுவாதீனம் இல்லாதவன்.....முதல்ல ஒரு நல்ல மருத்துவரை பாரு

    நான் விஜய் ரசிகனும் இல்லை, அஜித் ரசிகனும் இல்லை.....சினிமா பின்னாடி ஓடுற முட்டாளும் இல்லை...நீ எவனுக்கு கதை எழுதினாலும் அதைபத்தி எனக்கு கவலையும் இல்லை.

    அவனவன் வலைப்பதிவை பொழுதுபோக்கா எழுதிகிட்டு இருக்கான்....ஆனா உனக்கு பொழப்பே இதுதான் போல இருக்கு

    உன்னைப்போல டுபாக்கூரு வெட்டி பசங்களுக்கு நேரத்தை வீணடித்து கமெண்ட்போடுரதே ஒரு கேவலம்

    நாய் வால் நிமிராது....உன் புத்தி மாறாது

    மாத்திக்கோ....

    ReplyDelete
  6. ஹலோ உண்மை..
    என்னதான் நீ அன்னானிமஸ் கமெண்ட் போட்டு அனல் காட்டினாலும் ஐ.பி. நெம்பரை ட்ரேஸ் அவுட் பண்ணியாச்சு. உனக்கு ஆப்புதான் ..ஆனாலும் உன் லேட்டஸ்ட் கமெண்ட் சூப்பர்மா. கேள்வியே கேட்காம களிதான்..

    ReplyDelete
  7. பெரும்பாலானோர் இந்த கனடா அஜித் ரஸிகன் என்று நினைக்கின்ற்னர். ஆனால் அது மிக தவறு. கனடா எல்லோரையும் ரசிப்பான் ஆனால் நான் தான் உங்கள் தலைவன், அடுத்த ஸூப்பர் ஸ்டார் நான் தான் என்று மொக்கையை போட்டால் போடா வெண்ணெய் என்று இந்த கனடா போய் விடுவான். இப்போது அஜித்தை கலாசும் கமன்டுகளை படித்து ரசியுங்கள்!
    பில்லா படம் என் படம் அல்ல்,ரஜினியை காப்பியடித்து எடுக்கபட்டது.என் படங்கள் எப்போதும் எனக்காக ஓடியதில்லை, பில்லவையும் ரஜினி பேரை வைத்து ஓட்டி வெடலாம் என்று முடிவெடுத்துள்ளேம்.முன்பு போல இறுமாப்பாகவும், பந்தாவாகவும் இல்லாமல் படு ரிலாக்ஸ்டாக், நிதானமாக செய்தியாளர்களிடம் பேசினார் புத்தம் புது அஜீத்.சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடித்து பெரும் வெற்றி பெற்ற பில்லா படத்தை எனது பாணியில் வெட்கமேயில்லாமல் ஈ அடிச்சான் காப்பியாக கொடுக்க முயன்றுள்ளோம்.முன்பு எல்லாம் பயந்து மறைமுகமாக காப்பி அடிப்பேன், இப்படத்தில் வெளிப்படையாகவே காப்பியடித்துள்ளேன்.பில்லா இன்னும் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தில் உள்ளது.அதனால் பழைய பில்லாவை வைத்து இந்த படத்தை எப்படியாவுது ஓட்ட தீர்மானித்துள்ளோம்.பில்லா -2007, ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான டான் படத்தின் காப்பி என பலரும் கூறுகிறார்கள்.ஆனால் அது உண்மையல்ல்.ரஜினி சாரின் பில்லாவைத்தான் காப்பியடித்து செய்துள்ளோம்.3 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு ரீமேக் ஐடியா இருந்தது. ரீமேக் படத்தில் நடிப்பதாக இருந்தால் பில்லாவில் நடித்து சொதப்புவது என்ற முடிவில் இருந்தேன்.நேராக ரஜினி சாரிடம் சென்றேன். அவரிடம் நீங்களாக ஒத்துக் கொள்கிறீர்களா? இல்லை நான் வழக்கம்போல திருட்டுத்தனமாக காப்பியடிக்கவா? என்றேன். அவரும் பயந்து ஒப்புதல் கொடுத்தார். பிற்குதான் நடிக்க முடிவு செய்தேன்.முன்பு எல்லாம் அடுத்த ஸூப்பர் ஸ்டார் நான் தான், அந்த பதவி எனக்கு வேண்டும் என்று லூஸுத்தனமாக புலம்பிக் கொண்டிருப்பேன்.ஆனால் இப்போது ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான் இருக்க முடியும். அது ரஜினி சார்தான் என்று புரிந்துக்கொண்டேன்!விஜய் ஒரு வெத்து வேட்டு.நான் வரலாறு படத்தை காசு கொடுத்து ஓட்டியது போல்,அவர் ஒவ்ஒரு படத்தையும் ஓட்டுகிறார்.எனக்கு வயதாகிவிட்டது. முன்பு போல் பட பட வென்று பேச முடியவில்லை.வாய் கோணிக்கொள்கிறது.இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் என்னை வந்து சந்தித்தால், இதை விட இன்னும் கோணிய வாயுடன் இருப்பேன்.நயனதாரா, நமீதா இறுவறும் நல்ல குலுக்கல் நடிகைகள்.

