Monday, September 7, 2009

பன்றி யானைக்குட்டியை ஈன்றது


முன்னுரை:

வீரபிரம்மேந்திர ஸ்வாமி
ஆந்திர மானிலம் கம்மம் மாவட்டம், நேல கொண்ட பல்லி மண்டலம், போதுல பண்டா கிராமத்தில் பன்றி ஒன்று யானைக்குட்டியை ஈன்றது. இதிலென்ன கொள்ளை போகும் விஷயம் என்று புறம் தள்ளி விடாதீர்கள். உலக அழிவுக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது.

அடுத்த பாராவில் நான் விவரித்துள்ள வீரபிரம்மேந்திரஸ்வாமி உலக எதிர்காலம் குறித்து தான் எழுதியுள்ள காலஞானம் என்ற நூலில் கி.பி.1900 முதல் கி.பி.2008 மார்ச்சுக்குள் உலகம் அழிந்து ஏழில் ஒரு பாகம்தான் நிலைக்கும் என்று எழுதியுள்ளதாக டி கோட் செய்யப்பட்டுள்ளது.

அவர் எழுதியுள்ள ஒவ்வோரம்சமும் தவறாது நடைபெற்றுவருகிறது. ஆனால் அவர் கூறும் கால அளவை டி கோட் செய்வதில் சிக்கல் இருக்கிறது. காரணம் அவர் கூறும் வருடங்களின் பெயர்கள் 60 வருடத்துக்கொருமுறை ரீ சைக்கிள் ஆகும் தமிழ் ஆண்டு பெயர்களாகும்.

தமது காலஞானத்தில் உலக அழிவுக்கு அறிகுறியாக குறிப்பிடும் பல அம்சங்களில் பன்றி வயிற்றில் யானை பிறக்கும் என்பதும் ஒன்றாகும்.

மேற்சொன்ன செய்தி போட்டோவுடன் தெலுங்கு தினசரிகளில் வெளியானது. தெலுங்கு டி.வி.சேனல்கள் வீடியோவாகவும் காட்டியுள்ளன. எதுக்குனா நல்லது கீழ் வரும் விவரங்களை ஒரு மூச்சு படித்து விடுங்கள் .

எதற்குமே முடிவு என்று ஒன்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் போர் (Bore) தான். நமக்குத் தெரிந்த இந்த உண்மை இறைவனுக்கு தெரியாதா என்ன? அதனால் தான் பிரளயம் என்று ஒன்றை நிர்ணயித்து வைத்துள்ளான்.
பிரளயம் பற்றி எத்தனையோ யூகங்கள் விஞ்ஞானிகளிடையில் உள்ளது. சூரியனில் அணுப்புயல் உருவாகி எரிந்து போவோம்,துருவங்களில் உள்ள உருகி மூழ்கி சாவோம் இப்படி எத்தனையோ ஆப்ஷன்ஸ்.

மாறுதலுக்கு மேற்சொன்ன பிரம்மங்காரு என்ற ஆன்ம (விஞ்)ஞானி ஒருவரின் கருத்தையும் இங்கு பார்ப்போம்.
இவர் சொன்னபடி பிரளயம் வருகிறதோ இல்லையோ அதை நிர்ணயிக்குமத்தனை ஞானம் எனக்கு கிடையாது.
இவர் எத்தனையோ நல்ல விஷயங்கள் பற்றி கூறியுள்ளார். அவற்றை பின்பற்றுவோம்.
அப்படியே பிரளயம் வருவதற்கு முன்பே நம் சில்லரை தகராறுகளுக்கு மங்களம் பாடி, போர்களுக்கு, சூடோ புரட்சிகளுக்கு விடை கொடுத்து குறுகிய காலத்திற்காவது ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வோம் என்ற சிந்தனையை கொடுத்தது இவர் தான். அந்த சிந்தனையின் தொடர்ச்சியே இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம்

பிரம்மங்காரு என்றால் ஆந்திரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. இவர் கி.பி.1900 முதல் கி.பி 2008 வரை உலகத்தில் நடக்கக் கூடிய சம்பவங்களை பனை ஓலை சுவடிகளில் கால ஞானம் என்றபெயரில் எழுதி வைத்துள்ளார். இன்றைக்கு 491 வருடங்களுக்கு முன்பு பிறந்த பிரம்மங்காரு எழுதிய எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் யதார்த்ததிலும் நடந்து வருகின்றன.

