Monday, April 5, 2010

ஆண்மை இழப்பு

அண்ணே வணக்கம்னே..
இன்னைக்கு செக்ஸ் பவர் தொடர் பதிவு தொடருது. கூடவே ஜோதிடம் மீதான விமரிசனங்கள்+ ‍விளக்கங்கள் என்ற தனிப்பதிவும் போட்டிருக்கேன் ,இதை படிக்க இங்கே அழுத்துங்க. கையோட கையா
அசத்த போவது யாரு - ‍ஒரு விமரிசனம் என்ற சிறப்பு பதிவும் போட்டிருக்கேன். இதை படிக்க இங்கே அழுத்துங்க‌

ஜெனட்டிக் காரணங்கள்:
செக்ஸ் பவர் மட்டுமே இல்லே உயரம், எடை, உடல் வலு எல்லாமே தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே வருது. உங்களுக்கு தெரிஞ்சவக யார்  வீட்லயாவது  25 வருசத்துக்கு முன்னாடி செய்த கட்டில் எதுனா இருந்தா போய்  பாருங்க. அவிக அந்த காலத்துல ச்சும்மா அப்படி குண்டிய உயர்த்தி உட்கார்ந்த கட்டில் அது. இப்போ நாம யாராவது அப்படி உட்கார முடியுமா? ஊஹூம். ஸ்டூலை போட்டுதான் ஏறனும்.இதுலருந்து என்ன தெரியுது தலை முறைக்கு தலைமுறை உயரம் குறைஞ்சிக்கிட்டே வருது.

அந்த காலத்துல கட்டின கோவில்,கோட்டை விதானமெல்லாம்  பார்த்திங்கனா தெரியும் க்ரேன் எல்லாம் இல்லாத அந்த காலத்து மனிதர்கள் வெறுமனே தங்கள் சக்தியை நம்பி கட்டின சமாசாரம் அதெல்லாம்.

காம சூத்திரத்துல ஆணுறுப்புகளோட நீளம், பெண்ணுறுப்புகளோட ஆழத்தை பத்தி ஒரு கணக்கு இருக்கு 3,6,9,12 இதெல்லாம் செ.மீ இல்லே அங்குலம். 12 அங்குலம்னா ஒரு அடி. உருப்போட அளவுக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லே. இருந்தாலும் அந்த வளர்ச்சி இப்போ ஏன் சாத்தியமில்லாம போயிருச்சுனு யோசிக்க சொல்றேன்.

இதுக்கெல்லாம் என்ன காரணம்னா ? வர்ணாசிரம தர்மம். இதை கொண்டுவந்தது ஆரு. அவாள் தான். (ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாய்ங்க) வர்ணாசிரம தர்மத்துல சொல்லப்பட்டதென்னவோ நாலு வர்ணம்தான் ( பிராமணன், வைசியன்,சத்திரியன், சூத்திரன்)

ஆனால் பிரிவுன்னு ஆரம்பிச்சபிறகு கச்சாமுச்சானு ஒவ்வொரு வர்ணமும் பல நூறு சாதிகளா பிரிஞ்சு போச்சு. பிரிஞ்சதால என்ன போச்சுனு நீங்க கேட்கலாம். நிறைய போச்சு. நாட்டோட ஒற்றுமை போச்சு, சுதந்திரம் போச்சு, இதையெல்லாம் ஒரு பக்கம் வைங்க.

சாதிக்கட்டுப்பாடு  காரணமா திருமணங்கள் ஒரு சின்னவட்டத்துலயே நடந்து கிட்டு வந்தது. இதனால அப்பன் 6.5 அடி, பிள்ளை 6 அடி, பேரன் 5.5 அடி, கொள்ளு பேரன் 5 அடினு குறைஞ்சிக்கிட்டே வந்துருச்சு. மேலும் விஞ்ஞான வளர்ச்சி காரணமா உடலுழைப்பு குறைய குறைய, மூளை உழைப்பு அதிகமாயிட்டே வந்தது. இதன் காரணமாவும் மனித இனத்தோட ஃபிட்னெஸ் தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே  வந்துருச்சு. இப்போ ஒட்டு மொத்தமா இந்தியர்களோட ஃபிட்னசே குறைஞ்சுருச்சு. இதனால விரிவா  கலப்பு திருமணம் பண்ணா கூட பலன் சொற்பமா தான் இருக்கு.

ஆஃப்டர் ஆல் பசு மாட்டுக்கு கூட (ஓம்கார் ஸ்வாமிகள் மன்னிக்கனும்)  ஸ்விட்சர்லாந்து பசுவோட வீரியத்தை ஊசி மூலமா செலுத்தி கருவடையச்செய்தா உயர்தரமான கன்னு கிடைக்கும்னு தெரிஞ்சு வச்சிக்கிட்ட மனித கூட்டம் தங்கள் இன வளர்ச்சில மாத்திரம் இந்த பாலிசிய பின்பற்ற மாட்டேங்குது.

நான் சொல்றது ஒன்னுதான். கலப்பு திருமணம் கட்டாயமாகனும். குறைஞ்ச பட்சம் உறவுல திருமணம் தடை செய்யப்படனும்.  வட இந்தியன் தென்னிந்திய பெண்ணை தான் மணக்கனும். தென்னிந்தியன் வட இந்திய பெண்ணைத்தான் மணக்கனும். எப்படியும் நம்மாளுங்க வேலை,வெட்டி,வியாபாரம்னு உலகமெல்லாம் போறாய்ங்க. நல்ல ஹைட்,வெயிட்,ஃபிட்னெஸ் இருக்கிற பார்ட்டிங்களை மடக்கி கண்ணாலம் கட்டுங்கப்பு.

பாடியோட ஃபிட்னெஸை பொறுத்துதான் செக்ஸ் பவரும் இருக்கும். ஃபிட்னஸே கோவிந்தான்னா செக்ஸ் பவரும் அம்போதான்.

மூளை உழைப்பு அதிகமாயிருச்சு. ஆனால் உடலுழைப்பு ரொம்ப ரொம்ப குறைஞ்சு போயிருச்சு. இதை பேலன்ஸ் பண்ணியே ஆகனும். இல்லேன்னா ஆண்மை இழப்பு அதிகமாறது உறுதி

2 comments:

  1. மிகவும் அவசியமான ஒரு பதிவு சார். One who is happy in the bed can paint the town in red. இதை ஜனங்கள் உணர்ந்து கொண்டால் எல்லாம் சுகமே. God bless you.

    ReplyDelete
  2. பிரபு அவர்களே,

    //One who is happy in the bed can paint the town in red.//

    சந்தோஷத்துல இருக்கிறவன் தான் அடுத்தவனை ,ஊரை , நாட்டை ,உலகத்தை சந்தோசப்படுத்தி பார்ப்பாங்கறத சிம்பிளா சொல்லுது இந்த சேயிங் ரொம்ப நன்றி.
    என் உத்தேசமும் அதான். எல்லாரும் சந்தோசத்துல இருக்கனும். எல்லாரையும் சந்தோசப்படுத்தி பார்க்கனும்

    ReplyDelete