Monday, May 31, 2010

மீண்டும் நித்யானந்தா

அண்ணே வணக்கம்ணே,
மீண்டும் நித்யானந்தாங்கற இந்த பதிவில்லாம கமெண்ட் கண்டங்கள் என்ற இன்னொரு பதிவையும் போட்டிருக்கேன்.இதுல  இனி எந்த பதிவுலயும் என் கமெண்ட்ஸை போடறதா இல்லேனு நான் ஏன் முடிவெடுத்தேங்கறத விளக்கியிருக்கேன். இனி கமெண்ட் எல்லாம் என் ப்ளாக்லயே வெளிவரும். உங்க பதிவுக்கான லிங்க் உட்பட.
அல்லாரும் நித்யானந்தாவை திராட்ல விட்டுட்ட இந்த சந்தர்ப்பத்துல பார்ட்டிய ஞா படுத்தி புண்ணிய கட்டிக்கிட்டது விஜய் டிவியின் " நீயா நானா".

 பாவம் சாரு நிவேதிதா. என்னதான் நீண்ட விளக்கம் கொடுத்தாலும் கோபி சார் மன்னிப்பு கேட்கறிங்களா? மன்னிப்பு கேட்கிறிங்களானு பன்னி பன்னி கேட்டு கேட்கவே வச்சிட்டாரு.

எழுத்தாளர் செல்வ துரை (இவர் என்ன எழுதியிருக்காருங்கண்ணா. நமக்கு இருக்கிற ஒரே சோர்ஸ் சித்தூர் கன்னிமரா லைப்ரரிதான்)  நல்லாதானே போயிட்டிருக்குனு நினைச்சப்ப எதிர்பாராமா செ.துரை ஒரு முத்தை உதிர்த்தார். பெட் ரூம்ல கேமரா வச்சதை மட்டும் ஏத்துக்க முடியலைன்னார். எல்லார் பெட் ரூம்லயும் கேமரா வச்சா உலகம் என்ன ஆகும்னு வேற குண்டை போட்டாரு.

இதுக்கு சாரு நல்லாவே போட்டு வாங்கினாரு  ஊர்ல இருக்கிறவன்லாம் பிரம்மச்சரியத்தை போதிக்கலியே".

சனம் நான் ஏதோ ப்ளாக்ல தான் வீர/தீரத்தை காட்டறேனு  நினைக்கலாம். 1992ல ஜனசக்தி பேப்பர்ல திருத்தணி ரூட்ல இருக்கிற தங்கால் சாமியாரை கிழிச்சேன் பாருங்க. சாமியாருக்கு பேதியே ஆயிருச்சு. அப்பத்தான் கலப்பு திருமண கசமுசாவை எல்லாம் மறந்துட்டு அப்பா வர போக இருக்காரு. அந்த சமயம் பார்த்து இந்த கட்டுரை பத்திரிக்கைல வந்துருச்சு.

அரசியல்வாதி மாதிரி சித்தூர் முதலியார் சங்கத்தை பிடிச்சு (சாமியார் முதலியார்
சாதியாம்) அவிக வந்து என்னை காண்டாக்ட் பண்ணாய்ங்க. தெரியாம எழுதிட்டதா எழுதி கொடுக்கனுமாம். வந்த நாயோட சரித்திரமே எனக்கு தெரியும். ஃப்ரெண்டுக்கு சிவாஜிய வச்சு ஃபிலிம் காட்டி அவனோட அக்காவை கர்பமாக்கி நடு ரோட்ல விட்ட  கழிசடை அவன். அந்த காலத்துல அபார்சன் கிபார்சனெல்லாம் எவ்ளோ ரிஸ்குனு தெரியுமில்லை.. அவன் வந்து கேட்கிறான். நான் போடாங்கொய்யாலன்னிட்டன்.
(இந்த நாயை பத்தி பெரிய பெரிய கதைல்லாம் இருக்குங்கண்ணா. இவிகல்லாம் சாதி சங்க தலைவன்.  நேரம் வரட்டும் கிழிச்சுரவம்ல)

