Friday, April 30, 2010

ராம நாம மகிமை

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி  மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின்  அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக்  கொண்டாலும்  வெறுமனே  ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து  ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத  இரைச்சல்,  புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.

( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா  பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்)  மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று  அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய  உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை  பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம்.  ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு.  இந்த ப்ராசஸ்ல  ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு  நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ  நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும்,  நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க.  ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

 யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும்  யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட  யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு  அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம  உண்மைன்னு எதை  நினைக்கிறோமோ அது உண்மை  கிடையாது.  கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி  நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம   ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில  சேனல்கள் தெரியறாப்ல  உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு  வீட்ல காலைல சன் டிவிய  வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

 கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற  நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம்.  அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்"  னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல  இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு  நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில்  பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  மேல் நோக்கி  நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் -  விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.

 விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.  அன்றைய உன்னத நிலையில் இன்று  என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?

பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.

12 comments:

  1. //ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு//
    நானும் உணர்ந்திருக்கிறேன்..கொண்டுமிருக்கிறேன்... வாழ்க உங்கள் பணி... இறையருளோடு மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  2. ஹாய்_ச்சா அவர்களே,
    ஆக்னா என்றால் பொருள் தெரியுமல்லவா? ஆணை குண்டலி ஆக்னையை தொட்ட பின் நான் ஆணையிட்டால்னிட்டு பாட்டெல்லாம் பாடத்தாவலை சாரு.
    திருமலைல பெருமாள் நகைகளையெல்லாம் பேங்க்ல டிப்பாசிட் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.(குறிப்பிட்ட வட்டி கூட கிடைக்கும்). இது என் ப்ளானான திருமலா விஷன் 1900 ல ஒரு அம்சம். இது அமலானது எப்படிங்கறிங்க ஜஸ்ட் நம்ம சிந்தனை அலைகள்.

    நமக்கு வீண் வம்புக்கெல்லாம் நேரமில்லை சாரே. வேணம்னா ஒன்னு பண்ணுங்க. உங்களுக்கு அவ்ளதூரம் நமைச்சல் இருந்தா கோவி கண்ணன் சாரோட வலைப்பூவை களமா வச்சிக்குவம். நீங்க ஒரு பதிவு . நான் ஒரு பதிவு. பட்டு கத்தரிச்சாப்ல முடிஞ்சுரனும். கமெண்ட் கமெண்டுக்கு கமெண்ட் எல்லாம் கூடாது.

    நான் ரெடி நீங்க ரெடியா

    ReplyDelete
  3. சுகுமார் ஜி அவர்களே,
    நன்றி. உங்களை போன்றவர்களை சென்றடையத்தான் இத்தனை உழைப்பு. இந்த விஞ்ஞானத்தை பரப்புங்கள்,பரவுங்கள் எண்ணங்களாய் . எண்ணங்கள் தானே செயல் வடிவம் பெற முடியும்

