Wednesday, March 17, 2010

உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதை

எங்க அத்தைய பத்தி நான் பேச பேச கண்ணை கூட இமைக்காம  என்னையே பார்த்துக்கிட்டிருந்தா மாயா.

"முகேஷ்! உன் வியாக்யானத்த  ஒரு நிமிஷம் நிறுத்து..யார் சொன்னாங்கனு பார்த்து அவிகளை டிக்ரேட் பண்ணி பேசிட்டா அவங்க பேசினது தப்பா போயிருமா.. சரி .. உங்க அத்தை உருப்படாத பொம்பளையா கூட இருக்கட்டும் ..அவங்க சொன்னது நிஜமா இல்லையா அத பத்தி பேசு.."

என்னதான் சகட்டு மேனிக்கு கண்ட புஸ்தவம் படிச்சு விஸ்தாரமா பல கோணத்துல  அனலைஸ் சோடா புட்டி ப்ரொஃபசர்  தனமா  யோசிச்சாலும்  நானும் ஒரு சராசரி மனுஷனா பேசிட்டத வெறுமனே இட்லி பாப்பானு நான் நக்கலடிக்கிற  மாயா டக்குனு கேட்ச் பண்ணிட்டத நெனச்சா  ரொம்ப அவமானமா இருந்தது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், உரு கண்டு எள்ளாமை வேண்டும் இத்யாதி திருக்குறள் எல்லாம் ஞா வந்துருச்சு. இருந்தாலும் மேலுக்கு

"அடச்சீ கல்யாணத்துக்கு தேவை ஒரு ஆண் . ஒரு பெண். நெருங்கிய சொந்தத்துல கல்யாணம் பண்ணா குழந்தைகளுக்கு பிரச்சினை வருதுன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு தான் சில உறவுகளை கல்யாணத்துக்கு தகாத உறவுகளா டிசைட் பண்ணியிருக்காங்க. இப்போ சைன்டிஃபிக்கா ஆராய்ச்சி பண்ணி உறவுலயே கல்யாணம் பண்ணாதரானு சொல்ட்டான். கேவலம் ஒரு பசுமாட்ட சினைப்படுத்த ஸ்விட்ஜர்லாந்து எருதோட வீரியத்தை விமானத்துல வரவைக்கிறான் . எதுக்கு க்ராஸிங் நடக்கனும். அப்பத்தான் உன்னை மாதிரி ..............ஏய்..............கிள்ளாத செம கட்டை வரும்.  இப்பவே சில நாட்ல ஆண்,ஆணை, பெண் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறத லீகலைஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா?..பெரிசா பேசறே"

அதில்லை முகேஷ் .. சாஸ்திரம்னு ஒன்னிருக்கில்லை?"

"சாஸ்திரம்னா அது ஒன்னும் கல்வெட்டும் கிடையாது .. ஆகாசத்துல இருந்து குதிச்சு வந்ததும்  கிடையாது . ஒரு காலத்துல ஒரு சாமானியன் கடல் கடந்து போனாலே தேச பிரஷ்டம் பண்ணிருவாங்க. சமீபத்துல சங்கராச்சாரி போய் வரலையா என்ன? கேட்டா அதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுவான். சாஸ்திரங்கறது அந்தந்த காலகட்டத்துல, அன்றைய சமுதாயம் செய்துக்கிட்ட ஒரு ஏற்பாடு தட்ஸால். வாழ்க்கைல மாறாதது மாற்றம் ஒன்னுதான். தீப ,தூப நைவேத்தியம்ங்கறாங்க. எத்தனை கோயில்ல கற்பூரம் ஏத்தறதையே தடை பண்ட்டாங்க தெரியுமா? விஷயம் என்னடான்னா கலப்படம். அந்த காலத்துல சுத்தமான கற்பூரம் கிடைச்சிருக்கும் தீப,தூபம்னான். இப்போ கலப்படம்தான் கிடைக்குது ஸோ தடை பண்ணிட்டான். அது மாதிரி தான் இதுவும். அந்த காலத்துல பொண்ணு வயசுக்கு வந்த பிறகு கல்யாணம் பண்ணா பாவம். இப்போ அது குற்றம். ஒனக்கே 18 வயசுல கல்யாணமாகி தொலைச்சிருந்தா உன்னை  ரோட்ல பார்த்தப்ப அடடே ஆன்டி சூப்பர் ஃபிகரா இருக்கேனு ஜொள்ளு விட்டுட்டு நான் பாட்டுக்கு போயிருப்பேன். உன் கல்யாணத்தை போஸ்ட் போன் பண்ணி உன் இளமையெல்லாம் பெருமூச்சா ஆவியானப்ப எங்க போச்சு சாஸ்திரம்? "