என் கிட்டேருந்து எங்கப்பா கிட்டே போயிருக்காய்ங்க. எங்கப்பா ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி " ஏம்பா சாமியாருங்கறிங்க.. சாமியாருக்கு ஏது சாதி ? உங்களையெல்லாம் சாதி பார்த்துதான் சேர்த்துக்கிட்டாரான்னாராம்" சா.ச.தலைவன் ஆகே பீச்சே மூடிக்கிட்டு போயிட்டானாம். இதான் குருக்களோட லட்சணம்.


ஆன்மீக வாழ்க்கைல குருவோட ரோல் பத்தி ரொம்பவே பில்டப் கொடுத்து பேசுறாய்ங்க. குருவோட முக்கியத்துவத்தை நான் விமர்சிக்கப்போறதில்லை. ஆனால் சரியான குருவை எப்படி ஐடென்டிஃபை பண்றது? அங்கே தான் எல்லாரும் தப்பு பண்ணிர்ராய்ங்க.

என்னைக்கேட்டா இந்த 43 வயசுக்கு எத்தனையோ குருக்களை பத்தி படிச்சு தெரிஞ்சுக்கிட்டேனே தவிர , மனசுல நிறுத்தி உதவி வாங்கியிருக்கேனே தவிர நேர்ல  போனதில்லை போனாலும் அவிக என்னை கவர்ந்ததில்லை.

எப்படியோ ஆன்மீக உபதேசத்துல இறங்கியாச்சு .குட்டிக்கதை சொல்லலன்னா எப்படி?

ஒரு குரு ,ஒரு சிஷ்யன் ஊர் ஊரா போயிட்டிருக்காய்ங்க. ஒரு ஊர்ல செட்டியார் ஒருத்தர் குருவுக்கு ஷெல்டர் கொடுத்தார். செட்டியாருக்கு ஒரு பெண். குருவுக்கும், செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் ஆயிருச்சு.

விளக்கம்:
மனித உடல்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். தட் கென் பீ கன்வெர்ட்டட் இன்டு யோகிக் பவர். பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா எல்லாம் செய்யும்போது பவர்  ஜெனரேட் ஆகும். ஆனா அந்த பவர் செக்ஸ் பவரா வெளிப்பட தான் பார்க்கும். அதனாலதான் கடவுள்னா துள்ளி குதிக்கிற ஆன்மீக பார்ட்டி படக்குனு காமத்துல விழுந்துர்ரது நடக்குது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கு. எதுவாச்சும் மேலே போனா பூமி அதை இழுக்கத்தான் பார்க்கும்.பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா இத்யாதி மூலமா குண்டலி மேலே உயர்ந்தாலும் பூமி அதை கீழே இழுத்துக்கிட்டே இருக்கும். குண்டலியோட இருப்பான மூலாதாரம் பூமிதத்துவம்.  குண்டலி ஆக்டிவேட் ஆகி மேனோக்கி நகர ஆரம்பிக்கும்போது "பட்டுத்தெளிஞ்ச கேஸு " யாராவது அதெல்லாம் ஒன்னுமில்லப்பா அது அப்படித்தானு சொல்ல பக்கத்துல இருந்தா சொம்மா தூளா தாண்டி போய்ட்டே இருக்கலாம். அப்படி ஒரு பார்ட்டி இல்லின்னா நாயடிதான். எந்த க்ஷணமாவது படக்குனு மறுபடி சாக்கடைல வந்து விழுந்துரவேண்டியதுதான்.

கதை தொடர்ச்சி:
குருவுக்கும் செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆயிருச்சு. செட்டியார் கண்ணாலம் கட்டி வச்சிட்டாரு. குழந்தையும் பிறந்துருச்சி. ஒரு நாள் புதுப்பெண்டாட்டி வீட்ல இல்லை. குழந்தை ஆய் போயிட்டு அதுலயே புரண்டு கிட்டு இருக்கு. குரு பார்த்தார். கூப்டார் சிஷ்யனை "சிஷ்யா! என் துணிகளை சுத்தப்படுத்தற மாதிரி இந்த குழந்தையை சுத்தப்படுத்தி கொண்டு வான்னார்.

