Tuesday, April 20, 2010

மனுவும் மனுவின் பின்னணியும்

அண்ணே வணக்கம்னே.

ச்சும்மா அரைச்ச மாவையே அரைக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வந்துருச்சு. அதான் ஒரு வெரைட்டிக்கு ஒரு சோம்பேறி  கலெக்டருக்கு கொடுக்க தயார் பண்ண மாதிரி  மனுவை வச்சிக்கிட்டு , அங்கங்கே கட் பண்ணி  ப்ராக்கெட்ஸ்ல உண்மை நிலவரத்தையும் கொடுத்தா எப்படி இருக்கும்னு ஒரு ஐடியா ஸ்பார்க் ஆச்சு. ரிஷி பிண்டம் ராத்தங்க விடலாமா. புது ஐடியாவோட ஒரு சிறுகதை.

மனுதாரரோட பேர் சீதாராமன். வயசு 55 . ஒரு சீக்காளி மனைவி. மூணு மகள்கள். பெங்களூர்ல வாசம். வேலை வெட்டி கிடையாது. பெண்டாட்டி,மகள்கள் சம்பாத்யத்துல காலம் ஓடுது.  மாமனார் வீட்ல டேரா. வெத்துக்கு எதுனா கிடைக்காதானு பார்க்கிற ரகம். பார்ட்டி கலெக்டருக்கு மனு  எழுதுது.

கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி உனக்கு22 எனக்கு 32 கதை சூடுபிடிக்க போகுது. சென்னகேசவன்னு புது கேரக்டர் கதை சொல்ல ஆரம்பிக்குது.அதை இங்கே க்ளிக் பண்ணி படிச்சு பாருங்க.

ஐயா! உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனால் சர்க்கரை வியாதியால் ( அது ஏன் வந்துச்சுனு கேளுங்க. குடி. குடி.குடி. சீட்டாட்டம்)  கண் போய்,கால் போய் (போகாதா என்ன .. பெத்த அம்மாவ காட்பாடி பஸ் ஸ்டாப்ல ஏறி மிதிச்ச காலாச்சே)  மூன்று வயது வந்த பெண்குழந்தைகளுடன் பசியும் பட்டினியுமாய் வாழும்( எல்லாம் டுபுக்கு மணிக்கு மணி எல்லாம் உள்ள தள்ளிக்கிட்டுதான் இருக்கு பார்ட்டி) என்னை ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி( சொந்த மாமனுங்கோ. அம்மாவுக்கு தம்பி. தங்கச்சிக்கு புருஷன் )  எல்லாவிதத்திலும் துன்புறுத்தி வருகிறார்.(போட்டு தள்ளாம வச்சிருக்கிறதுக்கு சந்தோஷப்படனும்)  இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாத ஏழ்மை நிலையில் ( எல்லாம் டுபுக்கு. மாமனார் சொத்துக்கு ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி வாங்கி வச்சுர்ந்தான். மாமனார் டப்புனு போய் சேர்ந்துட்டாரு. சின்ன,பெரிய மாமனாரெல்லாம் இந்த உருப்படாத பயலுக்கு சொத்தை  போக  விட மாட்டோம்னு  கோர்ட்ல கொக்கி மாட்டிவிட்டுட்டாய்ங்க. பெண்டாட்டியையும், ஊதுவத்தி கம்பெனில வேலை செய்யற பெண்களையும் அடி அடினு அடிச்சு  பணம் பிடுங்கி லாயர் வாய்ல போட்ட பணத்துக்கு கணக்கே இல்லை)

இருப்பதால் என் பிரச்சினையை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
என் அப்பா ப‌ச்சைய‌ப்ப‌ன். என் அம்மா த‌ஞ்ச‌ம்மாள் . என் அப்பா த‌ன் சொந்த‌ முய‌ற்சியில்( எல்லாம் டுபுக்கு இவிங்கப்பன் ஓட்டல் சர்வர் .இவனை மாதிரியே லாலா பார்ட்டி.இந்த மயித்துல எங்கன வீடு வாங்கறது) ஆந்திர‌ மாநில‌ம்,சித்தூரில் ஒரு வீடு வாங்கி என் அம்மாவின் பெய‌ரில் ப‌திவு செய்தார்.( அம்மாக்காரிதான் காவாக்கரை ஓரம் உட்கார்ந்து மக்காச்சோளம் வித்து சம்பாதிச்சாய்ங்க.)

