Monday, December 7, 2009

பாலியல் தொழிலுக்கு அனுமதியால் கிட்டும் பயன்கள்

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதலால் நன்மைகள்
1. நாளிதுவரை பாலியல் தொழிலில் உள்ளோரின் இழி நிலை மாறும். அவரை நாடுவோர் நிலையும் மாறும். க்வாலிட்டி சர்வீஸ் !

2.அவர்கள் ஈட்டும்  பணம் அவர்களையே சேரும். இப்போது நடப்பது போல் போலீஸ் மாமாக்கள், போலி டாக்டர்கள் ,வாய்தா வக்கீல்கள் , மாமாப்பயல்களை சேரா.

3.அவர்தம் உடல் நலம் காக்கப்படும். ( நாடுவோர் நலமும் நாடப்படும்) இன்ஷியூரன்ஸ் துறையும் செழிக்கும். அவர் தம் சேமிப்பு பெருகும். மறைமுகமாக அரசின் நலதிட்டங்களுக்கும் நிதி கிடைக்கும். (குடலை அரிக்கும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் நிதியை விட மக்களிலான மிருகத்தை விலங்கிடும் இந்த தொழில் மூலம் கிட்டும் பணம் நாணயமானதே

4.சிறப்புபயிற்சி அளிக்கப்பட்டால் நோய் தடுப்பு, எய்ட்ஸ் கண்ட்ரோல் சாத்தியம். மேலும் செக்ஸ் கல்வியும் (ப்ராக்டிக்கல்ஸ்) சாத்தியமே

5.ஆண் பெண் நட்பிலான பெரும் தடைக்கல்லாக இருக்கும் உடலியல் ஈர்ப்பு மாயமாகும். ( மூத்திரம் முட்டும்போது எப்படி இயல்பாக பழக மூடியாதோ அதைவிட வீரியம் புரளும்போது பெண் நட்பு சாத்தியமே அல்ல. சாத்தியமானால் அது இரட்டை வேடம். மன நோய்க்கே வழி வகுக்கும்)

6. திருமணங்கள் மேலும் தாமதிக்கும். சனத்தொகை குறையும்.

7. அதே சமயத்தில் சுய இன்பம் (கொரில்லாவிடமிருந்து வந்த பழக்கம் இது) ஓரினப்புணர்ச்சி, கள்ள உறவுகள்  இத்யாதி குறையும்

8.உடலுறவு சாத்தியமில்லை என்ற ஒரே காரணத்தால் சிதறிவிடக்கூடிய திருமண உறவுகள் தொடரும்

9.வெறுமனே உடலுறவுக்காக மணமுடிக்கும் பேர்வழிகள் திருமண நிறுவனத்துக்குள் வாரார்

10.வன் முறை குறையும் (உள்ளடக்கிய காமமே வன்முறையாகிறது)

11. நாடு கடந்த தீவிரவாதத்துக்கும், உள் நாட்டு தீவிரவாதம், கள்ளக்கடத்தல் இத்யாதிக்கு ஆள் பிடிப்பது கஷ்டமாகிவிடும். ( மனிதன் என்ன செய்தாலும் அதற்கு அவனை ஊக்குவது கொல்லனும், கொல்லப்படனும் என்ற 2 கோரிக்கைகளே. அவை செக்ஸில் நிறைவேற கூடியவை. எனவே அவன் செக்ஸிலேயே சாவான் (!), கொல்லுவான்

12. குற்றவாளிகள், தீவிரவாதிகள் பாலியல் தொழிலாளர்களை நாடும்போது அவர்கள் குறித்த தகவல்கள் அரசை எட்ட வாய்ப்பு. ( வாராந்திர மருத்துவ பரிசோதனை, இலவச சிகிச்சையின் போது )
13.வரதட்சிணை கொடுமை ஒழியும் ( உனக்கு வ.தட்சிணை வேணம்னா ஒரு வருசம் ஒர்க் பண்ணா போதும் என்று மிரட்ட முடியும்)

14.ஆண் பெண் சமம் என்ற நிலை ஏற்படும். ஆண்கள் மடி வற்றிய மாடுகளாய், காயடிக்கப்பட்ட நாய்களாய் திரிவர். பெண் அச்சமின்றி சாலையில் நடக்க முடியும்
15.லாக்கப் டெத், என் கவுண்டர் கூட குறையும் ( போலீசாரும் அவர்களை நாட வாய்ப்பிருப்பதால்)
16. திருமணத்துக்கு பின் நட்புகள் முறியா ( வந்தவன் என்னை ஏன் பார்க்கனும் என்ற மனைவியரின் புகார்கள் காரணமாய்)
17.
மக்கள் முக்கியமாய் இளைஞர்கள் இன்னும் ஒரு சுகத்தையும் காணலை எதிர்காலத்லயாவது எதுனா கிடைக்குமோ என்னவோ என்று அடங்கி வாழும் நிலை மாறும். "அது " இவ்ளதானா என்ற எண்ணம் துணிச்சலை தரும்.