சிஷ்யன் குழந்தையை துவைச்சி அலசி கொண்டுவந்தான். என்ன.. உசுருதான் இல்லை. அதை பார்த்த பிறவு மறுபடி குருவுக்கு ஆன்மீகத்துல நாட்டம் வந்தது. நடையை கட்டினார் அடுத்த ஊருக்கு.

நீதி:குருதான் சிஷ்யனை ஆன்மீகத்துல தேத்தனும்னில்லை. சிஷ்யன் கூட குருவை தேத்தலாம்.

ஏகலவ்யன் கதை தெரியும். குரு வித்தை கத்து தரமாட்டேனு  வேட்டிய அவிழ்த்து காட்டிட்டாரு. ஏகலவ்யன் என்ன செய்தான் ? குருவை மாதிரி ஒரு சிலையை வச்சு கத்துக்கிட்டான்.

இங்கே  வித்தைய கத்துக்கொடுத்தது சிலையா? இல்லை. கத்துக்கனுங்கற வெறி. கத்துக்கனுங்கற வெறி இருக்கனுமே தவிர  காத்து,தண்ணி, நிலம், நெருப்பு ஆகாய எல்லாமே குருதான். கத்துக்கனுங்கற வெறி இல்லாதவன் குருவோட ஹோமோ செக்ஸ்/ஓரல் செக்ஸ்ல ஈடுப்பட்டா கூட ஒரு ம...ரும் வராது.

குருவே இல்லாதவனுக்கு உலகமே குரு. தெய்வமே குரு. சிஷ்யன் எப்படி குருவை தேடி அலையறானோ அதே மாதிரி குருவும் சிஷ்யனை தேடி அலையறான். நதியை தேடி வர்ர கடல் மாதிரி குருவெ தேடி வந்துர்ரான்... இவன் தேடல்ல உண்மையிருந்தா.

காலணா பத்திரிக்கைல வர்ர விளம்பரத்தையெல்லாம் படிச்சுட்டு கண்டேன் குருவைனு துள்ளி குதிச்சா விழறது கழு நீர்பானையாதான் இருக்கும். குமுதம் மாதிரி ஒரு மஞ்சள் பத்திரிக்கைல வந்த தொடர பார்த்து எத்தனை அப்பாவி போய் விழுந்திருப்பான். நான் இவிக பவிசு தெரிஞ்சவங்கறதால விடியல் 3 மணிக்கே கூவினேன். யாரும் முழிச்சிக்கலை.

ஒரு குருவுக்கு ஒரு சிஷ்யனை தேர்ந்தெடுக்க எத்தனை திறமை தேவையோ.. ஒரு சிஷ்யனுக்கு அதை விட ரெண்டு மடங்கு திற்மை தில்லு தேவை. ராம கிருஷ்ண பரம ஹம்சரை விவேகானந்தர் கொஞ்ச நஞ்ச இம்சையா பண்ணாரு

நம்ம பவிசு நமக்கு தெரியவேணாமா? நாம போய் நின்ன உடனே உண்மையான குருவா இருந்தா.. காறி துப்பனும் .கட்டைய எடுத்துக்கிட்டு ஓடி வந்து விரட்டனும். அப்படியில்லாம கவுண்டர்ல பணம் கட்டியாச்சானு மாத்திரம் பார்க்கிற குருவோட பவிசு என்னனு கெஸ் பண்ணவாச்சும் தெரியவேண்டாம்.

அவிகளை சொல்லி குத்தமில்லே அவிகளுக்கு இதான் தொழில். நம்மாளுங்களோட புத்தியை ஜோட்டால அடிக்கனும்.