    ReplyDelete
  8. அஜீத்தின் பில்லா படத்திற்காக சுரேஷ் கோபி நடித்துள்ள மொக்கை படமான பூட் மலையாளப் படத்தை லேட்டாக ரிலீஸ் செய்ய பிரமீட் சாய்மீரா நிறுவனம் தீர்மானித்துள்ளது.அஜீத் படத்தை எப்படியும் ஹிட்டாக்கி விட வேண்டும் என்று சாய்மீரா கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற்து!என்ன தான் பிரம்மப்பிரயத்தனம் செய்தாலும்,மொக்கை படங்கள் கூட அஜீத் படத்தை விட நன்றாக இருந்து விடுவதால் அவைகளை ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து தொலைக்க வேண்டியுள்ளது!ஒரே நேரத்தில் பில்லாவையும், பூட்டையும் வெளியிட்டால் எங்கே பூட் செம ஓட்டம் ஓடி பில்லா தியேட்டரை விட்டு ஓடி விட்டால் சரியாக இருக்காது என்பதால்தான் முதலில் பில்லாவையும், பிற்கு பூட்டையும் வெளியிடத் தீர்மானித்ததாம் பிரமீட்.இவ்வளவு செய்தும் மகனே இன்னும் படம் சரியாக ஓடாவிட்டால் மகனே உனக்கு ஆப்பு தான்டீ என்று பிரமிட் சாய்மீரா அஜீத்திற்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளது!அஜீத் என்ன செய்வது ஏது செய்வது என்று தெறியாமல் முழி பிதுங்கி நிற்கின்றார் என்று கேள்வி.!for more visit canadathatstamil.blogspot.com