நான் மேற்சொன்ன‌ அர‌சு அதிகாரி என் அம்மாவுக்கு சொந்த‌ த‌ம்பி. பெய‌ர் சோம‌ லிங்க‌ம்.............................................ஊரில்  ப‌ஞ்சாய்த்து துறையில் நிர்வாக‌ அதிகாரியாக‌ வேலை பார்த்து ச‌மீப‌த்தில் ஓய்வு பெற்றார். த‌ற்போது குடியாத்தம் .......................................விலாசத்தில்  வ‌சிக்கிறார். இவ‌ர் என் அம்மா த‌ஞ்ச‌ம்மாளிட‌ம் என்னை ப‌ற்றி இல்லாத‌தும் பொல்லாத‌தும் கூறி,( அதுக்கெல்லாம் அவசியமே இல்லிங்க. இவனுக்கு ஷுகர் வர்ரதுக்கு முந்தி இவனுக்கு இருந்த தொப்பைய வச்சி  பிள்ளையார்னு நிக்   நேம்.அப்படின்னா எந்த அளவுக்கு இந்த நாயி குடிச்சி கூத்தடிச்சிருக்கனும் பாருங்க. இதுல சூதாட்டம் வேற. எந்த அளவுக்கு வெறி பிடிச்சவன்னா வீட்ல பெண்டாட்டி அஞ்சறை டப்பாவுல வச்சிருக்கிற காசை கூட வச்சு சூதாடினவன்)

அவ‌ர் கேன்ஸ‌ரால் அவ‌தி ப‌ட்டுக் கொண்டு எதையும் சிந்திக்க‌க்கூட‌ முடியாத‌ நிலையில் இருந்த‌ போது த‌ன் ம‌னைவியின் பெய‌ருக்கு உயில் எழுதுவித்து ப‌திவும் செய்து கொண்டார்.

(இது அண்டப்புளுகு ஆகாசப்புளுகு . அந்த நேரம் இந்த நாய்க்கு கால்ல புண் வந்து காலையே எடுத்துர்ர கண்டிஷன். கண் ரெண்டும் டப்ஸு. சிங்கிள் டீக்கு கூட வகையில்லாத நிலை.அப்போ மாமன் தயவு தேவை.குடிச்சா செத்துருவம்னு குடிக்கிறத நிப்பாட்டியிருந்த காலம். சூதாட பணமில்லாம சூதை நிறுத்தியிருந்த காலம். மாமன் தன்னோட வைத்திய செலவை ஏத்துக்கிடனும்ங்கற ஒரே எண்ணத்துல தான் திருந்திட்டதா சீன் போடறதுக்காக இவனே தான் . தங்கச்சி பேர்ல உயில் எழுத வைச்சான்.)


வெறும் மூன்று மாதங்களில் என் அம்மா இறந்துவிட்டார்.( இந்த பீரியட்ல மட்டும் மாமன் காரன் 3 லட்ச ரூபாய்கிட்டே செலவழிச்சுட்டான். அவனுக்குள்ள வீடு பெண்டாட்டி பேருக்கு வந்துருச்சு.. இப்ப கிழவிக்கு செலவழிக்கிறதை சொத்தை விலை கொடுத்து வாங்கினதா நினைச்சுப்பம்ங்கற எண்ணம் .)

அவர் சாவில் கூட பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.( இது ஃபுட் மேட்ல வடிகட்டின பொய்)

இது குறித்து நானும்,உற‌வின‌ர்க‌ளும்,என் ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல‌ம் விரும்பிக‌ளும் எவ்வள‌வோ எடுத்துச் சொல்லியும் அவர் த‌ன் த‌வ‌றை திருத்திக் கொள்ள‌வில்லை.