    ReplyDelete
  4. மனிதப் பிறவி மற்ற பிராணிகளின் பிறவியைவிட உயர்ந்தது. ஏன் அப்படிக் கருதப்படுகிறது? மனிதனுக்குதான் “பகுத்தறிவு” என் ஓர் சிறப்பான அறிவு இருக்கிறது. மற்ற உயிர் வாழ்வன யாவும் ஐயறிவே உடையனவென்றும், மனிதன் ‘பகுத்தறிவு’ என்னும் சிறப்பறிவு கொண்ட ஆறறிவு படைத்த உயிரினம் என்றும் கூறப்படுகின்றான். இப்படி கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
    தேக வலிமையில் நூறு மனிதர்களுக்கு மேல் வலிவுடைய யானை, சிங்கம் போன்ற பிராணிகளையும்கூட மனிதன் அடக்கியாள சக்தி படைத்திருக்கிறான். ஒரு துப்பாக்கி அல்லது தக்கதோர் ஆயுதத்தைத் தன் புத்தி பலத்தால் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு அதனால் தன்னிலும் பெரிய தேக வலிமையுள்ள பிராணிகளையும் அடக்கி ஆளுகிறான். புத்திமான் பலவானன்றோ! இவ்வாறே தன்னிலும் தேக வலிவால் விரைவாய்ச் செல்லக்கூடிய மிருகங்களையும் பக்ஷிகளையும்கூட மனிதன் தன்னறிவால் செய்யப்பட்ட எந்திரங்களை உபயோகித்துத் தான் அதிவிரைவாய் முந்தி செல்ல முடிந்தவனாயிருக்கிறான். இவ்வாறே சகல ஜீவ ராசிகளின் இதர ஸ்தூல சாமர்த்தியங்கள் யாவற்றிலும் மனிதனே முதன்மை பெற்று விளங்குகிறான். இவைகளைக் கொண்டுத்தான் மனிதன் ஏனை உயிர் படைப்புக்களிலும் சிறந்தவன் என்று கூறப்படுகிறதா? அல்ல! அல்ல! இது மிகவும் அற்பச் சிறப்பே. இது அவனது உண்மையான பெருஞ்சிறப்பின் சரியான நிரூபணமாகிவிடாது. மேற்கண்டவைகளைக் கொண்டு ‘மனிதன் உயர்ந்த பிறவி’ என்று தீர்மானிப்பது எப்படி இருக்கிறது என்றால். ‘அடே! எங்கப்பாவுக்கு ஆறாம் வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரிகிறதடா; அதனால் எங்கப்பா பெரிய அறிவாளி!” என்று தன் நண்பனிடம் பேசி வியக்கின்றான் ஒரு சிறுவன். அந்த பையன் நோபல் பரிசு பெற்ற மேதை ஒருவரின் 8 வயதுப் பையன் என்று வைத்துக்கொண்டால், அவன் தன் தந்தையின் சிறப்பைப் பேசுவது அற்பச் சிறப்பே யாவது போல, மனிதன் மிருக பக்ஷியாதிகளின் ஸ்தூல சாமர்த்தியங்களையெல்லாம் தோற்கடிக்கும் புத்தித் திறத்தால் அவன் உயர்ந்த ஜன்மம் கொண்டவன் என்று தீர்மானிப்பதும் அற்பச் சிறப்பே.
    மனிதனிடம் உள்ள உண்மையான பெருஞ்சிறப்பை மனிதனே அறியாமலிருக்கிறான். அது சற்று சிந்தித்து அறியப்பட வேண்டியதாகும். அதைச் சற்று கவனிப்போம்.
    ‘பெருமைப் படத்தக்க விஷயம்’ என்றால் ஒருவன் அடைந்திருக்கும் சுகவாழ்வின் அளவையே அது பொறுத்ததாகும். மற்ற யாவரினும் செல்வமும் புகழும் இன்னும் எல்லாத் தேவைகளின் நிறைவும் ஒரு மனிதன் பெற்றிருப்பதாக மக்கள் கருதும் போது அவனை ‘மேன்மை பெற்றவன்’, ‘பெருமைக்குரிய விஷயம்’ என்று மனதில் கொள்கின்றனர். அந்நிலைமையால் அவன் மற்ற யாவரினும் மிகுந்த சுகத்தை அனுபவிப்பான் (சுகி) என்று தீர்மானித்து நிரம்ப சுகத்தைப் பெறுவதே மேன்மை, பெருமை, சாமர்த்தியம் என்று எண்ணுகின்றனர். அப்படியின்றி ஒருவன் வாழ்வில் கஷ்டப்படுகிறான் என்றால், அது சிறுமை, வருத்தப்படத்தக்க விஷயம் என்கின்றனர். அதன்படி மக்கள் ஒவ்வொருவரும் அத்தகைய சுகவாழ்வைப் பெறவும், துயர்வாழ்வை யொழிக்கவும் விரும்பி முயல்கின்றனர். சுகத்தில் விருப்பமும் துக்கத்தில் வெறுப்பும் யாவருக்கும் இயல்பாகவே இருக்கின்றது. துக்கத்தை ஒழித்துக் கொள்ளவோ, சுகத்தைத் தேடிக்கொள்ளவோ சகலரும் தத்தம் தேக பலத்தையும் புத்தி பலத்தையும் தம்மால் இயன்றளவு உபயோகித்து முயற்சிக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல; மிருக பக்ஷியாதி சகல ஜீவராசிகளின் வாழ்வையும் கூர்ந்து கவனித்தால் அவை யாவும் சுக அடைவிற்கும் துக்க நிவர்த்திக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    ReplyDelete
  5. பசி, தாக, ரோகாதி துக்க நிவிருத்தியிலும் பஞ்சசேந்திரிய போகப் பேறுகளாகிய சுக அடைவிலும், சகல ஜீவராசிகளும் இடையறாது முயன்று கொண்டேயிருக்கின்றன. அத்தகையதான சுக அடைவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் உயிர்த் தொகுதிகளின் முயற்சியானது அந்தந்த ஜீவனின் உடலமைப்பையும், மன அமைப்பையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ பலனைத் தருகிறது. சர்வ முயற்சியின் பயனாவது சுகப்பேறேயாகும். வேறொன்றுமல்ல. எனவே மனித, மிருக, பக்ஷியாதி சகல வித உடல்களின் உள்ளிருக்கும் ஜீவனின் குளிக்கோள் சுகமே என்று தெரிகிறது. ஆயினும் அவ்வவ்வுடல் மன அமைப்புக்கு ஏற்ற அளவே அவையவைகளின் வாழ்வில் முயற்சி காணப்படுகிறது. எல்லா உயிரினங்களும் சுகதுக்கங்களை அனுபவித்து அறிகின்றன. ஆகையால் சுக உற்பத்தியையும் துக்கத் தோற்றுவாயையும் தத்தம் புத்தி வலுவுக்கேற்ப ஆராய்கின்றன. ஏதோ புத்தியில் விளங்குங் காரணங்களுக்கு ஏற்ப தேகத்தைக் கருவியாக உபயோகித்து, சுக ப்ராப்தி, துக்க நிவிருத்திக்குத் திட்டமிட்டு அத்திட்டப்படி செயல்படுகின்றன. இவ்வாறு உடல் மனத்தால் செய்யப்படும் உழைப்பு முழுவதின் நோக்கமும் மேற்கூறிய சுக அடைவேயாகின்றது.
    இதுவரை மனித வர்க்கமே ஏனைய மிருக பக்ஷியாதி உயிரினங்களைவிட இம்முயற்சியில் முன்னேறியிருக்கிறதென்று நாம் அனைவரும் நினைக்கிறோம். உண்மையை ஆராய்ந்தால் இது தவறான முடிவென்பது தெரியும். மேற்கூரிய மிருக பஷியாதிகளை விட மனிதன் ஓர் இம்மியளவுகூட முன்னேறிவிடவில்லை என்பதே முடிவு எப்படி என்பது விசாரிப்போம்.