"த பாரு இந்த அடாவடி பேச்செல்லாம் வேணாம். என் கான்ஷியஸ் க்ளியராகனும். முதல்ல சாஸ்திரம்னா என்ன.. அதுல நம்ம கேஸை பத்தி என்னதான் சொல்லியிருக்குனு ரெஃபர் பண்ணிட்டு அஃபிஷியலா ஒரு ஸ்டேட்மென்ட் கொடு"

"கிழிஞ்சது கிருஷ்ணகிரி...உனக்கு எப்படித்தான் சொல்றதுன்னே தெரியலை. சுக்கிர மூடம்னு ஒரு பீரியட் வரும். அதாவது சுக்கிரனும் சூரியனும் ஒரே நட்சத்திரம் ஒரே டிகிரில சஞ்சரிக்கிற காலம். அந்த பீரியட்ல வீடு மாத்தக்கூடாது,கல்யாணம் பண்ண கூடாது, ஊரை விட்டு ஊர் போகக்கூடாதுங்கறது சாஸ்திரம், அதுக்கு பின் குறிப்பா பஞ்சம் பிழைக்க போறப்ப, யுத்தம்,வறட்சி காலத்துல இதை பின்பற்றதேவையில்லேனு ரிலாக்ஸேஷன்  கொடுத்திருப்பான். இதுல இருந்து என்ன தெரியுது.. எல்லாமே ஒரு ஏற்பாடு. கால தேச வர்த்தமானத்தை பொறுத்து எல்லாம் மாறும்"

"அடடே..23 வயசுக்கே பஞ்சாங்கமெல்லாம் கூட ரெஃபர் பண்ணியிருக்கியா நீ?"

"அதுல யோனி பொருத்தம்னு ஒரு கான்செப்ட் இருக்கு கண்ணு அதுலதான் ஐயாவுக்கு இன்டரஸ்ட்?"

"யோனி யு மீன் வெஜீனா.. ச்சீ இதெல்லாம் பஞ்சாங்கத்துல் இருக்காது நீ பீலா விடறே"

"இல்லே கண்ணம்மா.. பக்கா. வாத்சாயனர் ஆண் உறுப்போட நீளம்,பெண்ணுறுப்போட ஆழத்தை பொறுத்து ஆண் பெண்களை  நாலு வகையா பிரிக்கிறார்.  ஜோசியத்துல  குதிரை,யானை,ஆடு,பாம்பு,  நாய்,பூனை,ஆடு,எலி,பசு,எருமை,புலி,மான்,குரங்கு,சிங்கம் 14 வகையான யோனிகள் வருது."

"ச்சீ ச்சீ ஜோசியம் வேதத்துல ஒரு பாகம். புனிதமானது அது இதுனு சொல்றாங்க.. அதுல இதெல்லாம் வருதா?"

"நீ என் வாய கிளர்ரே .. நான் எடுத்து விட்டா பிராமணாள் எல்லாம் கோச்சுண்டுருவா. பகவான் ங்கற வார்த்தைல வர்ர பகம்ங்கற வார்த்தைக்கு வெஜினானு ஒரு அர்த்தமிருக்கு. ஆக்சுவல் மீனிங் பெரிய பள்ளம். "

"உன் கூட பேசனும்னாலே பயமா இருக்கு.. தம்பி செத்து புதைச்சு 24 மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ள இப்படி செக்ஸ் பேசறே"

" நீயேன் மரணத்துக்கு பயப்படறாப்ல செக்சுக்கு பயப்படறே தெரியுமா? மனித மனத்தை பொருத்தவரை ரெண்டும் ஒன்னுதான்.. அதனாலதான்  நான் மரண நினைவுகளை துரத்த செக்ஸ் பேசறேன். நீ செக்ஸ் நினைவுகளை துரத்த மரணத்த நினைவுபடுத்தறே"