    ReplyDelete
  9. பில்லாவுக்கு கேரளாவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது!குஷ்பூவிற்கு ஏற்பட்டது போல் அஜீத்துக்கும் மல்ச்சிக்கலா? என்று நீங்கள் பதற வேண்டாம்.அஜீத்தின் பில்லா படத்துக்கு தான் சிக்கல்.அப்படத்தின் சுருள்களை யாரோ இழுத்து கந்தளாக்கியுள்ளனர் இதனால் படச் சுருள்கள் சிக்கல்களுடன் பின்னி பினைந்துள்ளது!இதனால் படத்தை திரையிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது!காட்சிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கிற்தாம்.ஒரு காட்சியில் அஜீத் "தண்ணீர் ஊற்றி வளர நான் வீட்டு செடியில்லை" என்று கூறுகிறார்.உடனே அடுத்து நமீதாவுடன் வந்து "என்னை வள்ர்த்ததே இந்த நாட்டு சரக்கும் ஸைடுல ஊறுகாயும் தான்" என்கிறார்.படத்தின் இந்த நிலைக்கு விஜய் தான் காரணம்,அவருடைய அழகிய தமிழ் மகன் படம் ஓட வேண்டும் என்று தான் ராவோடு ராவாக வந்து படச்சுருளை இழுத்து நாசப்படுத்தி விட்டார் என்று அஜீத் குற்ற்ம் சாட்டுகிறார்.ஆனால் விஜயோ,"என் படம் ஓட நான் என் கையை மட்டுமே நம்புகிறேன்.என் படத்தை நான் ஞாயாயமாக காசுக் கொடுத்தே ஓட்டுகிறேன்,அஜீத் படத்தை கெடுப்பதில்லை.எனக்கு என்னமோ அஜீத்திற்கே தன்னுடைய முந்தைய படங்கள் போல வழக்கம்போல இந்த படமும் ஒடாதோ என்று ச்ந்தேகம் வந்து,தானே இந்த சில்மிஷ்த்தை செஞ்சுட்டு இப்படியானதால தான் படம் ஓடலே என்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் இதை செய்திருப்பாரோ என்று கூறினார்.இருவர் கூறுவதும் யதார்த்தம் தான் என்றாலும்,யார் கூறுவது உண்மை என்று காலம் தான் பதில் சொல்லும்!

    ReplyDelete
  10. குசேலன் விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு டன் கணக்கில் அல்வாக் கொடுத்து திகட்ட வைத்ததால் ரஜினி தமிழ்நாட்டு வீதிகளில் எதிலும் படப்பிடிப்பு நடத்தி அதன் மூலம் தனக்கு தர்மஅடி கிடைத்துவிடுமோ என்ற பயத்தால் முழுக்க ஹாலிவுட்டில் அதன் ஸ்டூடியோ வாசலில் உள்ளே நடக்கும் படப்பிடிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் தங்கள் போக்கில் தாங்களும் படப்பிடிப்பு நடத்தி தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளின் வீதிகளில் படப்பிடிப்பு துவங்குகிறது ரஜினியின் இயந்திரன்-தி ரோபோ என்கிற மொக்கைப் படம். இந்தப் படத்தில் பணியாற்றும் பல கலைஞர்கள் ஹாலிவுட் படங்களில் எக்ஸ்டிராகள் ஆகா இருந்தவர்கள். இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற படங்களின் தழுவலாக ரோபோ உள்ளதால் அந்த படத்தில் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட் வடிவமைத்து அந்த நடிகர்கள் கழட்டிப்போட்ட காஸ்டியூம்களையே ரோபோவின் காஸ்ட்யூமாகப் பயன்படுத்துள்ளனர். இதற்கு இந்திய காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் தனது காப்பியடிக்கும் திறமையை வெளிக்காட்ட களமிறங்குகிறார்! ஹாலிவுட்டின் ஸ்டூடியோக்களின் வாசலிலேயே தான் காப்பியடிக்கும் சீன்களின் டீ.வி.டீகளை போட்டுப்பார்த்து அதன்படி எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமாக நவரசங்களையும் பிழிந்து சாரெடுத்துத் தர உள்ளானர் கிழ் போல்டு ரஜினியும் முன்னாள் உலக அழாகி இந்நாள் உள்ளூர் கிழவி ஐஸ்வர்யா ராயும்! ஹாலிவுட்டின் எந்தப் படத்தைப் பார்த்து ரோபோ தயாராகிறது என்று கண்டேபிடிக்க முடியாதபடி சவால் விடும் வகையில் பல படங்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் அருண்பாண்டியன் (முன்னாட்களில் அக்க்ஷன் படங்களில் வருகிறேன் பேர்வழி என்று மலைக்கு மேலே வைரம் அதை தன் அஜ புஜ பலத்தை காட்டி மீட்கிறேன் என்று பயமுறுத்திய அதே அருண்பாண்டியன் தான்! இப்போது டீசண்டாக அடங்கி ஒடங்கி தயாரிப்புடன் தன் கலை சேவையை முடித்துக் கொள்கிறார்!)

    ReplyDelete