17. மனதின் இரட்டை வேடம் முடிவுக்கு வந்து சுதந்திர பாவம் பெருகும், மனம் குவிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்

18.கூட்டுக்குடும்பங்கள் சிதறாது. உடலுறவுக்கான வாய்ப்புகள் / அதன் தரம்/ அதன் ஆழம் பாதிக்கப்படும்போது குடும்பங்கள். சிதறுகின்றன‌

19. கட்சிகள் உடையா .. (கர்னாடகாவில் போல்)

20 ஆட்சிகள் கவிழா ( ஆந்திரத்தில் போல்)

21.அரசியலி அந்தப்புற  பெண்களின்  என்ட்ரி தடுக்கப்படும் உம்; ஜெயலலிதா, மாயாவதி

13 comments:

  1. :)), good one! எல்லாமே இதனை சட்ட பூர்வமாக்குதுவதின் மூலம் கூறியபடியே சாத்தியப் படக் கூடியதுதான்... நன்றி!

    ReplyDelete
  2. சுய இன்பம் கொரில்லாவிடமிருந்து வந்ததா ? அரிய கண்டுபிடிப்பு !

    ReplyDelete
  3. தெகா அவர்களே,
    நன்றி.அதை சட்டப்பூர்வமாக்கத்தானே குரல் கொடுத்து வருகிறேன். அது மட்டும் சாத்தியமானால் "கிளப்பி" விடுகிற சேனல்கள், "அதுக்கு " ஆள் பிடிக்கவே வாங்கும் டூ வீலர்கள் , ஜீன், டீ ஷர்ட் வியாபாரமெல்லாம் படுத்துவிடும். அன்பு மணி சொன்ன டொபோக்கோ மாஃபியாவைவிட மோசமான மாஃபியாவுக்கு எதிராய்தான் குரல் கொடுத்து வருகிறேன். இதை அமல் படுத்த தேவை சற்றே மாற்றி யோசிக்கும் தம். மனிதம்

    ReplyDelete
  4. ராஜன் ராதாமணாளன் அவர்களே,
    இது என் கண்டுபிடிப்பல்ல. உயிரியல் சத்தியம். பல்வேறு விஞ்ஞானிகள் கூ
    றியதை தான் கோட் செய்திருக்கிறேன்

    ReplyDelete
  5. good post.I think politicians will not allow it.If they allow, they will not get 'dieing madly' followers.

    ReplyDelete
  6. மிகவும் அருமையான திட்டம் ! தங்களைப்போன்ற பெரிய மனது உடையவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டால், காமத்தால் துன்புறும் பெண்களும் பயனடைவர்.
    ஆண் தொழிலாளர்களால் கிடைக்கும் நன்மைகளையும் இதுபோன்றே பட்டியலிட முடிந்தால் மிக்க நன்றி !!

    ReplyDelete
  7. அது சரி, 'ஏசு அழைக்கிறார்...' மாதிரி ஒரு போஸ் !!!!!! ஏன் ?
    :)

    ReplyDelete
  8. Dear Mr Kailash,
    You r the only person who got /catch the actual point. One who haves uninterrupted sex he will not become a slave to any father, any priest, or any Mulla or any any of a leader

    ReplyDelete
  9. நானும் கடவுளும் அவர்களே,
    தங்கள் மறுமொழி நக்கலா .. சீரியஸா புரியவில்லை. என்றாலும் சீரியஸாகவே எடுத்துக்கொண்டு பதிலளிக்கிறேன்.

    //மிகவும் அருமையான திட்டம்//

    இதில் திட்டம் என்ன வாழ்கிறது. சைக்கிள் வழக்கத்துக்கு வந்தபோது அதற்கு ஆயிரம் ரூல் இருந்தது. ஆரம்பத்தில் டி.வி.எஸ் , ஹீரோ மெஜஸ்டிக் போன்ற வாகன‌ங்களுக்கு கூட ஆர்.சி.,ட்ரைவிங் லைசென்ஸ் எல்லாம் மஸ்ட் அண்ட் ஷுட் ஆக இருந்தது இப்போ என்னாச்சு. நான் ஏதும் திட்டத்தை முன் மொழியவில்லை. ஒரே டிமாண்ட் பாலியல் தொழிலுக்கு லைசென்ஸ் வழங்குதல் தட்ஸ் ஆல். மற்றதெல்லாம் தானே நடக்கும்,