இந்த‌ நிலையில் 2005 மே மாத‌த்தில் சோம லிங்க‌த்தின் மேல் எண்ண‌ற்ற‌ புகார்கள் அவரது உய‌ர‌திகாரிக‌ளுக்கு சென்ற‌தில் நான் தான் அந்த‌ புகார்க‌ளை அனுப்பினேன் என்று த‌வ‌றாக‌ எண்ணி ப‌ய‌ந்து மேற்ப‌டி சித்தூர் வீட்டின் மூல‌ ப‌த்திர‌த்தையும் , இருப‌து ரூபாய் ஸ்டாம்பு தாளில் ஒரு ஹ‌க்கு விடுத‌லை ப‌த்திர‌த்தையும் கொடுத்துவிட்டார்.(அதுவும் ஜிராக்ஸ் பிர‌தி).

சோமலிங்கம்,  அக்காவோட கேன்சருக்கு நாமதான் செலவழிச்சு வைத்தியம் பண்ணோம். பொணத்தை தூக்கி போட்டோம். காரியம் கீரியம்லாம் கூட பந்தாவா செய்து முடிச்சுட்டோம். மச்சான் காலுக்கும் கண்ணுக்கும் வைத்தியம் பண்ணி விட்டுட்டோம். அந்த நாயை வீட்டோட வச்சி தண்ட சோத்த வேற போட்டுக்கிட்டிருக்கோம்.  செலவழிச்ச ,செலவழிக்கிற பணத்துக்கு வட்டி கூட கட்டுப்படியாகமாட்டேங்குதே என்ன பண்ணலாம்னு ரோசிக்க ஆரம்பிச்சிருக்கான். அப்பத்தான் அக்கா உயில் மூலமா தன் பெண்டாட்டி பேருக்கு வந்த சொத்து மேல பார்வைய திருப்பினான். கை நிறைய பணம், பை நிறைய பணம், பீரோ நிறைய பணம் எல்லாம் கிம்பளம்தான். ச்சும்மா சொல்ல கூடாது சோ.லிங்கம் லஞ்சம் வாங்கறதுல மட்டுமில்லே கொடுக்கிறதுலயும் புலி.

ச்சொம்மா வந்த பணம் ச்சொம்மாதானே போகனும். கைக்காசை போட்டு அக்கா வச்சிட்டு போன வீட்டை இடிச்சி கட்டினான்.எவளோ ஒருத்தி வாடகைக்கு கேட்க முன் பணம் வாங்கிக்கிட்டு கொடுத்துட்டான். கோழி முட்டை வைக்க ஆரம்பிக்கிற வரைக்கும் தன்னோடதை பொத்திக்கிட்டிருந்த சீதாராமன் அதான் இந்த மனுவை எழுதிக்கிட்டிருக்கிற இந்த நாதாரி நாய்க்கு கால் கொஞ்சம் குணமானதும்,  கண்ணு கொஞ்சம் ரிப்பேரிங்க் சர்வீசிங் முடிஞ்சதுமே முட்டை மேல பாத்யதை கொண்டாட  ஆரம்பிச்சுட்டான்.

சித்தூர்ல இருக்கிற வீட்டை ச்சும்மா பார்த்துட்டு  வரேன்னு பஸ் சார்ஜுக்கு பணம் வாங்கிக்கிட்டு ஊர் வந்தான். இங்கே பழைய ஜமாவ எல்லாம் போய் பார்த்தான். அதுல  ஒரு ஃப்ரெண்ட் ( பழைய பேட்ச் . குடி ,கூத்து,சூதுல பழக்கம்) " சீதா ! உயில் கியில் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதிரடி பண்ணி உன் வீட்டை உனக்கு மீட்டுக்கொடுக்க ஆள் இருக்கு.ஆனால் " னு சொல்லியிருக்கான்.

அந்த ஆள் யாருன்னா சாட்சாத் நான் தான்.

(தொடரும்)

வாசகர் கடிதம்:
தொடரும்னா இந்த கதை கூட அம்பேல் தான். முருகேசா ! நீ தொடரும்னா தொடராதுனுதானே அர்த்தம். சரிய்யான லொள்ளு பிடிச்ச பார்ட்டிப்பா நீ

No comments:

Post a Comment