Monday, April 26, 2010

தெலுங்கு கற்றுக்கொள்ளுங்கள்:1

நண்பர் ஒருவர்  தமிழ் தெலுங்கு இரண்டும் தெரிஞ்ச நீங்க எங்களுக்கு தெலுங்கு கற்றுத்தரலாமே என்று சொன்ன போது அதான் குமுதத்துல சிலுக்கு கத்து குடுத்தாங்களேன்னிட்டன். (அவிக கிட்டே  தெலுங்கு கத்துக்கிட்டவுகளுக்கு இப்போ
ஏதாச்சும்  டவுட் வந்தா எப்படிங்கண்ணா?)

திடீர்னு ஒரு நாள் என்.டி.ஆர் சினிமாலருந்து ஒரு காட்சிய தமிழ்படுத்தி கொடுத்தேன்.

திடீர்னு ஒரு நாள் தெலுங்கு திரை இலக்கியத்தில் சிருங்காரம்னு ஒரு பதிவு போட்டேன்.

பிரபலமாறதுக்கு முந்தியே அம்மனுக்காக நான் தெலுங்கில் எழுதிய கவிதைய தமிழ் எழுத்துக்களை உபயோகிச்சு பதிவு போட்ட தில்லு துரை நாம.

ஓகே இன்னிலிருந்து அல்லாரும் தெலுங்கு கத்துக்கிடனும் ஓகேவா. ஆமா இது எதுக்கு உதவும்? தெலுங்குகுட்டிகளை கணக்கு பண்ணலாம். முருகேசன் ஏதாச்சும் தெலுங்குல ஏதாச்சும் மேற்கோள் காட்டினா அது சரியா தப்பா பார்க்கலாம். இல்லனா..

ரொம்ப முக்காதிங்க ராசா .. கார்ல் மார்க்ஸ் தெரியுமில்லியா ? அவர் சொன்னார் "வாழ்க்கை போராட்டத்துல கூடுதல் மொழிங்கறது ஒரு ஆயுதம்"

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" ஸோ முதல்ல தெலுங்கு எழுத்துக்களை கத்துக்கங்க ராசா. ஜிலேபி சுத்தனாப்ல இருக்குனு நக்கலடிக்காம ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு போய் எழுதிபாருங்க. நாம அ,ஆ,இ,ஈ ஐ  தமிழ்ல உயிர் எழுத்துங்கறோம். அவிக "அல்லுலு" நாம க,ங, ச, ஞ வை மெய்யெழுத்துங்கறோம்.அவிக "அச்சுலு"

சரி முருகேசன்லு பாடத்தை ஆரம்பிங்கங்கறிங்க அப்படித்தானே   .உடு ஜூட்

అ-அ
ఆ-ஆ
ఇ-இ
ఈ-ஈ
ఉ-உ
ఊ-ஊ
ఋ- று( இந்த எழுத்தை எல்லாம் இப்ப உபயோகிக்கிறதில்லைங்கண்ணா)
ౠ-றூ
ఎ -எ
ఏ-ஏ
ఐ-ஐ
ఒ-ஒ
ఓ-ஓ
ఔ-ஔ
అం-அம்
అ:-அஹா
இன்னைக்கு இதுவே போதும். அச்சுலுவை நாளைக்கு பார்ப்பம். ஓகே
క ఖ గ ఘ ఙ
చ ఛ జ ఝ ఞ
ట ఠ డ ఢ ణ
త థ ద ధ న
ప ఫ బ భ మ
యరలవశ స హ క్ష

9 comments:

  1. முருகேசலு நன்னிலு.

    ReplyDelete
  2. நல்ல முயற்சிங்கண்ணோவ். ஹைதராபாத் வந்து மூணு வருஷம் ஆச்சு. இன்னும் தெலுங்கு பேசறதே உருப்படியா கைவரலை. நல்ல வேளையா நீங்க வகுப்புத் தொடங்கிருக்கீங்க. அதிர கொட்டண்டி...

    ReplyDelete
  3. பாலாஜி கண்ணன் அவர்களே,
    இறையருள் அனுமதித்தால் ( இந்த பதிவை போட்டதுலருந்து நிலவரம் கலவரமா இருக்குங்கோவ்) நிச்சயம் தொடர்வேன்

    ReplyDelete
  4. குறும்பன்லு !
    உங்களுக்கான மறுமொழி லேட்டஸ்ட் பாடத்துலயே தந்திருக்கேன். பாருங்க‌

    ReplyDelete
  5. விஜய் கோபால் ஸ்வாமி அவர்களே,
    நீங்க ஹைதராபாத் பார்ட்டியா? ஆமா சமீபத்து கர்ஃப்யூ அனுபவங்களை எழுதலாமே. என் வலைப்பூவிலும் வைக்க நான் ரெடி நீங்க ரெடியா?

    பாராட்டுக்கு நன்றி. அதர கொட்டண்டி தான் கரெக்ட். ஓகே ஜூட்

    ReplyDelete
  6. ராஜ நடராஜன்April 27, 2010 at 12:48 AM

    ஏமண்டி!கன்டினியுலு:)

    ReplyDelete
  7. ராஜ நடராஜன் அவர்களே,
    கன்டின்யூங்கறதுக்கு கொனசாகின்சண்டினு சொல்லனும்ணே

    ReplyDelete
  8. அண்ணா, திருத்தியமைக்கு மிக்க நன்றி. பழைய நகரத்தை ஒட்டிய பகுதிகளிலே மட்டும்தான் கலவரம் பெருமளவில் வேலையைக் காட்டியது. நான் வசிக்கிற சிகந்திராபாத் பகுதியில் ஊரடங்கினால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பெரிய மதக்கலவரம் ஒரு சில பாதிப்புகளுடன் முளையிலேயே தடுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய பேசனும். மின்னஞ்சலில் உரையாடலைத் தொடருவோம். போய் வருகிறேன்.

    ReplyDelete