    //தங்களைப்போன்ற பெரிய மனது உடையவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டால்,//
    இத்தொழிலில் ஈடுபட வேண்டிய அவசியமோ (இதை எல்லாம் ஒழுங்கா பார்த்து தாண்டி வந்தாச்சுங்கோவ்) , தகுதியோ (மானசிகமாக இது நான் கடந்து வந்துவிட்ட ஒரு பஸ் ஸ்டாப் ) எனக்கு கிடையாது. நான் செய்யக்கூடியது , செய்ய வேண்டியது செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை ஒழித்து கட்டுவது, மக்களுக்குள்ள குற்றமனப்பான்மையை வானிஷ் செய்வது
    செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சியை ஊட்டி அதை தாண்டி வரும்படி செய்தல்.
    //காமத்தால் துன்புறும் பெண்களும் பயனடைவர்.//

    பெண்ணுக்கு காமம் என்பது இரண்டாம் பட்சம் தான். அவளது முழு முதல் தேவை அன்பு. காமம் தான் முக்கியம் என்றால் குடி கார நாய்கள், சூதாடி பொறுக்கிகளை கட்டிக்கொண்டு அல்லாட வேண்டிய அவசியமில்லை. மேலும் ஒரு வைபரேட்டர் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும். எந்த ஆண்பிள்ளை சிங்கத்தை விடவும்.

    இந்த சப்ஜெக்டில் நான் தொடர் பதிவுகள் போட காரணம். என் லட்சியம் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற யூத்தை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி அனைத்து நதிகளையும் கால்வாய்கள் மூலம் இணைத்தலே. அவர்களின் இளமை, டைம், எனர்ஜி, மைண்ட் பவர் , பணம் எல்லாம் இந்த உதவாக்கரை விசயத்தால் விரயமாக போகிறதே அதை ரீ சேனலைஸ் பண்ணலாமே என்ற நல்லெண்ணம் தான்.

    மேலும் அனைத்து வயதினரும் இந்த ஒரு விசயத்தால் துன்பத்தில் வாழ்ந்து, பிறரையும் துன்புறுத்தி, மனதை சிதறவிட்டு, எதிலும் மனம் குவிக்க முடியாது அரை குறை வாழ்வை வாழ்ந்து நாட்டையும் நலிய விடுவதை கண்டே இந்த தொடர்பதிவுகள்

    //ஆண் தொழிலாளர்களால் கிடைக்கும் நன்மைகளையும் இதுபோன்றே பட்டியலிட முடிந்தால் மிக்க நன்றி !!//

    நல்ல யோசனை. விரைவில் இந்த விசயம் பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன்.

    மறுமொழிக்கு நன்றி

    ReplyDelete
  10. கோ.வி.கண்ணன் அவர்களே,
    மனோ ரஞ்சித பூ என்று ஒன்றுள்ளதாம். அதை எந்த பூவை நினைந்து முகர்ந்தால் அந்த வாசம் வீசுமாம். அது போல் நாம் பார்க்கும் எதுவும் எதையும் நினைவுறுத்தும் நம் எண்ணத்துக்கேற்றபடி. (உங்க எண்ணம் அந்த ரேஞ்சுக்கு உயர்ந்திருக்குங்கண்ணா, இங்கே அந்த ரேஞ்சுக்கெல்லாம் ப்ளான் இல்லிங்கண்ணா.. ஏசு அழைச்சா என்ன அழைக்காட்டி என்ன ஏசுவோட தொடர்பே இல்லாம மனிதன் தெய்வமாகலாமே ரெஃப்: மனிதன் என்பவன் தெய்வமாகலாம‌ )

    மொத்தத்துல வில்லங்கத்துல மாட்டிவிடறதா முடிவு பண்ணிட்டிங்க. அந்த ஹெடர் இமேஜை டிசைன் பண்ணினதோட நோக்கமே வேற. அதுல பெரிய தத்துவமே ஒளிஞ்சிருக்காக்கும். ஏசு அழைக்கிறார்ல தான் இது மாதிரி ஃபோஸ் கொடுக்கனுமா என்ன ? வாழ்க்கை அழைக்கிறது ! உண்மை அழைக்கிறது ! என்று பேசும்போதும் அந்த ஃபோஸ் கொடுக்கலாமில்லிங்களா !

    ReplyDelete
  11. நல்ல யோசனை.....

    ReplyDelete
  12. மகா அவர்களே,
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  13. இந்த கட்டுரைக்கு பின்புலமாக இருக்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியதே !
    ஆனாலும் கட்டுரை ஒருதலை பட்சமாக அமைந்ததை சுட்டிக்காட்டவே, நக்கல் கலந்த விமர்சனம் தேவைப்பட்டது.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete