Saturday, December 5, 2009

தி புக் ஆஃப் சீக்ரெட்

குற்றமும் தண்டனையும்
இறைவனின் ஐபிசி
தி புக் ஆஃப் சீக்ரெட்
நியாய தீர்ப்பு
பொயட்டிக் ஜ‌ஸ்டிஸ்
இப்படி ஆயிரம் பெயர்களை சொல்லலாம். ஆனால் விசயம் ஒன்றே. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் தீரனும். இது ஏதோ பஞ்சக்கச்சங்கள் பரிமாறும் ஏட்டுச்சுரைக்காய் என்று நினைத்துவிடாதீர்கள் . 1987 முதல் நாளிதுவரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலன் இது

இனி இறைவனின் ஐ.பி.சியை பார்ப்போம்:
1.அப்பாவுக்கு சோறு போடாதவன், பஞ்சாயத்து முனிசிபாலிட்டி நிதியை கொள்ளையடித்தவன், நிலமகளின் முலையென தோன்றும் மலைகளை வெட்டி மொட்டை போட்டவன், மலை சாதி மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் இவனுக்கெல்லாம் தண்டனை

எலும்பு முறிவு, மண்டை பிளத்தல், முதுகெலும்பு முறிதல், கண் பறி போதல்,  நிற்க கூரையில்லாது போதல். இந்த தண்டனைகளை வழங்குபவர் சூரியன்

2.அம்மாவுக்கு சோறு போடாதவன், அம்மா வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் , ஏரி குளம் ஆக்கிரமித்தவன், சாக்கடையை நீர் நிலையில் கலந்தவன், வருணாசிரம தர்மப்படி ( குறுக்கு புத்தியின்றி) நியாயமான வழியில் பொருள்  தேடும் வியாபாரியின்  குடும்பத்து பெண்ணை சீரழித்தவன், ஊர் பெரிய மனிதர்களின் மனைவி மாருடன் கள்ள உறவு வைத்தவன் , அடுத்தவன் நிலத்துக்கு பாசனம் கிடைக்காது செய்தவன் இவனுக்கெல்லாம் தண்டனை

நுரையீரல் அழுகுதல், பைத்தியம் பிடித்தல், கிட்னி ஃபெயிலியர், பெரிய மனிதர்களின் மனைவி மாரின் சதிக்கு பலியாதல், வைசிய பெண்டிரால் அழிதல், ஸ்வப்ன ஸ்கலிதம், உடம்பில் நீர் பிடித்தல், அடங்கா தாகம் இந்த தண்டனைகளை வழங்குபவர் சந்திரன்

3.அண்ணன் தம்பி வாயடித்தவன், ஊர் பொது நிலத்தை, ஊர் சொத்தை ஆக்கிரமித்தவன், எரிபொருள் ( பெட்ரோல், டீசல், கேஸ் இத்யாதி)  தொழிலில்  மக்களை ஏமாற்றியவன், ஆள் வைத்து அடித்தவன், ஆயுதம் தாங்கி பிறரை காயப்படுத்தியவன், கொலை செய்தவன், தானமாய் தந்த ரத்தத்தை விற்றவன்,காவல், ராணுவம், ரயில்வே  துறையில் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்தவன், மின்சாரம் திருடியவன் இவனுக்கெல்லாம் தண்டனை

அண்ணன் தம்பியால் சாவு, ஆயுதங்களால் கண்டம், நோய் எதிர்ப்பு சக்தி பூஜ்ஜியமாகி கண்ட வியாதிக்குட்படுதல் ( வேறென்ன எயிட்ஸ்தான்) ரத்தம் கெட்டு சொறி சிரங்கு, கட்டிகள், உள்ளங்கை, உள்ளங்காலில் எரிச்சல், ரத்தவாந்தி, ரத்த பேதி, வெடி குண்டு தாக்குதல், மின்சாரம் தாக்கிசாவு, லாக்கப் டெத், என் கவுண்டர்

4.சினிமா,லாட்டரி, சாராயம் (டாஸ்மாக்) சூதாட்டம், இத்யாதியில் மக்களை மோசடி செய்தவன், பிறருக்கு விசம் வைத்தவன், கலப்படம் மூலம் மக்கள் உயிருக்கு உலை வைத்தவன், வெளி நாடு அனுப்புகிறேன் என்று ஏமாற்றியவன், பாம்புகளை கொன்றவன், சதி செய்தவன், ப்ளாக் மேஜிக் செய்து மக்களை வதைத்தவன் , டூப்ளிக்கேட் சரக்கு விற்றவன், டூப்ளிகேட் டாக்குமெண்ட் தயாரித்தவன், கள்ளக்கையெழுத்து போட்டவன் கள்ளக்கடத்தல் செய்பவன் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரிப்பவன், பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவன், வெளி நாட்டினரிடம் பணம் பிடுங்கும் கைட், டாக்ஸிகாரன் இவனெல்லாம் /

இடுப்புக்கு கீழ் பாகத்தில் வைத்தியர்களுக்கே புரிபடாத, குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு, பலகீனங்கள், வலிகளுக்கு உள்ளாதல்.விஷ ஆகாரம் தின்று உயிரிழத்தல் , சினிமா , லாட்டரி, சாராய தொழில்களிலேயே போண்டியாதல். முன் பின் தெரியாத, கருப்பு நிற , காக்கை போன்ற ஓரப்பார்வை கொண்ட நபரால் நாசமாதல், வெளி நாடுகளில் சிறைப்படுதல், பாம்பு போன்று மறைந்து வாழ்தல் இத்யாதி தண்டனைகளை அனுபவிப்பான் . இந்த தண்டனைகளை வழங்குபவர் ராகு.

5.கல்யாணத்தை கெடுத்தவன் ( நிறுத்தியவன்), பணம், தங்கம் கொள்ளையடித்தவன். பார்ப்பனீயம் என்று குறிப்பிடப்படும்  குறுக்கு புத்தி,  சாதி அகங்காரம் அற்று உலக நலமே தம் நலமாய் கருதி வாழும் பார்ப்பனர்களை இம்சித்தவன், அவர் தம் சொத்துக்களை கொள்ளையடித்தவன், கோவில் பணத்தை கையாடி, திருட்டு கணக்கு எழுதியவன், அரசியலில் இறங்கி அப்பாவி வாக்காளர்களை நட்டாற்றில் விட்டவன், பத்து வட்டி, இருபது  வட்டி வாங்குபவன், கடவுள் பேர் சொல்லி ஆன்மீகம் பேர் சொல்லி பொருள் சேர்த்து ஆடம்பர வாழ்வு வாழ்பவன், சேவை நிறுவனம் வைத்து  அரசு, வெளி நாட்டு நிறுவனங்கள் தரும் நிதிகளை சுரண்டுபவன் , நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்பவன், தவறான தீர்ப்பு வழங்குபவன் இவனெல்லாம்
வாரிசின்றி போவான்,,வாரிசு  இருந்தாலும் அது உருப்படாது போகும், அல்லது அற்பாயுளில் மடியும். கிலோ கிலோவாய் தங்கம் கொள்ளை போகும் . கோடிகள் இருந்தாலும் வீட்டில் கெட்டி மேளம் கொட்டாது. கொட்டினாலும் விரைவில் பறை முழங்கும். ஹார்ட் அட்டாக் வரும், வயிற்றில் வியாதி வரும். செவிடு ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பான்.
இந்த தண்டனைகளை வழங்குபவர் குரு

6.வேலைக்காரனுக்கு சம்பளம் தராதவன், தொழிலாளி சம்பளத்தை குறைத்து தந்து சுருட்டுபவன், இரும்பு, எண்ணெய் வித்துக்கள் , சுரங்கம், க்ரூட் ஆயில், குவாரி, தொழிற்சாலைகள் வைத்து எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காது சுற்றுச்சூழலை நாசமாக்குபவன் . குடித்தனக்காரனுக்கு கழிவறை வசதி செய்யாத வீட்டுக்காரன், மாணவர்களுக்கு கழிவறை கட்டித்தராத பள்ளி, கல்லூரி நிர்வாகி தொண்டு கிழவன், நொண்டியை கொடுமை படுத்துபவன், தாழ்த்தப்பட்ட மக்களை சுரண்டுபவன் இவனுக்கெல்லாம்

நரம்பு தளர்ச்சி வரும், பைல்ஸ் வரும், கடுமையான மலச்சிக்கல் வரும். வாரத்துக்கொருதரம் டாக்டர் கரண்டி போட்டு சுரண்டி எடுக்குமத்தனை கொடூரமாக இருக்கும். கிழ‌வியை/கிழவனை மணக்க வேண்டி வரும். இவன் மனைவியை வேலைக்காரன் அனுபவிப்பான். இவன் வேலைக்காரியிடன் அடிமையாவான்.இந்த தண்டனைகளை வழங்குபவர் சனி

7.போலி வைத்தியன், நோயாளியை கொள்ளயடிக்கும் கார்ப்போரேட் ஆஸ்பத்திரி நிர்வாகி, கோள் மூட்டுபவன்,தவறான செய்தியை வெளியிடும் நிருபன்,ஆசிரியன், பிரசுரகர்த்தன், பொய கணக்கு எழுதும் கணக்கு பிள்ளை, பொய்யான கணக்கை சர்ட்டிஃபை செய்யும் ஆடிட்டன்,  ஜோதிடம் தெரியாமலே தெரிந்ததாய் காட்டி ஏமாற்றுபவன், வியாபாரிகளை மிரட்டி சுரண்டும் குண்டன் சாலகளை மறிப்பவன், ஆக்கிரமிப்பவன், செல் போன் திருடுபவன், ஊரார் வீட்டு போனில் எஸ்.டி.டி களாய் போட்டு தள்ளும் டெலிஃபோன்ஸ் ஊழியன், காதலியிடம்  தூதனுப்பினால் அவளை அனுபவிக்க திட்டமிடுபவன், தாய் மாமனை நோகடிப்பவன், ஊரான் மெயிலை, ப்ளாகை , சைட்டை ஹேக் செய்பவன், ஊரான் பதிவை காப்பியடித்து கட் பேஸ்ட் செய்பவன், எழுத்தாளனுக்கு ராயல்ட்டி/சன்மானம்  கொடுக்காத பப்ளிஷன். சர்க்குலேஷன் உயர  எந்த அண்டர்வேர் பாவாடைக்குள்ளும் நுழைய தயாராக உள்ள பப்ளிஷன் இவனுக்கெல்லாம்

குஷ்ட ரோகம் வரும், விரை வாதம் வரும் (பெண்ணானால் ஓவரி நாஸ்தி) தோல் வியாதி வரும், விரை நசுங்கும், ப்ரோக்கர்களை நம்பி கோடிகளில் ஏமாறுவான். புற உலக தொடர்பற்று தவிப்பான். பைத்தியம் கூட பிடிக்கும்

இந்த தண்டனைகளை வழங்குபவர் புதன்.

8.உண்மையான சாமியார்களை, அன்னக்காவடிகளை, இதர மதத்தவரை நோகடிப்பவன், மந்திரம் தந்திரம் செய்து மக்களை திகிலுக்குள்ளாக்குபவன், அடுத்தவர் வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்துபவன் தாய் வழி தாத்தா பாட்டியை பட்டினி போடுபவன், வெளி நாட்டினரை ஏமாற்றுபவன்,போலி சாமியார், போலி தத்துவவாதி இவனுக்கெல்லாம்

உடலெல்லாம் புண்ணாகும், ரத்தமே விசமாகும். பசி பட்டினியால் பாம்பு போல் நெளிவான். புதைகுழிக்குள் வாழ்வான்.  கேன்சர் வரலாம். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு, சுடுகாட்டுக்கு அடிக்கடி போக வேண்டிவரும்
இந்த தண்டனைகளை வழங்குபவர் கேது.