    ReplyDelete
  6. புத்தியின் தீர்மானப்படி தேகம் செயலில் ஏவி உந்தப்படுகிறது. இவ்வுந்துதல் சகல உயிரினங்களிலும் நடக்கும் காரியமே. மிருக பக்ஷியாதி அஃறிணைகளிடம் புத்தியின் உந்துதல் அதனதன் தேக முயற்சிகளினின்றே (செயல்களினின்றே) நாம் காணமுடிகிறது. மனிதனிடமோ தேக பலம் மிகச் சாதாரணமாகவேயிருப்பதால் அவன் அப்பலத்தைக் கொண்டு மிரு பக்ஷியாதிகளை விட முன்னேற முடியாதெனக் கண்டு, புத்தியைக் கூர்மையாகவும் செம்மையாகவும் உபயோகித்து வேறு வழிகளைக் கண்டுபிடிக்கிறான். ஆனாலும் இன்று வரையில் மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் என்ன சாதித்துத் தந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், மிருகங்கள் சாதித்த காரியங்களையே இன்னும் பெரிய அளவில் சாதித்துத் தந்திருக்கின்றன என்றுதான் சொல்ல முடியும். அதாவது ஓரறிவுள்ள ஒரு தாவரம் (செடியொன்று) தன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் உடலை வளைத்து வளைத்து வளர்ந்தாவது ஒளிப்படும் இடத்தை நாடுகிறது. வேரில் நீர் கிடைக்க வில்லை என்றால் பக்கங்களிலும் ஆழத்திலும் நீண்டு நீண்டு வளர்ந்தவாது நீரைப் பெற முயற்சிக்கின்றது. அவ்வாறே விலங்குகளும் பக்ஷிகளும் தாகம், பசி முதலிய துயர்களைத் தீர்த்துக் கொள்ளவும் தற்காப்புச் செய்து கொள்ளவும், வெய்யில் மழைகளில் தங்குவதற்கு குகை, மரநிழல் போன்ற இடங்களை நாடி ஒதுங்கிக் கொள்ளவும், தம்மை அழிக்க வரும் இதர உயிரினங்களை எதிர்க்கவும், தப்பிக்கவும் தத்தமது புத்தி ஏவுகிறபடி தேகத்தை உந்தி முயற்சித்து வருகின்றனவன்றோ?