" நான் நம்ப மாட்டேன் செக்சுக்கும் மரணத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"இருக்குடி செல்லம் இருக்கு.. செக்சுல ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் ஆர்காசம் ஏற்படுது. அப்போ ஆணுக்கு செமன், பெண்ணுக்கு சுரோணிதம் ரிலீசாகும் அந்த நேரத்துல மென்டல் ப்ளாக் ஏற்படும். கால,தேச,வர்த்தமானம்னு சொன்னேனே அது எதுவுமே உறைக்காது. ஜஸ்ட் அது ஒரு குட்டி மரணம் "

"ஹும்.. நான் அம்பேல்ப்பா. நீ ஆடி முடிச்சு இறங்கி வந்து சொல்றே.. நமக்கு வயசு பத்தாது"

"அப்ப என்ன கச்சேரிய ஆரம்பிச்சுரலாமா"

"என்ன முகேஷ் .. உன்னை எப்படி புரிஞ்சிக்கிறதுன்னே புரியல.. ஐ ஃபீல் கில்ட்டி. முதல்ல என் ஃபீலிங்க்ஸை புரிஞ்சிக்க. உங்க அத்தை அப்படி சொன்னதுல இருந்து என் மனசே சரியில்லை"

"பைத்தியம்! பைத்தியம்! உனக்கு இன்னும் எப்படிதான் சொல்றதோ புரியல. இது மேல்ஷேவனிஸ்ட் சொசைட்டி. குடும்ப வாழ்க்கைல ஆணோட ஆதிக்கம் இருக்கனுங்கறதுக்காகதான் ஆணுக்கு வயசு அதிகமா இருக்கனும், பெண்ணுக்கு குறைவா இருக்கனும்னு வச்சிருப்பாங்க. மேலும் பெண்டாட்டிக்கு நாலஞ்சு வயசு குறைச்சலா இருந்தா நாளைக்கு இவன் கிழவாடி ஆயிட்டா அப்பவும் இவனுக்கு அவள் வென்னீர் வச்சு தரனும், கை கால் அமுக்கனும்.. அதான் இவிக கான்செப்ட்"

"அய்யய்யோ அப்ப வயசான காலத்துல நீ என்ன பண்ணுவே?"

"உம்.. ஸ்வீட் சிக்ஸ்டீனா  நின்னு விளையாடற மாதிரி ஒரு சின்ன குட்டிய போட்டுப்பேன்"

"வயசான காலத்துல என்னை  டிஸ்டர்ப் பண்ணாத இருந்தா சரி"

"பார்த்தயா இதே சேம் ஏஜ் க்ரூப்ல கல்யாணம் பண்ணியிருந்து நான் இத மாதிரி சொல்லியிருந்தா உடனே அப்பன் ஆயிக்கு ஃபோன் போட்டு எஸ்.டி.டில அழுது ஊரை கூட்டியிருப்பா..அதுக்குதான்டி பட்டு.. உன்னை பிடிச்சது. வெரி குட்டு"

" சரி அத்தை சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் உங்க வீட்டுக்கு வந்த புதுசுல உங்க பாட்டி என்ன சொன்னாங்க தெரியுமா? வயசுல மூத்தவ கிட்டே செக்ஸ் வச்சுக்கிட்டா ஆம்பளைக்கு  வீக்னென்ஸ் வந்துருமாம். இப்பவே அவன் நெஞ்செல்லாம் பின்னியிருக்கு. அவன் உடம்பையும் பார்த்துக்கம்மான்னாங்க"

"அப்படி போடு.. உடம்பு ஆரோக்கியமா இருக்கனும்னா மாதர் போகம் மாதமிருமுறைனு சித்தர்கள் சொல்லியிருக்காங்க. நீ அறிமுகமாறதுக்கு முன்னாடியெல்லாம் வண்டி கரெக்டா சர்வீசுக்கு போயிரும். நீ ஒருத்தி . சனியன்  மாதிரி வந்து மாட்டினே.. வைக்க போர் மேல படுத்த நாய் மாதிரி"

"என்ன நீ கல்யாணமாகி பத்து நாள் கூட ஆகலை சனியங்கற, நாய்ங்கிற.. அங்கிள் கிட்டே சொல்லுவேன்"

"நீ அங்கிள் கிட்டேனா சொல்லு, அவங்க மம்மி கிட்டேனா சொல்லு. நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு.. வைக்க போர் மேல படுத்த நாய்னா என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு?"

"எனக்கு தெரியவும் தெரியாது.. நீயும் சொல்லதேவையில்லே.. ஹன்ட்ரட் பர்சண்ட் அசிங்கம் பிடிச்சதா இருக்கும்"

"இல்லேடி கண்ணு ப்யூர் வெஜ் தான். ஒருத்தன் செம கட்டையா ஒருத்திய தள்ளிக்கிட்டு ஒதுங்க போனானாம்"

"சீ சீ.. ஸ்டாப் ஸ்டாப்"

"முழுக்க கேட்டுட்டு சொல்லு.. பார்லமென்ட்ல ஸ்பீக்கர் சொன்னாலே எம்.பிங்க கேட்காத காலத்துல நீ சொல்றத நான் கேட்பேனா என்ன.. என்ன  சொல்லிட்டிருந்தேன். ஆங் ! ஒருத்தன் செம கட்டையா ஒருத்திய தள்ளிக்கிட்டு ஒதுங்க போனானாம்.  ஒரு இடத்துல ஃபர்ஸ்ட் க்ளாஸா வைக்கோல் போர் இருந்துதாம். அது மேல நாய் படுத்துகிட்டிருந்துதாம். இவன் ஏ நாயே போய் தொலை .. எனக்கு முக்கியமான வேலை இருக்குன்னானாம். அது உர்ருங்குதாம். இவனா பயங்கர மூட்ல இருக்கான். குட்டியும் சும்மா உடம்பெல்லாம் சூடேறி கிடக்கு. இவன் கடுப்புல அந்த நாய பார்த்து  சரி மொதல்ல நீயே பார்த்துக்க அப்புறம் வேணம்னா நான் பார்த்துக்கறேன்னானாம். அப்பவும் அது உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குதாம். நீயும் அனுபவிக்கமாட்டே.. என்னையும் அவுத்து உடமாட்டே.."

"ச்சீ ச்சீ என்ன பேச்சு பேசறே நீ .. அது ஒன்னுதான் வாழ்க்கையா..இதுக்குதான் போல பெரியவங்க அப்படி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்காங்க .. உன்னை மாதிரி அரை டிக்கட்டை கட்டிக்கிட்டு தப்பு பண்ணீட்டேனோ என்னவோ?"

"இல்லை.. கன்னு குட்டி.. சாரி  அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டேன். ஷ்.......கிள்ளாதே ..சைக்காலஜிப்படி பார்த்தா என்னை மாதிரி சின்னப்பசங்க உன்னை மாதிரி  வயசுல மூத்த குட்டிய கட்டிக்கிறது நல்லது.இவன் பார்த்த முதல் பொம்பள இவனோட தாய். அதனால ஆளோட இம்பேக்ட் இவன் லைஃப்ல அதிகமா இருக்கும். ஸோ மதர்லி லுக் இருக்கிற எல்டர் லேடிய கட்டிக்கிறது பெஸ்ட்"

" நான் கேட்கிறது சைக்காலஜி இல்லே. சாஸ்திரம் என்ன சொல்லுதுங்கறதைதான்"

"சாஸ்திரத்தோட நீள அகலம் என்னனு சொல்லியும் சாஸ்திரத்தை கான்ஸ்டிட்யூஷன் கணக்கா பார்க்கிறே.. இன்னொரு உதாரணம் சொல்றேன் கேளு .மூச்சா போறதுக்கு கூட சாஸ்திரம் இருக்கு. எறும்பு புத்துல,ஆத்துல,சூரியனை பார்த்து மூச்சா போ கூடாது. திருடர் பயம், விஷ ஜந்துக்களோட பயம் இருக்கிற இடத்துல இதை ஃபாலோ பண்ண தேவையில்லைன்னுது சாஸ்திரம்"

"இல்லடா கண்ணா .. நம்ம பெரியவங்கள அவ்ளோ லேசா கணக்கு போட்டுராத அவிக வச்ச சிஸ்டத்துக்கு ஏதோ அர்த்தமிருக்கும். நல்லா முக்கி யோசிச்சு பாரு"

" இப்ப எனக்கு 23 உனக்கு 33 . இப்போ நம்ம ரெண்டு பேரோட செக்சுவல் அர்ஜும் ஒரே லெவல்ல இருக்கலாம்.  நாளைக்கு  எனக்கு 33 உனக்கு 43 ஆகும் .. அப்போ உனக்கு மெனோஃபஸ் வந்திருக்கும். அணையப்போற விளக்கு சுடர் விட்டு பிரகாசிக்கிறாப்ல உன் செக்சுவல் அர்ஜ் உச்சத்துல இருக்கலாம். அப்போ நான் ஆடி முடிச்ச களைப்புல இருக்கலாம். இன்னும் கொஞ்சம் நாள் போனா எனக்கு 43 உனக்கு 53 ஆகும். அப்போ எனக்கு மெனோஃபஸ் மாதிரி செக்ஸ் உச்சத்துல இருக்கிற  ஸ்டேஜ் இருக்கலாம். நீ கம்ப்ளீட்ட ரிட்டையராகியிருக்கலாம். அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் கண்ணு லூப்பர் கெயின்,க்ளிசரின்,வேசலைன் இப்படி என்னென்னவோ இருக்கு. அதுலயும் நீ இந்த 32 ல கூட 16 மாதிரி கூச்சத்தை மிச்சம் வச்சிருக்கேன்னா டோன்ட் ஒர்ரி ஐ வில் லுக் ஆஃப்டர்"

அவளுக்கு தேவையோன்னு  நான் ப்ரொசீட் பண்றப்ப அவள் விலகிப்போறதும், சரி ஒழிஞ்சு போனு அவள் முன் வரப்ப இதென்னடா கவுரவ பிச்சையா இருக்குனு நான் விலகிப்போறதுமா பத்து நாள் ஓடிப்போச்சு. மேலும் உள்ளூற எங்களுக்குள்ள "அந்த"விஷயம் நடந்தேறிட்டா அதுக்கப்புறம் எங்களுக்குள்ள இருக்கிற வர்ணனைக்கு அப்பாற்பட்ட உறவோட சம் திங்க் ஸ்பெஷல் ஆவியாயிருமோங்கற எண்ணம் இருக்கிறதையும் என்னால உணரமுடிஞ்சது.

பத்தாவது  நாள் காரியத்துக்கு தம்பியோட மனைவி அவள் அப்பா,அம்மா எல்லாரும் வந்திருந்தாங்க. எல்லா சம்பிரதாயங்களும் முடிஞ்சு சாப்பாடு வேலை முடிஞ்சு  ஹால்ல உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தப்ப அவங்களுக்கு  அப்பா தீர்மானமா சொல்லிட்டாரு. " நடந்ததையெல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துருங்க. அந்த பொண்ணுக்கு புதிய  வாழ்க்கைய அமைச்சு குடுக்கிற வழிய பாருங்க. இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸெல்லாம் வேணாம். காலம் மாறிப்போச்சு. நாமும் மாறனும்"

இதுக்கிடையில மத்த வேலைகளும் நடந்துக்கிட்டுதான் இருந்தது. ஸ்டுடியோ மெயின்டெனன்ஸுல  சந்தீப்பும், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் விஷயத்துல   மீராவும்
ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்தாங்க. லோக்கல் பேப்பர் விஷயத்துலன்னா  முரளி  ரொம்பவே ஆர்வமா இருந்தான். விலைக்கு வித்தா எப்படியிருக்கும்னு கூட பேச ஆரம்பிச்சுட்டான். அப்பாதான் அதெல்லாம் தேவையில்லே. ஓடறவரை ஓடட்டும்னுட்டாரு. தன்னோட பென்ஷன்ல இருந்து கடனா கிடைச்ச பணத்தை மாயா கிட்டே  ஒப்படைச்சுட்டாரு.மாயா சரிங்க அங்கிள் என் பணமா உங்க கிட்டேயே இருக்கட்டும்னா கூட கேட்டுக்கல.

மாயாவுக்கும் எனக்குமிடையில நடக்கிற கண்ணா மூச்சிய அப்பாவே கண்டுபிடிச்சிட்டாரா இல்லே பாட்டி ஏதாச்சும் போட்டுக்குடுத்துட்டாளா தெரியாது.
ஒரு நாள் என்னடா இது பெரியவனுக்கும் சின்னவனுக்கு  கல்யாணமாகி இவ்ள காலமாச்சு. ஒரு இழவு டெவலப்மென்டும் கிடையாது. எனக்கு மட்டும் பேரன் பேத்தினு மடில போட்டு கொஞ்ச ஆசை இருக்காதா? ச்சும்மா செக்கு மாடு மாதிரி சுத்திக்கிட்டு வந்தா வாழ்க்கைல ஒரு மயிரு சுகமும் கிடையாது. பேசாம உன் பெண்டாட்டிய கூப்டுக்கிட்டு அக்கடானு எங்கனா போய் வா.. இங்கே எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. நான் பார்த்துக்கறேன்னாரு.

மாயா கிட்டே இந்த விஷயத்தை சொல்ல "சீ.. இந்த வயசுல கல்யாணம் கட்டிக்கிட்டதும், அங்கிளும்,பாட்டியும் ஹால்ல இருக்கறச்ச ஒரே ரூம்ல உன்னோட இருக்கிறதுமே கூச்சமா இருக்குது. வெளியூர்ல அதுவும் கண்ட லாட்ஜுல தங்கனும்னா என்னால முடியாதுப்பா. " என்று சொல்லி விட்டாள். மறு நாள்  மெட் ராஸ்ல இருந்து லெட்டர் வந்தது. பி.ஆரும்,ஸ்ரீதரும் தான் எழுதியிருந்தாங்க. ஸ்ரீதர் நார்த் இண்டியா டூர் போறதாவும் பதினைஞ்சு நாளைக்கு சிக்கன் சென்டர் மாடில ஹால்ட் ஆனா ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். கீழே கடைய பசங்க பார்த்துப்பாங்க. ச்சும்மா நம்ம ஆளுனு இருந்தா நல்லாருக்கும்னும் தயங்கி தயங்கி எழுதியிருந்தாங்க. இந்த ஐடியாவ பி.ஆர் தான் கொடுத்திருக்கனும். அவருக்கு எங்க கல்யாண சங்கதி தெரியாது. ஏதோ பையன் எஞ்ஜாய் பண்ணட்டும்னு அவருதான் இந்த ஐடியாவ கொடுத்திருப்பார் போல.

உடனே எஸ்.டி.டி க்கு போய் சிக்கன் சென்டருக்கு போன் போட்டு ஓகே சொல்லிட்டேன். அவரு எங்க கல்யாண விஷயத்தை கேட்டு கச்சா முச்சானு திட்டிட்டு தம்பி சாவுக்கு ரொம்ப ஃபீல் பண்ணிட்டு "சரி சரி  நீங்க  சாயந்திரமே  புறப்பட்டு வந்துருங்க. எனக்கு நாளைக்கு எர்லி மார்னிங் ரயிலை கேட்ச் பண்ணனும்"னிட்டாருமாயாவுக்கும் விஷயத்தை சொல்லிட்டு சம்மதிக்க வச்சுட்டேன். அப்பாவுக்கு சொல்ல

'' இதென்னடா கருமம். கீழே கசாப்பு  நடக்கற இடத்துலயா எவனாச்சும் ஹனி மூன் கொண்டாடுவான்"னாரு

இப்ப இன்னைக்கு இங்கே வீடு கட்டியிருக்கான். 100 வருஷத்துக்கு முன்னே இதுவே சுடுகாடாயிருந்திருக்கலாமில்லயா. மாயா வெளியூருன்னா லாட்ஜுல தங்கனும்னு ஷை ஃபீல் பண்றா . இதுனா பழக்கப்பட்ட இடம். அது இதுனு சொல்லி அப்பாவ ஒத்துக்க வச்சேன்.

5 comments:

  1. நன்றிங்கண்ணா. நானும் எதையாச்சும் செய்றேன். விட்ருவமா சொல்லுங்க?

    ReplyDelete
  2. நன்றி தல அடுத்த பார்ட் எப்ப வெளி வரும் ஆவலாக இருக்கிறேன்

    ReplyDelete
  3. வடிவேலன் ஆர் அவர்களே,
    நம்முது டெய்லி சீரியல் தானே .. நாளைக்கே படிச்சிரலாம். உடுங்க ஜூட்டு

    ReplyDelete
  4. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com


    (Pls ignore if you get this mail already)

    ReplyDelete