Thursday, November 4, 2010

அடங்கமறு... அத்துமீறு...

அடங்கமறு... அத்துமீறு...
இதை யாரு சொன்னாங்கன்னு அப்புறம் பார்க்கலாம். இப்ப இந்த வார்த்தைகளில் இருக்கிற ஆற்றலை ஆராய்வோம். இந்த பதிவு எழுதும் நேரம் மாலை 6 மணி. இப்பொழுது கொஞ்சம் பசி இருக்கிறது. வழக்கமான இரவு உணவு நேரம் 9 மணி... சாப்பிட்ட பிறகு தூக்கம்... மறுநாள் இறைவன் எனக்கு ஒரு நாளை அளித்திருந்தால் மீண்டும் காலை 6 மணிக்கு பசிக்கும்... அப்புறம்... மதியம் 1.30 மணி.... இது ஒரு தொடர்கதை... நமக்குளிருக்கிற காமத்தைப்போலவே...

நிமிர்ந்து உட்கார்ந்தாயிற்றா?

ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டால்... “அப்பாடா, என்ன சுகம், அருமையான சாப்பாடு... மறக்கமுடியாத சாப்பாடு” என்றாலும் அடுத்த 5 மணி நேரத்தில் பசியெடுக்கும்...

99.9 சதவீத ஆண்களும், பெண்களும் இதிலிருந்து தப்ப நினைத்தால்... மீண்டும், மீண்டும், ஆரம்பித்த இடத்திலேயே நிற்ப்பார்க்ள். இப்பொழுது நெஞ்சில் கை வைத்து... இல்ல சும்மாவே சொல்லுங்க... திருப்தியான காமத்திற்கு பிறகும் மனம் ஏங்குகிறது தானே? உடல் தளர்ந்து போனாலும்... அப்ப இது வரையில் இயங்கியதற்கு அர்த்தம்?

காரணம்... கொலை... அல்லது கொல்லப்படுதல்... ஞாபகம் வந்தாகணுமே... திரு. முருகேசன் சொல்லியிருக்கிறாரே... அதேதான்... அது நடந்தாலன்றி நீங்கள் அடுத்த நிலை போகவே முடியாது.

காலிப்பாத்திரத்தை கீழே போட்டால்தான் சப்தம் வரும்...

உனக்குள் இருக்கிற காமத்தை கவனி... காமத்தோடு ஒன்றாகிப்போ... தடுக்கும் மனதை எதிர்கொள்... கோஷம் போடு... அடங்கமறு... அத்துமீறு...

நீ காமத்திலிருந்து விலகிச்செல்ல அது உன் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். ஏற்றுகொண்டால் உன் தலையிலிருந்து படிப்படியாக கீழிறங்கிச்சென்றுவிடும்... காமத்தை கையாள சில பக்குவங்கள் உள்ளன... அவை... கூகுளாண்டவரிடம் கூட கிடைக்காது... அது உனக்குள்தான் இருக்கிறது... நீ எதிராளியை காமத்தினால், காமத்திற்க்காக நெருங்கும் போது... உன்னை கவனி... (யோவ்... ஜி.. அதுக்கெல்லாம் எங்கேய்யா நேரமிருக்க போகுது...)

முன்னறக் கரவாது தன்பிழை இழக்கியான்
பின்னூறு இரங்கி விடும்

அப்பவே சொல்லிட்டான்யா... நம்ம வள்ளுவன்...

காமத்தை பொறுத்தவரை... அவசரப்படுதல் கூடாது, தெரியுமா? இதைமட்டும் பழகிக்கொண்டால் வயகராவா... ந... தாரா கூட தேவையில்லை...

ஒருநாளில்லை ஒருநாள்... நீ காமத்தை கொல்லுவாய்... அல்லது காமத்தால் கொல்லப்படுவாய்...

இன்னமும், மீறலாமா? கோடு போடுங்கப்பு...

3 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. superana post anne !

    thank you very much .

    entha vaarthaiyaal vilaiyaadum jaalam athuvaathaane varuthu ? unmaiyai sollunga sir!

    ReplyDelete