9.ஊரில் உள்ளவளையெல்லாம் அனுபவிக்க துடிப்பவன், பெண்கள் குளிக்கும்போது, உடை மாற்றும்போது திருட்டுத்தனமாய் பார்ப்பவன், ஈவ் டீசிங், ரேப் செய்பவன், விருப்பமில்லா பெண்ணை அச்சுறுத்தி புணர்பவன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய‌வன், உடலுறவில் ஈடுபட்டுள்ள தம்பதியரை வேண்டுமென்றே டிஸ்டர்ப் செய்பவன், வெறுமனே உசுப்பேற்றி ஆண்,பெண்ணை காமத்தால் தகிக்க செய்ய படம் எடுத்தவன், கதை எழுதினவன் இவனுக்கெல்லாம்

விரைப்பு தன்மை குறையும், வீரியம் வரண்டு போகும், துரிதஸ்கலிதமாகும், விந்துவில் கவுண்ட் குறைந்து போகும். இவன் குடும்பத்து பெண்கள் வேசிகளாவர். இவர்களின் வம்சத்தில் பெண் குழந்தைகளே தொடர்ந்து பிறக்கும். அவற்றிற்கும் சரியான வயதில் திருமணமாகாது.

பி.கு:
மேற்சொன்னவை எந்த கிரந்தத்திலும் கிடையாது, 1989 முதலான என் ப்ரொஃபெஷ்னல் லைஃபில் நான் கண்ணார கண்டவை. சில (பல) குற்றங்கள் விடுபட்டிருக்கலாம். அன்பர்கள் கேட்டால் அவற்றிற்கும் உரிய தண்டனைகளை தெரிவிக்கிறேன். தாங்கள் கண்டுணர்ந்த விசயங்களையும் தெரிவிக்கலாம். மேலும் இந்த பாவங்களுக்கான தண்டனையை பாவம் செய்தவன் மட்டுமல்ல அவன் குடும்பத்தினர், வாரிசுகள், வேலையாட்கள், அவனிடம் வாங்கித்தின்பவர்கள் அனைவரும் அனுபவிப்பவர். ஏழேழு தலைமுறைகளுக்கும் இது தொடரும்

2 comments:

  1. கந்து வட்டி வாங்கிய பல குடும்பங்களை நான் கவனித்ததில் பல இனம் புரியாத வியாதிகள் மற்றும் திடீர் நிகழ்வுகள் நிகழ்ந்து குடும்பங்கள் சிதைவதை கண்டிருக்கிறேன். அதே போல பிற்காலத்தில் சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் நிலையம் உண்டாகிறது.

    நோயாளியிடம் காசு பிடிங்கிய வைத்தியன் ஒருவனின் குடும்பன் ஆண் வாரிசற்று போனது.

    பஞ்சமாபாதகம் என்பதில் அடுத்தவன் மனைவியை கவர்ந்தவனுக்கு (இதற்க்கு பரிகாரமே இல்லை) குறுகிய காலத்திலேயே மிக கீழான நிலைக்கு தள்ளப்படுகிறான்.
    (என்னதான் ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருந்து தசைநாதன் சிறப்பான இடத்தில் இருந்தாலும்)

    மிக சிறந்த ஆய்வு உங்களது.

    எப்பவும் உங்களது எழுத்துக்கு அறிவுக்கு நான் அடிமை.

    விஜய்

    ReplyDelete
  2. விஜய் அவர்களே,
    தங்கள் பாராட்டுக்கு நன்றி .
    மனிதம் தோய்ந்த , சமூக பார்வை மிக்க தங்கள் கவிதை(கள்) உண்மையிலேயே சுகம். எழுத்துப்பிழைகள் உள்ளதோ என்று ஒரு சம்சயம். அவற்றை (இருந்தால்) தவிர்க்கவும்

    ReplyDelete