    ReplyDelete
  7. ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு 25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்,,,டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,

    ReplyDelete
  8. ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா அவர்களே,
    பாம்புக்கு எப்படி இரை கிடைக்குது தெரியுமா? பாம்பு தேடவும் செய்யுது. ஆனால் அதனோட தேடுதலே இரையை கொடுத்துர்ரதில்லை. பாம்பு வரச்ச மத்த தவளையெல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டிருக்கிற சமயம் ஒரே ஒரு தவளை கூச்சல் போடுமாம் . உடனே பாம்பு லபக்குனு அதை விழுங்கிருமாம். அதுக்குதான் அதுக்கு மண்டூகம்னு பேர் வந்தது. எவனாச்சும் முட்டாள் தனமா பேசினா சரியான மண்டா இருக்கானேம்பாங்க. மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடுங்கற மாதிரி கெட்டுட்டிங்க.. ஓம்கார் ஸ்வாமிகளை போய் விஜாரிங்க.. நான் கிழிக்க ஆரம்பிச்ச பிறகு அவருக்கு தூக்கம் எப்படி இருந்தது? பசி எப்படி இருந்ததுன்னு குத்து மதிப்பா கேளுங்க. நீங்க யாரு என்னங்கறது உங்க தமிழ்லயே தெரிஞ்சுப்போச்சு. (தமிழுங்களாண்ணா அது .. கண்ணெல்லாம் பஜ்னு ஆயிருச்சு.) வரேன்.. வரேன். என் லக்னம் கடகம். எதிரிகளாலதான் ஜீவனம் நடக்கனுமாம். எனக்கு எந்த நாதாரியும் எதிரியில்லே. ஒட்டு மொத்த மானுட குலத்தோட வாழ்வுக்கு எவனெல்லாம் ஆப்பு வைக்கிறானோ அவனெல்லாம் என் எதிரிதான். வரேன் ராசா.. வரேன்..

    பதிவுலகமே மற்றொரு சூர சம்ஹாரத்துக்கு தயாராகு. பிராமண இனத்து வண்டவாளங்கள் ,பிராமணீயத்தின் சதிகள், கதிகள், விதிகள் அனைத்தும் (இத்தனை நாள் மூஞ்சி முலாஜா பார்த்து விட்டு வச்சதெல்லாம் சேர்த்து ) அமில மழையா கொட்டப்போவுது. உடு ஜூட் ..

    ReplyDelete
  9. ஒட்டு மொத்த மானுட குலத்தோட வாழ்வுக்கு எவனெல்லாம் ஆப்பு வைக்கிறானோ அவனெல்லாம் என் எதிரிதான். வரேன் ராசா.. வரேன்..///நான் நாட்டே திருத்தப்போரேன் இந்த கோட்டைய பிடிக்கப்போரேன்,,,ஹஹஹஹஅக்னி நட்ச்சத்திரம் மானிடகுலத்துக்கு ஆப்பு வைக்குதூாா,,,கொஞ்சம் மழையா மாருங்கசாமி....எடிட்டர் அல்லவா சாத்வீகத்தை வெருத்து ரஜோகுணத்தை மேலோங்கத்தான் செய்யும்,,,சத்ரியனின் போரிடும் தன்மை நிறையவேயிருக்கு வுமக்கு,,,கேள்விக்கு பதிலை காணோம் ஆ வேசம்தான் வருது,,,ரத்தம் கொதிக்ககூடாது துண்ட முருக்கி பூணுல்போடும் மாரும் பாப்பான் இடம் உள்ள கோபம்,,,,

    ReplyDelete
  10. என் எதிரிதான். வரேன் ராசா.. வரேன்..///என்ன ஆளக் காணோம்

    ReplyDelete
  11. வரிக்கு ஒரு எழுத்துப்பிழையாவது இல்லாம எழுதறதா சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேளா என்ன?