ஆன்மீகம்னா என்ன? நம்ம உடல்,மனசு,புத்தி இதை எல்லாம் கடந்து வேறென்னமோ இருக்கு.அதை பத்தின அறிவியல்தான் ஆன்மீகம். ஆன்மீகத்தை போதிக்கிறவன் முதற்கண் தன் உடல்,மனம்,புத்திகளோட  பிடிலருந்து விடுபட்டிருக்கனும்.

இம்போர்ட்டட் காவி, தங்கத்துல கோர்த்த ருத்ராட்சம்,  பட்டுமஞ்சம், ஏசி காருல்லாம் வச்சிருக்கிறவன் உடலை கடந்தவனா?

ஃபோட்டோ செஷன் நடத்தில் லைட்டிங் வச்சி ஃபோட்டோ பிடிச்சு பத்திரிக்கைல போட்டுக்கறவன் மனசை கடந்தவனா?

பழைய கள்ளை புது மொந்தைல தர்ர இவனுக்கு 4 டிவிடி பார்த்து ஒரு தமிழ் சினிமா எடுக்கிற கதை பொறுக்கிக்கும் என்ன வித்யாசம்? இவனெல்லாம் புத்தியை கடந்தவனா?

நித்யானந்தா மட்டுமில்லே ஜக்கி வாசுதேவ் கூட இந்த வேலையதான் பண்றாரு. (நாம யாரோ சொன்னதுல ஒரு வரி எடுத்து ஆண்டா கூட பேரை சொல்றோம். சோர்ஸை சொல்றோம்) ஓஷோவோட கருத்துக்களை லட்டு லட்டா சொந்த சரக்கு மாதிரி எடுத்துவிடறாரு.

ரோசிக்க வேணாம்? வேலைக்காரி 50 ரூபா முன் பணம் கேட்டா " நான் யோசிக்கனும்"ங்கற மிடில் க்ளாஸ் ப்ன்னாடைங்க கூட ஆயிரமாயிரமா கொட்டியிருக்காய்ங்க.

நித்யானந்தாவை ட்ராப் பண்ண கட்டிலறைல மட்டுமில்லே கழிவறைல கூட காமெரா வச்சிருக்கலாம். தப்பே இல்லை. இந்த மாதிரி  நாதாரிங்க அங்கே கூட எதுனா சில்மிஷம் பண்ணிக்கிட்டிருந்திருக்கும்.

2 comments:

  1. anbu nambaruku vanakam..

    Thangalin padivai padika kidaithamaiku mikka magilchi..

    nithiyanandaridam poi eamandavargal than adigam.. avaraga yaarayum eamatra villai. Vijay TV nigalichiyil yaarume than eamandadaga koora villai eamatra pattadagave koorinar.. ean? (poli marundu thayaritha gumbalai vidava evar mosamanavar???)oru arsiyal vaadiyai nambi ootu potu avaru kolga maari seyal patta kandukaada samoogam evera maadiri oruthara pudichu palivaanguvadu murayalla.)

    ReplyDelete
  2. நேஷ் அவர்களே,
    யாருக்கு நம்ம மேல நிறைய பிடிப்பு,பாசம் இருக்குமோ அவிக மேல அது பகைமையா, எரிச்சலா வெளிப்படுமாம். மொத்தத்துல உங்களுக்கு நம்ம மக்கள் மேல் ஆழ்ந்த அக்கறை இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன். வாழ்த்துக்கள்.

    நம்பாதவனை நம்ப வச்சி ஏமாத்தினா அதை கூட ஒரு வகைல ஏத்துக்கலாம். ஆனால் நம்பி வந்தவுகளை ஏமாத்தினவனை என்ன பண்ண? மனித குலத்துல,அவிக மனசுல கொஞ்சம் நஞ்சம் மீதியிருக்கிற சக மனிதர் மீதான நம்பிக்கைய இந்த பாவிக நசியப்பண்றாய்ங்களேனு தான் கடுப்பு

    ReplyDelete