அந்த காலத்திலேயே பெண்ணடிமை,ஜாதி மத பேதங்கள்,பிராமணர்களின் சாதி செருக்கு, போன்றவற்றிற்கு எதிராய் போராடியவர். ஒரு முகமதியனை சீடனாக ஏற்று " பிரம்மத்துக்கு மிஞ்சிய குருவில்லை ஸித்தய்யாவை (முகமதிய சீடர்) மிஞ்சிய சீடனில்லை என்ற சொலவடைக்கே காரணமானர்.
காலஞானத்தின் சாரம் :

கி.பி.1900-முதல் 2008 க்குள் (இது பெரும்பாலோரின் விளக்கம் மட்டுமே. ஒரிஜினலை நான் பார்த்ததில்லை) உலகத்தின் 7-இல் 6 பாகம் அழிந்து, ஒரு பாகம் மட்டுமே மிஞ்சும் என்பது காலஞானத்தின் சாரம் . அவர் தன் கணிப்புகளை தமிழ்/தெலுங்கு வருடங்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் 2008-இல் வரக்கூடிய உகாதிக்குள் இது நிகழ்ந்திருக்க வேண்டும் . ஆனால் நிகழவில்லை. இது நம் விரிவுரையாளர்களின் தவறாகத்தான் இருக்கும்

என் கருத்து:

வெறும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே இது போன்ற கணிப்புகளை கூற முடியும். ஜோதிடத்தில் வெறும் 1 சதவீதம் கூட அறியாத நானே கடக சனியால் சுனாமி ஏற்படும் என்று கணித்து துண்டு பிரசுரம் வெளியிட்டேன். (சுனாமி என்ற வார்த்தை எனக்கு அப்போது தெரியாததால் கடற்கரையில் வாழும் மக்கள் வரலாறு காணாத பாதிப்புக்குள்ளாவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்)

ஈதிப்படியிருக்க மாபெரும் யோகியான பிரம்மங்காரு எதிர்கால சம்பவங்களை, மனிதர்களின் பெயர்கள் உட்பட எழுதிவைத்ததில் ஆச்சரியமே கிடையாது.

பிரம்மங்காரு பற்றி நான் படித்த, கேள்விப் பட்ட விஷயங்களை வைத்தே நான் இந்த வலைப் பூவை எழுதவில்லை . அவரது மூல மந்திரத்தை ஜெபித்தவன் நம் வீட்டு தாத்தா நமக்கு எச்சரிக்கைகள் கொடுப்பது போல அவர் ஆன்ம உரு்வில் எத்தனையோ முறை குறுக்கிட்டிருக்கிறார். அதையெல்லாம் இங்கே எழுதினால் தமிழ் ஓவியா போன்றவர்கள் என்னை காய்ச்ச , நான் பதிலடி கொடுக்க குழாயடி சண்டையாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.

12 comments:

  1. ன்ன்னா...நீங்க நெம்ப நல்லவரு!

    ReplyDelete
  2. அண்ணா !
    இது புகழ்ச்சியா நக்கலா புரியல.
    எங்க ஏரியால ஒரு பழக்கம். கருப்பா இருக்கிறவனை "வாடா வெள்ளையா கீரவனே " என்று தான் அழைப்போம். உங்க கமெண்டும் இந்த டைப்பா ?

    ReplyDelete
  3. //பன்றி வயிற்றில் யானை பிறக்கும் என்பதும் ஒன்றாகும்.//

    சித்தூர் முருகேசன் அய்யா,

    இது என்னன்ங்க பெரிய விஷ்யம?தமிழ் நாட்டுல கூடத்தான் ஒரு பன்னி வயிற்றில் ஒரு நாய் (ஈ) ரோட்டுல பிறந்தது.பிறக்கும் போதே இந்த நாய்க்கு பெரிய வெள்ளை தாடி இருந்ததால் இந்த நாயை திராவிட பெரிய நாய் என்று கருப்பு சட்டை கும்பல் கொண்டாட ஆரம்பித்தது.இதைப் பற்றியும் உங்க ஊர் பிரம்மங்காரு அய்யா ஏதாவ்து ஆருடம் சொல்லியிருக்காரா என்ன?

    பாலா

    ReplyDelete
  4. எங்களது விஸ்வகர்மா குலத்தில் உதித்த மிகபெரிய ஞானவான் பிரமங்கார். தமிழ் நாட்டில் எங்கள் குலத்தவர்கே அவரை பற்றி ஒன்றும் தெரியாது. தாங்கள் வெளியிட்ட இக்கட்டுரைக்கு கோடி நன்றி. மேலும் ஆராய்ந்து பல செய்திகளை தாருங்கள்.

    ReplyDelete
  5. கவிதை(கள்) அவர்களே !
    வீட்டில் என் கணிணி பழுது பட்டிருப்பதால் , இன்டர் நெட் மையங்களில் தட்டச்சுவதால் என் பதிவுகள் ஆழமாக அமையாது போகின்றன. ஏற்கெனவே நான் ஆன்மிகம் மாத இதழில் ஸ்ரீ பிரம்மங்காரு என்ற தலைப்பில் தொடரே துவங்கினேன். சில பஞ்ச கச்சங்களின் சதியால் அத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

    பிரம்மங்காரு அருளிருந்தால் அதனை இதே வலைப்பூவில் விரைவில் வெளியிடுகிறேன். பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  6. பாலா அவர்களே !
    உங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கிறேன். அதற்குள் தங்களது மரு(எழுத்துப்பிழை அல்ல) மொழிக்கு வருத்தம் தெரிவித்தால் சரி. இல்லாவிட்டால் அனாதி காலமாய் சனாதன மதம் என்று பேர் பண்ணி , பார்ப்பன பதர்கள் போட்ட ஆட்டத்தை கிழி கிழி என்று கிழிப்பேன். ராம சாமி நாயக்கர் உங்கள் ராம சாமியை விட உத்தமமான மனிதாபிமானம் கொண்ட சித்தர்,பெண்ணிய வாதி என்பதை நிரூபிப்பேன்

    ReplyDelete
  7. //சனாதன மதம் என்று பேர் பண்ணி , பார்ப்பன பதர்கள் போட்ட ஆட்டத்தை கிழி கிழி என்று கிழிப்பேன்//

    சித்தூர் முருகேசன் அய்யா,
    கிழியுங்கள் அய்யா கிழியுங்கள்.அப்படியே இந்த திராவிட கருப்பு சட்டை பன்றிகள் செய்யற அட்டூழியங்களையும் கிழித்து அவங்க கோர முகத்தையும் உல்கத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கய்யா.ரெட்டிகாரு ஆத்மா சாந்தி அடையும்.பிரம்மங்காரு அய்யாவை இப்ப பாத்தீங்க்ன்னா அவரும் உங்களுக்கு இந்த கட்டளையைத் தான் இடுவார்.

    //ராம சாமி நாயக்கர் உங்கள் ராம சாமியை விட உத்தமமான மனிதாபிமானம் கொண்ட சித்தர்,பெண்ணிய வாதி என்பதை நிரூபிப்பேன்//

    இது சரியான பேத்தல்.இது மாதிரி உளறுவதற்கு சூரமணி,மஞ்ச துண்டு மற்றும் தமிழோவியா அய்யாமார்களால் மட்டுமே முடிந்தது;அந்த லிஸ்டில் சித்தூர் முருகேசன் அய்யாவும் இப்போது ஐக்யம்.வாழ்த்துக்கள்.

    பாலா

    ReplyDelete
  8. //உங்கள் ராம சாமியை//

    சித்தூர் எஸ். முருகேசன் அய்யா,

    ஆமாம் அது என்ன உங்கள் ராம சாமி?என்னோடது உன்னோடது ன்னு பிரிவினை பேசாதிங்கய்யா.ராமர் அனைவருக்கும் பொதுவான சாமி.பிரம்மங்காரு அய்யா கூட இதை தெளிவாக சொல்லியிருக்காரே.

    பாலா

    ReplyDelete
  9. பாலா அவர்களே !
    சனாதன மதம் பேரில் நிகழும் பை. தனங்களை உடுப்பி ஓட்டல் சர்வர் மாதிரி பட்டியல் போட இருந்தேன். நீங்களே கிழியுங்கள் என்று 2 தடவை சொல்லிவிட்டதால் அது ட்ராப்.

    காரணம் தேவர் சினிமாவில் கடா மாதிரி கொம்பை ஆட்டி ஆட்டி முட்ட வராததே.
    //அப்படியே இந்த திராவிட கருப்பு சட்டை பன்றிகள் செய்யற அட்டூழியங்களையும் கிழித்து அவங்க கோர முகத்தையும் உல்கத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கய்யா.//

    பாலா!
    எல்லா நதியும் பவித்திரமா தான் ஆரம்பமாகும். காலப்போக்குல ந‌ரகல் கூட கலந்து போகுது என்ன செய்ய ? காலத்தின் கோலம். வீரமணி அய்யா பெரியாரின் எழுத்துக்கள் மீது சொந்தம் கொண்டாடிய ஒரு விஷயம் போதுமே இவர்களின் அக வெளிச்சத்தை (?)வெளிச்சம் போட. அய்யா அவர்கள் சாமிக்கே சிலை வைக்காதிங்கடானு அடிச்சுக்கிட்டாரு பெரியார் சிலை இல்லாத ஊர் எங்கே இருக்கு ? இதைதான் ரிவர்ஸ் எஃபெக்ட் என்பார்கள்.

    //ரெட்டிகாரு ஆத்மா சாந்தி அடையும்.//

    ரெட்டி காரு ஆத்மா சாந்தியடைய இந்த சாங்கியம் எல்லாம் தேவையே இல்லை பாலா சார். அவர் கடந்த 5 வருசம் 100 நாளில் செய்த எம்.ஜி.ஆர் வேலைகளுக்கு சுவர்கத்துக்கே (அப்படி ஒன்றிருந்தால்) சி.எம்.ஆகியிருப்பார்.

    //பிரம்மங்காரு அய்யாவை இப்ப பாத்தீங்க்ன்னா அவரும் உங்களுக்கு இந்த கட்டளையைத் தான் இடுவார்.//

    பிரம்மங்காருவை பத்தி உங்களுக்கு சரியா தெரியாது போல ?

    இந்த பார்ப்பன குறுக்கு சாலை எல்லாம் அந்த காலத்துலயே கிழி கிழினு கிழிச்சவர் அண்ணே அவரு
    ராம சாமி நாயக்கர் உங்கள் ராம சாமியை விட உத்தமமான மனிதாபிமானம் கொண்ட சித்தர்,பெண்ணிய வாதி என்பதை நிரூபிப்பேன் என்ற என் கருத்துக்கு

    // இது சரியான பேத்தல்.இது மாதிரி உளறுவதற்கு சூரமணி,மஞ்ச துண்டு மற்றும் தமிழோவியா அய்யாமார்களால் மட்டுமே முடிந்தது;//

    என்று கூறியுள்ளீர்கள். வீரமணி, கலைஞர், போன்றவர்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் இன்று தமிழ் ஓவியா போதாதென்று
    அந்த லிஸ்டில் சித்தூர் முருகேசன் அய்யாவும் இப்போது ஐக்யம் ஆக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

    தமிழ் ஓவியா அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு யோசனை தெரிவித்தேன்.
    அம்மா ! இறை நம்பிக்கையாளர்களையும், மூட நம்பிக்கையாளர்களையும் ஒரே கொட்டிலில் அடைத்து உரிக்காதீர்கள். பிரித்து மேயுங்கள் என்று.

    //உங்கள் ராம சாமியை// என்று குறிப்பிட காரணம் என் ராமன் மீதான அதீத அக்கறையால். சுஜாதா நாவல் ஒன்றில் எஸ்.ஐ.ஒருவர் லாக்கப் டெத்/ரேப் குற்றம் செய்துவிடுவார். அப்போது கமிஷ்னர் மற்றொரு இன்ஸ்பெக்டரிடம் "என்னய்யா உங்க டிப்பார்ட்மென்டு இந்த ரேஞ்சுக்கு வந்துருச்சா" என்று சீறுவார். அது போன்றதே எனது //உங்கள் ராம சாமியை என்று குறிப்பிட்டதும்

    ReplyDelete
  10. //பாலா!
    எல்லா நதியும் பவித்திரமா தான் ஆரம்பமாகும். காலப்போக்குல ந‌ரகல் கூட கலந்து போகுது என்ன செய்ய ?//

    சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா,

    மீண்டும் தவறு செய்து விட்டீர்களே.இந்த திராவிட பெரிய நதி ஆரம்பம் முதல் கடைசி வரை கூவம் தான்.தமிழோவியா,சூரமணி,கொளத்தூரான்,போன்றமுண்டங்களுக்கு மட்டும் இந்த கூவத்தில் மூழ்கி மகிழ பிடிக்கும் ஏனென்றால் இவர்களெல்லாம் பன்றிகள்.திராவிட பன்றிகள் தான் கூவத்தில் ஷோக்கா குளித்து மகிழும் என்ன செய்ய?ஆகையால் பெரிய தாடி பெரிய மாகாத்மா ஆனால் தாடியோட சிஷ்யர்கள் கீத்தரமானவர்கள் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல.குரு சிஷ்யர்கள் அனைவரும் கீழ்த்தரம் தான்.ராமசாமி என்ற் பெயருக்கு தாடி அய்யா பொருத்தமே இல்லாதவர்.சப்பைக் கட்டு கட்டாதீர்கள்.

    மற்றபடி சனாதானம்.கிழித்துவிடுவேன என்றெல்லாம் உதார் விடாதீர்கள்.நான் உங்களிடம் சனாதான தர்மம் பற்றி ஏதாவது பேசினேனா என்ன?அதைப் பற்றி ஜடாயு அய்யா அல்லது ஹரிஹரன் அய்யாவிடம் பேசுங்கள்;அவர்கள் உங்களை கிழி கிழி என்று கிழித்து விடுவார்கள்.

    பாலா

    ReplyDelete
  11. //ரெட்டி காரு ஆத்மா சாந்தியடைய இந்த சாங்கியம் எல்லாம் தேவையே இல்லை பாலா சார். அவர் கடந்த 5 வருசம் 100 நாளில் செய்த எம்.ஜி.ஆர் வேலைகளுக்கு சுவர்கத்துக்கே (அப்படி ஒன்றிருந்தால்) சி.எம்.ஆகியிருப்பார்//

    சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா,

    ஆமாம் நீங்கள் ஏன் இப்படி ரெள்டி ரெட்டிகாருவுக்கு ஜல்லி அடிக்கறீங்க?சொர்கத்துக்கே சி எம் ஆ அவரை ஏத்தி உட்டிருக்கங்க.ஆமாம் ஜகன் தான் சி எம் ஆகணும் என்று கோவிந்தா போட்டு கதறிய ஜல்லி கும்பலில் உங்க மூஞ்சியை பார்த்ததாக செய்தி வந்திருக்கிறதே.அது உண்மையா?உங்க லெவலுக்கு இது ரொம்ப கேவலமாக இல்லையா?என்னதான் அவரும் ராயலசீமா ஆள் என்றாலும் இப்படியா ரெள்டிக்கு வக்காலத்து வாங்குவது.

    ஆமாம் ,ரெட்டி காருவும்,ராஜுகாருவும் சேர்ந்து சுமார் 7000 கோடி ரூபாய்களுக்கு மேல் சத்யம் கம்பனி ஃப்ராடில் லூட் விட்டிருகிறார்களே.அதை எங்கு ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று ஜோசியம் பார்த்து சொல்லி விடுங்களேன்.

    பாலா

    ReplyDelete
  12. அடியேன் எழுதிய நூல் இந்த மாதம் இறுதியில் வெளியாகும். உண்மையிலேயே இவர் யார் என்பதையும் விளக்கியுள்ளேன்.

    "ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் : வாழ்க்கை வரலாறும் தீர்க்கதரிசனமும்"
    (கல்கியின் வருகைக்கு முனோட்டம்)
    வெளியீடு: விஜயா பதிப்பகம், 20 ராஜ வீதி,
    கோயம்புத்தூர். பேசி: 0422-2216614

    காணொளியாக பார்க்க இந்த லிங்கை தட்டுங்கள்.
    https://www.youtube.com/watch?v=-Jca5e6ZAi4

    அன்புடன்
    எஸ்.சந்திரசேகர்

    ReplyDelete