    ராட்சச பாஷைதானே எப்படி எழுதினா என்னங்கற அலட்சியமா . முதல்ல உம் மொழிய ஆராயும். அப்புறம் என் எழுத்தை ஆராயலாம்.

    உம்ம கேள்விக்கு பதில் தந்து மயிரை பிளக்கற வாதத்துல எல்லாம் இறங்க நேரமில்லேங்காணும்.

    நம்ம வலைப்பூவை ரெகுலரா படியும். உமக்கு நேரம் வந்து அருள் வாக்கு வரலாம்.

    என்னையே நம்பி வரவாளுக்கு பதில் சொல்லவே நேரமில்லே ஓய்
    //திருத்தப்போரேன்//
    //பிடிக்கப்போரேன்//
    //மழையா மாருங்கசாமி..//
    //சாத்வீகத்தை வெருத்து//
    //மேலோங்கத்தான்//
    //நிறையவேயிருக்கு வுமக்கு//
    //துண்ட முருக்கி //
    //பூணுல்போடும் மாரும் //

    ReplyDelete
  12. ஹாய் ச்ச அண்டர் ஸ்கோர் 70,
    என்ன உங்களாவா தொழில் ரகசியத்தையெல்லாம் இப்படி போட்டு உடைக்கிறீர். நீங்க ஆடின ஆட்டத்துக்கு வெறுத்து போய் பகவானே உம்மை கைவிட்டுட்டாருங்காணும்..

    இசையை பஞ்சகச்சத்துல முடிஞ்சு வச்சிருந்தீர். உங்களாவா பஞ்சாங்கத்துல சங்க்ரம ஜாதினு கோட் பண்ணியிருக்கிற இனத்துல இருந்துதான் ஏ.ஆர் .ரகுமான் வந்தாரு..

    ஆட்டம் க்ளோஸாயி பல காலம் ஆச்சுங்காணும்.

    இன்னம் பழைய நினைப்புல துள்ளீனா எப்படி? இப்படித்தான் ஒரு பஞ்ச கச்சம் ஷீர்டி பாபா கடவுள் இல்லேனு புஸ்தவம் எழுதியிருக்கு..

    கடவுள்ங்கற கணிகைய கூட ப்ரோக்கர் தேவையில்லைனு சனம் புரிஞ்சிக்கிட்டுதுங்கோவ்..

    நான் என்ன பரிகாரத்தை உம்மை மாதிரி சுருட்டி ஆசனத்துல செருகி வச்சிட்டு பேரம் பேசினேனா ..உம்மை மூஞ்சி முகரையை ஒரு தரம் பார்க்கனும் ஓய் .. அதென்ன " ச்சா 70 " பேரை சொல்லிக்கவே போதாத பார்ட்டியெல்லாம் பேசி,எழுதி, என்ன ஆயிருங்கறேள் ..

    ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அதென்ன உமக்கு மயிர் மேலே அவ்ளோ ஈர்ப்பு.. உம்ம தலை பொட்டலோ?
    தலைக்கு மேல என்ன இருக்குங்கறது முக்கியமில்லே ஓய். அதுக்குள்ள என்ன இருக்குனு பாரும். உங்களாவா தலைல இருந்த அகங்காரத்தையெல்லாம் இந்தியாவை ஆண்ட இஸ்லாம், கிறிஸ்தவ பரிபாலகர்கள் பஸ்மமாக்கிட்டாங்க. உம்ம கிட்டே இருந்த ஆத்ம ,பிரம்ம வித்தையெல்லாம் புவ்வா போடாதுனு தானே துபாஷிகளா மாறினிங்க.

    நீங்க தூக்கி போட்டதை நாங்க பொத்தி வச்சிருக்கோங்கானும். அடி மாட்டை போஷிச்சாப்ல . பாலை நீங்க கறந்து குடிப்பேள். சாணிய நாங்க அள்ளோனும். இதானே உம்ம விதி

    ReplyDelete